<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>நேசமுடன் &#187; ராகுல் காந்தி</title>
	<atom:link href="http://www.nesamudan.com/blog/tag/%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.nesamudan.com/blog</link>
	<description>மடல் இதழ்</description>
	<lastBuildDate>Thu, 21 Jan 2010 02:39:22 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.org/?v=2.9.2</generator>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
			<item>
		<title>கேலிக்கூத்தாகும் சிக்கனம்</title>
		<link>http://www.nesamudan.com/blog/2009/09/16/austerity/</link>
		<comments>http://www.nesamudan.com/blog/2009/09/16/austerity/#comments</comments>
		<pubDate>Wed, 16 Sep 2009 11:10:07 +0000</pubDate>
		<dc:creator>வெங்கடேஷ்</dc:creator>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[சிக்கனம்]]></category>
		<category><![CDATA[சோனியா காந்தி]]></category>
		<category><![CDATA[ராகுல் காந்தி]]></category>

		<guid isPermaLink="false">http://www.nesamudan.com/blog/?p=132</guid>
		<description><![CDATA[நம் நாட்டில் எல்லாவற்றையும் மதிப்பிழக்கச் செய்வதில் நாம் வல்லவர்கள். அதுவும் நம் அரசியல்வாதிகள் செய்யும் செயல்களைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. ]]></description>
			<content:encoded><![CDATA[<div id="_mcePaste" style="position: absolute; left: -10000px; top: 0px; width: 1px; height: 1px; overflow-x: hidden; overflow-y: hidden;">நம் நாட்டில் எல்லாவற்றையும் மதிப்பிழக்கச் செய்வதில் நாம் வல்லவர்கள். அதுவும் நம் அரசியல்வாதிகள் செய்யும் செயல்களைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. அவர்கள் இதையெல்லாம் புரிந்துதான் செய்கிறார்களா, புரியாமல் செய்கிறார்களா என்று தெரியவில்லை.</div>
<div id="_mcePaste" style="position: absolute; left: -10000px; top: 0px; width: 1px; height: 1px; overflow-x: hidden; overflow-y: hidden;">இந்தியா முழுக்க வறட்சி. அடுத்து வரும் மாதங்களில், பருவ மழை முழுமையாகப் பொய்த்துப் போனால், பல மாநிலங்களில் விவசாயமே இருக்காது. மக்கள் பஞ்சத்தால் திண்டாடிப் போவார்கள். அவர்களுக்கு பிரதமரின் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் எப்படியேனும் வேலை கொடுத்துக் காப்பாற்றவேண்டும் என்ற நிலை. உடனே நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, தேசிய அளவில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். செலவுகளில் 10 சதவிகிதம் மிச்சப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மாநில அரசுகளையும் அதைப் பின்பற்ற கேட்டுக்கொண்டார். இப்படி மிச்சமாகும் பணம், நாளைக்கு பசி, பஞ்சம், பட்டினி வரும்போது, நிவாரணத் திட்டங்களை உருவாக்கவும் அதற்குச் செலவழிக்கவும் உதவியாக இருக்கும் என்பது எண்ணம். நல்ல எண்ணம். இங்கே வேறு சில கேள்விகள் பிறக்கின்றன. அதை அப்புறம் கேட்போம். முதலில், இதுவரை நடந்தது எல்லாம் சரி.</div>
<div id="_mcePaste" style="position: absolute; left: -10000px; top: 0px; width: 1px; height: 1px; overflow-x: hidden; overflow-y: hidden;">இங்கிருந்துதான் மதிப்பிழக்கச் செய்யும் வழி ஆரம்பிக்கிறது. சோனியா பெங்களூரூவுக்கு எகானமி வகுப்பில் விமானத்தில் பயணம் செய்தாராம். காரணம், சிக்கன நடவடிக்கை. தில்லியில் இருந்து லூதியானாவுக்கு ராகுல் காந்தி ஷதாப்தி ரயிலில் பயணம் செய்தாராம். காரணம், சிக்கனம். காங்கிரஸ் அமைச்சர்கள் எல்லாரும் வழிகாட்டுகிறார்களாம், எப்படிச் சிக்கனமாக இருப்பது என்பதற்கு. கேலிக்கூத்தாக இல்லை?</div>
<div id="_mcePaste" style="position: absolute; left: -10000px; top: 0px; width: 1px; height: 1px; overflow-x: hidden; overflow-y: hidden;">மத்திய அரசு உண்மையிலேயே சிக்கனமாக நடந்துகொண்டு, செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைத்திருந்தால், அது பின்பற்ற வேண்டிய வழி இது அல்ல. இது மற்றவர்களை ஏமாற்றும் கண் துடைப்பு வேலை.</div>
<div id="_mcePaste" style="position: absolute; left: -10000px; top: 0px; width: 1px; height: 1px; overflow-x: hidden; overflow-y: hidden;">உலகெங்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பொருளாதார தேக்கம். ஒவ்வொரு நிறுவனமும் தம்மளவில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டன. ஒவ்வொரு நிறுவனமும், தத்தமது துறைத் தலைவர்களை அழைத்து, தேவையற்ற உற்பத்தியற்ற செலவுகளை முதலில் நிறுத்து என்றது. தேவையற்ற பயணங்களை நிறுத்து என்றது. ஒரு துறைக்கு ஆகும் செலவினங்களில் குறைந்தபட்சம் 50 சதவிகிதம் குறைக்கவேண்டும் என்று, பட்ஜெட்டையே புரட்டிப் போட்டது. விளைவு, இவ்வளவு மோசமான பொருளாதாரச் சரிவிலும் பல நிறுவனங்கள் நாணல்போல் வளைந்துகொடுத்து நிமிரத் தொடங்கிவிட்டன.</div>
<div id="_mcePaste" style="position: absolute; left: -10000px; top: 0px; width: 1px; height: 1px; overflow-x: hidden; overflow-y: hidden;">இதுதானே வழி. இதை விட்டுவிட்டு, ஓரிருவர் எகானமி வகுப்பில் பயணம் செய்வதால் என்ன லாபம்?</div>
<div id="_mcePaste" style="position: absolute; left: -10000px; top: 0px; width: 1px; height: 1px; overflow-x: hidden; overflow-y: hidden;">கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். மத்தியில் இருக்கும் 30 கேபினட் அமைச்சர்களும், குட்டி முதலமைச்சர்கள். ஒவ்வொரு துறையும் ஒரு மாநில அரசுக்கான வரவு செலவு அளவுக்கு வருவாயும் செலவுகளும் கொண்டது. ஒவ்வொரு துறையும் ஒரு குட்டி யானை. வருவாயைவிட செலவினங்கள் அதிகமுள்ள துறைகளே அதிகம். எல்லாமே மக்கள் நலத் திட்டங்கள்தான். இதில் எங்கிருந்து சிக்கனம் சாத்தியம்?</div>
<div id="_mcePaste" style="position: absolute; left: -10000px; top: 0px; width: 1px; height: 1px; overflow-x: hidden; overflow-y: hidden;">சரி அப்படியே சிக்கனத்தை இந்தத் துறைகளில் அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால், அது முழுக்க முழுக்க நிர்வாக நடைமுறை சார்ந்த விஷயம். அலுவலக ரீதியான செலவுகளை உயர் அதிகாரிகள் கட்டுப்படுத்த முனைந்தால், மாற்றம் தன்னால் வரும். அமைச்சர்கள் தேவையற்ற சலுகைகளை நிறுத்தினாலே மாற்றம் தன்னால் வரும். இதெல்லாம் தனிமனிதர்களின் மனம் சம்பந்தப்பட்டது. என்ன ஒரு பிரச்னை என்றால், இதுபோன்ற சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, தம் சலுகைகள் பறிக்கப்படுவதாக ஒரு கூட்டம் எப்போதும் கொடி பிடிக்கும். தம்முடைய உரிமைகளே பறிக்கப்படுவதாக இவர்கள் கொதித்துப் போவார்கள்.</div>
<div id="_mcePaste" style="position: absolute; left: -10000px; top: 0px; width: 1px; height: 1px; overflow-x: hidden; overflow-y: hidden;">இவர்களையும் உள்ளடக்கி சிக்கனத்தைக் கொண்டு வருவது அவசியம். செலவுகளை எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்கிறீர்களோ, அதில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் அனைத்து ஊழியர்களுக்கும் போனஸ்ஸாக வழங்கப்படும் என்று அறிவித்து நடைமுறைப்படுத்திப் பார்க்கலாம். சிக்கனத்தை சலுகைப் பறிப்பாக அல்லாமல், கூடுதல் வருவாய்க்கான வாய்ப்பாக மாற்றித் தரவேண்டும்.</div>
<div id="_mcePaste" style="position: absolute; left: -10000px; top: 0px; width: 1px; height: 1px; overflow-x: hidden; overflow-y: hidden;">அதை விட்டுவிட்டு, எகானமி வகுப்பில் பயணம் செய்து, ரயிலில் பயணம் செய்து என்ன செய்தியை இந்த அரசியல்வாதிகள் நமக்கு வழங்குகிறார்கள்? ஒன்றுமே இல்லை. அவர்களுடைய பயணம் மக்களை ஊக்கப்படுத்துவதற்குப் பதில், அவர்களுடைய போலி முகங்களைத்தான் தோல் உரித்துக் காட்டுகின்றன. இது நாள் வரை நீங்கள் எப்படி பயணம் செய்தீர்கள், வருங்காலத்தில் எப்படியெல்லாம் பயணம் செய்வீர்கள் என்றெல்லாம் மக்களுக்குத் தெரியாமலா இருக்கும்?</div>
<div id="_mcePaste" style="position: absolute; left: -10000px; top: 0px; width: 1px; height: 1px; overflow-x: hidden; overflow-y: hidden;">ஒரு வகையில், சிக்கனம் என்பதை நடைமுறைப்படுத்துவதை விட, அதை ஒரு விளம்பரமாக மாற்றிக்கொள்ளும் அரசியல்வாதிகளின் புகழ்போதைதான் இந்தப் பயணங்களில் தெரிகிறது. உண்மையில், அவர்கள் சொல்ல வேண்டிய செய்தியின் நேர் எதிர் செய்தியைத்தான், அவர்களுடைய செயல்கள் நமக்குச் சொல்லுகின்றன.</div>
<div id="_mcePaste" style="position: absolute; left: -10000px; top: 0px; width: 1px; height: 1px; overflow-x: hidden; overflow-y: hidden;">மக்கள் விவரமானவர்கள். மக்கள் நீங்கள் செய்வதைப் படிப்பதில்லை, நீங்கள் செய்வதின் பின்னுள்ள அரசியலைத்தான் படிக்கிறார்கள். நீங்கள் பேசும் பேச்சுக்களைக் கேட்பதில்லை, அதற்குப் பின்னே ஒலிக்கும் உள்நோக்கங்களைத்தான் கேட்கிறார்கள்.</div>
<div id="_mcePaste" style="position: absolute; left: -10000px; top: 0px; width: 1px; height: 1px; overflow-x: hidden; overflow-y: hidden;">இதெல்லாம் அரசியல்வாதிகளுக்குத் தெரியாதா என்ன? தெரியும். தெரிந்தும் இந்தக் கேலிக்கூத்துகளுக்கு இடம் கொடுக்கிறார்கள். எல்லாம் ‘வளர்ச்சியின் வலி’ என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.</div>
<div>நம் நாட்டில் எல்லாவற்றையும் மதிப்பிழக்கச் செய்வதில் நாம் வல்லவர்கள். அதுவும் நம் அரசியல்வாதிகள் செய்யும் செயல்களைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. அவர்கள் இதையெல்லாம் புரிந்துதான் செய்கிறார்களா, புரியாமல் செய்கிறார்களா என்று தெரியவில்லை.</div>
<div>இந்தியா முழுக்க வறட்சி. அடுத்து வரும் மாதங்களில், பருவ மழை முழுமையாகப் பொய்த்துப் போனால், பல மாநிலங்களில் விவசாயமே இருக்காது. மக்கள் பஞ்சத்தால் திண்டாடிப் போவார்கள். அவர்களுக்கு பிரதமரின் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் எப்படியேனும் வேலை கொடுத்துக் காப்பாற்றவேண்டும் என்ற நிலை. உடனே நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, தேசிய அளவில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். செலவுகளில் 10 சதவிகிதம் மிச்சப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மாநில அரசுகளையும் அதைப் பின்பற்ற கேட்டுக்கொண்டார். இப்படி மிச்சமாகும் பணம், நாளைக்கு பசி, பஞ்சம், பட்டினி வரும்போது, நிவாரணத் திட்டங்களை உருவாக்கவும் அதற்குச் செலவழிக்கவும் உதவியாக இருக்கும் என்பது எண்ணம். நல்ல எண்ணம். இங்கே வேறு சில கேள்விகள் பிறக்கின்றன. அதை அப்புறம் கேட்போம். முதலில், இதுவரை நடந்தது எல்லாம் சரி.</div>
<div>இங்கிருந்துதான் மதிப்பிழக்கச் செய்யும் வழி ஆரம்பிக்கிறது. சோனியா பெங்களூரூவுக்கு எகானமி வகுப்பில் விமானத்தில் பயணம் செய்தாராம். காரணம், சிக்கன நடவடிக்கை. தில்லியில் இருந்து லூதியானாவுக்கு ராகுல் காந்தி ஷதாப்தி ரயிலில் பயணம் செய்தாராம். காரணம், சிக்கனம். காங்கிரஸ் அமைச்சர்கள் எல்லாரும் வழிகாட்டுகிறார்களாம், எப்படிச் சிக்கனமாக இருப்பது என்பதற்கு. கேலிக்கூத்தாக இல்லை?</div>
<div>மத்திய அரசு உண்மையிலேயே சிக்கனமாக நடந்துகொண்டு, செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைத்திருந்தால், அது பின்பற்ற வேண்டிய வழி இது அல்ல. இது மற்றவர்களை ஏமாற்றும் கண் துடைப்பு வேலை.</div>
<div>உலகெங்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பொருளாதார தேக்கம். ஒவ்வொரு நிறுவனமும் தம்மளவில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டன. ஒவ்வொரு நிறுவனமும், தத்தமது துறைத் தலைவர்களை அழைத்து, தேவையற்ற உற்பத்தியற்ற செலவுகளை முதலில் நிறுத்து என்றது. தேவையற்ற பயணங்களை நிறுத்து என்றது. ஒரு துறைக்கு ஆகும் செலவினங்களில் குறைந்தபட்சம் 50 சதவிகிதம் குறைக்கவேண்டும் என்று, பட்ஜெட்டையே புரட்டிப் போட்டது. விளைவு, இவ்வளவு மோசமான பொருளாதாரச் சரிவிலும் பல நிறுவனங்கள் நாணல்போல் வளைந்துகொடுத்து நிமிரத் தொடங்கிவிட்டன.</div>
<div>இதுதானே வழி. இதை விட்டுவிட்டு, ஓரிருவர் எகானமி வகுப்பில் பயணம் செய்வதால் என்ன லாபம்?</div>
<div>கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். மத்தியில் இருக்கும் 30 கேபினட் அமைச்சர்களும், குட்டி முதலமைச்சர்கள். ஒவ்வொரு துறையும் ஒரு மாநில அரசுக்கான வரவு செலவு அளவுக்கு வருவாயும் செலவுகளும் கொண்டது. ஒவ்வொரு துறையும் ஒரு குட்டி யானை. வருவாயைவிட செலவினங்கள் அதிகமுள்ள துறைகளே அதிகம். எல்லாமே மக்கள் நலத் திட்டங்கள்தான். இதில் எங்கிருந்து சிக்கனம் சாத்தியம்?</div>
<div>சரி அப்படியே சிக்கனத்தை இந்தத் துறைகளில் அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால், அது முழுக்க முழுக்க நிர்வாக நடைமுறை சார்ந்த விஷயம். அலுவலக ரீதியான செலவுகளை உயர் அதிகாரிகள் கட்டுப்படுத்த முனைந்தால், மாற்றம் தன்னால் வரும். அமைச்சர்கள் தேவையற்ற சலுகைகளை நிறுத்தினாலே மாற்றம் தன்னால் வரும். இதெல்லாம் தனிமனிதர்களின் மனம் சம்பந்தப்பட்டது. என்ன ஒரு பிரச்னை என்றால், இதுபோன்ற சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, தம் சலுகைகள் பறிக்கப்படுவதாக ஒரு கூட்டம் எப்போதும் கொடி பிடிக்கும். தம்முடைய உரிமைகளே பறிக்கப்படுவதாக இவர்கள் கொதித்துப் போவார்கள்.</div>
<div>இவர்களையும் உள்ளடக்கி சிக்கனத்தைக் கொண்டு வருவது அவசியம். செலவுகளை எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்கிறீர்களோ, அதில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் அனைத்து ஊழியர்களுக்கும் போனஸ்ஸாக வழங்கப்படும் என்று அறிவித்து நடைமுறைப்படுத்திப் பார்க்கலாம். சிக்கனத்தை சலுகைப் பறிப்பாக அல்லாமல், கூடுதல் வருவாய்க்கான வாய்ப்பாக மாற்றித் தரவேண்டும்.</div>
<div>அதை விட்டுவிட்டு, எகானமி வகுப்பில் பயணம் செய்து, ரயிலில் பயணம் செய்து என்ன செய்தியை இந்த அரசியல்வாதிகள் நமக்கு வழங்குகிறார்கள்? ஒன்றுமே இல்லை. அவர்களுடைய பயணம் மக்களை ஊக்கப்படுத்துவதற்குப் பதில், அவர்களுடைய போலி முகங்களைத்தான் தோல் உரித்துக் காட்டுகின்றன. இது நாள் வரை நீங்கள் எப்படி பயணம் செய்தீர்கள், வருங்காலத்தில் எப்படியெல்லாம் பயணம் செய்வீர்கள் என்றெல்லாம் மக்களுக்குத் தெரியாமலா இருக்கும்?</div>
<div>ஒரு வகையில், சிக்கனம் என்பதை நடைமுறைப்படுத்துவதை விட, அதை ஒரு விளம்பரமாக மாற்றிக்கொள்ளும் அரசியல்வாதிகளின் புகழ்போதைதான் இந்தப் பயணங்களில் தெரிகிறது. உண்மையில், அவர்கள் சொல்ல வேண்டிய செய்தியின் நேர் எதிர் செய்தியைத்தான், அவர்களுடைய செயல்கள் நமக்குச் சொல்லுகின்றன.</div>
<div>மக்கள் விவரமானவர்கள். மக்கள் நீங்கள் செய்வதைப் படிப்பதில்லை, நீங்கள் செய்வதின் பின்னுள்ள அரசியலைத்தான் படிக்கிறார்கள். நீங்கள் பேசும் பேச்சுக்களைக் கேட்பதில்லை, அதற்குப் பின்னே ஒலிக்கும் உள்நோக்கங்களைத்தான் கேட்கிறார்கள்.</div>
<div>இதெல்லாம் அரசியல்வாதிகளுக்குத் தெரியாதா என்ன? தெரியும். தெரிந்தும் இந்தக் கேலிக்கூத்துகளுக்கு இடம் கொடுக்கிறார்கள். எல்லாம் ‘வளர்ச்சியின் வலி’ என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.</div>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.nesamudan.com/blog/2009/09/16/austerity/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>மாற்றத்துக்கான மொழி</title>
		<link>http://www.nesamudan.com/blog/2009/08/19/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf/</link>
		<comments>http://www.nesamudan.com/blog/2009/08/19/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf/#comments</comments>
		<pubDate>Wed, 19 Aug 2009 10:18:08 +0000</pubDate>
		<dc:creator>வெங்கடேஷ்</dc:creator>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[தேர்தல்]]></category>
		<category><![CDATA[மகாத்மா காந்தி]]></category>
		<category><![CDATA[ராகுல் காந்தி]]></category>

		<guid isPermaLink="false">http://www.nesamudan.com/blog/?p=50</guid>
		<description><![CDATA[இது உங்களில் எத்தனை பேர் கவனத்துக்கு வந்ததோ தெரியவில்லை. தமிழகத்தில் நாளை ஆகஸ்டு 20 ஆம் தேதி முதல் இளைஞர் காங்கிரஸில் உறுப்பினர்கள் சேர்க்கை நடக்க இருக்கிறது. உறுப்பினர் சேர்க்கை முடிந்தபின்னர் மாநில அளவில் இளைஞர் காங்கிரஸுக்கு நிர்வாகிகள் தேர்தல் நடக்க இருக்கிறது. ஒவ்வொரு கட்டமாக தேர்தல் நடந்து அகில இந்திய காங்கிரஸை 2011க்கு பலப்படுத்துவதுதான் ராகுல் காந்தியின் எண்ணம். திட்டம். ஏற்கனவே ஹரியானா, குஜராத், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இளைஞர் காங்கிரஸ் தேர்தல் நடந்து நிர்வாகிகள் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>இது உங்களில் எத்தனை பேர் கவனத்துக்கு வந்ததோ தெரியவில்லை. தமிழகத்தில் நாளை ஆகஸ்டு 20 ஆம் தேதி முதல் இளைஞர் காங்கிரஸில் உறுப்பினர்கள் சேர்க்கை நடக்க இருக்கிறது. உறுப்பினர் சேர்க்கை முடிந்தபின்னர் மாநில அளவில் இளைஞர் காங்கிரஸுக்கு நிர்வாகிகள் தேர்தல் நடக்க இருக்கிறது. ஒவ்வொரு கட்டமாக தேர்தல் நடந்து அகில இந்திய காங்கிரஸை 2011க்கு பலப்படுத்துவதுதான் ராகுல் காந்தியின் எண்ணம். திட்டம். ஏற்கனவே ஹரியானா, குஜராத், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இளைஞர் காங்கிரஸ் தேர்தல் நடந்து நிர்வாகிகள் தேர்வாகியிருக்கின்றனர். </p>
<p>இளைஞர் காங்கிரஸ் தேர்தல் பற்றி, கூகுளில் தேடினீர்கள் என்றால் எண்ணற்ற புதிய, சுவாரசியமான தகவல்கள் கிடைக்கும். படித்துக்கொள்ளுங்கள். நான் பேச வந்தது வேறு. </p>
<p>மக்களவை தேர்தலுக்கு முன்பு அஇஅதிமுக இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை என்ற அமைப்புகளைத் தொடங்கி, தமிழகம் முழுவதும் இளைஞர்களைக் கட்சிக்குள் சேர்த்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கும். ஒவ்வொரு ஊரிலும் இளைஞர்களைச் சேர்க்கும் காட்சி ஜெயா தொலைக்காட்சியில் தொடர்ந்து ஒளிபரப்பி வந்தார்கள். இப்போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த இளைஞர்கள் இளம்பெண்கள் பாசறையின் கூட்டங்கள் நடந்துவருகின்றன. </p>
<p>யார் போய் சேர்ந்தார்கள்? எப்படிச் சேர்ந்தார்கள் என்றெல்லாம் கொஞ்சம் தோண்டித் துருவிப் பார்த்தால், உங்களுக்குப் பல விஷயங்கள் புரியும். மிடில்கிளாஸ் அந்தப் பக்கமே தலைவைத்துப் படுக்கவில்லை. சேர்ந்தவர்கள், பெரும்பாலும் ஏழை எளிய இளைஞர்கள். இவர்கள் எல்லோரும் விருப்பப்பட்டு சேர்ந்தார்களா? நிச்சயம் இல்லை. சேர்க்கப்பட்டார்கள். ஒவ்வொரு வட்டத்திலும் இருக்கும் கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் ஆள்பிடித்துக் கொண்டு வந்து சேர்த்தார்கள். லோக்கல் கட்சிக்காரர்களின் வாரிசுகளும் இதில் அடக்கம். </p>
<p>அடுத்த கேள்வி: இவர்களுக்கு எல்லாம் அரசியல் உணர்வு, கொள்கைத் தெளிவு, ஈடுபாடு எல்லாம் உண்டா? யார் சொன்னது? கட்சியின் அடையாள அட்டை அரசு அலுவலகங்களுக்குள் போய்வருவதற்கும், ஏதேனும் கோரிக்கைகளை எடுத்துச் சொல்லவும், நாளை தாம் சார்ந்த கட்சி ஆட்சிக்கு வந்தால், வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெறவும் பயன்படும் என்ற தெளிவு இவர்களுக்கு உண்டு. </p>
<p>ஒருவகையில் கட்சிக்கு ஆள்பிடிப்பது என்பது மிகப் பெரிய கேலிக்கூத்தாக இருக்கிறது. </p>
<p>அப்படியானால், இன்றைக்கு இளைஞர்களுக்கு அரசியலே பிடிக்கவில்லை. அவர்கள் அ-பொலிட்டிக்கலாக இருக்கிறார்கள், அரசியலில் இருந்து தள்ளியே இருக்க விரும்புகிறார்கள் என்று எடுத்துக்கொள்ள வேண்டுமா? நான் அப்படி நினைக்கவில்லை. இன்றைய இளைஞர்களுக்கு நிறைய விஷயங்கள் தெரியும். நமது அரசியல் கட்சிகள்தான் இன்னும் மெளடீகமாக இருக்கின்றன. இதுதான் பிரச்னை. இதைக் கொஞ்சம் விளக்கினால், இன்னும் புரிந்துகொள்ள முடியும்.</p>
<p>ஒரு அரசியல் கட்சியின் முக்கியத்துவம் அது முன்வைக்கும் கோஷம், எடுத்துப் பேசும் செய்திகள், வகுத்துக் கொடுக்கும் கொள்கைகள் மற்றும் அதன் உள்ளர்த்தத்தில்தான் அடங்கியிருக்கிறது. இந்தக் கோஷமும் செய்தியும் கொள்கைகளும் அந்தந்தக் காலகட்டத்துகான பொருத்தப்பாட்டோடு இருக்கவேண்டும். அப்போதுதான் அதனால் ஈர்க்கப்பட்டவர்கள், அந்தக் கோஷத்தோடு, கொள்கையோடு அதைப் பேசும் கட்சியோடு அணிதிரள்வார்கள்.</p>
<p>நாம் வேறு எங்கேயும் போகவேண்டாம். நான் மகாத்மா காந்தியை கொஞ்சம் சிரத்தையோடு படித்தவன். அவர் பிறவித் தலைவர் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தே கிடையாது. அவருக்கு யாரேனும் அரசியல் சொல்லிக்கொடுத்திருப்பார்களா என்று தெரியவில்லை. ஆனால், அவர் மக்களைத் திரட்டிய விதத்தை யோசித்துப் பாருங்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு கோஷம். ஒத்துழையாமை இயக்கம், வெளையனே வெளியேறு, உப்பு சத்தியாகிரகம், அந்நிய துணிகள் பகிஷ்கரிப்பு என்று வரிசையாக கோஷங்கள், இயக்கங்கள். ஒவ்வொரு இயக்கமும் மக்களின் மனத்தைப் படம்பிடித்துக் காட்டும் இயக்கங்கள். எதை மக்கள் எதிர்பார்த்தார்களோ, பேச வேண்டும், போராட வேண்டும் என்று நினைத்தார்களோ, அதைத்தான் காந்தி இயக்கங்களாகக் கட்டி எழுப்பினார். மக்கள் கோடிக்கணக்கில் அவர் பின்னால் அணிதிரண்டார்கள். </p>
<p>நம்ம தமிழ்நாட்டையே எடுத்துக்கொள்ளுங்களேன். 1967ல் ஆட்சி மாற்றம் தமிழகத்தில் ஏற்பட என்ன காரணம்? இந்தி எதிர்ப்பு. அது ஒரு கோஷம். அதை வெகுமக்கள் இயக்கமாகக் கட்டி எழுப்பியது தி.மு.க. அன்று இளைஞர்கள் லட்சக் கணக்கில் வந்து தி.மு.க பின்னே நின்றார்களே. அவர்களெல்லாம் நிச்சயம் ஆள்பிடித்து, லாரிகளில் ஏற்றிவந்த கூட்டம் அல்ல. </p>
<p>இதெல்லாம் அந்தக் காலம், இன்றைக்கு அப்படிப் பேச எதுவுமே இல்லை என்று நினைத்தீர்கள் என்றால், நீங்கள்தான் கண்ணை மூடிக்கொள்கிறீர்கள் என்று அர்த்தம். அமெரிக்காவில் ஒபாமா பேசியது என்ன? அவர் முன்வைத்த கோஷங்கள் என்ன? மக்கள் அவர் பின்னால் அணிதிரளாமலா போய்விட்டார்கள்? அவர் அப்படி என்னதான் பேசினார்: அ) சுற்றுச்சூழல் மாசுபடுவதைக் குறைக்கவேண்டும், தடுக்க வேண்டும். வண்டிகளிலிருந்து பிற தொழில்களில் இருந்தும் வெளியேறும் புகை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும். ஆ) பங்குச் சந்தையில் பணம் சம்பாதித்தவர்கள் மீது, அவர்கள் சம்பாதித்த தொகை மீது போடப்படும் வரியை உயர்த்த வேண்டும். பணக்காரர்கள் (ஒரு மில்லியன் டாலர்களுக்கு மேல் சம்பாதிப்பவர்கள்) இன்னும் அதிகமாக வரி கட்ட வேண்டும். இ) போரில் ஈடுபடும் நாடுகளோடு முன்நிபந்தனை இல்லாமல் சமாதானம் பேச வேண்டும். ஈ) நாடு முழுவதும் எல்லோருக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம் உ) ஆயுத கலாச்சாரத்தை அடியோடு ஒழிக்க, ஆயுதங்கள் மீதான சட்டங்கள் இன்னும் கடுமையாக வேண்டும்.</p>
<p>இப்போது அமெரிக்காவை யோசித்துப் பாருங்கள். அதன் மேல் நடந்த பயங்கரத் தாக்குதலை யோசித்துப் பாருங்கள். இன்ன பிற பிரச்னைகளையும் யோசித்துப் பாருங்கள். மேலே ஒபாமா முன்வைத்த கோஷங்களை அதனோடு இணைத்துப் பாருங்கள். ஒபாமாவுக்கு ஏன் ஓட்டு விழுந்தது உங்களுக்கே புரியும்.</p>
<p>விஷயம் இதுதான்: ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு கட்சியும் மாற்றத்துக்கான மொழியைப் பேச வேண்டும். அது அந்தக் காலகட்டத்தின் மொழியாகவும் எதிர்பார்ப்பாகவும் இருக்கவேண்டும். </p>
<p>ஆனால், இந்தியாவில் பெரும்பாலான கட்சிகள் இன்னும் பழைய மொழியையே பேசிக்கொண்டு இருக்கின்றன. தனிமனித துதி, தனிமனித சாகசம், நூற்றாண்டு பாரம்பரியம் என்ற பழம் பெருமை, அதிகபட்சம் ஒன்றிரண்டு சாதனைகள் என்று மட்டுமே இவை பேசுகின்றன. மிச்சுவல் பண்டு விளம்பரங்களில், கீழே சின்ன எழுத்தில் ஒரு டிஸ்கிளைமர் வரி போட்டிருப்பார்கள்:  Past performance may or may not be sustained in future. அதுதான் இங்கேயும் உண்மை. நேற்று நீ என்ன செய்தாய் என்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. </p>
<p>முதலில் நீ நாளைக்கான மொழியைப் பேசு. ஒபாமா பேசினார். இன்றைக்கு அவருடைய மொழிதான் அவருக்கு முகம் கொடுத்திருக்கிறது. அவருடைய கரிசனம்தான், மக்கள் மத்தியில் தலைவராக ஆக்கியிருக்கிறது. அவரால், சாதாரண அமெரிக்கனின் வலியோடு தன்னைத் தொடர்புபடுத்திப் பார்க்க முடிந்தது.  அவர் பின்னே மக்கள் அணிதிரண்டதில் ஆச்சரியமே இல்லை.</p>
<p>ராகுல் காந்தி செய்யவேண்டியது இதுதான்: இன்றைக்கு இந்தியா சந்திக்கும் பிரச்னைகளைப் புரிந்துகொண்டு, சாதாரண மனிதனின் வலியோடு கனவுகளோடு எதிர்பார்ப்புகளோடு கோபங்களோடு எரிச்சல்களோடு தன்னைத் தொடர்புபடுத்திக்கொள்ளத் தெரிய வேண்டும். அதில் இருந்து விடுதலைக்கான கோஷங்களை உருவாக்க வேண்டும். கோஷங்களை செயல்படுத்திக் காட்டத் திட்டங்களை முன்வைக்க வேண்டும். அதைச் செயல்படுத்தும் அணியை, தனிநபர்களை கண்முன்னே காட்டவேண்டும். அது போதும். அப்புறம் மக்கள்வெள்ளம் தன்னால் அணிதிரளும். </p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.nesamudan.com/blog/2009/08/19/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
	</channel>
</rss>
