Posts Tagged ‘புதிய இதழ்’

புது இதழ் : சூரிய கதிர்

Posted in இதழியல், புதிய இதழ் on November 18th, 2009 by வெங்கடேஷ் – 3 Comments
சூரிய கதிர்

சூரிய கதிர்

திரைப்படம் தயாரிப்பது போல், பத்திரிகை தொடங்குவது பலருக்கு கனவாக இருக்கிறது. தங்களிடம் சமூகத்துக்குச் சொல்ல ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது அல்லது மற்ற பத்திரிகைகளைவிட தம்மால வித்தியாசமாக ஏதோ ஒன்றைச் செய்துவிட முடியும் என்ற நம்பிக்கை பலருக்கும் இருக்கிறது. இதன் பயனாக, பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் பத்திரிகைத் தொழிலுக்குள் கால்பதித்து வருகிறார்கள். சமீபத்தில் அப்படி கால்பதித்திருப்பவர் ஒரு மருத்துவர்: டாக்டர் கை. கதிர்வேள். மூத்த பத்திரிகையாளர் ராவ்-வை ஆசிரியராகக் கொண்டு, டாக்டர் கை.கதிர்வேளை பதிப்பாசிரியராகக் கொண்டு ‘சூரிய கதிர்’ என்ற மாதமிருமுறை வெகுஜன இதழ் வெளியாகி இருக்கிறது. சப்டைட்டில், ‘சுள்ளுன்னு கொஞ்சம் ஜில்லுன்னு…’ என்று சொல்லுகிறது. இதுதான் சூரிய கதிரின் குறிக்கோள் போலிருக்கிறது. முதல் இதழ் நவம்பர் 16 தேதியிட்டு, நவம்பர் 14ஆம் தேதி கடைகளுக்கு வந்தது. ‘ஐ லவ் தமிழ் – இலியானா இச்ச்!’சுடன் முதல் அட்டை, கவர்ச்சிகரமாக இருக்கிறது.

புதிய இதழ்களில் புதிய அம்சங்களைச் சுலபமாகச் செய்ய முடியும். பாரம்பரியம் என்ற சுமை அதற்குக் கிடையாது. புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்த, எழுத்து முறைகளை முயன்று பார்க்க, புதிய அம்சங்களை, வடிவங்களை எல்லாம் செய்து பார்க்க புதிய இதழ்கள் எப்போதும் பயன்படக்கூடும். வெகுஜன வாசிப்புக்கு ஏற்ற புதிய படைப்புகளை உருவாக்க, வெகுஜன இதழ்கள் உதவக்கூடும். சூரிய கதிர் அதையெல்லாம் செய்கின்றவனா என்று பார்க்கவேண்டும்.

இதழ் முழுவதும் கலர்ஃபுல் விஷயங்கள். நேற்றைய இன்றைய பிரபலங்கள், எல்லா பக்கங்களில் அணிவகுத்திருக்கிறார்கள். 80 பக்கங்கள். நிறைய கட்டுரைகள். இதழ் முழுவதும் features அம்சங்கள் கூடுதல். வெகுஜன இதழுக்கான அத்தனை அம்சங்களும் இங்கே ஆஜர்.  மொத்த இதழையும் படித்த பின்னர், எனக்குப் பிடித்த அம்சங்கள் இவை:

1. ஜெயேந்திரர் கைதுக்குப் பின்னர், அவரை விரிவாக பேட்டி எடுத்துப் போட்டிருக்கும் முதல் இதழ் இதுதானோ என்னவோ? பத்திரிகைகள், ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டபோதும் அதற்குப் பின்னரும் அவரைத் தொடத்தக்கவர் அல்ல என்று விலக்கி வைத்திருந்தன. அதற்கு முன்னர் இதே பத்திரிகைகள், அவரைப் பற்றிப் பக்கம் பக்கமாக புகழ்ந்து எழுதித் தள்ளின. இப்போது, இந்தப் பேட்டியில், ஒரு நிதானம் இருக்கிறது. பக்குவம் இருக்கிறது. பேலன்ஸ் இருக்கிறது.

2. சின்னகுத்தூசியின் ‘சட்டமும் மக்களும் – அதுவா இதுவா?’ என்ற இரண்டு பக்கக் கட்டுரை இருக்கிறது. பழைய அரசியல் செய்திகளைச் சுவாரசியத்தோடும் விவர ஞானத்தோடும் எழுதத் தெரிந்த ஒரு சிலரில் சின்னகுத்தூசி ஒருவர். அவரது கட்டுரை சிற்பம் செதுக்கினார் போல் இருக்கும். இந்தக் கட்டுரையும் அப்படியே. தேர்ந்த பத்திரிகையாளரின் கைவண்ணம் அதில் மிளிர்கிறது.

3. மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் மனைவி சுஜாதாவின் நினைவுகள், தமிழச்சி தங்கபாண்டியனின் அழகு பற்றிய கட்டுரை, வைகோ பேட்டி எல்லாம் நல்ல சுவாரசியத்துடன் எழுதப்பட்டுள்ளன.

4. சீனா பற்றிய கட்டுரை, டாக்டர் கை.கதிர்வேளின் ‘என்று தணியும் இந்த சுதந்திர தாகம்’ கட்டுரை ஆகியவை முக்கியமானவை.

கூடவே நிறைய கேள்விகளும் தோன்றின. அவை:

1. ஏன் எல்லா கட்டுரைகளும் பேட்டிகளும் ‘கீர்த்தனாரம்பத்திலே…’ என்று தொடங்குகின்றன? ஜெயேந்திரர் பேட்டி, அவருக்கு எட்டு வயதில் பூணூல் போட்டதில் இருந்து தொடங்குகிறது. வைகோ பேட்டி, ‘பிறந்த ஊரில் மறக்க முடியாத விஷயங்கள்?’ என்று தொடங்குகிறது, கே.எம். செரியனின் பேட்டி இப்படித் தொடங்குகிறது ‘ஐந்தேகால் அடி கம்பீரமான உயரம். எப்போதும் மாறாத 66 கிலோ எடை…’ இதெல்லாம் கொஞ்சம் Cliché  இல்லையோ? இப்படி நிறைய முறை ஏற்கெனவே எழுதி எழுதித் தேய்த்துவிட்டோமே? பொதுவாக வெகுஜன பத்திரிகை பேட்டிகள், பேட்டி கட்டுரைகள் எல்லாம் சமீபத்திய விவரங்களில் இருந்து தொடங்கி, மேலே எழுந்து செல்லுமே அன்றி, முன்கதை சுருக்கம் மாதிரி இருப்பதில்லை.

2. டீக்கடை பெஞ்சு, கழுகார் பாணியில், அரசியல் பேசும் நால்வர் அணியின் பத்தி ஒன்று இருக்கிறது. ஆனால், அதில் சுவாரசியமான விஷயங்கள் வெளிவந்திருக்கிறதா என்பது முக்கியம்.

3. பாலகுமாரன் தொடர் ஒன்று ஆரம்பித்திருக்கிறார். அவரது எழுத்தில் கவர்ச்சி காணாமல் போய் ரொம்ப நாளாச்சு இல்லையோ? புதிதாக என்ன சொல்லப் போகிறார் என்று பார்க்கவேண்டும்.

4. இவ்வளவு பக்கங்கள் கொண்ட இதழில் ஒரு சிறுகதை கூட இல்லை. கதைக்கான காலம் முடிந்துபோய்விட்டது என்று சொல்லாமல் சொல்லுகிறார்களோ?

5. டோட்டல் வேஸ்ட் என்று சொல்லவேண்டுமென்றால், அந்தப் புகழ் கடைசி பக்கத்துக்குப் போய்ச் சேரும். சும்மா வெள்ளைத்தாளாய் விட்டுவிட்டால் கூடப் பரவாயில்லை. இயக்குநர் பார்த்திபனின் உளறல் சகிக்கவில்லை. இரண்டாவது வேஸ்ட், பாஸ்கியின் இரண்டு பக்க அறுவை. தாங்க முடியவில்லை. கிச்சுகிச்சு மூட்டினால் கூட சிரிப்பு வந்துடும். இதில் அதுகூட வரமாட்டேன் என்கிறது.

6. என் வருத்தங்களில் முக்கியமானது, புதியவர்களின் பங்களிப்பு இந்த இதழில் எங்கேயும் காணக்கிடைக்கவில்லை என்பதுதான். ஏற்கெனவே பிரபலமானவர்கள், அல்லது சமீபத்தில் பிரபலமானவர்கள்தான் இதழ் எங்கும் நிறைந்திருக்கிறார்கள். நாளைய பிரபலங்களை, இன்றே இனங்காணுவது இன்னும் சிறப்பு இல்லையா?

இன்றைக்கு இருக்கும் வர்த்தக போட்டியில், எப்படி இந்த இதழைக் கொண்டு போய் மக்களிடம் சேர்க்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. 14ஆம் தேதி சென்னை சுவர்களில் கொஞ்சம் போஸ்டர்கள் பார்த்தேன். கடைகளில் போஸ்டர்கள் காணோம். பெரிய விளம்பரம் காணோம். கொண்டாட்டங்களும் மிஸ்ஸிங். இன்றைக்கு வெகுஜன இதழ் தொடங்குவது என்பது அமைதியான விஷயமில்லை. புதுப்பட தொடக்க விழா பூஜை மாதிரி பெரிய அளவில் செய்தால்தான், கொஞ்சமாவது வாசகர்களின் கவனத்தைக் கவர முடியும்.

மேலும் இதழின் விலை ரூ.15. ரூ.10 என்பது ஒரு பெரிய தடுப்பு. பலர் ரூ.10ஐத் தாண்டி யோசிக்க மாட்டேன் என்கிறார்கள். இந்த விலையை, வாசகர்கள் எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறார்கள் என்றும் பார்க்கவேண்டும்.

சூரிய கதிர் – வெகுஜன வெரைட்டி மசாலா.

தஞ்சாவூர்க்கவிராயர், சுந்தர்ஜி – தனி இதழ்கள்

Posted in இலக்கியம், புதிய இதழ் on September 16th, 2009 by வெங்கடேஷ் – Be the first to comment
புதிய இதழ்கள் எப்போதுமே மகிழ்ச்சி தருவன. அது பெரிய வெகுஜன இதழாகட்டும், சிறு பத்திரிகையாகட்டும், புது முயற்சிகள் எப்போதுமே உற்சாகமானவை. மாலனை ஆசிரியராகக் கொண்ட  ‘புதிய தலைமுறை’ விஜயதசமி அன்று வெளியாகும் என்று நினைக்கிறேன். விகடனில் முன்னர் ஆசிரியராக இருந்த ராவ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு ‘சூரியக் கதிர்’ என்ற புதிய இதழ் விரைவில் வெளிவரவிருக்கிறது. என்னுடைய நீண்ட நாள் நண்பர் பொன். வாசுதேவன், ‘அகநாழிகை’ என்ற இருமாத இதழை அக்டோபர் 2009ல் இருந்து கொண்டு வர இருக்கிறார்.
சென்ற வாரம் ‘சுந்தர்ஜி’ இதழ் எனக்கு வந்து சேர்ந்தது. அதற்கு முன்னரே ‘தஞ்சாவூர்க்கவிராயர்’ இதழ்களும் வந்து சேர்ந்தன. இந்த இரண்டு இதழ்களும் விசேஷமானவை. இரண்டுமே தனி ஆசிரியர்களின் சொந்த இதழ்கள். இதில், அந்தந்த ஆசிரியர்களின் சொந்தப் படைப்புகள் மட்டுமே வெளிவரும். ‘நேசமுடன்’ மடல் இதழைத் தொடங்கியபோது, இதே கருத்தைத்தான் நான் ஆரம்பத்தில் சொன்னேன். இப்போது அது இவ்விரு கவிஞர்களின் தனி இதழ்களாக உருவாகி இருக்கின்றன.
முதலில் தஞ்சாவூர்க்கவிராயர். மூன்று இதழ்கள் வந்துவிட்டன. பல ஆண்டுகளாக கவிதைகள் எழுதுபவரும் மொழிபெயர்ப்புகள் செய்பவருமான தஞ்சாவூர்க் கவிராயரான கோபாலகிருஷ்ணனின் தனி இதழ். சமீபத்தில் கல்கி இதழில் 13 வாரங்கள் கவிதைத் தொடர் ஒன்றை எழுதி முடித்தார். கணையாழியில் தொடர்ந்து இவரது கவிதைகளை நான் படித்திருக்கிறேன். இப்போது இந்த இதழில் (24 பக்கங்கள்) ஏராளமான கவிதைகள் கொட்டிக்கிடக்கின்றன. கடைசியில் குழந்தைகளுக்காக இவர் எழுதியுள்ள மழலைப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. கடைசி இரண்டு பக்கங்களில் ராஜாஜியின் ஜெயில் டைரியை மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார்.
சுந்தர்ஜி. தஞ்சை மண்ணில் இருந்து வந்த மற்றொரு கவிஞர். தஞ்சை பிரகாஷ்தான் இவர்களுக்கு எல்லாம் இன்ஸ்பிரேஷன். இவருடைய கவிதைகளையும் நான் சிறுபத்திரிகைகளில் படித்திருக்கிறேன். கோபாலகிருஷ்ணன் நேரில் பழக்கம் உண்டு. இவர் யாரென்று நேரில் பார்த்து அறியேன். ஆனால், சுந்தர்ஜி இதழ் மொத்தமும் இவர் கவிதைகள் இவருடைய பல்வேறு ஆர்வங்களை எனக்கு எடுத்துக் காட்டியது. ரசனை மிக்க கவிதைகள்.
எப்படி எனக்கு இவர்களின் கவிதைகள் பிடித்திருக்கின்றவனவோ, அப்படியே இவர்களின் இந்த தனி இதழ் கருத்தும் மிகவும் பிடித்திருக்கிறது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், சிறுபத்திரிகைகளில் வெளிவரும் பல கவிதைகளுக்கு ஒரு சிக்கல் இருக்கிறது. ஒரு கவிஞரைப் பற்றிய முழுமையான பார்வையை உருவாக்கிக்கொள்ள, ஒரு சில தனிக் கவிதைகள் போதுமானதாக இருப்பதில்லை. அதற்கு அவர்களின் கவிதைத் தொகுதிகளைத் தேடிக்கொண்டு போகவேண்டும். புத்தகம் என்றவுடனே அதன் விலையும் கிடைக்குமிடங்களும் பெரிய இடர்களாக மாறிப்போய்விடுகின்றன. இந்த தனி இதழ்கள், கவிதைத் தொகுதிக்கான வேலையையும் சேர்த்துச் செய்கிறது.
இதில் உள்ள பல கவிதைகள், வேறு சிறு பத்திரிகைகளில் வெளிவந்திருக்குமா என்றால் அது சந்தேகம் தான். ஏனெனில், ஒவ்வொரு இதழும் தமக்கான அளவுகோல்களைக் கொண்டே ஒரு கவிதையைத் தேர்வு செய்யும். அந்தந்த ஆசிரியர்களின் பார்வையில் ஒரு சில, கவிதைகளாகவே தோன்றாமல் போகலாம். ஆனால், பல நுட்பமான கவிதைகள் வெளியிடப்படும் வாய்ப்பே இல்லாமல் காகிதத்திலேயே சமாதி அடைந்துவிடக்கூடும். இந்த தனி இதழ்கள், அப்படி காணாமல் போய்விடக்கூடிய கவிதைகளுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
தனி இதழ்கள், இவ்விதழ்களை உருவாக்குவோரின் ஆளுமையைப் பிரதிபலிப்பதாக இருக்கின்றன. தஞ்சாவூர்க் கோபாலி, முக்கியமான மொழிபெயர்ப்பாளரும் கூட. அவர் மழலைப் பாடல்கள் எழுதுவதில் ஆர்வமுள்ளவர் என்பதை இந்த இதழைப் பார்த்துதான் நான் தெரிந்துகொண்டேன். இந்த இதழ்களில் அவர்களின் அத்தனை பரிமாணங்களையும் வெளிப்படுத்திக்கொள்ள நல்லதொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இந்த இதழ்களில் மற்றொரு விஷயமும் உள்ளூர நடக்கிறது. கவிஞர்களே இதழ்களின் ஆசிரியர்களாகவும் ஆகும்போது, நல்ல கவிதைகளைத் தேர்வு செய்வதும், அது வாசகர் மத்தியில் போய்ச் சேருவதாக இருக்கவேண்டும் என்பதையும் இந்த ஆசிரியர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். சுயதேர்வு. சுய மதிப்பீட்டை மேம்படுத்தும் தேர்வு இது.
இந்த இதழ்களின் உள்ளடக்கத்தில் ஒரு சிக்கல் இருக்கிறது. வெரைட்டி இல்லாமல் போய்விடக் கூடிய பாதிப்பு ஏற்பட்டுவிடலாம். இன்னொரு சிக்கல், இதன் வாழ்நாள். கவிஞர்களால் தம் சொந்தப் பணத்தைப் போட்டு, எத்தனை இதழ்கள் கொண்டு வர முடியும்? தெரியவில்லை. அதைப் பற்றி இப்போது கவலைப்பட வேண்டாம் என்று நினைக்கிறேன்.
படிப்பதற்கு இந்த இதழ்கள் சிறப்பாக இருக்கின்றன. அதுதான் வாசகனாகிய எனக்கு முக்கியம்.

புதிய இதழ்கள் எப்போதுமே மகிழ்ச்சி தருவன. அது பெரிய வெகுஜன இதழாகட்டும், சிறு பத்திரிகையாகட்டும், புது முயற்சிகள் எப்போதுமே உற்சாகமானவை. மாலனை ஆசிரியராகக் கொண்ட  ‘புதிய தலைமுறை’ விஜயதசமி அன்று வெளியாகும் என்று நினைக்கிறேன். விகடனில் முன்னர் ஆசிரியராக இருந்த ராவ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு ‘சூரியக் கதிர்’ என்ற புதிய இதழ் விரைவில் வெளிவரவிருக்கிறது. என்னுடைய நீண்ட நாள் நண்பர் பொன். வாசுதேவன், ‘அகநாழிகை’ என்ற இருமாத இதழை அக்டோபர் 2009ல் இருந்து கொண்டு வர இருக்கிறார்.

சென்ற வாரம் ‘சுந்தர்ஜி’ இதழ் எனக்கு வந்து சேர்ந்தது. அதற்கு முன்னரே ‘தஞ்சாவூர்க்கவிராயர்’ இதழ்களும் வந்து சேர்ந்தன. இந்த இரண்டு இதழ்களும் விசேஷமானவை. இரண்டுமே தனி ஆசிரியர்களின் சொந்த இதழ்கள். இதில், அந்தந்த ஆசிரியர்களின் சொந்தப் படைப்புகள் மட்டுமே வெளிவரும். ‘நேசமுடன்’ மடல் இதழைத் தொடங்கியபோது, இதே கருத்தைத்தான் நான் ஆரம்பத்தில் சொன்னேன். இப்போது அது இவ்விரு கவிஞர்களின் தனி இதழ்களாக உருவாகி இருக்கின்றன.

முதலில் தஞ்சாவூர்க்கவிராயர். மூன்று இதழ்கள் வந்துவிட்டன. பல ஆண்டுகளாக கவிதைகள் எழுதுபவரும் மொழிபெயர்ப்புகள் செய்பவருமான தஞ்சாவூர்க் கவிராயரான கோபாலகிருஷ்ணனின் தனி இதழ். சமீபத்தில் கல்கி இதழில் 13 வாரங்கள் கவிதைத் தொடர் ஒன்றை எழுதி முடித்தார். கணையாழியில் தொடர்ந்து இவரது கவிதைகளை நான் படித்திருக்கிறேன். இப்போது இந்த இதழில் (24 பக்கங்கள்) ஏராளமான கவிதைகள் கொட்டிக்கிடக்கின்றன. கடைசியில் குழந்தைகளுக்காக இவர் எழுதியுள்ள மழலைப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. கடைசி இரண்டு பக்கங்களில் ராஜாஜியின் ஜெயில் டைரியை மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார்.

சுந்தர்ஜி. தஞ்சை மண்ணில் இருந்து வந்த மற்றொரு கவிஞர். தஞ்சை பிரகாஷ்தான் இவர்களுக்கு எல்லாம் இன்ஸ்பிரேஷன். இவருடைய கவிதைகளையும் நான் சிறுபத்திரிகைகளில் படித்திருக்கிறேன். கோபாலகிருஷ்ணன் நேரில் பழக்கம் உண்டு. இவர் யாரென்று நேரில் பார்த்து அறியேன். ஆனால், சுந்தர்ஜி இதழ் மொத்தமும் இவர் கவிதைகள் இவருடைய பல்வேறு ஆர்வங்களை எனக்கு எடுத்துக் காட்டியது. ரசனை மிக்க கவிதைகள்.

எப்படி எனக்கு இவர்களின் கவிதைகள் பிடித்திருக்கின்றவனவோ, அப்படியே இவர்களின் இந்த தனி இதழ் கருத்தும் மிகவும் பிடித்திருக்கிறது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், சிறுபத்திரிகைகளில் வெளிவரும் பல கவிதைகளுக்கு ஒரு சிக்கல் இருக்கிறது. ஒரு கவிஞரைப் பற்றிய முழுமையான பார்வையை உருவாக்கிக்கொள்ள, ஒரு சில தனிக் கவிதைகள் போதுமானதாக இருப்பதில்லை. அதற்கு அவர்களின் கவிதைத் தொகுதிகளைத் தேடிக்கொண்டு போகவேண்டும். புத்தகம் என்றவுடனே அதன் விலையும் கிடைக்குமிடங்களும் பெரிய இடர்களாக மாறிப்போய்விடுகின்றன. இந்த தனி இதழ்கள், கவிதைத் தொகுதிக்கான வேலையையும் சேர்த்துச் செய்கிறது.

இதில் உள்ள பல கவிதைகள், வேறு சிறு பத்திரிகைகளில் வெளிவந்திருக்குமா என்றால் அது சந்தேகம் தான். ஏனெனில், ஒவ்வொரு இதழும் தமக்கான அளவுகோல்களைக் கொண்டே ஒரு கவிதையைத் தேர்வு செய்யும். அந்தந்த ஆசிரியர்களின் பார்வையில் ஒரு சில, கவிதைகளாகவே தோன்றாமல் போகலாம். ஆனால், பல நுட்பமான கவிதைகள் வெளியிடப்படும் வாய்ப்பே இல்லாமல் காகிதத்திலேயே சமாதி அடைந்துவிடக்கூடும். இந்த தனி இதழ்கள், அப்படி காணாமல் போய்விடக்கூடிய கவிதைகளுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

தனி இதழ்கள், இவ்விதழ்களை உருவாக்குவோரின் ஆளுமையைப் பிரதிபலிப்பதாக இருக்கின்றன. தஞ்சாவூர்க் கோபாலி, முக்கியமான மொழிபெயர்ப்பாளரும் கூட. அவர் மழலைப் பாடல்கள் எழுதுவதில் ஆர்வமுள்ளவர் என்பதை இந்த இதழைப் பார்த்துதான் நான் தெரிந்துகொண்டேன். இந்த இதழ்களில் அவர்களின் அத்தனை பரிமாணங்களையும் வெளிப்படுத்திக்கொள்ள நல்லதொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இந்த இதழ்களில் மற்றொரு விஷயமும் உள்ளூர நடக்கிறது. கவிஞர்களே இதழ்களின் ஆசிரியர்களாகவும் ஆகும்போது, நல்ல கவிதைகளைத் தேர்வு செய்வதும், அது வாசகர் மத்தியில் போய்ச் சேருவதாக இருக்கவேண்டும் என்பதையும் இந்த ஆசிரியர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். சுயதேர்வு. சுய மதிப்பீட்டை மேம்படுத்தும் தேர்வு இது.

இந்த இதழ்களின் உள்ளடக்கத்தில் ஒரு சிக்கல் இருக்கிறது. வெரைட்டி இல்லாமல் போய்விடக் கூடிய பாதிப்பு ஏற்பட்டுவிடலாம். இன்னொரு சிக்கல், இதன் வாழ்நாள். கவிஞர்களால் தம் சொந்தப் பணத்தைப் போட்டு, எத்தனை இதழ்கள் கொண்டு வர முடியும்? தெரியவில்லை. அதைப் பற்றி இப்போது கவலைப்பட வேண்டாம் என்று நினைக்கிறேன்.

படிப்பதற்கு இந்த இதழ்கள் சிறப்பாக இருக்கின்றன. அதுதான் வாசகனாகிய எனக்கு முக்கியம்.

புதிய தலைமுறை – கடிதம் 1

Posted in கடிதங்கள், புதிய இதழ் on August 27th, 2009 by வெங்கடேஷ் – 1 Comment
தலைவரே!
‘புதிய தலைமுறை’ இதழ் குறித்த உங்களது பாசிட்டிவ்வான விமர்சனம் ஆசிரியர் குழுவில் ஒருவன் என்ற முறையில் மனதுக்கு நிறைவாக இருக்கிறது :-)
எங்களது அடுத்த இதழ் உங்களது எதிர்ப்பார்ப்புகளை 99 சதவிகிதம் நிறைவு செய்யும் வகையில் இருக்கும் என்று நம்புகிறேன்.
அன்புடன்
யுவகிருஷ்ணா
பி. கு : தமிழ் பதிப்புலகம் குறித்த உங்களது விரிவான கட்டுரை அபாரம். கட்டுரைக்குப் பின்னாலான உழைப்பு வியக்க வைக்கிறது.
தலைவரே!
‘புதிய தலைமுறை’ இதழ் குறித்த உங்களது பாசிட்டிவ்வான விமர்சனம் ஆசிரியர் குழுவில் ஒருவன் என்ற முறையில் மனதுக்கு நிறைவாக இருக்கிறது :-)
எங்களது அடுத்த இதழ் உங்களது எதிர்ப்பார்ப்புகளை 99 சதவிகிதம் நிறைவு செய்யும் வகையில் இருக்கும் என்று நம்புகிறேன்.
அன்புடன்
யுவகிருஷ்ணா
பி. கு : தமிழ் பதிப்புலகம் குறித்த உங்களது விரிவான கட்டுரை அபாரம். கட்டுரைக்குப் பின்னாலான உழைப்பு வியக்க வைக்கிறது.

மாற்றுப் பார்வையை முன்வைக்கும் ‘புதிய தலைமுறை’

Posted in எழுத்தாளர்கள், புதிய இதழ் on August 26th, 2009 by வெங்கடேஷ் – 3 Comments

மாலனை ஆசிரியராகக் கொண்டு இளைஞர்களுக்கான புதிய வார இதழ் ‘புதிய தலைமுறை’ செப்டம்பர் 2009ல் இருந்து வெளிவரப் போகிறது. எஸ்.ஆர்.எம். கல்விக் குழுமம் இந்த இதழைத் தொடங்கியிருக்கிறது. அதன் முதல் மாதிரி இதழ், எனக்கு இரண்டு படிகள் நேற்று வந்து சேர்ந்தன. கவரைப் பிரித்துப் பார்த்தவுடன், முதல் பார்வையில் இந்த இதழ் ஆங்கில டைம் இதழின் தோற்றத்தையே தந்தது. கண்களில் அடிக்காத வண்ணம், அதிக பக்கங்கள் இல்லாமல் சிக்கென இருந்தது.

வழக்கம்போல், புதிய பேப்பரின் வாசனையை முகர்ந்து பார்த்துவிட்டு, பக்கங்களைப் புரட்டத் தொடங்கினேன். தலைப்புகளை மட்டும் படித்துக்கொண்டே முழு இதழையும் புரட்டிப் பார்த்தேன். லே அவுட், கலர் சென்ஸ் எல்லாம் புரொபஷ்னலாக இருந்தது. திடீரென்று பல்லை இளிக்கும் வெளிர்மஞ்சள் இல்லை. காடியான பச்சை எங்கும் இல்லை. ஒன்றிரண்டு கட்டுரை ஓப்பனிங் பக்க டிசைன்கள் அழகாக இல்லை. கணினியில் எழுத ‘எல்லாமே ஓசி’ கட்டுரை மட்டும் கொஞ்சம் அசிரத்தையான லே அவுட்.

இதைப் புரட்டிக்கொண்டு இருக்கும்போதே, மனத்தில், எந்த இதழோடு இதைப் பொருத்திப் பார்ப்பது? ஒப்பிட்டுப் பார்ப்பது என்ற கேள்விகள் தோன்றின. இதற்கு முன்னர் இளைஞர் இதழ் என்று தமிழில் ஏதேனும் இருந்ததுண்டா? இளைஞர் இதழ் என்று இந்த இதழ் வெளிப்படையாக எங்கும் பிரகடணப்படுத்திக்கொள்ளவில்லை. ஆங்கிலத்தில் உள்ள இளைஞர் இதழ்களோடு ஒப்பிடுவது பொருத்தமாக இருக்குமா?

எதனோடு பொருத்திப் பார்ப்பது என்பதைவிட, எதனோடெல்லாம் இதைப் பொருத்திப் பார்க்கக் கூடாது என்ற எண்ணமும் கூடவே வந்தது. இந்த இதழை சிறுபத்திரிகைகளோடு ஒப்பிடக் கூடாது. அதேபோல், இதை வெகுஜன இதழ்களோடும் ஒப்பிடக் கூடாது (விளம்பர ஏஜென்சிகள் இதனை வெகுஜன இதழ்களோடுதான் ஒப்பிட்டுப் பார்க்கும் என்பது வேறு கதை). இது முற்றிலும் வேறொரு ஃபார்மெட்டில் இருக்கிறது.

நாற்பத்தெட்டு பக்கங்களில், ஒரு சிறுகதை, சாதிக்கும் இளம்பெண்கள் பற்றிய கட்டுரை, உமா சக்தியின் கவிதை, சர்க்கரை நோய் பற்றிய கட்டுரை, ஒரு தன்னம்பிக்கை (சுயமுன்னேற்ற) வடிவ கட்டிரை, சினிமா விமர்சனம், சினிமா துறையில் கிராமத்து இளைஞர்கள் செய்துள்ள சாதனைகள் பற்றி கட்டுரை, சீமானோடு ஒரு நேர்காணல், எஞ்சினியரிங் கவுன்சிலிங் பற்றி ஒரு கட்டுரை, பைக் வாங்குவது பற்றி ஒரு கட்டுரை, ஒரு சிற்றுலா கட்டுரை, கே.ஆர். மணி மொழிபெயர்த்த ‘எங்கே போனது என் அல்வா துண்டு?’ புத்தகத்தின் அறிமுகம், ஒன்றிரண்டு பொதுக் கட்டுரைகள் ஆகியவை இருக்கின்றன.

இளைஞர்கள் என்றாலே ஆழமாகப் படிக்க மாட்டார்கள், கொறிப்பார்கள், அவர்களுடைய அட்டென்ஷன் ஸ்பான் குறுகியது ஆகிய வெகுஜன பத்திரிகையின் எண்ணங்கள் இந்த இதழின் தயாரிப்பில் குறுக்கிடவே இல்லை என்பது நன்கு தெரிகிறது. ஒவ்வொரு கட்டுரையும் மூன்று நான்கு பக்கங்களுக்கு நீளுகின்றன. அதேபோல், அவர்கள் கவர்ச்சியையும் சென்சேஷனையும் தேடி ஓடுகிறார்கள் என்ற பொருத்தமற்ற எண்ணமும் இவ்விதழில் குறுக்கிடவில்லை. இளம்பெண்களை எங்குமே கவர்ச்சி வஸ்துவாக இவ்விதழ் காட்டவில்லை.

கட்டுரைகளையும் பேட்டியையும் கதையையும் படித்து முடித்தேன். முக்கால் மணி நேரம் ஆகியிருந்தது. எழுத்து முழுவதிலும் ஒரு கண்ணியம் இருக்கிறது. நிதானம் இருக்கிறது. அமரிக்கை இருக்கிறது. சொல்ல வந்ததை முழுமையாகச் சொல்ல வேண்டும் என்ற பொறுப்பு இருக்கிறது. எல்லா கட்டுரைகளும் புரியும்படி இருக்கிறது. வார்த்தை ஜோடனைகளோ, Highbrow மனப்பான்மையோ இல்லை. பம்மாத்து இல்லை. தனிமனித துதி இல்லை. என் மனத்துக்கு நிறைவாக இருந்தது.

இதுவரை இவ்விதழில் இருந்ததைச் சொல்லிவிட்டேன். என்ன இருந்தால் நன்றாக இருக்கும் என்பதையும் சொல்லிவிடுகிறேன்.

தலையங்கம் வேண்டும். இளைஞர்களின் கருத்துகளை பிரதிபலிக்கும் விதமாக தலையங்கம் இருக்கவேண்டும். தலையங்கம் தான் பத்திரிகையின் குரல். இந்த இதழில் அந்தக் குரல் கேட்கவேண்டியது மிக அவசியம். வெகுஜன ஊடகங்கள் திரும்பத் திரும்ப இளைஞர்களின் குரல் என்று ஒரு மாய பிம்பத்தைச் சமைத்துக்கொண்டு இருக்க, நிச்சயம் அது மட்டுமே எங்கள் குரல் அல்ல, எங்களுக்கு வேறு குரல்களும் குறிக்கோள்களும் உண்டு என்று இந்தத் தலையங்கம் எடுத்துச் சொல்வது அவசியம்.

மற்றொன்று, ஸ்டைல். நான் எழுத்துப் பாணி, நடைகளின் தனிக்காதலன். இந்த இதழில் யாருக்கும் தனி நடை இருப்பதாக தெரியவில்லை. வித்தியாசமான எழுத்து நடை, வட்டார வழக்குகள், சொல்லும் முறை ஆகியவற்றுக்கு இந்த இதழ் இடம்கொடுக்க வேண்டும். இதழ் மொத்தமும் ஒரே குரலும் நடையும் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். காட்சி ஊடகம் எப்படி கட்டிப் போடுகிறதோ அதேபோல் எழுத்து ஊடகமும் கட்டிப் போட வேண்டும். வெரைட்டி இருந்தால்தான் அது சாத்தியம்.

உலக அரசியலும் உள்ளூர் அரசியலும் வேண்டும். தகவல் கட்டுரைகளாக, அலசல்களாக, ஆக்கபூர்வமான விமர்சனங்களாக அரசியல் இருக்க வேண்டும். அழுத்தந்திருந்தமான கருத்துகள் சொல்லப்பட வேண்டும்.

இணையமும் கணினியும் செல்போனோனும் சார்ந்திருக்கும் இளைஞர் சமூகத்தைவிட, அது இல்லாமல், இன்னும் சிறு நகரங்களிலும் ஊர்களிலும் கிராமங்களிலும் இருக்கும் இளைஞர்கள் அதிகம். அவர்கள் இன்னும் அச்சடித்த எழுத்தை நம்புகிறார்கள். அதில் தங்கள் பெயர் பத்து பாயிண்ட் போல்டில் வரவேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்களுக்கான கனவுகளும் எதார்த்தங்களும் வேறு. புதிய தலைமுறை, அந்த வாசகர்களையும் மனத்தில் கொண்டு படைக்கப்படுவது சரியாக இருக்கும்.

இந்தப் பத்திரிகைக்கு விலை குறிப்பிடப்படவில்லை (இது மாதிரி இதழ்). விலை ரூ. 10, ரூ.15 வைக்கப்படலாம். இந்த விலைக்கு 48 பக்கங்கள் மிகவும் குறைவு என்ற எண்ணம் வராமல் இல்லை. 80 பக்கங்களேனும் இருப்பது சரியாக இருக்கும்.

ஒரு வகையில், சினிமா தொலைக்காட்சி பத்திரிகைகள் என்று வெகுஜன கலாசாரத்தில் இளைஞர்கள் பற்றி படிந்துபோயுள்ள வழக்கமான கொச்சை பிம்பங்களுக்கு மாற்றாக இந்த இதழ் இருக்க முயற்சித்திருக்கிறது. அதனாலேயே பல இளைஞர்களுக்கு இவ்விதழோடு ஒன்றிப் போக முடியும். என்னால் முடிகிறது. இதுதான் இவ்விதழில் வெற்றியாக இருக்க முடியும்.

பி.கு 1: என் மனைவி இவ்விதழை படித்து முடித்துவிட்டார். அவர் கமெண்ட்: ‘வடக்கு வாசல், ரசனை, உயிர்மை எல்லாம் வருதே.. அது மாதிரி இருக்கு இது.’
பி.கு.2: எழுத்துப் பிழைகள் கண்ணை உறுத்துகின்றன.