<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>நேசமுடன் &#187; பணவீக்கம்</title>
	<atom:link href="http://www.nesamudan.com/blog/tag/%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%b5%e0%af%80%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.nesamudan.com/blog</link>
	<description>மடல் இதழ்</description>
	<lastBuildDate>Thu, 21 Jan 2010 02:39:22 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.org/?v=2.9.2</generator>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
			<item>
		<title>2009 &#8211; மறக்க முடியாத ஆண்டு 3 : பொருளாதாரம்</title>
		<link>http://www.nesamudan.com/blog/2009/12/30/2009yearendspl3/</link>
		<comments>http://www.nesamudan.com/blog/2009/12/30/2009yearendspl3/#comments</comments>
		<pubDate>Wed, 30 Dec 2009 07:08:28 +0000</pubDate>
		<dc:creator>வெங்கடேஷ்</dc:creator>
				<category><![CDATA[பொருளாதாரம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[பணவீக்கம்]]></category>
		<category><![CDATA[விலைவாசி உயர்வு]]></category>

		<guid isPermaLink="false">http://www.nesamudan.com/blog/?p=292</guid>
		<description><![CDATA[2009 தொடங்கியபோது, விலைவாசி உயர்வு கடுமையாக இருந்தது. அக்டோபர், நவம்பர் 2008ல் இருந்தே விலைவாசி கடுமையாக உயரத் தொடங்கியிருந்தது. 2009 இறுதி வரை விலைவாசி இறங்கவே இல்லை. காய்கறிகள், பருப்பு வகைகள், மளிகை சாமான்கள் எல்லாம் கீழ் மத்திய வர்க்கமும் மத்திய வர்க்கமும் வாங்க முடியாத உயரத்துக்குப் போய்விட்டது. எந்த விதமான நடவடிக்கையையும் மத்திய அரசு மேற்கொண்டதாகத் தெரியவில்லை.]]></description>
			<content:encoded><![CDATA[<p>1. 2009 தொடங்கியபோது, விலைவாசி உயர்வு கடுமையாக இருந்தது. அக்டோபர், நவம்பர் 2008ல் இருந்தே விலைவாசி கடுமையாக உயரத் தொடங்கியிருந்தது. 2009 இறுதி வரை விலைவாசி இறங்கவே இல்லை. காய்கறிகள், பருப்பு வகைகள், மளிகை சாமான்கள் எல்லாம் கீழ் மத்திய வர்க்கமும் மத்திய வர்க்கமும் வாங்க முடியாத உயரத்துக்குப் போய்விட்டது. எந்த விதமான நடவடிக்கையையும் மத்திய அரசு மேற்கொண்டதாகத் தெரியவில்லை.</p>
<p>2. சர்வதேச பொருளாதாரம், குறிப்பாக அமெரிக்கப் பொருளாதாரம் மெல்ல மெல்ல வளரத் தொடங்கியது. அதுவும், மக்களுக்கு, அமெரிக்க அரசு கொடுத்த வரிச்சலுகை, பணப்பட்டுவாடா மூலம், மக்கள் கையில் பணப்புழக்கத்தை அரசு மேம்படுத்தியது. இதனால், மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும், அதன் மூலம் உற்பத்தி பெருகும் என்பது எதிர்பார்ப்பு. எதிர்பார்த்தபடியே ஒவ்வொரு உற்பத்தி நிறுவனமும் வளர்ந்திருப்பதாக, 2009 கடைசி காலாண்டு நிதி அறிக்கைகளில் விவரங்களைத் தெரிவித்திருக்கின்றன.</p>
<p>3. ஆனால், வேலைவாய்ப்பு உயரவில்லை. அமெரிக்காவிலும் உயரவில்லை. இந்தியாவிலும் உயரவில்லை. எல்லா இடங்களிலும் ஒருவித பயமும் தயக்குமும் அப்படியே இருக்கின்றன. உருவாகியிருக்கும் வேலைவாய்ப்புகளும் ஆரம்பநிலை வேலைகளுக்கே உருவாகியிருக்கிறது. குறைந்த ஊதிய வேலைகள் அவை. அல்லது ஒப்பந்த வேலைகள். இந்திய ஐடி நிறுவனங்கள் இனிமேல் தான் கேம்பஸ் இண்டர்வியூக்களுக்கு வரவேண்டும்.</p>
<p>4. பங்குச் சந்தை, முரட்டுக் குதிரை மாதிரி ஓடிக்கொண்டு இருக்கிறது. என்ன காரணத்துக்காக ஏறுகிறது என்று முகாந்திரமே இல்லாமல் சென்செக்ஸும், நிஃப்டியும் ஏறுகின்றனவோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் ஜிடிபி 9 சதவிகிதத்தைத் தொடலாம் என்று நிதி அமைச்சர் சொன்னால், அன்றே 500 புள்ளிகள் சென்செக்ஸ் ஏறுகிறது. இதற்கெல்லாம் ஏதாவது அடிப்படை இருக்கிறதா என்றும் தெரியவில்லை. பல நிறுவனங்களின் லாப விகிதம் இன்னும் உயரவில்லை. உற்பத்தியும் விற்பனையும் உயரவில்லை. ஆட்டோ, வங்கித் துறை, பார்மா துறைகளில் வளர்ச்சி தென்படுகிறது. ஆனால், அரசின் முதலீடு அதிகரிக்கும், கட்டுமான முதலீடுகள் பெருகும் என்ற எதிர்பாப்பில், ஒவ்வொரு நிறுவன விலையும் உயர்ந்துகொண்டே செல்கின்றன.</p>
<p>மனநிலை நன்றாக இருக்கும்போது, உற்சாகமாக இருக்கும்போது, ஒரு குறிப்பிட்ட பங்குக்கு எவ்வளவு வேண்டுமானாலும் பிரிமியம் கொடுக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். அதுதான் இப்போது நடந்துகொண்டு இருக்கிறது.</p>
<p>5. பணவீக்கமும் விலைவாசி உயர்வும் கட்டுப்படுத்தப்படாததால், இந்திய மக்களைப் பொறுத்தவரை, 2009 ஒரு வலி நிறைந்த ஆண்டே.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.nesamudan.com/blog/2009/12/30/2009yearendspl3/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>விலையேற்றம் கட்டுப்படுமா?</title>
		<link>http://www.nesamudan.com/blog/2009/12/09/pricerise/</link>
		<comments>http://www.nesamudan.com/blog/2009/12/09/pricerise/#comments</comments>
		<pubDate>Wed, 09 Dec 2009 08:04:21 +0000</pubDate>
		<dc:creator>வெங்கடேஷ்</dc:creator>
				<category><![CDATA[பொருளாதாரம்]]></category>
		<category><![CDATA[சோனியா காந்தி]]></category>
		<category><![CDATA[தாய்லாந்து]]></category>
		<category><![CDATA[பணவீக்கம்]]></category>
		<category><![CDATA[பிரணாப் முகர்ஜி]]></category>
		<category><![CDATA[பிலிப்பைன்ஸ்]]></category>
		<category><![CDATA[முருகன் இட்லி கடை]]></category>
		<category><![CDATA[விலைவாசி]]></category>

		<guid isPermaLink="false">http://www.nesamudan.com/blog/?p=263</guid>
		<description><![CDATA[வழக்கம்போல், அரசு, எப்போதும் கடைசியில்தான் விழித்துக்கொள்கிறது. நிலைமை கையைவிட்டுப் போய், கட்டுக்கடங்காமல் போகும்போதுதான், மேலும் அது அவர்களுடைய ஓட்டு அரசியலைப் பாதிப்பதாக இருந்தால்தான் விழித்துக்கொள்கிறார்கள். பிரணாப் முகர்ஜி, சோனியா என்றெல்லாம் விலையேற்றம் பற்றிப் பேசுகிறார்கள். அப்படியானால், அரசு விழித்துக்கொண்டுவிட்டது என்று அர்த்தம். ]]></description>
			<content:encoded><![CDATA[<p>சென்ற வாரம் ஏதோ ஒரு நாள், தி.நகர் உஸ்மான் சாலை வழியாக போய்கொண்டு இருந்தேன். மாலை நேரம். பசி. முருகன் இட்லி கடை கண்ணில் தென்பட, உள்ளே போனேன். ஒரு உள்ளங்கை அளவு ஆனியன் ஊத்தப்பம் சாப்பிட்டேன். விலை ரூ.37. பகீரென்றது.</p>
<p>நான் வழக்கமாக காய்கறி வாங்கும் கடையில், காய்கறிகள் வாங்கபோனேன். பொதுவாக விலை கேட்கும் வழக்கமில்லை. கடைக்காரர் நண்பர். அளவு கூடுதலாகவே கொடுக்கக்கூடியவர் என்பதால், விலை பேசுவதில்லை. அன்று நான் வழக்கமாக வாங்கும் காய்கறிகளை வாங்கிக்கொண்டு, மொத்த விலை கேட்டேன். ரூ.135. பொதுவாக ஐம்பது ரூபாய்களுக்குள் ஆகும் காய்கறி, ஒன்றரை மடங்கு விலையுயர்ந்திருந்தது. அதிர்ச்சியாக இருந்தது.</p>
<p>உணவுப் பொருள்களின் விலையேற்றம் எல்லா தரப்பினரையும் பாதித்து இருக்கிறது. மதுரை ஓட்டல்களில் மத்திய சாப்பாடு போடுவதே நின்றுவிட்டது என்கிறார்கள். சென்னையில் உள்ள சாதாரண ஓட்டல்களில் எல்லாம் கடுமையான விலையேற்றம். ஒரு சாதா தோசை 20 ரூபாய். மசால் தோசை 25 ரூபாய். ரூ.20வுக்குப் போடச் சொன்ன ஜனதா சாப்பாடு எங்கேயும் இல்லை.</p>
<p>விலைவாசிகள் தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருக்கின்றன. 2008 நவம்பரில் இருந்து விலையேற்றம் கட்டுக்குள் அடங்காமல் உயர்ந்துகொண்டே இருக்கிறது. எல்லாப் பொருள்களும் விலையேறி இருக்கின்றன. கடந்த ஒரு மாதத்தில் விலையேற்றம் இன்னும் அதிகமாகி இருக்கிறது. வாரம் தோறும் வெளிவரும் பணவீக்கத்தில், உணவுப் பொருள்களின் வீக்கம் மட்டும் 17.46 சதவிகிதம்.</p>
<p>மத்திய அரசின் தவறான கொள்கை எப்படியெல்லாம் மக்களை வாட்டுகிறது என்று இன்னும் அவர்களுக்குப் புரியவில்லை. புரிந்தாலும் அதை மாற்றிக்கொள்ளத் தயாரில்லை போலிருக்கிறது. உற்பத்தி பெருகவேண்டும், வளர்ச்சி வேண்டும் என்ற முகாந்திரத்தில், வங்கிக் கடன்களுக்கும் சலுகைகளுக்கும் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. விளைவு, இந்தியாவுக்குள் பணப்புழக்கம் அபரிமிதமாக அதிகரித்திருக்கிறது. பணப்புழக்கம், எல்லா விலைகளையும் தாராளமாக உயர்த்திவிட்டது.</p>
<p>இப்போது புலிவாலைப் பிடித்துவிட்ட கதையாக மாறிவிட்டது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். அப்போதுதான் விலைகள் குறையும். அதற்கு அரசு கடன்களின் வட்டி விகிதங்களை உயர்த்தவேண்டும். வட்டி விகிதங்கள் உயர்ந்தால், வளர்ச்சி பாதிக்கப்பட்டுவிடும் என்று ஒரு சாரார் பீதி கிளப்பிக்கொண்டு இருக்கிறார்கள். உற்பத்தி பாதிக்கும், வேலைவாய்ப்புகள் பாதிக்கும் என்று சொல்கிறார்கள்.</p>
<p>இத்துடன் சேர்ந்துகொண்டது வறட்சியும் அதிக மழையும். இரண்டுமே இரண்டு எக்ஸ்ட்ரீம். உற்பத்தி போதவில்லை என்ற பெயரில், விலையேற்றம். இன்னொரு பக்கம் உணவுப் பொருட்கள் பதுக்கல். பல ஊர்களில் விற்கப்படும் அரிசி, பழைய அரிசி. குறைந்த விலைக்கு வாங்கித் தேக்கிவைக்கப்பட்டு, இப்போது அதிக லாபத்துக்கு விற்கப்படுகின்றன. தாராளமயப் பொருளாதாரத்தின் படி இதெல்லாம் நியாயம்.</p>
<p>மத்திய அரசு விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்று தெரியவில்லை. பிரணாப் முகர்ஜி இதைப் பற்றிப் பேசினால் கோபப்படுகிறார். சோனியா அம்மையார், விலைவாசி உயர்வு தனக்குப் பெரும் கவலை அளித்திருப்பதாகக் கூறியிருக்கிறார். நேரடியாகத் தானே மன்மோகன் சிங்கிடமும் பிரணாப் முகர்ஜியிடமும் பேசியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் சோனியா. என்ன பேசி என்ன பிரயோஜனம்?</p>
<p>எப்போது பார்த்தாலும் மத்திய அரசு தொகுப்பிலும் மாநில அரசுகளின் தொகுப்புகளிலும் போதிய உணவுத் தானியக் கையிருப்பு இருக்கிறது என்று அறிக்கை விடுகிறார்கள். கூடவே, எதிர்காலத் தேவையை ஒட்டி இரண்டு லட்சம் டன்கள் வரை உணவுத் தானியங்களை தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செய்ய இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>இந்த நிலையை வேறு சில விஷயங்களோடு வைத்துப் பார்க்கவேண்டியிருக்கிறது. அரிசி விலையேற்றம் என்பது தற்செயலானதா, அல்லது வேண்டுமென்றே உருவாக்கப்பட்டதா என்றும் சந்தேகம் எழுப்ப வேண்டியிருக்கிறது. சமீபத்தில் லண்டன் பைனான்சியல் டைம்ஸ் வெளியிட்டிருக்கும் செய்தியின்படி, பிலிப்பைன்ஸ் கிட்டத்தட்ட 6 லட்சம் டன் அரிசியை தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செய்ய இருக்கிறது.  இந்தியா முந்திக்கொண்டு இறக்குமதி செய்துவிடும் என்ற பயத்திலேயே இந்த அளவுக்கு பிலிப்பைன்ஸ் இறக்குமதி செய்ய இருக்கிறது. மேலும் அங்கே அதிபர் தேர்தல் வரவிருப்பதும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. இதெல்லாம் தற்செயலானதா? ஆசிய அரசியலில் வேண்டுமென்றே அரிசித் தேவையை உருவாக்கி, விலையேற்றத்தை நம்மீது திணிக்கிறார்களா? தெரியவில்லை.</p>
<p>கூடவே இந்த நிலை 2010ல் மாறிவிடலாம் என்றும் அதற்குள் எவ்வளவு விலையேற்றத்தை ஏற்படுத்த முடியுமோ அவ்வளவையும் செய்துவிட வேண்டும் என்று சந்தையைக் கையாள்பவர்கள், பெருமுதலாளிகள் நினைப்பதாகவும் தெரிகிறது. இன்னொரு பக்கம் எப்படியும் இந்திய அரசு, கடன்களுக்கான வட்டி விகிதத்தை விரைவில் கூட்டாது, அதுவரை இந்த விலையேற்ற ஆட்டத்தைத் தாராளமாகத் தொடரலாம் என்றும் நினைப்பவர்களும் இருக்கிறார்கள்.</p>
<p>மக்கள் நலனில் அக்கறை உள்ள அரசாங்கம் இதுபோன்ற சந்தர்ப்பங்களில்தான் உறுதியுடனும் தொலைநோக்குடனும் நடந்துகொள்ள வேண்டும். கையிருப்பில் இருக்கும் உணவுப் பொருள்களை சந்தையில் இறக்கினாலே, தன்னால் விலைகள் வீழ்ச்சி அடையும். ஒருவகையில் அரசின் கையிருப்பு என்பதே இங்கே எதிர்மறை பலனைத் தந்துகொண்டு இருக்கிறது. இதைவிடக் கொடுமை தேசிய மற்றும் மாநில சேமிப்பு கிடங்குகளில் இருக்கும் மெத்தனம். பெரும்பாலான இடங்களில் pilferage இருக்கிறது. பல பொருள்கள் உபயோகமற்றுக் கிடக்கின்றன. இதையெல்லாம் முறைப்படுத்தினாலே, சந்தைக்கு இன்னும் கூடுதலான பொருள்கள் வந்துசேரும்.</p>
<p>வழக்கம்போல், அரசு, எப்போதும் கடைசியில்தான் விழித்துக்கொள்கிறது. நிலைமை கையைவிட்டுப் போய், கட்டுக்கடங்காமல் போகும்போதுதான், மேலும் அது அவர்களுடைய ஓட்டு அரசியலைப் பாதிப்பதாக இருந்தால்தான் விழித்துக்கொள்கிறார்கள். பிரணாப் முகர்ஜி, சோனியா என்றெல்லாம் விலையேற்றம் பற்றிப் பேசுகிறார்கள். அப்படியானால், அரசு விழித்துக்கொண்டுவிட்டது என்று அர்த்தம். இப்போதாவது விழித்துக்கொண்டார்களே என்று மகிழ்ச்சி அடையவேண்டியதுதான். வேறு வழி?</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.nesamudan.com/blog/2009/12/09/pricerise/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>பணக்கொள்கை: சலுகைகள் தொடரலாமா?</title>
		<link>http://www.nesamudan.com/blog/2009/10/28/credit-policy-2009/</link>
		<comments>http://www.nesamudan.com/blog/2009/10/28/credit-policy-2009/#comments</comments>
		<pubDate>Wed, 28 Oct 2009 09:34:50 +0000</pubDate>
		<dc:creator>வெங்கடேஷ்</dc:creator>
				<category><![CDATA[பொருளாதாரம்]]></category>
		<category><![CDATA[Credit Policy Review]]></category>
		<category><![CDATA[D.Subbarao]]></category>
		<category><![CDATA[சுப்பாராவ்]]></category>
		<category><![CDATA[பணக் கொள்கை]]></category>
		<category><![CDATA[பணப்புழக்கம்]]></category>
		<category><![CDATA[பணவீக்கம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.nesamudan.com/blog/?p=212</guid>
		<description><![CDATA[இதில் முக்கியம், தொழில் வளர்ச்சியும் அதனால் ஏற்படக்கூடிய வேலைவாய்ப்புகள் பெருக்கமும்தான். அது எந்த வகையிலும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது. அதே சமயம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களின் விலைகளும், பணவீக்கமும் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும். அப்போதுதான், இந்தியாவில் ஏழை எளியோர், மத்திய வர்க்கத்தினர் எல்லோரும் நிம்மதியாக வாழ முடியும்.
]]></description>
			<content:encoded><![CDATA[<p>நேற்று பாரத ரிசர்வ் வங்கியின் கவர்னர் டி. சுப்பாராவ், 2009-10 நிதியாண்டில், இரண்டாம் காலாண்டு பணக்கொள்கை ஆய்வுக்குப் பிறகு ஒருசில அறிவிப்புகளைச் செய்தார். அவர் பேசிய பல செய்திகள், பொருளாதார வல்லுநர்களுக்குத்தான் புரியும். ஆனால், இந்தியாவில் வாழ்ந்துகொண்டு அதைப் புரிந்துகொள்ளாமல் இருக்க முடியாதே? என் வரையில் புரிந்துகொள்ள முயற்சித்தேன். என் புரிதல் இப்படி இருக்கிறது:</p>
<p>1. சென்ற ஆண்டு பொருளாதாரத் தேக்கம் ஏற்பட்டபோது, உலக நாடுகள் பலவும் தத்தமது நாட்டின் பொருளாதார, தொழில் வளர்ச்சிகளுக்காக, சில நடவடிக்கைகளை எடுத்தன. சில சலுகைகளை வழங்கின. சில கொள்கை மாற்றங்களைச் செய்தன. அதன் மூலம், தொழில் முனைவோர்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும், வங்கிகளில், கடன் கொஞ்சம் சுலபமாகக் கிடைக்கத் தொடங்கியது. தொழில் நடத்தத் தேவைப்படும் கடன் தொகை, அவர்களுக்குப் போதிய அளவு கிடைக்காமல் இருந்ததே அப்போது பெரும் பிரச்னையாக இருந்தது.</p>
<p>இப்போது ஓராண்டுக்கும் மேல் கடந்துவிட்ட நிலையில், தொழில்கள் மெல்ல மெல்ல தம் சிக்கல்களில் இருந்து மீண்டிருக்கின்றன. ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் காலாண்டில் பல தனியார் நிறுவனங்களும் அரசுத் துறை நிறுவனங்களும் ஓரளவுக்கு நல்ல லாபம் ஈட்டியிருப்பதைத் தெரிவித்திருக்கின்றன. தொழில்கள் காலூன்றத் தொடங்கியிருப்பதை இது காட்டுகிறது.</p>
<p>இந்த நிலையில், தொழில்கள் வளர, வங்கிகள் மூலம் கொடுக்கப்பட்ட சலுகைகளை மெல்ல மெல்ல ரிசர்வ் வங்கி விலக்கிக்கொள்ள முடிவு செய்திருக்கிறது. நேற்றைய சுப்பாராவின் பேச்சு, இந்தத் திசையில்தான் இருந்தது. ஏற்கெனவே என்னுடைய முந்தைய ‘ரெசஷன் முடிந்துவிட்டதா? கட்டுரையில், பல நாடுகளில் இதே மனநிலை இருப்பதையும், சலுகைகளை விலக்கிக்கொள்ள வழி தேடுவதையும் (exit strategy) குறிப்பிட்டிருந்தேன். இஸ்ரேலிலும் ஆஸ்திரேலியாவிலும் இதைச் செயல்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். சலுகைகளை விலக்கிக்கொள்ளத் தொடங்கியிருக்கும் மூன்றாவது நாடு, இந்தியா.</p>
<p>2. சுப்பாராவ் உடனடியாகச் சலுகைகளை விலக்கிக்கொள்ளவில்லை. ஆனால், அதற்கான முகாந்திரத்தைச் சொல்லியிருக்கிறார். அந்தத் திசையில் எடுக்கப்பட்டுள்ள ஓர் சிற்றடியாக, வங்கிகள், தாம் பெறும் முதலீடுகளுக்கு ஈடாக, காப்பீடாகத் தாம் வைத்துக்கொள்ள வேண்டிய தொகையின் அளவில் 1 சதவிகிதத்தைக் கூட்டியிருக்கிறது. இதற்கு Statutory Liquidity Ratio (SLR) என்று பெயர். சென்ற ஆண்டு 25 சதவிகிதமாக இருந்த எஸ்.எல்.ஆர்.ஐ 24 சதவிகிதமாக குறைத்தது ரிசர்வ் வங்கி. இம்முறை அதை மீண்டும் 25 சதவிகிதத்துக்கு உயர்த்தியிருக்கிறது. இந்தத் தொகையை, வங்கிகள், அரசு வெளியிடும் கடன் பத்திரங்களில்தான் முதலீடு செய்து வைக்க முடியும். இதனால், உடனடி பாதிப்பு ஏதுமில்லை என்று சொல்லுகிறார்கள் வங்கித்துறை வல்லுநர்கள். ஏற்கெனவே பல வங்கிகள், 25 சதவிகிதத்துக்கு மேலேயே அரசுகளின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்து வைத்திருக்கின்றன.</p>
<p>3. இன்னொரு வேலையையும் செய்திருக்கிறார் சுப்பாராவ். வங்கிகள், பெரிய கட்டுமான நிறுவனங்களுக்கு, கட்டுமானப் பணிகளுக்காகக் கடன்கள் கொடுத்திருக்கின்றன. இதில் ஒரு சில கடன்கள் திரும்பி வர முடியாமல் போகக்கூடும். அந்த முதலீடு முற்றிலும் பொருளற்றதாகவும் போகக்கூடும். அந்தக் கடன் தொகையினால், வங்கிகளுக்கு எந்த வருவாயும் இல்லாமல் போகக்கூடும். இதை Non-performing assets (NPA) என்று சொல்லுவார்கள். இப்படி ஆகலாம் என்று எதிர்பார்த்தே, கடன் கொடுக்கும் வங்கிகள், கொடுக்கும் கடனுக்கு ஈடாக ஒரு குறிப்பிட்ட சதவிகிதத் தொகையை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இந்தத் தயார் நிலையில் இருக்க வேண்டிய தொகையின் அளவு முன்பு 0.4 சதவிகிதமாக இருந்தது. இப்போது அதை 1 சதவிகிதமாக உயர்த்தியிருக்கிறார் சுப்பாராவ்.</p>
<p>இதை இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், கட்டுமான நிறுவனங்களுக்குக் கொடுக்கப்படும் ஒவ்வொரு ரூபாய் கடனுக்கும் 0.4 பைசாவை காப்பீடாக எடுத்துவைக்க வேண்டும். இப்போது, அது 1 பைசாவாக உயர்ந்திருக்கிறது. இது பல செய்திகளைச் சொல்லுகிறது. முதல் செய்தி, கட்டுமான நிறுவனங்கள், வங்கிகளிடம் வாங்கிய கடனைக் கட்ட முடியாமல் போகும் அளவு கூடுதலாகலாம். எப்போது அந்நிறுவனங்களால் கடனைக் கட்ட முடியாமல் போக முடியும்? அவர்களுடைய கட்டடங்களைப் போதிய நபர்கள் வாங்க முடியாமல் போகும்போது, விலை கூடுதலாக இருக்கும்போது. அப்படியானால், கட்டுமானத் துறைக்குள் ஒரு பூதம் ஒளிந்துகொண்டிருக்கிறது என்றுதானே இதற்கு அர்த்தம்? இதை முன்னெச்சரிகை நடவடிக்கை என்று எடுத்துக்கொண்டாலும், உள்ளூர பிரச்னை இருப்பதைத்தான் ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை எடுத்து வைக்கிறது.</p>
<p>இன்னொரு செய்தி, கூடுதலான தயார்நிலைத் தொகையை எடுத்து வைக்கவேண்டும் என்பதால், பல வங்கிகள், கட்டுமான நிறுவனங்களுக்குக் கொடுக்கும் கடன்களின் அளவைக் குறைத்துவிடக் கூடும். உண்மையிலேயே கடன்களைக் கட்ட முடியும் என்று நம்பிக்கை தரும் நிறுவனங்களுக்கு மட்டுமே இனி வங்கிகளில் கடன் கிடைக்கும் நிலையும் ஏற்படலாம்.</p>
<p>4. மேலே சொன்ன மாற்றங்கள் ஏற்பட முக்கியக் காரணங்களில் ஒன்று, பணவீக்கம். இந்தியாவில், வங்கிகளில் காட்டப்பட்ட சலுகைகளால், அளவுக்கு அதிகமான பணபுழக்கம் இருந்து வருகிறது. கொள்கை ரீதியாகக் காட்டப்பட்ட சலுகைகளாலும் பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் மூலதனம் வந்து கொட்டியிருக்கின்றன. இதனால், ஒரு நன்மையும் ஒரு தீமையும் உண்டும். நன்மை, தொழில் வளர்ச்சி. முன்னேற்றம். தீமை, பணவீக்கம். அதாவது, பணப்புழக்கம் அதிகமானதால், பல்வேறு பொருள்கள் மற்றும் சேவைகளின் விலைகள் உயர்ந்திருக்கின்றன. இந்த விலைகள் உயர்வதற்கான எந்த ஓர் அடிப்படை முகாந்திரமும் இல்லை என்பதுதான் உண்மை. குறிப்பாக உணவுப் பொருள்களின் விலைகள் கடந்த ஓராண்டில் மிகவும் அதிகமாக உயர்ந்திருக்கின்றன. மொத்த விற்பனைக் குறியீட்டென் (Wholesale Price Index &#8211; WPI), இந்த நிதியாண்டின் முடிவில், மார்ச் 2010ல் 6.5 சதவிகிதமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. முன்பு இது 5 சதவிகிதமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டிருந்தது. அது 6.5 சதவிகிதத்துக்கும் மேல் போக வாய்ப்புண்டு என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது. அதில் முக்கியமாக உணவுப் பொருள்களின் விலைதான் கடுமையாக உயர்ந்திருக்கிறது. பருவமழை பொய்த்துப் போய்க்கொண்டு இருப்பதால், உணவுப் பொருள்களின் விலைகள் இன்னும் அதிகமாகக்கூடும் என்று எதிர்பார்ப்பும் இருக்கிறது.</p>
<p>அப்படியானால், பணபுழக்கத்தைக் கட்டுப்படுத்தினால், ஓரளவுக்கு பணவீக்கம் குறையும் என்ற நம்பிக்கை இருக்கிறது. பணபுழக்கத்தைக் குறைத்தாலோ, தொழில்களின் வளர்ச்சி பாதிப்படையலாம். இரண்டையும் எப்படி ஒரே சமயத்தில் கையாளுவது? வேறு வழியில்லை, பணவீக்கம் ஒரு பெரிய பிரச்னையாக உருவெடுக்கும் முன்பு அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தாக வேண்டிய சூழல் வந்திருக்கிறது. இன்று இல்லையென்றாலும் அடுத்த பணக்கொள்கை சந்திப்பின்போது, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி எடுத்தே ஆகவேண்டும்.</p>
<p>5. இதையெல்லாம் விட முக்கியமான கேள்வி என்னவெனில், சலுகைகளை விலக்கிக்கொள்ள ரிசர்வ் வங்கி முயல்கிறதே, இது கொஞ்சம் அவசரமான முடிவு அல்லவா என்பதுதான். தொழில்கள் தமது சொந்தக் காலில் நிற்க பழகிவிட்டனவா? அவற்றுக்கு அரசின் சலுகையோ ஆதரவோ இனி தேவைப்படாத சூழல் ஏற்பட்டுவிட்டதா? தெரியவில்லை. பணக்கொள்கை ஆய்வுக்குப் பின் பேசிய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, தொழில்களும் பொருளாதாரமும் வலுவான பிறகே, சலுகைகள் முழுமையாக விலக்கிக்கொள்ளப்படும், அதுவரை சலுகைகள் தொடரும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார். இதைப் பங்குச் சந்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. கிடுகிடுவென பங்குகளின் விலைகள் விழத் தொடங்கிவிட்டன.</p>
<p>6.சரி, ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகளால் நாம் நேரடியாகவோ மறைமுகமாகவோ எப்படி பாதிக்கப்படுவோம்? பல தொழில் நிறுவனங்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்கத் தொடங்கிவிட்டனவா என்று தெரியவில்லை. பல நிறுவனங்கள் தங்கள் செலவுகளைக் குறைத்திருப்பதன் மூலம் லாபம் ஈட்டியிருக்கின்றனவே அன்றி, விற்பனைப் பெருக்கத்தால் அல்ல. அப்படியானால், அரசின் சலுகைகள் விலக்கப்படுமானால், அவர்களுக்குத் தேவைப்படும் மூலதனம் கிடைக்க வாய்ப்பில்லை. அதனால், உற்பத்தி பாதிக்கப்படலாம். வேலைவாய்ப்புகள் உருவாகாமல் போகலாம். இன்னொரு பக்கம், மெல்ல மெல்ல பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் வரும். பணத்தின் மதிப்பு உயரும். உணவுப் பொருள்களைக் குறைந்த செலவில் வாங்கக் கூடிய சூழல் உருவாகும்.</p>
<p>இதில் முக்கியம், தொழில் வளர்ச்சியும் அதனால் ஏற்படக்கூடிய வேலைவாய்ப்புகள் பெருக்கமும்தான். அது எந்த வகையிலும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது. அதே சமயம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களின் விலைகளும், பணவீக்கமும் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும். அப்போதுதான், இந்தியாவில் ஏழை எளியோர், மத்திய வர்க்கத்தினர் எல்லோரும் நிம்மதியாக வாழ முடியும்.</p>
<p>மத்திய அரசு எப்படி இதைக் கையாளுகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.nesamudan.com/blog/2009/10/28/credit-policy-2009/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>
