Posts Tagged ‘சுந்தர்ஜி’

2009 – மறக்க முடியாத ஆண்டு 2 : பத்திரிகை

Posted in இதழியல் on December 30th, 2009 by வெங்கடேஷ் – Be the first to comment

2009ல் தமிழில் வெளியான புதிய இதழ்கள் இவை:

1. புதிய தலைமுறை: இதழாளர், எழுத்தாளர் மாலனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் இதழ். ரூ.5 என்ற விலை ஒரு பெரிய அட்ராக்‌ஷன். நல்ல விளம்பரம் இன்னொரு அட்ராக்‌ஷன். இதழ் மிகவும் தரமாக இருக்கிறது. வழக்கமான பத்திரிகை ஃபார்மேட்டில் இல்லாமல், வேறு ஒரு பாதையை உருவாக்குகிறது புதிய தலைமுறை. ஆங்கில டைம் இதழின் சாயல் உள்ளடக்கத்திலும் வடிவமைப்பிலும் நிறைய உண்டு. இளைஞர்கள் என்றாலே இப்படித்தான் இருப்பார்கள், அவர்களுடைய ஆர்வங்கள் இப்படித்தான் என்று வெகுஜன மனத்தில் ஒரு ஸ்டீரியோடைப்பிங் இருக்கிறது. அதை முற்றிலும் மாலன் உடைத்திருக்கிறார். அவர்களுடைய சுவைக்கு ஏற்றார்போல் செய்திகளைக் கொடுப்பதைவிட, எதையெல்லாம் அவர்கள் தெரிந்துகொண்டால் பயனுடையதாக இருக்கும், வாழ்க்கைக்கு உதவும், மேம்பாடுக்கு உதவும்  என்ற கண்ணோட்டத்தில் ஒரு தப்படி முன்னே நகர்ந்து யோசித்திருக்கிறார் மாலன்.

2. சூரிய கதிர்: இதழாளர் ராவ்வை ஆசிரியராகக் கொண்டு வெளியாகி இருக்கும் இதழ். வெகுஜன ரசனையைப் பின்பற்றி உருவாகியிருக்கும் இதழ். நிச்சயம் மிடில்கிளாஸைச் சேர்ந்த வாசகர்களுக்கு சூரிய கதிர் பிடிக்கும். விளம்பரம் போதவில்லை. விலையும் கூடுதலோ என்ற எண்ணம் இருக்கிறது.

3. திரிசக்தி, தேவதை: கிரிகுஜா பப்ளிகேஷன்ஸ் சுந்தரராமனின் இதழ்கள் இவை. திரிசக்தி ஆன்மிக இதழ். ஆசிரியர்: பி.சுவாமிநாதன். தேவதை பெண்கள் இதழ். ஆசிரியர்: தயாமலர். இரண்டுமே மிக அற்புதமாக உருவாகி இருக்கின்றன. இன்றைய வாசகர்களின் தேவைகளை நன்கு உணர்ந்து இவ்விதழ்கள் கட்டுரைகளை வெளியிடுகின்றன. தமிழ் இதழ்களிடையே போட்டி மிகுந்திருக்கும் சூழ்நிலையில், திரிசக்தி 70,000 பிரதிகள் விற்பனை ஆவதாக சுந்தரராமன் ஒரு விழாவில் குறிப்பிட்டார். மார்க்கெட்டிங் பலம் என்பது அதுதான். உள்ளடக்கம் நன்றாக இருப்பதோடு, போதிய அளவு ஃபீல்ட் ஒர்க் செய்யவேண்டும். அப்போதுதான், இதழ்கள் மக்களிடம் போய்ச் சேரும். இரண்டுமே நன்கு சேர்ந்திருக்கின்றன. திரிசக்தி தீபாவளி மலரும் வெளியிட்டது.

4. சுபவரம்: இதழாளர் ம.கா.சிவஞானம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளியாகியிருக்கும் புதிய ஆன்மிக மாத இதழ். தேர்ந்த இதழ் தயாரிப்பு. ஆன்மிக இதழ்களை வாசிப்போரின் தேவைகளை உணர்ந்துகொண்ட உள்ளடக்கம். போதிய விளம்பரமும் மார்க்கெட்டிங்கும் இல்லாததால், அதிகம் இந்த இதழ் தெரியவில்லை.

5. தஞ்சாவூர் கவிராயர், சுந்தர்ஜி : இரண்டுமே தனி நபர்களின் தனி இதழ்கள். அவரவர்களின் வாசிப்பு, ஆளுமை, தேர்ந்த ரசனை ஆகியவற்றை நேரடியாக இவ்விதழ்களின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. நல்ல கான்செப்ட்.

6. அகநாழிகை: பொன்.வாசுதேவனை ஆசிரியராக இருந்து வெளியிடும் இதழ். சிறுபத்திரிகைகளில் படைப்பிலக்கியத்துக்கு மீண்டும் கவனம் திரும்பியிருக்கிறது. அகநாழிகை எனக்கு நம்பிக்கை தரும் இதழாக இருக்கிறது.

தஞ்சாவூர்க்கவிராயர், சுந்தர்ஜி – தனி இதழ்கள்

Posted in இலக்கியம், புதிய இதழ் on September 16th, 2009 by வெங்கடேஷ் – Be the first to comment
புதிய இதழ்கள் எப்போதுமே மகிழ்ச்சி தருவன. அது பெரிய வெகுஜன இதழாகட்டும், சிறு பத்திரிகையாகட்டும், புது முயற்சிகள் எப்போதுமே உற்சாகமானவை. மாலனை ஆசிரியராகக் கொண்ட  ‘புதிய தலைமுறை’ விஜயதசமி அன்று வெளியாகும் என்று நினைக்கிறேன். விகடனில் முன்னர் ஆசிரியராக இருந்த ராவ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு ‘சூரியக் கதிர்’ என்ற புதிய இதழ் விரைவில் வெளிவரவிருக்கிறது. என்னுடைய நீண்ட நாள் நண்பர் பொன். வாசுதேவன், ‘அகநாழிகை’ என்ற இருமாத இதழை அக்டோபர் 2009ல் இருந்து கொண்டு வர இருக்கிறார்.
சென்ற வாரம் ‘சுந்தர்ஜி’ இதழ் எனக்கு வந்து சேர்ந்தது. அதற்கு முன்னரே ‘தஞ்சாவூர்க்கவிராயர்’ இதழ்களும் வந்து சேர்ந்தன. இந்த இரண்டு இதழ்களும் விசேஷமானவை. இரண்டுமே தனி ஆசிரியர்களின் சொந்த இதழ்கள். இதில், அந்தந்த ஆசிரியர்களின் சொந்தப் படைப்புகள் மட்டுமே வெளிவரும். ‘நேசமுடன்’ மடல் இதழைத் தொடங்கியபோது, இதே கருத்தைத்தான் நான் ஆரம்பத்தில் சொன்னேன். இப்போது அது இவ்விரு கவிஞர்களின் தனி இதழ்களாக உருவாகி இருக்கின்றன.
முதலில் தஞ்சாவூர்க்கவிராயர். மூன்று இதழ்கள் வந்துவிட்டன. பல ஆண்டுகளாக கவிதைகள் எழுதுபவரும் மொழிபெயர்ப்புகள் செய்பவருமான தஞ்சாவூர்க் கவிராயரான கோபாலகிருஷ்ணனின் தனி இதழ். சமீபத்தில் கல்கி இதழில் 13 வாரங்கள் கவிதைத் தொடர் ஒன்றை எழுதி முடித்தார். கணையாழியில் தொடர்ந்து இவரது கவிதைகளை நான் படித்திருக்கிறேன். இப்போது இந்த இதழில் (24 பக்கங்கள்) ஏராளமான கவிதைகள் கொட்டிக்கிடக்கின்றன. கடைசியில் குழந்தைகளுக்காக இவர் எழுதியுள்ள மழலைப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. கடைசி இரண்டு பக்கங்களில் ராஜாஜியின் ஜெயில் டைரியை மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார்.
சுந்தர்ஜி. தஞ்சை மண்ணில் இருந்து வந்த மற்றொரு கவிஞர். தஞ்சை பிரகாஷ்தான் இவர்களுக்கு எல்லாம் இன்ஸ்பிரேஷன். இவருடைய கவிதைகளையும் நான் சிறுபத்திரிகைகளில் படித்திருக்கிறேன். கோபாலகிருஷ்ணன் நேரில் பழக்கம் உண்டு. இவர் யாரென்று நேரில் பார்த்து அறியேன். ஆனால், சுந்தர்ஜி இதழ் மொத்தமும் இவர் கவிதைகள் இவருடைய பல்வேறு ஆர்வங்களை எனக்கு எடுத்துக் காட்டியது. ரசனை மிக்க கவிதைகள்.
எப்படி எனக்கு இவர்களின் கவிதைகள் பிடித்திருக்கின்றவனவோ, அப்படியே இவர்களின் இந்த தனி இதழ் கருத்தும் மிகவும் பிடித்திருக்கிறது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், சிறுபத்திரிகைகளில் வெளிவரும் பல கவிதைகளுக்கு ஒரு சிக்கல் இருக்கிறது. ஒரு கவிஞரைப் பற்றிய முழுமையான பார்வையை உருவாக்கிக்கொள்ள, ஒரு சில தனிக் கவிதைகள் போதுமானதாக இருப்பதில்லை. அதற்கு அவர்களின் கவிதைத் தொகுதிகளைத் தேடிக்கொண்டு போகவேண்டும். புத்தகம் என்றவுடனே அதன் விலையும் கிடைக்குமிடங்களும் பெரிய இடர்களாக மாறிப்போய்விடுகின்றன. இந்த தனி இதழ்கள், கவிதைத் தொகுதிக்கான வேலையையும் சேர்த்துச் செய்கிறது.
இதில் உள்ள பல கவிதைகள், வேறு சிறு பத்திரிகைகளில் வெளிவந்திருக்குமா என்றால் அது சந்தேகம் தான். ஏனெனில், ஒவ்வொரு இதழும் தமக்கான அளவுகோல்களைக் கொண்டே ஒரு கவிதையைத் தேர்வு செய்யும். அந்தந்த ஆசிரியர்களின் பார்வையில் ஒரு சில, கவிதைகளாகவே தோன்றாமல் போகலாம். ஆனால், பல நுட்பமான கவிதைகள் வெளியிடப்படும் வாய்ப்பே இல்லாமல் காகிதத்திலேயே சமாதி அடைந்துவிடக்கூடும். இந்த தனி இதழ்கள், அப்படி காணாமல் போய்விடக்கூடிய கவிதைகளுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
தனி இதழ்கள், இவ்விதழ்களை உருவாக்குவோரின் ஆளுமையைப் பிரதிபலிப்பதாக இருக்கின்றன. தஞ்சாவூர்க் கோபாலி, முக்கியமான மொழிபெயர்ப்பாளரும் கூட. அவர் மழலைப் பாடல்கள் எழுதுவதில் ஆர்வமுள்ளவர் என்பதை இந்த இதழைப் பார்த்துதான் நான் தெரிந்துகொண்டேன். இந்த இதழ்களில் அவர்களின் அத்தனை பரிமாணங்களையும் வெளிப்படுத்திக்கொள்ள நல்லதொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இந்த இதழ்களில் மற்றொரு விஷயமும் உள்ளூர நடக்கிறது. கவிஞர்களே இதழ்களின் ஆசிரியர்களாகவும் ஆகும்போது, நல்ல கவிதைகளைத் தேர்வு செய்வதும், அது வாசகர் மத்தியில் போய்ச் சேருவதாக இருக்கவேண்டும் என்பதையும் இந்த ஆசிரியர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். சுயதேர்வு. சுய மதிப்பீட்டை மேம்படுத்தும் தேர்வு இது.
இந்த இதழ்களின் உள்ளடக்கத்தில் ஒரு சிக்கல் இருக்கிறது. வெரைட்டி இல்லாமல் போய்விடக் கூடிய பாதிப்பு ஏற்பட்டுவிடலாம். இன்னொரு சிக்கல், இதன் வாழ்நாள். கவிஞர்களால் தம் சொந்தப் பணத்தைப் போட்டு, எத்தனை இதழ்கள் கொண்டு வர முடியும்? தெரியவில்லை. அதைப் பற்றி இப்போது கவலைப்பட வேண்டாம் என்று நினைக்கிறேன்.
படிப்பதற்கு இந்த இதழ்கள் சிறப்பாக இருக்கின்றன. அதுதான் வாசகனாகிய எனக்கு முக்கியம்.

புதிய இதழ்கள் எப்போதுமே மகிழ்ச்சி தருவன. அது பெரிய வெகுஜன இதழாகட்டும், சிறு பத்திரிகையாகட்டும், புது முயற்சிகள் எப்போதுமே உற்சாகமானவை. மாலனை ஆசிரியராகக் கொண்ட  ‘புதிய தலைமுறை’ விஜயதசமி அன்று வெளியாகும் என்று நினைக்கிறேன். விகடனில் முன்னர் ஆசிரியராக இருந்த ராவ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு ‘சூரியக் கதிர்’ என்ற புதிய இதழ் விரைவில் வெளிவரவிருக்கிறது. என்னுடைய நீண்ட நாள் நண்பர் பொன். வாசுதேவன், ‘அகநாழிகை’ என்ற இருமாத இதழை அக்டோபர் 2009ல் இருந்து கொண்டு வர இருக்கிறார்.

சென்ற வாரம் ‘சுந்தர்ஜி’ இதழ் எனக்கு வந்து சேர்ந்தது. அதற்கு முன்னரே ‘தஞ்சாவூர்க்கவிராயர்’ இதழ்களும் வந்து சேர்ந்தன. இந்த இரண்டு இதழ்களும் விசேஷமானவை. இரண்டுமே தனி ஆசிரியர்களின் சொந்த இதழ்கள். இதில், அந்தந்த ஆசிரியர்களின் சொந்தப் படைப்புகள் மட்டுமே வெளிவரும். ‘நேசமுடன்’ மடல் இதழைத் தொடங்கியபோது, இதே கருத்தைத்தான் நான் ஆரம்பத்தில் சொன்னேன். இப்போது அது இவ்விரு கவிஞர்களின் தனி இதழ்களாக உருவாகி இருக்கின்றன.

முதலில் தஞ்சாவூர்க்கவிராயர். மூன்று இதழ்கள் வந்துவிட்டன. பல ஆண்டுகளாக கவிதைகள் எழுதுபவரும் மொழிபெயர்ப்புகள் செய்பவருமான தஞ்சாவூர்க் கவிராயரான கோபாலகிருஷ்ணனின் தனி இதழ். சமீபத்தில் கல்கி இதழில் 13 வாரங்கள் கவிதைத் தொடர் ஒன்றை எழுதி முடித்தார். கணையாழியில் தொடர்ந்து இவரது கவிதைகளை நான் படித்திருக்கிறேன். இப்போது இந்த இதழில் (24 பக்கங்கள்) ஏராளமான கவிதைகள் கொட்டிக்கிடக்கின்றன. கடைசியில் குழந்தைகளுக்காக இவர் எழுதியுள்ள மழலைப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. கடைசி இரண்டு பக்கங்களில் ராஜாஜியின் ஜெயில் டைரியை மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார்.

சுந்தர்ஜி. தஞ்சை மண்ணில் இருந்து வந்த மற்றொரு கவிஞர். தஞ்சை பிரகாஷ்தான் இவர்களுக்கு எல்லாம் இன்ஸ்பிரேஷன். இவருடைய கவிதைகளையும் நான் சிறுபத்திரிகைகளில் படித்திருக்கிறேன். கோபாலகிருஷ்ணன் நேரில் பழக்கம் உண்டு. இவர் யாரென்று நேரில் பார்த்து அறியேன். ஆனால், சுந்தர்ஜி இதழ் மொத்தமும் இவர் கவிதைகள் இவருடைய பல்வேறு ஆர்வங்களை எனக்கு எடுத்துக் காட்டியது. ரசனை மிக்க கவிதைகள்.

எப்படி எனக்கு இவர்களின் கவிதைகள் பிடித்திருக்கின்றவனவோ, அப்படியே இவர்களின் இந்த தனி இதழ் கருத்தும் மிகவும் பிடித்திருக்கிறது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், சிறுபத்திரிகைகளில் வெளிவரும் பல கவிதைகளுக்கு ஒரு சிக்கல் இருக்கிறது. ஒரு கவிஞரைப் பற்றிய முழுமையான பார்வையை உருவாக்கிக்கொள்ள, ஒரு சில தனிக் கவிதைகள் போதுமானதாக இருப்பதில்லை. அதற்கு அவர்களின் கவிதைத் தொகுதிகளைத் தேடிக்கொண்டு போகவேண்டும். புத்தகம் என்றவுடனே அதன் விலையும் கிடைக்குமிடங்களும் பெரிய இடர்களாக மாறிப்போய்விடுகின்றன. இந்த தனி இதழ்கள், கவிதைத் தொகுதிக்கான வேலையையும் சேர்த்துச் செய்கிறது.

இதில் உள்ள பல கவிதைகள், வேறு சிறு பத்திரிகைகளில் வெளிவந்திருக்குமா என்றால் அது சந்தேகம் தான். ஏனெனில், ஒவ்வொரு இதழும் தமக்கான அளவுகோல்களைக் கொண்டே ஒரு கவிதையைத் தேர்வு செய்யும். அந்தந்த ஆசிரியர்களின் பார்வையில் ஒரு சில, கவிதைகளாகவே தோன்றாமல் போகலாம். ஆனால், பல நுட்பமான கவிதைகள் வெளியிடப்படும் வாய்ப்பே இல்லாமல் காகிதத்திலேயே சமாதி அடைந்துவிடக்கூடும். இந்த தனி இதழ்கள், அப்படி காணாமல் போய்விடக்கூடிய கவிதைகளுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

தனி இதழ்கள், இவ்விதழ்களை உருவாக்குவோரின் ஆளுமையைப் பிரதிபலிப்பதாக இருக்கின்றன. தஞ்சாவூர்க் கோபாலி, முக்கியமான மொழிபெயர்ப்பாளரும் கூட. அவர் மழலைப் பாடல்கள் எழுதுவதில் ஆர்வமுள்ளவர் என்பதை இந்த இதழைப் பார்த்துதான் நான் தெரிந்துகொண்டேன். இந்த இதழ்களில் அவர்களின் அத்தனை பரிமாணங்களையும் வெளிப்படுத்திக்கொள்ள நல்லதொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இந்த இதழ்களில் மற்றொரு விஷயமும் உள்ளூர நடக்கிறது. கவிஞர்களே இதழ்களின் ஆசிரியர்களாகவும் ஆகும்போது, நல்ல கவிதைகளைத் தேர்வு செய்வதும், அது வாசகர் மத்தியில் போய்ச் சேருவதாக இருக்கவேண்டும் என்பதையும் இந்த ஆசிரியர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். சுயதேர்வு. சுய மதிப்பீட்டை மேம்படுத்தும் தேர்வு இது.

இந்த இதழ்களின் உள்ளடக்கத்தில் ஒரு சிக்கல் இருக்கிறது. வெரைட்டி இல்லாமல் போய்விடக் கூடிய பாதிப்பு ஏற்பட்டுவிடலாம். இன்னொரு சிக்கல், இதன் வாழ்நாள். கவிஞர்களால் தம் சொந்தப் பணத்தைப் போட்டு, எத்தனை இதழ்கள் கொண்டு வர முடியும்? தெரியவில்லை. அதைப் பற்றி இப்போது கவலைப்பட வேண்டாம் என்று நினைக்கிறேன்.

படிப்பதற்கு இந்த இதழ்கள் சிறப்பாக இருக்கின்றன. அதுதான் வாசகனாகிய எனக்கு முக்கியம்.