Posts Tagged ‘சிறுகதை’

வண்ணங்கள் பலவிதம்

Posted in சிறுகதை on August 11th, 2009 by siteadmin – Be the first to comment
சட்டென ஒரு கட்டத்தில் பேச்சு, கடுமையாகிவிட்டது. ராம்ஜி அமைதியானான். செல்வத்தின் முகத்தில் தெரிந்த வேகம் அவனைப் பேசவிடாமல் தடுத்தது. மேலும் அதே வழியில் பேசினால், கோபமும் வெறுப்பும் அதிகமாகலாம். விவாதம் அர்த்தமற்றுப் போய்விடலாம். எந்தப் பயனும் இல்லாமல் பேசுவதில் எந்தப் பொருளும் இல்லை. ராம்ஜி எழுந்துகொண்டான். ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு, கட்டைச் சுவருக்கு அருகில் போய் நின்றுகொண்டான்.
தெருவிளக்கு தூரத்தில் எரிந்துகொண்டிருந்தது. வீட்டுக்குத் திரும்பும் களைப்பு. மெதுவாக இரண்டு பெண்கள் சைக்கிளை மிதித்துக்கொண்டிருந்தார்கள். ஹான்டில்பாரின் ஒருபுறம் காய்கறிகள். பைக்கு வெளியே முருங்கைக்காய் துருத்திக்கொண்டிருந்தது. ஸ்டேஷனில் இறங்கி காய்கறி வாங்கிக்கொண்டு வருவார்களாக இருக்கும். இனிமேல் போய், பிள்ளைகளுக்கு படிப்புச் சொல்லிக் கொடுத்து, காலையில் செய்த சமையலையே சுட வைத்துச் சாப்பிட்டுப் படுத்துக்கொள்வார்கள், நாளை மீண்டும் அலுலகம் ஓட.
ராம்ஜி சிரித்துக்கொண்டான். எல்லோர் வீடும் தன்னுடையதைப் போலவே இருக்கும் என்று நம்பவேண்டியதில்லை. வித்தியாசமாகக் கூட இருக்கலாம். புறநகர் வாழ்வு ஒன்றுபோலவே இருக்கவேண்டும் என்று அவசியமில்லையே. சைக்கிள் ஓட்டிப் போகும் பெண்ணுக்குக் கல்யாணமே நடைபெறாமல் கூட இருக்கலாம். அம்மா அப்பாவுக்குத் துணையாக வாழ்ந்துகொண்டிருக்கலாம். வீட்டுக்குப் போய், அம்மா கொடுக்கும் காபியைக் குடித்துவிட்டு, அமைதியாக காலையில் தவறவிட்ட நாளிதழைப் படிக்கலாம்.
ஏன் இப்படிக் கூட இருக்கலாம். தனக்கு மட்டும் சமைத்துச் சாப்பிட்டு, தனியாளாக வாழ்பவளாக இருக்கலாம். இருக்கலாம். எவ்வளவு சாத்தியங்கள். எவ்வளவு வண்ணங்கள். ஒரு பாத்திரத்தை வைத்துக்கொண்டு, அனைத்து சாத்தியங்களையும் பொருத்த முடியுமானால், எத்தனை கதைகளை சிருஷ்டிக்கலாம்? எத்தனை வர்ணனைகளைத் தொடுக்கலாம்? உண்மை. வாழ்வின் சாத்தியங்கள் போல்தான், எழுத்தின் சாத்தியங்களும். அதன் விரிந்த பரந்த கரங்களை யார் முழுமையாக அறிந்தவர்?
ராம்ஜி திரும்பிப் பார்த்தான். செல்வம் இன்னும் தன் இருக்கையிலேயே அமர்ந்திருந்தான். சற்றுமுன் நடந்த விவாதமோ, அதன் உக்கிரமோ இப்போது அறவே மறந்து போயிருந்தது. சொல்லப் போனால், சற்று அர்த்தமற்றும் தோன்றியது. எதற்காக இந்த விவாதம்? தேவையே இல்லையோ என்றும் தோன்றாமலில்லை.
“சரிடா, நீ சொல்றா மாதிரி, சண்முகத்தோட எல்லாக் கதைகளையும் தொகுத்துடுவோம்டா..”
செல்வம் இதை எதிர்பார்க்கவில்லை போலும். முகத்தில் மின்னிய சந்தேகம், அதைத் தொடர்ந்த கேள்விக்குறி ஆகியவற்றை ராம்ஜியால் பார்க்க முடிந்தது.
“நான் சொன்னேன்ங்கிறதுக்காக ஒத்துக்கவேண்டாம்.”
“இல்லை. அப்படியில்லை. நீ சொல்றதுலேயும் நியாயம் இருக்கு. எதிர்கால வாசகனுக்கு சண்முகம் இப்படியும் எழுதியிருக்கார்ங்கறது தெரியட்டும். நாம் யார் அவரையும் அவரோட புகழையும் தாங்கிப் பிடிக்கறதுக்கு. அவரோட புகழ் அவரோட எழுத்தினாலதானே வரப் போவுது.”
செல்வம் இப்போது யோசிப்பவன் போல் அமைதி காத்தான். இவ்வளவு நேரம் தன் கருத்துக்களில் தீவிரமாக இருந்தவன், இப்போது தன் மீதே சந்தேகம் வந்தவன் போல் நின்றான். எதிர்கருத்து இருக்கும் வரை, தன் கருத்தைத் தீவிரமாக முன்வைப்பதில் இருந்த முனைப்பு, இப்போது சட்டென மாறினவுடன், கூடுதல் பொறுப்பு போல் தோன்றத் தொடங்கிவிட்டது.
“படிக்கறவனும் கிரிட்டிக்ஸூம் இதைச் சரியாகப் புரிஞ்சுக்கணும். வேணும்னா, முன்னால நல்ல முன்னுரை ஒண்ணு எழுதிடலாம். சண்முகத்தில் எழுத்து பல தரத்துடையது. அதில் ஏற்றஇறக்கங்கள் இருக்கலாம் அப்படின்னு.. என்ன சொல்ற?”
ராம்ஜிக்கு இது அவ்வளவு சரியாகத் தோன்றவில்லை. நாம் யார் சண்முகத்துக்கு அரண் அமைக்க? ஒரு மனிதன் தன் வாழ்நாளில் பல தரத்தில் எழுதுவதும், பல தேவைகளுக்கு எழுதுவதும் சகஜம்தானே? அதற்குப் போய் எதற்காக ஒரு புது நியாயம் சொல்லி, அண்டைக் கொடுக்க வேண்டும்? யாருக்காகப் பயந்து?
“இல்லன்னா, ரொம்ப சுலபத்துல சண்முகத்தைப் புறக்கணிச்சுடுவாங்க ராம்ஜி. எதுக்கு எல்லார் வாயிலேயும் விழுந்து எழுந்துக்கணும் அவர்?”
ராம்ஜி இதைத்தான் முதலில் இருந்து சொல்லி வந்தான். சற்று முன் நடந்த கடுமையான விவாதத்துக்கும் இதுவே காரணமாயிற்று. அப்போது எதிர்கட்சியாக இருந்த செல்வம் இப்போது சட்டென இப்படி மாறிப் பேசுகிறான். அக்கறைதான் காரணம்.
சண்முகம் இறந்து போய் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அவர் இருந்தபோது மூன்று தொகுதிகள் சிறுகதைகள் வெளியாகியிருக்கின்றன. தொகுதிகள் வந்த காலத்தில், அவர் எழுத்தின் முக்கியத்துவம் பற்றி நிறைய பேசியிருக்கிறார்கள். அவர் முன்வைத்த கருத்துக்கள், எழுதிய விதம் எல்லாம் அன்றைய தேதிக்குப் புதிதாக இருந்ததால், எல்லாரும் நிறையவே படித்திருக்கிறார்கள். கொஞ்ச நாளிலேயே அவருக்கு ஒரு கல்ட் ஃபிகருக்கான அந்தஸ்து கிட்டவும் செய்தது.
அப்புறம், பேச்சே இல்லை. வழக்கம்போல், தமிழ் சமூகத்துக்கு எவ்வளளோ முக்கியமான வேலை. அவரை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற அவசியமென்ன. சுலபத்தில் மறந்தும் போய்விட்டது. அவ்வப்போது, எங்கேனும் ஒன்றிரண்டு சிறுகதைகள் மீண்டும் மீண்டும் பிரசுரமாகும். அல்லது தேர்வாளர்கள் வசதிக்கேற்க, அவர்களது தேவைக்கேற்க மீண்டும் மீண்டும் ஒரு சில கதைகளே பிரபலப்படுத்தப்பட்டன. இந்தத் தேர்வுகளுக்குப் பின் இருக்கும் அரசியல்தான் ராம்ஜியை அதிகம் வெறுப்படையச் செய்தது.
முதல் வேலையாக அவர் எழுதிய அனைத்து எழுத்துக்களையும் தொகுக்க வேண்டும் என்று முனைந்த போது, உடன் வந்து சேர்ந்துகொண்டவன் செல்வம். அவனுக்கும் சண்முகத்தின் எழுத்தின் மேல் இருந்த அக்கறை, வேலையைத் துரிதப்படுத்தியது. செல்வத்துக்குச் சின்னதாக ஒரு பதிப்பகமும் இருந்தது இன்னும் வசதியாகப் போயிற்று. வங்கியில் செய்யும் வேலை நேரம் போக, அவ்வப்போது கவிதைகள் எழுதுவதுடன் புத்தகங்களும் வெளியிட்டான் செல்வம்.
அவனே சண்முகத்தின் எழுத்துக்களை வெளியிட முன்வந்தன். பழைய இதழ்கள், தொகுதிகள், முதல் பதிப்பு நூல்கள் என்று ஒன்றுவிடாமல் தேட, அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைக்கத் தொடங்கின. ஆரம்பித்த போது இருந்த வேகம், தடைகளைச் சந்திக்க சந்திக்க மெல்ல மட்டுப்படத் தொடங்கியது. ஒரு மாதிரியாக எல்லா படைப்புகளும் கிடைப்பதற்குள், கிட்டத்தட்ட ஒன்றரை இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் வேறெங்கேனும் அவர் எழுதியிருக்கக் கூடும் என்ற சந்தேகம் ராம்ஜிக்கு நிரம்பவே உண்டு.
எல்லாவற்றையும் சேர்த்து வைத்துப் படிக்க ஆரம்பித்தபோதுதான், ஒரு விஷயம் தெளிவானது. சண்முகம், எல்லாவற்றையும் தன் தொகுதிகளில் சேர்த்துக்கொள்ளவில்லை. அவரே தேர்ந்தெடுத்தக் கதைகளை மட்டுமே தன் தொகுதியில் போட்டுக்கொண்டிருக்கிறார். தன் எழுத்தில் உள்ள ஏற்றஇறக்கம் பற்றிய தெளிவு அவருக்கே இருந்திருக்கிறது.
“நாம எல்லாத்தையும் சேர்த்துப் போடணுமா?” ராம்ஜி.
“போட வேண்டியதுதான். இது நல்லது, இது நல்லாயில்லன்னு சொல்ல நாம யாரு? நம்ம வேலை, அவரோட எழுத்துக்கள் அத்தனையும் கிடைக்கச் செய்யறதுதான். படிக்கறவனுக்கு செய்யற பெரிய உதவியிது. ஆனா இந்தத் தொகுதி அனாவசியமா அவரோட புகழைக் கெடுக்கக்கூடாது இல்லையா?”
“பின்ன ஏன் அப்படிப்பட்ட எழுத்தை அவர் எழுதணும்? அவர் எழுதறது தப்பில்லன்னா, அதைத் தொகுக்கறதும் தப்பில்லதான்.”
ராம்ஜிக்கு கொஞ்சம் ஆயாசமாக இருந்தது. உண்மை. எதற்கு இப்படிப்பட்ட தரம்குறைந்த எழுத்துக்களை எழுதவேண்டும்? இதில் எழுத்தாளனைக் குறை சொல்ல வேண்டுமா? இப்படிப்பட்ட கதைகளைக் கேட்டுப் பெற்ற பத்திரிகைகளைக் குறைசொல்ல வேண்டுமா? தெரியவில்லை. எவ்வளவோ காரணங்கள் இருந்திருக்கலாம். பணத்தேவை, புகழ் தேவை, குறைந்தபட்சம் உதவ முன்வரும் நண்பர்களுக்காக எழுதிக்கொடுப்பது போன்ற எத்தனையோ சாத்தியங்கள். அல்லது வளரும் வேகத்தில் எல்லாவற்றையும் எழுதிப் பார்த்துவிடவேண்டும் என்ற துடிப்பு கூட காரணமாக இருக்கலாம்.
பின்னர் அவரே அவைகளைப் புத்தகமாக்க முனையும்போது, அவர் உள்ளே இருக்கும் உண்மையான இலக்கிய ரசிகன், பல கதைகளைப் புறந்தள்ளியிருப்பான். சில கதைகளைப் பொறுக்கி எடுத்திருப்பான். அவை மட்டுமே தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
இன்றைக்குப் போய் அவர் ஏன் அப்படிப்பட்ட குறைகதைகளை எழுதவேண்டும் என்று கேள்வி கேட்டால், யாரால் பதில் சொல்ல முடியும்?
“அப்படியில்ல செல்வம். எல்லாத்தையும் தொகுத்துடலாம். அதனால புகழ் வந்தா ஒண்ணும் பிரச்சினை இல்லை. அதே தொகுதியின் மூலமா கெட்ட பெயர் வந்தா, அதை எதிர்கொள்ளவோ, சரியான விளக்கம் தரவோ சண்முகம் இல்லைங்கறதை ஞாபகம் வெச்சுக்கவேண்டாமா? இன்னொன்னும் பார்க்கணும். நாம சொல்ற குறையுடைய கதைகளை எழுதிய அதே கைதான் சிறப்பான கதைகளையும் எழுதியிருக்கு.”
“எப்படிடா, ஒரே கை ரெண்டையும் எழுத முடியும்? இதுல ஏதோ ஒண்ணு பொய்யாதானே இருக்கணும்?”
ராம்ஜிக்குத் தூக்கிவாரிப் போட்டது. செல்வம் கேட்பதில் உண்மையில்லாமலில்லை. தரம் என்ற ஒன்று தெரிந்த பின், எப்படித் தரமற்றவைகளை எழுத முடியும்? ஆரம்பத்தில் கொஞ்சம் குற்றங்குறைகளோடு தொடங்கி பின் வளர்ந்து வந்தார் என்றும் சொல்வதற்கில்லை. முதல் கதையில் இருந்தே அப்பழுக்கற்ற தரம் வெளிப்படுகிறது. நல்ல வாசிப்பு. நல்ல கல்வி. உலக ஞானம். எல்லாம் இருந்திருக்கிறது. ஆனால், பின்னால் எழுதிய பல கதைகள், குறுநாவல்கள், இடக்கையால் எழுதின ரகம். எப்படி இதை நியாயப்படுத்த முடியும்? தெரியவில்லை.
“பிரச்சினை என்ன தெரியுமா?” செல்வம்.
செல்வமும் எழுந்துகொண்டான். ராம்ஜி நின்றிருந்த கைப்பிடிச் சுவர் அருகே வந்தான். வானம் இன்னும் இருட்டிக்கொண்டிருந்தது.
“சொல்லு..”
“நீ அனாவசியமா சண்முகத்தைத் தாங்கிப் பிடிக்கணும்னு நினைக்கறே. அங்கதான் பிரச்சினை. சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத. அவரோட புகழ்ல நீயும் குளிர்காயணும்னு நினைக்கறே. அதுதான் பிரச்சினை.”
அப்படியா? ஒரு கணம் செல்வத்தின் முகத்தைப் பார்த்தான். அப்படியும் ஒரு காரணம் இருக்க முடியுமா? சண்முகத்துக்கும் எனக்கும் என்ன உறவு? நான் அவர் ரசிகன். அவர் எழுத்துக்களால் கவரப்பட்டவன். அவர் எழுத்து முக்கியமான எழுத்து என்று உளமாற நினைப்பவன். அவ்வளவுதான். அவர் பெருமையில் நான் எப்படிப் பங்கெடுத்துக்கொள்ள முடியும்?
“எப்படி சொல்ற?”
“சண்முகத்தின் எழுத்துக்களைத் தொகுத்தவர்னு உன் பெயர் வரும் இல்லையா? உன் அந்தஸ்தை அது கொஞ்சம் தூக்கிவிடத்தானே செய்யும்.”
“சில்லி…”
உண்மையில் எரிச்சலாகத்தான் இருந்தது. சண்முகத்தின் எழுத்துக்களைத் தேடி அலைந்தபோது இருந்த உற்சாகம், கிடைத்தப் போது அடைந்த மகிழ்ச்சி எல்லாம் இந்த அற்பத்தனத்துக்குத்தானா? நிச்சயம் இல்லை. அவர் மனைவி, நண்பர்கள் என்று ஒவ்வொருவராகப் போய்ப் பார்த்துப் பேசிப் பேசி ஒவ்வொரு அங்குலமாக சண்முகத்தருகே முன்னேறியது இத்தகைய ஒரு வார்த்தைக்குத்தானா? நிச்சயம் இல்லை. ஆனால், அதை அனைவரிடம் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. ஒவ்வொரு மனதும் ஒவ்வொரு வண்ணம் கொண்டது. ஒவ்வொரு நோக்கம் கொண்டது. நோக்கங்களை நிமிர்த்தவா முடியும்? பதில்சொல்லித்தான் சந்தேகத்தை நிவர்த்திசெய்துவிட முடியுமா?
ஆனால், உண்மையில் சண்முகம் எழுத்தைத் தேட வைத்தது எது? கிடைத்த படைப்புகளைப் படித்துவிட்டு, எல்லாரும் சொல்வதைத் திரும்பச் சொல்லி, அதே பழைய மேற்கோள்களையே திரும்பத் திரும்ப மேற்கோள்களாக்கிவிட்டு, தன் வழியையைப் பார்த்துக்கொண்டு போயிருக்கலாம். ஒன்றும் குறைந்துவிடப் போவதில்லை. ஆனால் இவ்வளவு அற்புதமாக எழுதிய ஒரு கை, ஒரு மனம், ஒரு புத்தி எப்படிப்பட்டதாக இருந்திருக்க வேண்டும்? அதன் நோக்கங்கள் எப்படிப்பட்டதாக இருந்திருக்க வேண்டும்? அதன் ஆசைகள், எதிர்பார்ப்புகள் எப்படிப்பட்டதாக இருந்திருக்க வேண்டும்.
சதையும் ரத்தமுமகாக ஒரு எழுத்தாளன் தன் கனவுகளை வரைந்து வைத்திருக்கிறான். அதை அணுகிப் பார்ப்பதைப் போல் உற்சாகமும் நிறைவும் தருவது வேருண்டோ ? உண்மையில் அந்த தேடலும் அதன் அட்வென்சருமே நிறைவளிப்பது. இதையெல்லாம் விளக்க முடியாது. இது உணர்வு சம்மந்தப்பட்டது. மகிழ்ச்சி சொல்லில் நிறைவுறாதது.
கிளம்பிவிடவேண்டும் என்று தோன்றியது. நிறைய விஷயங்களைப் புரிய வைக்க முடியாது. சைக்கிளில் போகும் பெண், வீட்டுக்குப் போய் என்னவாக வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம். அவள் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டுமென்று நாம் வேண்டுமானால் ஆசைப்படலாம். சண்முகம் நல்ல கதைகள் மட்டுமே எழுதிருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதும் அப்படிப்பட்டதுதான். ஆனால், அதெல்லாம் நமது ஆசைகள். நமது விருப்பங்கள். அப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்று கட்டளையா இடமுடியும்?
“சரி செல்வம், நான் கிளம்பறேன். நீயே பார்த்து செய். முடிஞ்சவரைக்கும் எல்லா கதைகளும் தொகுத்தாச்சு. அதெல்லாம் வெளியான வருஷப்படியே வரிசைப்படுத்தியிருக்கேன். அப்படியே போட்டுடு.”
“முன்னுரை ஏதாவது எழுதறியா?”
ராம்ஜி ஒரு கணம் நின்றான்.
“சண்முகம் தன் சொந்தக் கால்ல நிற்பார். நல்லது கெட்டதும் அவருக்கே போய்ச் சேரட்டும். நாம யார் அவருக்கு முட்டுக்கொடுக்க?”
சொல்லிவிட்டு ராம்ஜி தெருவில் இறங்கி நடந்தான். ஒரு பெண் சைக்கிளில் அவனைக் கடந்து முன்னே போனாள்.

சட்டென ஒரு கட்டத்தில் பேச்சு, கடுமையாகிவிட்டது. ராம்ஜி அமைதியானான். செல்வத்தின் முகத்தில் தெரிந்த வேகம் அவனைப் பேசவிடாமல் தடுத்தது. மேலும் அதே வழியில் பேசினால், கோபமும் வெறுப்பும் அதிகமாகலாம். விவாதம் அர்த்தமற்றுப் போய்விடலாம். எந்தப் பயனும் இல்லாமல் பேசுவதில் எந்தப் பொருளும் இல்லை. ராம்ஜி எழுந்துகொண்டான். ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு, கட்டைச் சுவருக்கு அருகில் போய் நின்றுகொண்டான்.

தெருவிளக்கு தூரத்தில் எரிந்துகொண்டிருந்தது. வீட்டுக்குத் திரும்பும் களைப்பு. மெதுவாக இரண்டு பெண்கள் சைக்கிளை மிதித்துக்கொண்டிருந்தார்கள். ஹான்டில்பாரின் ஒருபுறம் காய்கறிகள். பைக்கு வெளியே முருங்கைக்காய் துருத்திக்கொண்டிருந்தது. ஸ்டேஷனில் இறங்கி காய்கறி வாங்கிக்கொண்டு வருவார்களாக இருக்கும். இனிமேல் போய், பிள்ளைகளுக்கு படிப்புச் சொல்லிக் கொடுத்து, காலையில் செய்த சமையலையே சுட வைத்துச் சாப்பிட்டுப் படுத்துக்கொள்வார்கள், நாளை மீண்டும் அலுலகம் ஓட.

ராம்ஜி சிரித்துக்கொண்டான். எல்லோர் வீடும் தன்னுடையதைப் போலவே இருக்கும் என்று நம்பவேண்டியதில்லை. வித்தியாசமாகக் கூட இருக்கலாம். புறநகர் வாழ்வு ஒன்றுபோலவே இருக்கவேண்டும் என்று அவசியமில்லையே. சைக்கிள் ஓட்டிப் போகும் பெண்ணுக்குக் கல்யாணமே நடைபெறாமல் கூட இருக்கலாம். அம்மா அப்பாவுக்குத் துணையாக வாழ்ந்துகொண்டிருக்கலாம். வீட்டுக்குப் போய், அம்மா கொடுக்கும் காபியைக் குடித்துவிட்டு, அமைதியாக காலையில் தவறவிட்ட நாளிதழைப் படிக்கலாம்.

ஏன் இப்படிக் கூட இருக்கலாம். தனக்கு மட்டும் சமைத்துச் சாப்பிட்டு, தனியாளாக வாழ்பவளாக இருக்கலாம். இருக்கலாம். எவ்வளவு சாத்தியங்கள். எவ்வளவு வண்ணங்கள். ஒரு பாத்திரத்தை வைத்துக்கொண்டு, அனைத்து சாத்தியங்களையும் பொருத்த முடியுமானால், எத்தனை கதைகளை சிருஷ்டிக்கலாம்? எத்தனை வர்ணனைகளைத் தொடுக்கலாம்? உண்மை. வாழ்வின் சாத்தியங்கள் போல்தான், எழுத்தின் சாத்தியங்களும். அதன் விரிந்த பரந்த கரங்களை யார் முழுமையாக அறிந்தவர்?

ராம்ஜி திரும்பிப் பார்த்தான். செல்வம் இன்னும் தன் இருக்கையிலேயே அமர்ந்திருந்தான். சற்றுமுன் நடந்த விவாதமோ, அதன் உக்கிரமோ இப்போது அறவே மறந்து போயிருந்தது. சொல்லப் போனால், சற்று அர்த்தமற்றும் தோன்றியது. எதற்காக இந்த விவாதம்? தேவையே இல்லையோ என்றும் தோன்றாமலில்லை.

“சரிடா, நீ சொல்றா மாதிரி, சண்முகத்தோட எல்லாக் கதைகளையும் தொகுத்துடுவோம்டா..”

செல்வம் இதை எதிர்பார்க்கவில்லை போலும். முகத்தில் மின்னிய சந்தேகம், அதைத் தொடர்ந்த கேள்விக்குறி ஆகியவற்றை ராம்ஜியால் பார்க்க முடிந்தது.

“நான் சொன்னேன்ங்கிறதுக்காக ஒத்துக்கவேண்டாம்.”

“இல்லை. அப்படியில்லை. நீ சொல்றதுலேயும் நியாயம் இருக்கு. எதிர்கால வாசகனுக்கு சண்முகம் இப்படியும் எழுதியிருக்கார்ங்கறது தெரியட்டும். நாம் யார் அவரையும் அவரோட புகழையும் தாங்கிப் பிடிக்கறதுக்கு. அவரோட புகழ் அவரோட எழுத்தினாலதானே வரப் போவுது.”

செல்வம் இப்போது யோசிப்பவன் போல் அமைதி காத்தான். இவ்வளவு நேரம் தன் கருத்துக்களில் தீவிரமாக இருந்தவன், இப்போது தன் மீதே சந்தேகம் வந்தவன் போல் நின்றான். எதிர்கருத்து இருக்கும் வரை, தன் கருத்தைத் தீவிரமாக முன்வைப்பதில் இருந்த முனைப்பு, இப்போது சட்டென மாறினவுடன், கூடுதல் பொறுப்பு போல் தோன்றத் தொடங்கிவிட்டது.

“படிக்கறவனும் கிரிட்டிக்ஸூம் இதைச் சரியாகப் புரிஞ்சுக்கணும். வேணும்னா, முன்னால நல்ல முன்னுரை ஒண்ணு எழுதிடலாம். சண்முகத்தில் எழுத்து பல தரத்துடையது. அதில் ஏற்றஇறக்கங்கள் இருக்கலாம் அப்படின்னு.. என்ன சொல்ற?”

ராம்ஜிக்கு இது அவ்வளவு சரியாகத் தோன்றவில்லை. நாம் யார் சண்முகத்துக்கு அரண் அமைக்க? ஒரு மனிதன் தன் வாழ்நாளில் பல தரத்தில் எழுதுவதும், பல தேவைகளுக்கு எழுதுவதும் சகஜம்தானே? அதற்குப் போய் எதற்காக ஒரு புது நியாயம் சொல்லி, அண்டைக் கொடுக்க வேண்டும்? யாருக்காகப் பயந்து?

“இல்லன்னா, ரொம்ப சுலபத்துல சண்முகத்தைப் புறக்கணிச்சுடுவாங்க ராம்ஜி. எதுக்கு எல்லார் வாயிலேயும் விழுந்து எழுந்துக்கணும் அவர்?”

ராம்ஜி இதைத்தான் முதலில் இருந்து சொல்லி வந்தான். சற்று முன் நடந்த கடுமையான விவாதத்துக்கும் இதுவே காரணமாயிற்று. அப்போது எதிர்கட்சியாக இருந்த செல்வம் இப்போது சட்டென இப்படி மாறிப் பேசுகிறான். அக்கறைதான் காரணம்.

சண்முகம் இறந்து போய் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அவர் இருந்தபோது மூன்று தொகுதிகள் சிறுகதைகள் வெளியாகியிருக்கின்றன. தொகுதிகள் வந்த காலத்தில், அவர் எழுத்தின் முக்கியத்துவம் பற்றி நிறைய பேசியிருக்கிறார்கள். அவர் முன்வைத்த கருத்துக்கள், எழுதிய விதம் எல்லாம் அன்றைய தேதிக்குப் புதிதாக இருந்ததால், எல்லாரும் நிறையவே படித்திருக்கிறார்கள். கொஞ்ச நாளிலேயே அவருக்கு ஒரு கல்ட் ஃபிகருக்கான அந்தஸ்து கிட்டவும் செய்தது.

அப்புறம், பேச்சே இல்லை. வழக்கம்போல், தமிழ் சமூகத்துக்கு எவ்வளளோ முக்கியமான வேலை. அவரை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற அவசியமென்ன. சுலபத்தில் மறந்தும் போய்விட்டது. அவ்வப்போது, எங்கேனும் ஒன்றிரண்டு சிறுகதைகள் மீண்டும் மீண்டும் பிரசுரமாகும். அல்லது தேர்வாளர்கள் வசதிக்கேற்க, அவர்களது தேவைக்கேற்க மீண்டும் மீண்டும் ஒரு சில கதைகளே பிரபலப்படுத்தப்பட்டன. இந்தத் தேர்வுகளுக்குப் பின் இருக்கும் அரசியல்தான் ராம்ஜியை அதிகம் வெறுப்படையச் செய்தது.

முதல் வேலையாக அவர் எழுதிய அனைத்து எழுத்துக்களையும் தொகுக்க வேண்டும் என்று முனைந்த போது, உடன் வந்து சேர்ந்துகொண்டவன் செல்வம். அவனுக்கும் சண்முகத்தின் எழுத்தின் மேல் இருந்த அக்கறை, வேலையைத் துரிதப்படுத்தியது. செல்வத்துக்குச் சின்னதாக ஒரு பதிப்பகமும் இருந்தது இன்னும் வசதியாகப் போயிற்று. வங்கியில் செய்யும் வேலை நேரம் போக, அவ்வப்போது கவிதைகள் எழுதுவதுடன் புத்தகங்களும் வெளியிட்டான் செல்வம்.

அவனே சண்முகத்தின் எழுத்துக்களை வெளியிட முன்வந்தன். பழைய இதழ்கள், தொகுதிகள், முதல் பதிப்பு நூல்கள் என்று ஒன்றுவிடாமல் தேட, அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைக்கத் தொடங்கின. ஆரம்பித்த போது இருந்த வேகம், தடைகளைச் சந்திக்க சந்திக்க மெல்ல மட்டுப்படத் தொடங்கியது. ஒரு மாதிரியாக எல்லா படைப்புகளும் கிடைப்பதற்குள், கிட்டத்தட்ட ஒன்றரை இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் வேறெங்கேனும் அவர் எழுதியிருக்கக் கூடும் என்ற சந்தேகம் ராம்ஜிக்கு நிரம்பவே உண்டு.

எல்லாவற்றையும் சேர்த்து வைத்துப் படிக்க ஆரம்பித்தபோதுதான், ஒரு விஷயம் தெளிவானது. சண்முகம், எல்லாவற்றையும் தன் தொகுதிகளில் சேர்த்துக்கொள்ளவில்லை. அவரே தேர்ந்தெடுத்தக் கதைகளை மட்டுமே தன் தொகுதியில் போட்டுக்கொண்டிருக்கிறார். தன் எழுத்தில் உள்ள ஏற்றஇறக்கம் பற்றிய தெளிவு அவருக்கே இருந்திருக்கிறது.

“நாம எல்லாத்தையும் சேர்த்துப் போடணுமா?” ராம்ஜி.

“போட வேண்டியதுதான். இது நல்லது, இது நல்லாயில்லன்னு சொல்ல நாம யாரு? நம்ம வேலை, அவரோட எழுத்துக்கள் அத்தனையும் கிடைக்கச் செய்யறதுதான். படிக்கறவனுக்கு செய்யற பெரிய உதவியிது. ஆனா இந்தத் தொகுதி அனாவசியமா அவரோட புகழைக் கெடுக்கக்கூடாது இல்லையா?”

“பின்ன ஏன் அப்படிப்பட்ட எழுத்தை அவர் எழுதணும்? அவர் எழுதறது தப்பில்லன்னா, அதைத் தொகுக்கறதும் தப்பில்லதான்.”

ராம்ஜிக்கு கொஞ்சம் ஆயாசமாக இருந்தது. உண்மை. எதற்கு இப்படிப்பட்ட தரம்குறைந்த எழுத்துக்களை எழுதவேண்டும்? இதில் எழுத்தாளனைக் குறை சொல்ல வேண்டுமா? இப்படிப்பட்ட கதைகளைக் கேட்டுப் பெற்ற பத்திரிகைகளைக் குறைசொல்ல வேண்டுமா? தெரியவில்லை. எவ்வளவோ காரணங்கள் இருந்திருக்கலாம். பணத்தேவை, புகழ் தேவை, குறைந்தபட்சம் உதவ முன்வரும் நண்பர்களுக்காக எழுதிக்கொடுப்பது போன்ற எத்தனையோ சாத்தியங்கள். அல்லது வளரும் வேகத்தில் எல்லாவற்றையும் எழுதிப் பார்த்துவிடவேண்டும் என்ற துடிப்பு கூட காரணமாக இருக்கலாம்.

பின்னர் அவரே அவைகளைப் புத்தகமாக்க முனையும்போது, அவர் உள்ளே இருக்கும் உண்மையான இலக்கிய ரசிகன், பல கதைகளைப் புறந்தள்ளியிருப்பான். சில கதைகளைப் பொறுக்கி எடுத்திருப்பான். அவை மட்டுமே தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

இன்றைக்குப் போய் அவர் ஏன் அப்படிப்பட்ட குறைகதைகளை எழுதவேண்டும் என்று கேள்வி கேட்டால், யாரால் பதில் சொல்ல முடியும்?

“அப்படியில்ல செல்வம். எல்லாத்தையும் தொகுத்துடலாம். அதனால புகழ் வந்தா ஒண்ணும் பிரச்சினை இல்லை. அதே தொகுதியின் மூலமா கெட்ட பெயர் வந்தா, அதை எதிர்கொள்ளவோ, சரியான விளக்கம் தரவோ சண்முகம் இல்லைங்கறதை ஞாபகம் வெச்சுக்கவேண்டாமா? இன்னொன்னும் பார்க்கணும். நாம சொல்ற குறையுடைய கதைகளை எழுதிய அதே கைதான் சிறப்பான கதைகளையும் எழுதியிருக்கு.”

“எப்படிடா, ஒரே கை ரெண்டையும் எழுத முடியும்? இதுல ஏதோ ஒண்ணு பொய்யாதானே இருக்கணும்?”

ராம்ஜிக்குத் தூக்கிவாரிப் போட்டது. செல்வம் கேட்பதில் உண்மையில்லாமலில்லை. தரம் என்ற ஒன்று தெரிந்த பின், எப்படித் தரமற்றவைகளை எழுத முடியும்? ஆரம்பத்தில் கொஞ்சம் குற்றங்குறைகளோடு தொடங்கி பின் வளர்ந்து வந்தார் என்றும் சொல்வதற்கில்லை. முதல் கதையில் இருந்தே அப்பழுக்கற்ற தரம் வெளிப்படுகிறது. நல்ல வாசிப்பு. நல்ல கல்வி. உலக ஞானம். எல்லாம் இருந்திருக்கிறது. ஆனால், பின்னால் எழுதிய பல கதைகள், குறுநாவல்கள், இடக்கையால் எழுதின ரகம். எப்படி இதை நியாயப்படுத்த முடியும்? தெரியவில்லை.

“பிரச்சினை என்ன தெரியுமா?” செல்வம்.

செல்வமும் எழுந்துகொண்டான். ராம்ஜி நின்றிருந்த கைப்பிடிச் சுவர் அருகே வந்தான். வானம் இன்னும் இருட்டிக்கொண்டிருந்தது.

“சொல்லு..”

“நீ அனாவசியமா சண்முகத்தைத் தாங்கிப் பிடிக்கணும்னு நினைக்கறே. அங்கதான் பிரச்சினை. சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத. அவரோட புகழ்ல நீயும் குளிர்காயணும்னு நினைக்கறே. அதுதான் பிரச்சினை.”

அப்படியா? ஒரு கணம் செல்வத்தின் முகத்தைப் பார்த்தான். அப்படியும் ஒரு காரணம் இருக்க முடியுமா? சண்முகத்துக்கும் எனக்கும் என்ன உறவு? நான் அவர் ரசிகன். அவர் எழுத்துக்களால் கவரப்பட்டவன். அவர் எழுத்து முக்கியமான எழுத்து என்று உளமாற நினைப்பவன். அவ்வளவுதான். அவர் பெருமையில் நான் எப்படிப் பங்கெடுத்துக்கொள்ள முடியும்?

“எப்படி சொல்ற?”

“சண்முகத்தின் எழுத்துக்களைத் தொகுத்தவர்னு உன் பெயர் வரும் இல்லையா? உன் அந்தஸ்தை அது கொஞ்சம் தூக்கிவிடத்தானே செய்யும்.”

“சில்லி…”

உண்மையில் எரிச்சலாகத்தான் இருந்தது. சண்முகத்தின் எழுத்துக்களைத் தேடி அலைந்தபோது இருந்த உற்சாகம், கிடைத்தப் போது அடைந்த மகிழ்ச்சி எல்லாம் இந்த அற்பத்தனத்துக்குத்தானா? நிச்சயம் இல்லை. அவர் மனைவி, நண்பர்கள் என்று ஒவ்வொருவராகப் போய்ப் பார்த்துப் பேசிப் பேசி ஒவ்வொரு அங்குலமாக சண்முகத்தருகே முன்னேறியது இத்தகைய ஒரு வார்த்தைக்குத்தானா? நிச்சயம் இல்லை. ஆனால், அதை அனைவரிடம் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. ஒவ்வொரு மனதும் ஒவ்வொரு வண்ணம் கொண்டது. ஒவ்வொரு நோக்கம் கொண்டது. நோக்கங்களை நிமிர்த்தவா முடியும்? பதில்சொல்லித்தான் சந்தேகத்தை நிவர்த்திசெய்துவிட முடியுமா?

ஆனால், உண்மையில் சண்முகம் எழுத்தைத் தேட வைத்தது எது? கிடைத்த படைப்புகளைப் படித்துவிட்டு, எல்லாரும் சொல்வதைத் திரும்பச் சொல்லி, அதே பழைய மேற்கோள்களையே திரும்பத் திரும்ப மேற்கோள்களாக்கிவிட்டு, தன் வழியையைப் பார்த்துக்கொண்டு போயிருக்கலாம். ஒன்றும் குறைந்துவிடப் போவதில்லை. ஆனால் இவ்வளவு அற்புதமாக எழுதிய ஒரு கை, ஒரு மனம், ஒரு புத்தி எப்படிப்பட்டதாக இருந்திருக்க வேண்டும்? அதன் நோக்கங்கள் எப்படிப்பட்டதாக இருந்திருக்க வேண்டும்? அதன் ஆசைகள், எதிர்பார்ப்புகள் எப்படிப்பட்டதாக இருந்திருக்க வேண்டும்.

சதையும் ரத்தமுமகாக ஒரு எழுத்தாளன் தன் கனவுகளை வரைந்து வைத்திருக்கிறான். அதை அணுகிப் பார்ப்பதைப் போல் உற்சாகமும் நிறைவும் தருவது வேருண்டோ ? உண்மையில் அந்த தேடலும் அதன் அட்வென்சருமே நிறைவளிப்பது. இதையெல்லாம் விளக்க முடியாது. இது உணர்வு சம்மந்தப்பட்டது. மகிழ்ச்சி சொல்லில் நிறைவுறாதது.

கிளம்பிவிடவேண்டும் என்று தோன்றியது. நிறைய விஷயங்களைப் புரிய வைக்க முடியாது. சைக்கிளில் போகும் பெண், வீட்டுக்குப் போய் என்னவாக வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம். அவள் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டுமென்று நாம் வேண்டுமானால் ஆசைப்படலாம். சண்முகம் நல்ல கதைகள் மட்டுமே எழுதிருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதும் அப்படிப்பட்டதுதான். ஆனால், அதெல்லாம் நமது ஆசைகள். நமது விருப்பங்கள். அப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்று கட்டளையா இடமுடியும்?

“சரி செல்வம், நான் கிளம்பறேன். நீயே பார்த்து செய். முடிஞ்சவரைக்கும் எல்லா கதைகளும் தொகுத்தாச்சு. அதெல்லாம் வெளியான வருஷப்படியே வரிசைப்படுத்தியிருக்கேன். அப்படியே போட்டுடு.”

“முன்னுரை ஏதாவது எழுதறியா?”

ராம்ஜி ஒரு கணம் நின்றான்.

“சண்முகம் தன் சொந்தக் கால்ல நிற்பார். நல்லது கெட்டதும் அவருக்கே போய்ச் சேரட்டும். நாம யார் அவருக்கு முட்டுக்கொடுக்க?”

சொல்லிவிட்டு ராம்ஜி தெருவில் இறங்கி நடந்தான். ஒரு பெண் சைக்கிளில் அவனைக் கடந்து முன்னே போனாள்.

ஒரு கேள்வி

Posted in சிறுகதை on August 11th, 2009 by வெங்கடேஷ் – 1 Comment

கஸ்தூரிபாய் ரயில்வே ஸ்டேஷன் இருட்டில் இதமாக இருந்தது. எதிர்ப்புறம் இரண்டொரு விளக்குகள்

எரிந்துகொண்டிருந்தன. யாரோ பேசிக்கொண்டிருந்தார்கள். ஸ்டேஷன் கட்டட வேலை செய்பவர்களாக இருக்கவேண்டும்.
அவர்கள் நின்ற பக்கத்தில், தள்ளி தள்ளி இருவர் மூவராக நின்றுகொண்டிருந்தார்கள். மேலே பளிச்சென்ற ஆகாயம்.
அமாவாசை முடிந்து நாளாவது நாள். சின்னதாய் நிலா துளிர்விட்டுக்கொண்டிருந்தது. ஸ்டேஷன் நல்ல உயரத்தில்
இருந்தது.
சாலை விளக்குகள், வீட்டின் வெளிச்சத் தெறிப்புகள் என்று எதுவும் வானத்தை மறைக்கவில்லை. எல்லாம் கீழே
எங்கோ இருப்பது போல் இருந்தது. ஸ்டேஷன் பக்கத்தில் இருந்த சாலையில் இருந்து அவ்வப்போது ஏதேனும் அவசர
வாகனத்தில் அவசர அலறல் தவிர, அமைதி. துலக்கி வைத்த அமைதி. செல்வத்துக்கு என்ன சொல்வது என்று
தெரியவில்லை. மணி அண்ணனும் பேசவில்லை. அவரும் இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருப்பது போல் தான்
தோன்றியது. கையில் சின்ன பை. மதியச் சாப்பாட்டைக் கட்டி எடுத்துவந்திருந்தார்கள்.
முழுக்கை சட்டையை இரண்டு மடிப்பு மடித்துவிட்டிருந்தார் அண்ணன். கைப்பையை முன்னால் பிடித்துக்கொண்டு மேலே
தெளித்திருந்த நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். செல்வமும் பார்த்தான். வியப்பாகத்தான் இருந்தது.
எல்லாமே அதே பிரகாசத்தோடு, அதே குளுமையோடு. ஊரில் பார்த்த அதே குளுமை, பிரகாசம். சட்டெனத் தான்
செய்யார் போய்விட்டோ மோ என்று தோன்றியது செல்வதுக்கு.
நாளை கிளம்பியாக வேண்டும். நான்கு நாள்கள் அண்ணனோடு போனது தெரியவே இல்லை. ஒவ்வொரு கணமும் அண்ணனின்
பாதுகாப்பும் அரவணைப்பும்தான் கண்களில் தெரிந்தது. இத்தனைக்கும் ஊரில் அண்ணனோடு பழகியது மிகச் சில
சமயங்களில்தான். பேசியது அதைவிடக் குறைவு. அப்பாவின் நண்பர் மகன். வயதில் மூத்தவர். அவர் வளைய வந்த
செட்டே வேறு. அவர் கல்லூரி போன நாள்களில், செல்வம் பள்ளியையே தாண்டவில்லை.
அப்பா ஃபோன் பண்ணிக் கேட்டுக்கொண்டார் என்றுதான் இத்தனை பாதுகாப்பு, அரவணைப்பு. தாம்பரத்தில் வந்து
இறங்கியது முதல், ஒவ்வொரு கல்லூரியாகப் போய் அட்மிஷன் ஃபார்ம் வாங்குவது, அதற்குத் தேவையான டிடி எடுப்பது,
போட்டோ க்கள் ஒட்டி, ஃபார்ம்மை நிறைவு செய்வது என்று அண்ணன் ஓடாத ஓட்டமில்லை. இன்னும் +2 தேர்வு முடிவுகள்
வெளியாகவில்லை. இரண்டொரு வாரத்தில் வந்துவிடும் என்றிருக்கிறார்கள்.
அதற்கு முன்னரே அண்ணனே பார்த்துச் சொல்லிவிடுவதாகச் சொல்லியிருக்கிறார். தெரிந்தவர்கள் மூலமாக எண்ணைக்
கொடுத்தனுப்பி, வாங்கியிருக்கும் மதிப்பெண்களைத் தெரிந்துகொள்ளலாம் என்றார் அண்ணன். செல்வத்துக்கும்
ஆசையாகத்தான் இருந்தது. எப்படியும் நல்ல மதிப்பெண் வந்துவிடும் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது. அந்த
நம்பிக்கைதான் சென்னை வரை அவனைத் துரத்தியதும்.
முதலில் ஒரு பி.காம். அப்புறம், தொடர்ந்து எம்.காம். அப்புறம் சி.ஏ. எங்கேயாவது நல்ல ஆடிட்டரிடம்
சேர்ந்துவிட்டால் போதும். சி.ஏ.வை ஒரே வேகத்தில் முடித்துவிட்டால், கண்டேன் கண்டேன் என்று கொத்திக்கொண்டு
போகமாட்டார்களா என்ன?. அவன் குடும்பத்தில் யாருமே படிக்காதப் படிப்பாக இருக்கும். அவன் மட்டுமே அறிந்த
துறையாக அது இருக்கும். அந்த வேகமும் ஆசையும்தான் இவ்வளவு தூரம் அவனைத் துரத்தியது.
தூரத்தில் வெளிச்சக் குழல் தெரிய, அண்ணன், திரும்பிப் பார்த்தார்.
“வண்டி வருது.. இது திருவான்மியூர் ஸ்டேஷன் போயிட்டுத் திரும்பி வரும்.”
செல்வமும் பார்த்தான். கண்களைக் கூசும் ஒளி வெள்ளம், மெல்ல மெல்ல நெருங்கிக்கொண்டிருந்தது. ஸ்டேஷனின்
பிளாட்பாரம் முழுவதும் இப்போது ஒளியில் மிதந்தது. தூர தூர நின்றுகொண்டிருந்த சிலர் முன்னேறி, வண்டியருகே
வரத்தொடங்கினர். வண்டி சின்னதாக ஒரு அலுங்கல் காட்டி நிற்க,
“ஏறிப்போமா? திருவான்மியூர் போயிட்டு திரும்பி வருவோம்?”
சரியென்று செல்வம் தலையாட்ட, சட்டென ஒரு பெட்டியில் ஏறிக்கொண்டனர். வானம் தொலைந்துபோக, அழுதுவடியும்
விளக்குகள். ஜன்னலோரமாக போய் உட்கார்ந்துகொண்டார்கள். காற்றின் வேகம், கேசத்தைக் கோதியபடி இருந்தது.
கீழே சாலையில் வாகனங்கள் போட்டியிடுவது போல் நகர்ந்தன.
“டெய்லி இந்த வண்டியிலதான் வருவீங்களாண்ணா?”
“காலையில ஷிப்டுன்னா, ஆறுலேருந்து ரெண்டு. அப்போ, காலையில பஸ் புடுச்சி வந்துடுவேன். மத்தியானம்
டிரெயின் ஏறிடுவேன். மத்தியானம் ரெண்டுலேருந்து ஆறுன்னா, மத்தியானமும் சாயங்காலமும் டிரெயின்லேயே
வந்துடுவேன். சீஸன் வெச்சிருக்கேன. பயங்கர சீப்பு.”
இந்த வாரம் மதிய ஷிப்டு. செல்வம் வந்ததால், நடுவே ஒருநாள் விட்டு ஒருநாள் விடுமுறை எடுத்துவிட்டார். இன்று
நேராக கட்டடம் கட்டும் சைட்டுக்கே வந்துவிடச் சொல்லியிருந்தார். விட்டுப் போன, இரண்டு கல்லூரிகளில் அன்று
அப்ளிகேஷன்களை வாங்கிக்கொண்டு, நேரே அவர் சொன்ன, அடையாறு பக்கம் சைட்டுக்கே செல்வம் வந்து சேர்ந்தான்.
பெரிய இடம். எண்ணற்ற அடுக்ககங்கள் வரவிருந்தன. அண்ணன்தான் டிராப்ட்ஸ்மேன். அவரைப் போல், இன்னும் இரண்டு
டிராப்ட்ஸ்மேன்கள் இருந்தார்கள்.
இரவும் பகலுமாக வேலை நடந்துகொண்டிருந்தது. அலுவலக அறை மாதிரி இருந்த இடத்திலேயே எண்ணற்ற சிமிண்ட்
மூட்டைகள் அடுக்கப்பட்டிருந்தன. வெளியே சிமிண்ட்டும் மணலும் கலந்து ஒருவித வாசனையை ஏற்படுத்தியிருந்தன.
செல்வம் ஓரமக உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்தான். நடு நடுவே இஞ்சினியர், அவர் இவர் என்று பலர் வந்து
பேசிக்கொண்டே இருந்தார்கள். அண்ணன் எல்லாருக்கும் பதில் சொல்லிக்கொண்டிருந்தார். கோபம் வரவேண்டிய
இடத்திலும் அமைதியே கோலோச்சியது. அதைப் பணிவு என்று சொல்வதை விட, பயம் என்று சொல்லலாம்.
ஏன் பயம்? இந்த வேலை இல்லையென்றால், அடுத்தொன்று. எதற்கு அப்படியாவது கும்மிடு போடவேண்டும்?
தெரியவில்லை. செல்வத்துக்கு நிறைய தெரியவில்லைகள் இருந்தன. அப்பா, அம்மா தொடங்கி, அவன் கேட்க
நினைத்துக் கேட்க தவிர்த்த எத்தனையோ தெரியவில்லைகள் மிச்சமிருந்தன. அவர்களாலும் அதற்குப் பதில் சொல்ல
முடியாதோ என்ற எண்ணமே பல கேள்விகளைக் கேட்கத் தவிர்த்திருக்கிறான். ஆனால், அக்கேள்விகள் அவனுள்
ஏற்படுத்தும் இம்சை தாங்க முடியாதது. நாக்குநுனி வரை கேள்விகள் துள்ளி ஓடி வரும். வேறெதோ மனத்தில் சட்டென
உறைக்க,கேள்வி தவிர்க்கப்படும். மனத்தின் ஆதங்கம் மட்டும் வடுவாய் மிச்சமிருக்கும்.
“அண்ணே, உங்களை மத்தியானமே கேக்கணும்னு நினைச்சேன்..”
சட்டென நெஞ்சில் நின்றது, வாய் வரை வந்துவிட்டது. இனி நிற்குமோ? மணி அண்ணன், செல்வத்தைத் திரும்பிப்
பார்த்தார். பூனை முடி மாதிரி மீசை. இன்னும் கருக்கவில்லை. மூங்கில்கம்பு மாதிரி தேகம். பள்ளிக்கு
பரபரவென ஓடிய காலம்தொட்டு, அவனை மணிக்குத் தெரியும். இன்று, வளர்ந்து, மேலே படிக்கவே வந்துவிட்டான்.
ஆச்சரியம்தான். வளர்ச்சி என்பதை யாரால் தடுக்க முடியும். என்ன கேள்வி என்பது அண்ணன், முகபாவம் இருந்தது.
“யார்யாரோ வந்து உங்ககிட்ட மெரட்டறாங்க, அதிகாரம் பண்றாங்க? நீங்க சும்மா பதில்
சொல்றீங்களே..? உங்களுக்குக் கோபமே வரலியே..”
மணி அண்ணன் அவனைப் பார்த்துச் சிரித்தார். கோபமா? அவருக்கு இன்னும் சிரிப்புதான் வந்தது. யார் மேல்
கோபப்பட முடியும்? ஏன் சிரிக்கிறார் என்று செல்வத்துக்குப் புரியவில்லை. தன் தலையெழுத்தை நினைத்துக்
கோபப்படலாம். தான் ஏதோ தப்பாகக் கேட்டுவிட்டோ மோ என்ற எண்ணம் சட்டென செல்வத்தைத் தாக்கியது. தன்
எதிர்காலம் தன் கையில் இல்லாமல் போனது பற்றிக் கோபப்படலாம். ஆனால், கோபம்தான் வரமாட்டேன்
என்கிறதே?
ரயில் வண்டி திருவான்மியூர் ஸ்டேஷனை அடைய, முண்டியடித்துக்கொண்டு கூட்டம் பக்கவாட்டில் ஓடிவந்தது. அவசரஅவசரமாக
ஜன்னல்வழியாக, கர்சீப், பை, சாப்பாட்டு கூடை என்று உள்ளே எறிந்து இடம்பிடிக்க முயற்சித்தார்கள்.
இறங்குபவர்களுக்கு இடம் தராமல், ஏற முயற்சித்துக்கொண்டிருந்தார்கள். அதில் யாரோ ஒருவர் கத்த, மற்றவர்,
எதிர்க்குரல் கொடுத்தார். இறங்கினபின்பும், அந்தக் கடுமையான பேச்சு தொடர்ந்தது. தொடர்ந்து இரண்டொரு கெட்ட
வார்த்தைகள்.
செல்வத்துக்குக் கூசியது. இடம் கிடைக்காமலா போய்விடும்? எதற்கு இந்தப் பரபரப்பு? அதைவிட, முந்திக்கொள்ள
வேண்டும் என்ற அவசரம் தரும் வார்த்தைகள் அவை. பக்கத்தில் எல்லாரும் திமுதிமுவென வந்து அமர்ந்துகொண்டார்கள்.
பிடித்த இடத்தில் அடுத்தவர் உட்கார்ந்தால், அவரை எழுப்ப ஒரு முறைப்பு. வார்த்தை தடிப்பு. எதையும் சட்டை
செய்யாதவர் போல், பிடித்த இடத்தில் உட்கார்ந்திருப்பவர் அப்படியே உட்கார்ந்திருந்தார்.
எல்லாம் ஒரு சில நிமிடங்கள்தான். அப்புறம், அவரவர் அவரவர் உலகங்களில். ஒருத்தர் பேப்பரில், மற்றவர் ஒரு
புத்தகத்தில். நிறைய பெண்கள், தங்கள் செல்பேசிகளோடு. நிறைய அலுப்பு. நிறைய கவலை. தூரத்தில் ஒளிர்ந்த
டைடல் பார்க்கின் கசக்கிப் பிழிந்த மிச்சங்கள்.
மணி, அந்த கட்டடத்துக்குள் போய்ப்பார்க்க வேண்டும் என்று நினைத்திருக்கிறான். ஒவ்வொரு முறை, இந்தப் பக்கம்
போகும்போதெல்லாம் மனது அடித்துக்கொள்ளும். பளபளவென கண்ணாடி பளிச்சிடும் கட்டடம். வாசல் தொடங்கி, அரண்
போல் பாதுகாவல். அதுவும் காலைவேளைகளில், கூட்டம் கூட்டமாக பெண்கள் மிடுக்குடன் நடந்து போவதைப் பார்ப்பதே
அழகு. படிப்பு தந்த மிடுக்கு. அறிவு தந்த வாழ்வு. முடிந்தால், அங்கே வேலை செய்யும் ஏதேனும் ஒரு பெண்ணைக்
காதலித்தாவது கல்யாணம் பண்ணிக்கொள்ளவேண்டும் என்று நினைத்துக்கொள்வான் மணி. மணி தன் பக்கத்தில் வந்தமர்ந்த
பெண்ணை பார்த்தான். தீவிரமாக செல்பேசியில் யாருக்கோ குறுஞ்செய்தி அனுப்பிக்கொண்டிருந்தாள்.
மணி அண்ணன் பதில் சொல்லவில்லையென்பது செல்வத்துக்கு உறுத்தலாக இருந்தது. வழக்கம்போல்,
அவசரப்பட்டுவிட்டோ மோ என்ற எண்ணம் வந்துத் தொலைத்தது. என்ன கேட்கவேண்டும், யாரைக் கேட்கவேண்டும், எப்படிக்
கேட்கவேண்டும் என்ற இங்கிதம் தனக்கு இன்னும் வரவில்லையென்பது செல்வத்துக்கு நன்றாகத் தெரிந்தது. ஒவ்வொரு
முறையும் இப்படி யாரையாவது தப்பாகக் கேட்டுவிடுவதும், அதற்குப்பின் வருந்துவதும் செல்வத்துக்கு வாடிக்கையாகவே
ஆகிவிட்டது.
பல சமயங்களில் திண்டாடுபவர் அப்பாதான். ஆனாலும் பொறுமையாக எடுத்துக்கொண்டார். இப்போது சென்னை
அனுப்பியது வரை, அவனது அதிகப்பிரசங்கித்தனத்தின் விளைவுகள்தான் எல்லாமே. காஞ்சிபுரத்திலேயே
படித்திருக்கலாம். சென்னை செல்வத்தின் விருப்பம். பத்தாவது முடித்தவுடனேயே அப்பா ஐடிஐ போய்ப் படிக்கச்
சொன்னார். மேலே வந்தது, செல்வத்தின் பிடிவாதம். பின்னர் இஞ்சினியரிங், அப்பா விருப்பம். வணிகம், அவன்
விருப்பம்.
ஒவ்வொரு மாற்றமும், பேச்சுக்களின் வலியில் உதித்தவைதாம். அப்பா விருப்பம் என்று எதையும் தான் இதுவரை
ஏற்றுக்கொண்டதில்லை என்பது ஏனோ செல்வத்துக்கு ஞாபகம் வந்தது. உண்மைதான். அவன் விருப்பத்தைத்தான் அவர்
நிறைவேற்றி வருகிறார். கோபமில்லை. வருத்தமில்லை. ஆனால், நெஞ்சில் வலி இருக்குமோ? இருக்கலாம்.
ஆனால், தன்னால் வேறெப்படியும் இருக்க முடியுமென்று தோன்றவில்லை. தனக்குப் பிடித்ததைச் செய்ய மட்டுமே முடியும்.
பிடிக்காது என்று தோன்றிவிட்டால், அருகே போவது கூட முடியாது.
மணி, பக்கத்துப் பெண்ணைப் பார்ப்பதை நிறுத்திக்கொண்டான். வலிந்து தன் பார்வையை வேறு பக்கம்
திருப்பிக்கொண்டான். அவரமாகத் தன் பைத்தியக்கார ஈடுபாட்டைத் துடைத்துப் போட்டான். எண்ணத்தில் ரீங்கரித்த
வாசனையைக் கலைக்க முயன்றான். நாளை காலை செல்வத்தை பஸ் ஏற்றிவிடவேண்டும். நல்லவேளையாக, மதிய ஷிப்ட்.
காலை கொஞ்சம் மெல்ல எழுந்து, அவனை வழியனுப்பலாம். அவசரமில்லை. காலை ஷிப்ட் வாரங்களில்தான்,
விடிகாலையே எழுந்து, குளித்து, பஸ்பிடித்து, சைட்டுக்கு வந்து சேரவேண்டும். உடம்பு ஓய்ந்து போய்விடும்.
பக்கத்து சீட் பெண், காலை மாற்றி உட்கார, மணி மேல் இடித்தது. அவன் அவசரமாய் நகர்ந்ததைச் சட்டென
உணர்ந்து, மன்னிப்பு கேட்டாள். ஒரு கணம்தான். அழகை மனசுக்குள் அனுமதிக்காமல் இருக்க முடியுமா? பின் ரொம்ப
நேரம் சிரமப்பட்டு, தன் எண்ணத்தை மணி திருப்பினான். கயிறை அறுத்துக்கொண்டு ஓடும் கன்றுக்குட்டியென மனம்
தறிகெடுவதை அவனால், தடுக்க முடியவில்லை. தலையை உதறிக்கொண்டான். செல்வத்தைப் பார்த்தான். செல்வம்
வெளியே ஓடும் கட்டடங்களையே பார்த்துக்கொண்டிருந்தான்.
“நான் ஏதாவது தப்பா கேட்டிருந்தா, தப்பா எடுத்துக்காதீங்கண்ணா…”
திருவல்லிக்கேணி ஸ்டேஷனைவிட்டு வெளியே வரும்போது, செல்வம் பேசினான். கனத்த இருட்டு. ஸ்டேஷனே வீடாய்
பலர் உருண்டுகொண்டிருந்தனர். அவ்வப்போது, ஒரு தீக்குச்சி, பொட்டு வெளிச்சம் பரப்பி, ஒரு பீடியைப் பற்ற
வைத்துக்கொண்டிருந்தது.
“சேச்சே.. என்ன தப்பு? ஒரு தப்புமில்லப்பா..”
மீண்டும் செல்வத்தின் கேள்வி, மணிக்கு ஞாபகம் வந்தது. ஞாபகம் வந்தது என்பதை விட, ஞாபகத்தின்
மேல்தளத்தில்தான் அது இருந்தது. சொல்லப் போனால், அதை அவன் மறக்கவே முயன்றான். மறக்க மறக்க, அது
மேலெழும்பிக்கொண்டேதான் இருந்தது. ஏன் கோபம் கொள்ள முடியவில்லை? ஏன் முடியாது? முடியுமே? செய்யலாம்.
கோபம் கொண்டால், விரைவில் வேறு வேலை தேடிக்கொள்ள வேண்டும். வேறு கட்டட நிறுவனத்தில் மீண்டும் ஒரு
டிராப்ட்ஸ்மேனாக, தன் பணியைத் தொடங்கவேண்டும். அங்கேயும் இதே கோபங்கள் தலையெடுக்கலாம். அப்போ என்ன
செய்வது? வேறொரு வேலை தேடிக்கொள்ள வேண்டுமா?
வேலைகள் என்ன கொட்டியா கிடக்கிறது? தெரியவில்லை. இருக்கலாம். தன் கண்ணுக்கு அத்தகைய வேலைகள்
தென்படாமல் இருக்கலாம். சென்னை வந்த இந்த நான்கைந்து ஆண்டுகளில் இது இரண்டாவது நிறுவனம். இதுவரை கோபம்
கொப்பளித்ததில்லை.
“கோபம் வந்தா, வாழ்க்கை நடத்த முடியாது செல்வம்.”
உண்மைதான். எல்லாரும் அப்பாவாக இருந்துவிடவா முடியும்? அவன் கோபம், பிடிவாதம் எல்லாவற்றையும்
பொறுத்துக்கொள்ள அப்பாவால் முடியும். மேலதிகாரிகள், சகவேலையாளர்கள் ஒப்புக்கொள்ள முடியுமா என்ன?
செல்வத்துக்கு தான் கேட்டது எவ்வளவு மடத்தனம் என்று தோன்றியது.
“பீச்சுக்குப் போய் உட்கார்ந்துட்டு போவோமா?”
மணி கேட்க, செல்வம் தலையாட்டினான். கடற்கரை சாலையை கடந்து எதிர்ப்பக்கம் வந்து சேர்ந்தார்கள். கூட்டம்
அவ்வளவாக இல்லை. வேலை நாள். விடுமுறைகளில் கூட்டம் மிகுந்திருக்கலாம். சென்னை வந்த முதல்நாளே மணி அண்ணன்
கடற்கரைக்குக் கூட்டி வந்தார். இந்த முனையில் அந்த முனை வரை நடந்துவிட்டு வந்தார்கள். அப்புறம், தண்ணீர் அருகே
போய் நின்றுவிட்டும் வந்தார்கள்.
“கோபப்படணும். கோபப்படலாம். எப்போ கோபப்படலாம்னா, நமக்குத் தகுதி இருக்கும்போது
கோபப்படலாம். நம்ம தகுதி அடுத்தவனுக்குத் தெரியும்போது கோபப்படலாம். நம்ம பேச்சு எடுபடும்னா
கோபப்படலாம்.”
அண்ணன், தான் கேட்ட கேள்வியை இன்னும் மறக்கவில்லை. அதுதான் அவர் மனத்தில் அப்போதில் இருந்து வளைய
வந்துகொண்டிருக்கிறது. முட்டி முட்டி மோதிக்கொண்டிருக்கிறது. மணலில் கால் செருப்பைப் போட்டுவிட்டு
உட்கார்ந்துகொண்டார்கள்.
“என்னால கோபப்பட முடியாது. நான் கோபப்பட்டா, அடுத்த வேலைய தேடிக்க வேண்டியதுதான். அடுத்த வேலை
கிடைக்கும்னு நம்பிக்கை இருந்தா கோபப்படலாம். எனக்கு அது இல்ல.”
செல்வம், மணி அண்ணனின் கண்களையே பார்த்தான். அதில் தெரிந்த சுயவெறுப்பை அவனால் உணர முடிந்தது. பேச
முடியவில்லை.
ஒவ்வொரு காலகட்டத்திலேயேயும் நான் அடுத்தவங்களோட தயவுலதான் வாழ்ந்திருக்கேன். அவங்களோட எண்ணத்தை
புரிஞ்சிக்கிட்டுதான் எல்லாம் செஞ்சிருக்கேன். அப்பா சொன்னபடி படிப்பு. மாமா வாங்கிக்கொடுத்த வேல.
யாரையும் நான் கேள்வி கேக்கல. சொல்றதைச் சொஞ்சேன். எனக்குன்னு நான் எதையும் யோசிச்சதில்லை. அதனாலகூட
கோபம் வராமலிருக்கலாம்.
“அண்ணா, நீங்க அதை மறந்துடுங்கண்ணா, எதுக்கு அதையே யோசிக்கறீங்க? நான் ஏதோ வாய் தவறி
கேட்டுட்டேன்.”
செல்வத்துக்கு உண்மையிலேயே வருத்தமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் இந்த வருத்தம் அவனை
கஷ்டப்படுத்தியிருக்கிறது. ஏதோ ஒரு வேகத்தில் கேள்வி கேட்டுவிட, அடுத்தவருக்கு அது ஏற்படுத்தும் வலியை அவன்
உணரும்போது, உண்மையிலேயே சிரமப்படுவான். மணி அண்ணன் இன்னும் வார்த்தைகளைக் கூட்டிக்கொண்டிருப்பது
தெரிந்தது.
“இல்ல செல்வம். நீ கேட்டது சரிதான். நீ அப்படி இருக்கக்கூடாது. இருக்காதேங்கறதுக்காகத்தான் சொல்ல
வந்தேன். உங்கப்பா என் கிட்ட பேசும்போது, அவன் மெட்ராஸ்ல, பி.காம். படிக்கணும்னு பிடிவாதமா இருக்கான்பா,
சொன்னா கேக்க மாட்டேங்றான், என்ன செய்யறதுன்னு தெரியல. அனுப்பி வெக்கறேன். ஃபார்ம்மெல்லாம்
வாங்கிக்கொடுப்பான்னார். எனக்கு அப்பவே உன்னைப் பிடிச்சுப் போச்சு. எனக்கு உன் அப்பாவோட நிலைமை
தெரியும். ஆனாலும், உன் பிடிவாதம் சரின்னு தோணிச்சு. அப்படித்தான் இருக்கணும். நாம எங்கே போகணுங்கற
தெளிவு இருக்கணும். என்னவா ஆகணுங்கற தெளிவு இருக்கணும். அதை அடைய பிடிவாதம் வேணும். எனக்கு அது எதுவுமே
இல்லாம போச்சு. அதான் இன்னிக்கு எல்லார்கிட்டேயும் திட்டு வாங்கிக்கிட்டு நிக்கறேன்.”
செல்வம் மணலை அலைந்துகொண்டிருந்தான். தெரியவில்லை. தன் பிடிவாதத்துக்கு இவ்வளவுதூரம் பொருள் இருக்கும் என்று
அவன் நம்பவில்லை. கனவு மட்டும்தான் அவனைத் துரத்திக்கொண்டிருந்தது. கனவுகளை இழந்தவர்களுக்கு கனவோடு
வாழ்பவர்களைப் பார்ப்பது பெரும்கனவு. மணி, அப்புறம் ரொம்ப நேரம் பேசவில்லை. தூரத்தில் அடுத்தொரு
ரயில்வண்டி தடதடவெனப் போய்க்கொண்டிருந்தது தெரிந்தது.
செல்வம், மணி அண்ணனைப் பார்த்தான். அவர் கிளம்பலாம் என்பதுபோல், மணலைத் தட்டிக்கொண்டு எழுந்தார்.
*******
Venkatesh R
B5, 41 Sunkuwar Street, Triplicane, Chennai 5
Tel: 28444401 / 98410 53881

கஸ்தூரிபாய் ரயில்வே ஸ்டேஷன் இருட்டில் இதமாக இருந்தது. எதிர்ப்புறம் இரண்டொரு விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. யாரோ பேசிக்கொண்டிருந்தார்கள். ஸ்டேஷன் கட்டட வேலை செய்பவர்களாக இருக்கவேண்டும்.

அவர்கள் நின்ற பக்கத்தில், தள்ளி தள்ளி இருவர் மூவராக நின்றுகொண்டிருந்தார்கள். மேலே பளிச்சென்ற ஆகாயம். அமாவாசை முடிந்து நாளாவது நாள். சின்னதாய் நிலா துளிர்விட்டுக்கொண்டிருந்தது. ஸ்டேஷன் நல்ல உயரத்தில் இருந்தது.

சாலை விளக்குகள், வீட்டின் வெளிச்சத் தெறிப்புகள் என்று எதுவும் வானத்தை மறைக்கவில்லை. எல்லாம் கீழே எங்கோ இருப்பது போல் இருந்தது. ஸ்டேஷன் பக்கத்தில் இருந்த சாலையில் இருந்து அவ்வப்போது ஏதேனும் அவசர வாகனத்தில் அவசர அலறல் தவிர, அமைதி. துலக்கி வைத்த அமைதி. செல்வத்துக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. மணி அண்ணனும் பேசவில்லை. அவரும் இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருப்பது போல் தான் தோன்றியது. கையில் சின்ன பை. மதியச் சாப்பாட்டைக் கட்டி எடுத்துவந்திருந்தார்கள்.

முழுக்கை சட்டையை இரண்டு மடிப்பு மடித்துவிட்டிருந்தார் அண்ணன். கைப்பையை முன்னால் பிடித்துக்கொண்டு மேலே தெளித்திருந்த நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். செல்வமும் பார்த்தான். வியப்பாகத்தான் இருந்தது.

எல்லாமே அதே பிரகாசத்தோடு, அதே குளுமையோடு. ஊரில் பார்த்த அதே குளுமை, பிரகாசம். சட்டெனத் தான் செய்யாறு போய்விட்டோ மோ என்று தோன்றியது செல்வதுக்கு.

நாளை கிளம்பியாக வேண்டும். நான்கு நாள்கள் அண்ணனோடு போனது தெரியவே இல்லை. ஒவ்வொரு கணமும் அண்ணனின் பாதுகாப்பும் அரவணைப்பும்தான் கண்களில் தெரிந்தது. இத்தனைக்கும் ஊரில் அண்ணனோடு பழகியது மிகச் சில சமயங்களில்தான். பேசியது அதைவிடக் குறைவு. அப்பாவின் நண்பர் மகன். வயதில் மூத்தவர். அவர் வளைய வந்த செட்டே வேறு. அவர் கல்லூரி போன நாள்களில், செல்வம் பள்ளியையே தாண்டவில்லை.

அப்பா ஃபோன் பண்ணிக் கேட்டுக்கொண்டார் என்றுதான் இத்தனை பாதுகாப்பு, அரவணைப்பு. தாம்பரத்தில் வந்து இறங்கியது முதல், ஒவ்வொரு கல்லூரியாகப் போய் அட்மிஷன் ஃபார்ம் வாங்குவது, அதற்குத் தேவையான டிடி எடுப்பது, போட்டோ க்கள் ஒட்டி, ஃபார்ம்மை நிறைவு செய்வது என்று அண்ணன் ஓடாத ஓட்டமில்லை. இன்னும் +2 தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இரண்டொரு வாரத்தில் வந்துவிடும் என்றிருக்கிறார்கள்.

அதற்கு முன்னரே அண்ணனே பார்த்துச் சொல்லிவிடுவதாகச் சொல்லியிருக்கிறார். தெரிந்தவர்கள் மூலமாக எண்ணைக் கொடுத்தனுப்பி, வாங்கியிருக்கும் மதிப்பெண்களைத் தெரிந்துகொள்ளலாம் என்றார் அண்ணன். செல்வத்துக்கும் ஆசையாகத்தான் இருந்தது. எப்படியும் நல்ல மதிப்பெண் வந்துவிடும் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது. அந்த நம்பிக்கைதான் சென்னை வரை அவனைத் துரத்தியதும்.

முதலில் ஒரு பி.காம். அப்புறம், தொடர்ந்து எம்.காம். அப்புறம் சி.ஏ. எங்கேயாவது நல்ல ஆடிட்டரிடம் சேர்ந்துவிட்டால் போதும். சி.ஏ.வை ஒரே வேகத்தில் முடித்துவிட்டால், கண்டேன் கண்டேன் என்று கொத்திக்கொண்டு போகமாட்டார்களா என்ன?. அவன் குடும்பத்தில் யாருமே படிக்காதப் படிப்பாக இருக்கும். அவன் மட்டுமே அறிந்த துறையாக அது இருக்கும். அந்த வேகமும் ஆசையும்தான் இவ்வளவு தூரம் அவனைத் துரத்தியது.

தூரத்தில் வெளிச்சக் குழல் தெரிய, அண்ணன், திரும்பிப் பார்த்தார்.

“வண்டி வருது.. இது திருவான்மியூர் ஸ்டேஷன் போயிட்டுத் திரும்பி வரும்.”

செல்வமும் பார்த்தான். கண்களைக் கூசும் ஒளி வெள்ளம், மெல்ல மெல்ல நெருங்கிக்கொண்டிருந்தது. ஸ்டேஷனின் பிளாட்பாரம் முழுவதும் இப்போது ஒளியில் மிதந்தது. தூர தூர நின்றுகொண்டிருந்த சிலர் முன்னேறி, வண்டியருகே வரத்தொடங்கினர். வண்டி சின்னதாக ஒரு அலுங்கல் காட்டி நிற்க,

“ஏறிப்போமா? திருவான்மியூர் போயிட்டு திரும்பி வருவோம்?”

சரியென்று செல்வம் தலையாட்ட, சட்டென ஒரு பெட்டியில் ஏறிக்கொண்டனர். வானம் தொலைந்துபோக, அழுதுவடியும் விளக்குகள். ஜன்னலோரமாக போய் உட்கார்ந்துகொண்டார்கள். காற்றின் வேகம், கேசத்தைக் கோதியபடி இருந்தது.

கீழே சாலையில் வாகனங்கள் போட்டியிடுவது போல் நகர்ந்தன.

“டெய்லி இந்த வண்டியிலதான் வருவீங்களாண்ணா?”

“காலையில ஷிப்டுன்னா, ஆறுலேருந்து ரெண்டு. அப்போ, காலையில பஸ் புடுச்சி வந்துடுவேன். மத்தியானம் டிரெயின் ஏறிடுவேன். மத்தியானம் ரெண்டுலேருந்து ஆறுன்னா, மத்தியானமும் சாயங்காலமும் டிரெயின்லேயே வந்துடுவேன். சீஸன் வெச்சிருக்கேன. பயங்கர சீப்பு.”

இந்த வாரம் மதிய ஷிப்டு. செல்வம் வந்ததால், நடுவே ஒருநாள் விட்டு ஒருநாள் விடுமுறை எடுத்துவிட்டார். இன்று நேராக கட்டடம் கட்டும் சைட்டுக்கே வந்துவிடச் சொல்லியிருந்தார். விட்டுப் போன, இரண்டு கல்லூரிகளில் அன்று அப்ளிகேஷன்களை வாங்கிக்கொண்டு, நேரே அவர் சொன்ன, அடையாறு பக்கம் சைட்டுக்கே செல்வம் வந்து சேர்ந்தான்.

பெரிய இடம். எண்ணற்ற அடுக்ககங்கள் வரவிருந்தன. அண்ணன்தான் டிராப்ட்ஸ்மேன். அவரைப் போல், இன்னும் இரண்டு டிராப்ட்ஸ்மேன்கள் இருந்தார்கள்.  இரவும் பகலுமாக வேலை நடந்துகொண்டிருந்தது. அலுவலக அறை மாதிரி இருந்த இடத்திலேயே எண்ணற்ற சிமிண்ட் மூட்டைகள் அடுக்கப்பட்டிருந்தன. வெளியே சிமிண்ட்டும் மணலும் கலந்து ஒருவித வாசனையை ஏற்படுத்தியிருந்தன.

செல்வம் ஓரமக உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்தான். நடு நடுவே இஞ்சினியர், அவர் இவர் என்று பலர் வந்து பேசிக்கொண்டே இருந்தார்கள். அண்ணன் எல்லாருக்கும் பதில் சொல்லிக்கொண்டிருந்தார். கோபம் வரவேண்டிய இடத்திலும் அமைதியே கோலோச்சியது. அதைப் பணிவு என்று சொல்வதை விட, பயம் என்று சொல்லலாம்.

ஏன் பயம்? இந்த வேலை இல்லையென்றால், அடுத்தொன்று. எதற்கு அப்படியாவது கும்மிடு போடவேண்டும்? தெரியவில்லை. செல்வத்துக்கு நிறைய தெரியவில்லைகள் இருந்தன. அப்பா, அம்மா தொடங்கி, அவன் கேட்க நினைத்துக் கேட்க தவிர்த்த எத்தனையோ தெரியவில்லைகள் மிச்சமிருந்தன. அவர்களாலும் அதற்குப் பதில் சொல்ல முடியாதோ என்ற எண்ணமே பல கேள்விகளைக் கேட்கத் தவிர்த்திருக்கிறான். ஆனால், அக்கேள்விகள் அவனுள் ஏற்படுத்தும் இம்சை தாங்க முடியாதது. நாக்குநுனி வரை கேள்விகள் துள்ளி ஓடி வரும். வேறெதோ மனத்தில் சட்டென உறைக்க,கேள்வி தவிர்க்கப்படும். மனத்தின் ஆதங்கம் மட்டும் வடுவாய் மிச்சமிருக்கும்.

“அண்ணே, உங்களை மத்தியானமே கேக்கணும்னு நினைச்சேன்..”

சட்டென நெஞ்சில் நின்றது, வாய் வரை வந்துவிட்டது. இனி நிற்குமோ? மணி அண்ணன், செல்வத்தைத் திரும்பிப் பார்த்தார். பூனை முடி மாதிரி மீசை. இன்னும் கருக்கவில்லை. மூங்கில்கம்பு மாதிரி தேகம். பள்ளிக்கு பரபரவென ஓடிய காலம்தொட்டு, அவனை மணிக்குத் தெரியும். இன்று, வளர்ந்து, மேலே படிக்கவே வந்துவிட்டான்.

ஆச்சரியம்தான். வளர்ச்சி என்பதை யாரால் தடுக்க முடியும். என்ன கேள்வி என்பது அண்ணன், முகபாவம் இருந்தது.

“யார்யாரோ வந்து உங்ககிட்ட மெரட்டறாங்க, அதிகாரம் பண்றாங்க? நீங்க சும்மா பதில் சொல்றீங்களே..? உங்களுக்குக் கோபமே வரலியே..”

மணி அண்ணன் அவனைப் பார்த்துச் சிரித்தார். கோபமா? அவருக்கு இன்னும் சிரிப்புதான் வந்தது. யார் மேல் கோபப்பட முடியும்? ஏன் சிரிக்கிறார் என்று செல்வத்துக்குப் புரியவில்லை. தன் தலையெழுத்தை நினைத்துக் கோபப்படலாம். தான் ஏதோ தப்பாகக் கேட்டுவிட்டோ மோ என்ற எண்ணம் சட்டென செல்வத்தைத் தாக்கியது. தன் எதிர்காலம் தன் கையில் இல்லாமல் போனது பற்றிக் கோபப்படலாம். ஆனால், கோபம்தான் வரமாட்டேன் என்கிறதே?

ரயில் வண்டி திருவான்மியூர் ஸ்டேஷனை அடைய, முண்டியடித்துக்கொண்டு கூட்டம் பக்கவாட்டில் ஓடிவந்தது. அவசரஅவசரமாக ஜன்னல்வழியாக, கர்சீப், பை, சாப்பாட்டு கூடை என்று உள்ளே எறிந்து இடம்பிடிக்க முயற்சித்தார்கள்.

இறங்குபவர்களுக்கு இடம் தராமல், ஏற முயற்சித்துக்கொண்டிருந்தார்கள். அதில் யாரோ ஒருவர் கத்த, மற்றவர், எதிர்க்குரல் கொடுத்தார். இறங்கினபின்பும், அந்தக் கடுமையான பேச்சு தொடர்ந்தது. தொடர்ந்து இரண்டொரு கெட்ட வார்த்தைகள்.

செல்வத்துக்குக் கூசியது. இடம் கிடைக்காமலா போய்விடும்? எதற்கு இந்தப் பரபரப்பு? அதைவிட, முந்திக்கொள்ள வேண்டும் என்ற அவசரம் தரும் வார்த்தைகள் அவை. பக்கத்தில் எல்லாரும் திமுதிமுவென வந்து அமர்ந்துகொண்டார்கள்.

பிடித்த இடத்தில் அடுத்தவர் உட்கார்ந்தால், அவரை எழுப்ப ஒரு முறைப்பு. வார்த்தை தடிப்பு. எதையும் சட்டை செய்யாதவர் போல், பிடித்த இடத்தில் உட்கார்ந்திருப்பவர் அப்படியே உட்கார்ந்திருந்தார்.

எல்லாம் ஒரு சில நிமிடங்கள்தான். அப்புறம், அவரவர் அவரவர் உலகங்களில். ஒருத்தர் பேப்பரில், மற்றவர் ஒரு புத்தகத்தில். நிறைய பெண்கள், தங்கள் செல்பேசிகளோடு. நிறைய அலுப்பு. நிறைய கவலை. தூரத்தில் ஒளிர்ந்த டைடல் பார்க்கின் கசக்கிப் பிழிந்த மிச்சங்கள்.

மணி, அந்த கட்டடத்துக்குள் போய்ப்பார்க்க வேண்டும் என்று நினைத்திருக்கிறான். ஒவ்வொரு முறை, இந்தப் பக்கம் போகும்போதெல்லாம் மனது அடித்துக்கொள்ளும். பளபளவென கண்ணாடி பளிச்சிடும் கட்டடம். வாசல் தொடங்கி, அரண் போல் பாதுகாவல். அதுவும் காலைவேளைகளில், கூட்டம் கூட்டமாக பெண்கள் மிடுக்குடன் நடந்து போவதைப் பார்ப்பதே அழகு. படிப்பு தந்த மிடுக்கு. அறிவு தந்த வாழ்வு. முடிந்தால், அங்கே வேலை செய்யும் ஏதேனும் ஒரு பெண்ணைக் காதலித்தாவது கல்யாணம் பண்ணிக்கொள்ளவேண்டும் என்று நினைத்துக்கொள்வான் மணி. மணி தன் பக்கத்தில் வந்தமர்ந்த பெண்ணை பார்த்தான். தீவிரமாக செல்பேசியில் யாருக்கோ குறுஞ்செய்தி அனுப்பிக்கொண்டிருந்தாள்.

மணி அண்ணன் பதில் சொல்லவில்லையென்பது செல்வத்துக்கு உறுத்தலாக இருந்தது. வழக்கம்போல், அவசரப்பட்டுவிட்டோ மோ என்ற எண்ணம் வந்துத் தொலைத்தது. என்ன கேட்கவேண்டும், யாரைக் கேட்கவேண்டும், எப்படிக் கேட்கவேண்டும் என்ற இங்கிதம் தனக்கு இன்னும் வரவில்லையென்பது செல்வத்துக்கு நன்றாகத் தெரிந்தது. ஒவ்வொரு முறையும் இப்படி யாரையாவது தப்பாகக் கேட்டுவிடுவதும், அதற்குப்பின் வருந்துவதும் செல்வத்துக்கு வாடிக்கையாகவே ஆகிவிட்டது.

பல சமயங்களில் திண்டாடுபவர் அப்பாதான். ஆனாலும் பொறுமையாக எடுத்துக்கொண்டார். இப்போது சென்னை அனுப்பியது வரை, அவனது அதிகப்பிரசங்கித்தனத்தின் விளைவுகள்தான் எல்லாமே. காஞ்சிபுரத்திலேயே படித்திருக்கலாம். சென்னை செல்வத்தின் விருப்பம். பத்தாவது முடித்தவுடனேயே அப்பா ஐடிஐ போய்ப் படிக்கச் சொன்னார். மேலே வந்தது, செல்வத்தின் பிடிவாதம். பின்னர் இஞ்சினியரிங், அப்பா விருப்பம். வணிகம், அவன் விருப்பம்.

ஒவ்வொரு மாற்றமும், பேச்சுக்களின் வலியில் உதித்தவைதாம். அப்பா விருப்பம் என்று எதையும் தான் இதுவரை ஏற்றுக்கொண்டதில்லை என்பது ஏனோ செல்வத்துக்கு ஞாபகம் வந்தது. உண்மைதான். அவன் விருப்பத்தைத்தான் அவர் நிறைவேற்றி வருகிறார். கோபமில்லை. வருத்தமில்லை. ஆனால், நெஞ்சில் வலி இருக்குமோ? இருக்கலாம்.

ஆனால், தன்னால் வேறெப்படியும் இருக்க முடியுமென்று தோன்றவில்லை. தனக்குப் பிடித்ததைச் செய்ய மட்டுமே முடியும். பிடிக்காது என்று தோன்றிவிட்டால், அருகே போவது கூட முடியாது.

மணி, பக்கத்துப் பெண்ணைப் பார்ப்பதை நிறுத்திக்கொண்டான். வலிந்து தன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டான். அவரமாகத் தன் பைத்தியக்கார ஈடுபாட்டைத் துடைத்துப் போட்டான். எண்ணத்தில் ரீங்கரித்த வாசனையைக் கலைக்க முயன்றான். நாளை காலை செல்வத்தை பஸ் ஏற்றிவிடவேண்டும். நல்லவேளையாக, மதிய ஷிப்ட்.

காலை கொஞ்சம் மெல்ல எழுந்து, அவனை வழியனுப்பலாம். அவசரமில்லை. காலை ஷிப்ட் வாரங்களில்தான், விடிகாலையே எழுந்து, குளித்து, பஸ்பிடித்து, சைட்டுக்கு வந்து சேரவேண்டும். உடம்பு ஓய்ந்து போய்விடும்.

பக்கத்து சீட் பெண், காலை மாற்றி உட்கார, மணி மேல் இடித்தது. அவன் அவசரமாய் நகர்ந்ததைச் சட்டென உணர்ந்து, மன்னிப்பு கேட்டாள். ஒரு கணம்தான். அழகை மனசுக்குள் அனுமதிக்காமல் இருக்க முடியுமா? பின் ரொம்ப நேரம் சிரமப்பட்டு, தன் எண்ணத்தை மணி திருப்பினான். கயிறை அறுத்துக்கொண்டு ஓடும் கன்றுக்குட்டியென மனம் தறிகெடுவதை அவனால், தடுக்க முடியவில்லை. தலையை உதறிக்கொண்டான். செல்வத்தைப் பார்த்தான். செல்வம் வெளியே ஓடும் கட்டடங்களையே பார்த்துக்கொண்டிருந்தான்.

“நான் ஏதாவது தப்பா கேட்டிருந்தா, தப்பா எடுத்துக்காதீங்கண்ணா…”

திருவல்லிக்கேணி ஸ்டேஷனைவிட்டு வெளியே வரும்போது, செல்வம் பேசினான். கனத்த இருட்டு. ஸ்டேஷனே வீடாய் பலர் உருண்டுகொண்டிருந்தனர். அவ்வப்போது, ஒரு தீக்குச்சி, பொட்டு வெளிச்சம் பரப்பி, ஒரு பீடியைப் பற்ற வைத்துக்கொண்டிருந்தது.

“சேச்சே.. என்ன தப்பு? ஒரு தப்புமில்லப்பா..”

மீண்டும் செல்வத்தின் கேள்வி, மணிக்கு ஞாபகம் வந்தது. ஞாபகம் வந்தது என்பதை விட, ஞாபகத்தின் மேல்தளத்தில்தான் அது இருந்தது. சொல்லப் போனால், அதை அவன் மறக்கவே முயன்றான். மறக்க மறக்க, அது மேலெழும்பிக்கொண்டேதான் இருந்தது. ஏன் கோபம் கொள்ள முடியவில்லை? ஏன் முடியாது? முடியுமே? செய்யலாம்.

கோபம் கொண்டால், விரைவில் வேறு வேலை தேடிக்கொள்ள வேண்டும். வேறு கட்டட நிறுவனத்தில் மீண்டும் ஒரு டிராப்ட்ஸ்மேனாக, தன் பணியைத் தொடங்கவேண்டும். அங்கேயும் இதே கோபங்கள் தலையெடுக்கலாம். அப்போ என்ன செய்வது? வேறொரு வேலை தேடிக்கொள்ள வேண்டுமா?

வேலைகள் என்ன கொட்டியா கிடக்கிறது? தெரியவில்லை. இருக்கலாம். தன் கண்ணுக்கு அத்தகைய வேலைகள் தென்படாமல் இருக்கலாம். சென்னை வந்த இந்த நான்கைந்து ஆண்டுகளில் இது இரண்டாவது நிறுவனம். இதுவரை கோபம் கொப்பளித்ததில்லை.

“கோபம் வந்தா, வாழ்க்கை நடத்த முடியாது செல்வம்.”

உண்மைதான். எல்லாரும் அப்பாவாக இருந்துவிடவா முடியும்? அவன் கோபம், பிடிவாதம் எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ள அப்பாவால் முடியும். மேலதிகாரிகள், சகவேலையாளர்கள் ஒப்புக்கொள்ள முடியுமா என்ன?

செல்வத்துக்கு தான் கேட்டது எவ்வளவு மடத்தனம் என்று தோன்றியது.

“பீச்சுக்குப் போய் உட்கார்ந்துட்டு போவோமா?”

மணி கேட்க, செல்வம் தலையாட்டினான். கடற்கரை சாலையை கடந்து எதிர்ப்பக்கம் வந்து சேர்ந்தார்கள். கூட்டம் அவ்வளவாக இல்லை. வேலை நாள். விடுமுறைகளில் கூட்டம் மிகுந்திருக்கலாம். சென்னை வந்த முதல்நாளே மணி அண்ணன் கடற்கரைக்குக் கூட்டி வந்தார். இந்த முனையில் அந்த முனை வரை நடந்துவிட்டு வந்தார்கள். அப்புறம், தண்ணீர் அருகே போய் நின்றுவிட்டும் வந்தார்கள்.

“கோபப்படணும். கோபப்படலாம். எப்போ கோபப்படலாம்னா, நமக்குத் தகுதி இருக்கும்போது கோபப்படலாம். நம்ம தகுதி அடுத்தவனுக்குத் தெரியும்போது கோபப்படலாம். நம்ம பேச்சு எடுபடும்னா கோபப்படலாம்.”

அண்ணன், தான் கேட்ட கேள்வியை இன்னும் மறக்கவில்லை. அதுதான் அவர் மனத்தில் அப்போதில் இருந்து வளைய வந்துகொண்டிருக்கிறது. முட்டி முட்டி மோதிக்கொண்டிருக்கிறது. மணலில் கால் செருப்பைப் போட்டுவிட்டு உட்கார்ந்துகொண்டார்கள்.

“என்னால கோபப்பட முடியாது. நான் கோபப்பட்டா, அடுத்த வேலைய தேடிக்க வேண்டியதுதான். அடுத்த வேலை கிடைக்கும்னு நம்பிக்கை இருந்தா கோபப்படலாம். எனக்கு அது இல்ல.”

செல்வம், மணி அண்ணனின் கண்களையே பார்த்தான். அதில் தெரிந்த சுயவெறுப்பை அவனால் உணர முடிந்தது. பேச முடியவில்லை.

“ஒவ்வொரு காலகட்டத்திலேயேயும் நான் அடுத்தவங்களோட தயவுலதான் வாழ்ந்திருக்கேன். அவங்களோட எண்ணத்தை புரிஞ்சிக்கிட்டுதான் எல்லாம் செஞ்சிருக்கேன். அப்பா சொன்னபடி படிப்பு. மாமா வாங்கிக்கொடுத்த வேல.

யாரையும் நான் கேள்வி கேக்கல. சொல்றதைச் சொஞ்சேன். எனக்குன்னு நான் எதையும் யோசிச்சதில்லை. அதனாலகூட கோபம் வராமலிருக்கலாம்.”

“அண்ணா, நீங்க அதை மறந்துடுங்கண்ணா, எதுக்கு அதையே யோசிக்கறீங்க? நான் ஏதோ வாய் தவறி கேட்டுட்டேன்.”

செல்வத்துக்கு உண்மையிலேயே வருத்தமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் இந்த வருத்தம் அவனை கஷ்டப்படுத்தியிருக்கிறது. ஏதோ ஒரு வேகத்தில் கேள்வி கேட்டுவிட, அடுத்தவருக்கு அது ஏற்படுத்தும் வலியை அவன் உணரும்போது, உண்மையிலேயே சிரமப்படுவான். மணி அண்ணன் இன்னும் வார்த்தைகளைக் கூட்டிக்கொண்டிருப்பது தெரிந்தது.

“இல்ல செல்வம். நீ கேட்டது சரிதான். நீ அப்படி இருக்கக்கூடாது. இருக்காதேங்கறதுக்காகத்தான் சொல்ல வந்தேன். உங்கப்பா என் கிட்ட பேசும்போது, அவன் மெட்ராஸ்ல, பி.காம். படிக்கணும்னு பிடிவாதமா இருக்கான்பா, சொன்னா கேக்க மாட்டேங்றான், என்ன செய்யறதுன்னு தெரியல. அனுப்பி வெக்கறேன். ஃபார்ம்மெல்லாம் வாங்கிக்கொடுப்பான்னார். எனக்கு அப்பவே உன்னைப் பிடிச்சுப் போச்சு. எனக்கு உன் அப்பாவோட நிலைமை தெரியும். ஆனாலும், உன் பிடிவாதம் சரின்னு தோணிச்சு. அப்படித்தான் இருக்கணும். நாம எங்கே போகணுங்கற தெளிவு இருக்கணும். என்னவா ஆகணுங்கற தெளிவு இருக்கணும். அதை அடைய பிடிவாதம் வேணும். எனக்கு அது எதுவுமே இல்லாம போச்சு. அதான் இன்னிக்கு எல்லார்கிட்டேயும் திட்டு வாங்கிக்கிட்டு நிக்கறேன்.”

செல்வம் மணலை அலைந்துகொண்டிருந்தான். தெரியவில்லை. தன் பிடிவாதத்துக்கு இவ்வளவுதூரம் பொருள் இருக்கும் என்று அவன் நம்பவில்லை. கனவு மட்டும்தான் அவனைத் துரத்திக்கொண்டிருந்தது. கனவுகளை இழந்தவர்களுக்கு கனவோடு வாழ்பவர்களைப் பார்ப்பது பெரும்கனவு. மணி, அப்புறம் ரொம்ப நேரம் பேசவில்லை. தூரத்தில் அடுத்தொரு

ரயில்வண்டி தடதடவெனப் போய்க்கொண்டிருந்தது தெரிந்தது.

செல்வம், மணி அண்ணனைப் பார்த்தான். அவர் கிளம்பலாம் என்பதுபோல், மணலைத் தட்டிக்கொண்டு எழுந்தார்.