நாவல் அரசி ரமணி சந்திரனின் ஒரு சில நாவல்களைப் படித்திருக்கிறேன். என்ன எழுதுகிறார், எப்படி எழுதுகிறார் என்று தெரிந்துகொள்ளவதற்காகப் படித்தது. அவ்வப்போது வார இதழ்களில் வரும் தொடர்கதைகளின் அத்தியாயங்களைப் படித்திருக்கிறேன். எழுத்தாளர் லட்சுமி எழுதிய காலத்தில் இருந்து ‘ஒரு பெண் துன்பப்படுகிறாள்’ என்பதுதான் எவர்கிரீன் சப்ஜெக்ட். ரமணி சந்திரனும் அதைத்தான் எழுதுகிறார். தனி மொழிக்கான முயற்சியோ, எழுத்துக்கான செறிவோ, இன்னபிற அழகுகளோ இல்லாத தெளிவான எழுத்து. உரையாடலில் இயல்புத்தன்மை குறைவு. ஆனால், அவர்தான் இன்றும் தமிழ் பத்திரிகை உலகில் சூப்பர் ஸ்டார். வாசகியரின் பேராதரவைப் பெற்றவர். அவர் தொடர்கதையை வெளியிட்டால், பத்து பதினைந்து ஆயிரம் பிரதிகள் கூடுதலாக விற்பனை ஆகிறது என்கிறார்கள் பத்திரிகையுலக நண்பர்கள்.
சராசரித் தமிழ் பெண்ணின், ஆணின் எண்ணங்களோடு அவர் எழுத்துக்கள் ஒத்துப்போகின்றன. அவர்கள் அன்றாடம் சந்திக்கும் விஷயங்களைத்தான் இவர் தொடர்கதைகளாக எழுதி வருகிறார். அந்தச் சராசரி மனிதனின் தேவைகளை இவரது எழுத்துக்கள் நிறைவு செய்கின்றன. இந்தச் சராசரி மனிதர்களின் தேவைகள்தான் இன்று மிகப் பெரும் சந்தையை இந்தியாவில் உருவாக்கியிருக்கிறது.
இந்தியா போன்ற மிகப் பெரிய மக்கள்தொகை கொண்ட நாட்டில், 50% – 65% மதிப்பெண்கள் வாங்கக்கூடிய சராசரிகள்தான் அதிகம். நம் பத்திரிகைகளுக்கும் இன்னபிற சமூக அங்கீகாரங்களுக்கும் 90 – 95%க்கு மேல் வாங்குபவர்கள்தான் கண்ணில் படுகின்றனர். மொத்த ஜனத்தொகையில் இவர்கள் 5% இருந்தால் அதிகம். ஆனால், மீதமுள்ள 95 சதவிகிதத்தினர் இந்தச் சராசரிகள். இந்தியா என்று மட்டுமில்லை, எந்தப் பெரிய ஜனத்தொகை அதிகமுள்ள நாட்டிலும் இந்த சராசரிகள் தீர்மானிப்பதுதான் தீர்மானம். எடுத்துவைப்பதுதான் பொதுக் கருத்துகள். சொல்வதுதான் வேதவாக்கு.
ஏன் இவர்களை ரசனை ரீதியாக, நுண்ணுணர்வு ரீதியாக, கருத்துகள் ரீதியாக, அரசியல் ரீதியாக முன்னேற்றக் கூடாது என்ற கேள்வி அவ்வப்போது எழும். வாழ்க்கைத் தரம், சுற்றுச்சூழல், இன்னபிற காரணிகளால், இவர்கள் பல்வேறு அடுக்குகளில் நிற்கிறார்கள். ஒரு அடுக்கு அடுத்த அடுக்கைவிட உயர்ந்தது என்றோ தாழ்ந்தது என்றோ பேசுவதில் பொருளில்லை. அந்ததந்த அடுக்கில் இருப்பவர்களுக்கு, அவர்களுடைய உலகமே உலகம். வேறு உலகங்கள் இருப்பதே அவர்களுக்குத் தெரியாது. வேறு விழுமியங்கள் இருப்பதே அவர்களுக்குப் புரியாது. வேறு வகை ரசனை, உணர்வுகள் இருப்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டிய தேவையில்லை. அவசியமும் ஏற்படவில்லை.
நம்மிடம் இருக்கும் ஒவ்வொரு துறையும் இந்தச் சராசரிகளுக்கு சேவை செய்யவே உருவாக்கப்பட்டுள்ளன. மிகவும் புத்திசாலிகள் எப்படியும் பிழைத்துக்கொள்வார்கள். சராசரிகளுக்குக் கீழே இருக்கும் ஏழை எளிய வசதி வாய்ப்பற்றவர்கள், தங்கள் உடல் உழைப்பை நம்பியே வாழ்ந்துவிட முடியும். ஆனால், சராசரிகள், இரண்டுங்கெட்டான்கள்.
இவர்களை நீ ஏன் புத்திசாலியாக இல்லை, உன் திறமைகளை ஏன் வளர்த்துக்கொள்ளவில்லை என்று கேட்பது மிகவும் அபத்தம். அதே சமயம், அவர்களுக்குப் போதிய திறன்கள் இல்லை என்பதற்காக வாழுவதற்கான் உரிமை இல்லாமல் போய்விட்டார்களா என்ன? எல்லா போட்டிகளிலும் அவர்கள்தான் முட்டி மோதுகிறார்கள். குறுக்கு வழிகளில் புகுந்தேனும் தம்மை நிலைநிறுத்திக்கொள்ளப் போராடுகிறார்கள். வாழுவதற்கான போராட்டம் அது.
சமீபத்தில் உள்ளாட்சித் துறையைச் சேர்ந்த ஒரு முக்கியஸ்தரிடம் பேசிக்கொண்டு இருந்தேன். உள்ளாட்சித் தேர்தல்களில் ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை செலவு செய்து ஜெயித்தவர்கள் உண்டு என்றார் அவர். இவர்களுடைய நோக்கம் என்ன? பணம் சம்பாதிப்பது. தி.மு.க., அ.தி.மு.க இரண்டு கட்சிக்காரர்களும் பணம் சம்பாதிப்பதில் வேறு வேறு டெக்னிக்குகளை வைத்திருக்கிறார்கள். அவர்களும், அதிகாரிகளும் சம்பாதித்தது போகத்தான், உள்ளாட்சிப் பணிகளுக்கு பணம் வந்து சேரும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில அரசும், மத்திய அரசும் தரும் பணம் கோடிக்கணக்கில் இருக்கிறது. ஒவ்வொருத்தரும் எவ்வளவு சாமர்த்தியமாக இருக்கிறார்களோ, அவ்வளவு விரைவாக, அதிகமாகப் பணத்தைச் சேர்க்க முடியும்.
அவர் பேச்சினிடையே சில விஷயங்களைச் சொன்னார். அதுதான் எனக்கு முக்கியமாகத் தோன்றியது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு வந்திருக்கும் பலரும் நீண்ட நாள் கட்சிக்காரர்கள், வேறு தொழில் தெரியாதவர்கள், அதிகம் படிப்போ, வாசனையோ இல்லாதவர்கள். ஆனால் கட்சிக்கு விசுவாசமானவர்கள். வெட்டிக்கொண்டு வா என்றால், கட்டிக்கொண்டு வருபவர்கள். அவர்களுடைய வாழ்வுக்கும் ஏதேனும் வழி செய்து ஆகவேண்டுமல்லவா? அவர்களும் வாழ்ந்துதானே ஆகவேண்டும்? நேர்மை, அறம் போன்ற கூறுகள் அடிமனத்தில் இருந்தாலும், நாளையைப் பற்றிய பயம், அடுத்த முறை வாய்ப்பு கிடைக்குமோ கிடைக்காதோ என்ற தவிப்பு ஆகியவை இவர்களைச் செலுத்துகின்றன.
இவர்களுக்கு அரசியல் ஒரு தொழில். மக்களுக்குச் சேவை செய்கிறார்கள். சேவையை இலவசமாகச் செய்ய முடியாது அல்லவா? அதற்கு ஒரு சம்பளம் வேண்டுமலலவா? சம்பளம்தான் கொடுக்கிறார்களே? உண்மைதான். அது செய்யும் வேலைக்கு. ஆனால், மக்கள் சேவையில் நாளெல்லாம் செலவு செய்கிறேனே? அந்த முனைப்புக்கு, ஈடுபாட்டுக்கு ஒரு பிரிமியம் வேண்டுமல்லவா? சேவையைச் செய்து, அதற்கு உரிய கட்டணம் பெறலாம், பிரிமியமும் கோரலாம் என்று நமக்கு ஐடி துறை சொல்லிக்கொடுத்திருக்கிறது, அமெரிக்கா சொல்லிக்கொடுத்திருக்கிறது. There is no free lunch. அதைத்தான் இந்த உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து ஆரம்பித்து, நாடாளுமன்றம் வரை செய்கிறார்கள்.
சராசரிக்கும் ஸ்மார்ட்னெஸுக்கும் சம்பந்தமில்லை. பணம் சம்பாதிப்பது, செளகரியங்களை ஏற்படுத்திக்கொள்வது, சரியான நேரத்தில் சரியான விஷயங்களைச் செய்வது, சரியான சொற்களைப் பேசுவது போன்றவை எல்லாம் இயற்கையாகவே கைவரப் பெற்றவர்கள் உண்டு. சராசரித் தன்மை என்பது அகம், புறம் என்று இரண்டு உலகங்களிலும் உண்டு. புற உலகில் எப்படியாவது தமது நிலையை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் உண்டு. ஆனால், மனத்தில் உயர்வு கோருவது கொஞ்சம் பழக்கமற்ற விஷயம்.
ஒருவிதமான ஜாக்கிரதை உணர்வு, தன்னை யாரும் சீண்டிவிடக் கூடாதே என்ற பாதுகாப்பு உணர்வு, தான் எங்கும் வெட்டவெளிச்சமாகிவிடக் கூடாதே என்ற பதற்றம், தனக்குத் தெரிந்ததை அடுத்தவர் அறிந்துவிடக் கூடாதே என்ற துடிப்பு, அதே சமயம் இருக்கும் நாலு சுவருக்குள் ஒருவித சுகமான ராஜாங்கம் நடத்திக்கொண்டு இருப்பதில் செளகரியம் ஆகியவை இவர்களின் பொதுவான குணாதிசயங்கள்.
தன்னை யாரும் சராசரி என்று குறிப்பிட்டு அடையாளப்படுத்திவிடக் கூடாது என்பது அதிதீவிர கவனம் இவர்களுக்கு உண்டு. சராசரிகளோடு மட்டுமே புழங்கும்போது, யாரும் யாருக்கும் உயர்வோ தாழ்வோ இல்லை. ஒப்பிட்டுப் பார்க்கும் பிரச்னையே இல்லை. அப்படியே உயர்வாக இருக்கும் ஒருவரோடு ஒப்பிட வேண்டிய தேவை ஏற்பட்டால், அங்கே முடிந்தவரை தமது ஈகோவைத் தற்காத்துக்கொள்ள முனைவது, இல்லையெனில், ஒன்று ஏதேனும் ஒரு குறையைச் சுட்டிக்காட்டித் தன் மேதமையைச் சொறிந்துவிட்டுக்கொள்வது, அல்லது, உயர்வானவரை உயர்வானவர் என்று சொல்லியே தள்ளிவைத்து, பூஜைக்குரியவராக்கிவிடுவது. இதெல்லாம் சாமர்த்தியமாகச் செய்யவேண்டிய விஷயங்கள். அதைப் பலர் திறமையாகச் செய்கிறார்கள்.
பெரும்பாலும் பிரச்னை வருவது, சராசரிகளின் அளவுகோல்களிலும் விழுமியங்களிலும்தான். அதைக் கட்டிக் காப்பதில்தான் இன்னும் அதிகம் பிரச்னை. சுற்றி நாலு பேர் எப்போதும் கற்பனையாக நின்றுகொண்டு இருப்பார்கள். அவர்களுக்குப் பதில் சொல்லியே, இவர்கள் வாழ்க்கை முடிந்து போகும்.
சராசரிகளின் பங்கு பற்றி நான் முழுமையாக உணர்ந்துகொண்டது, நான் பணியாற்றிய் நிறுவனம் ஒன்றில் ஆட்களை எடுத்தபோதுதான். அந்த நிறுவன மனிதவள மேம்பாட்டுத் துறைத் துணைத் தலைவர் என்னிடம் நான் கோரும் ஆட்களுக்கான மிக விரிவான ஜாப் டிஸ்கிரிப்ஷன் எனும் தேவைகளின் பட்டியலை எழுதச் சொன்னார். ‘எதையும் கற்பனையாக நினைத்துக்கொள்ளாதீர்கள். தெளிவாக கருப்பு வெள்ளையில் எழுதிவிடுங்கள்’ என்றார் அவர். ஆறு பதவிகளுக்கான ஜாப் டிஸ்கிரிப்ஷன்களை எழுதினேன். அவரிடம் அனுப்பினேன். அதை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொண்டு என்னிடம் வந்த அந்த ஹெச். ஆர். துணைத்தலைவர்,
‘இவ்வளவுதானா? இன்னும் மனத்தில் ஏதேனும் நினைத்துக்கொண்டு இருக்கிறீர்களா?’
‘இப்போதைக்கு இவ்வளவுதான்’ இது நான்.
‘அப்படிச் சொல்லாதீர்கள். உங்கள் தேவைகளை நீங்கள் தெளிவாக்கினால்தான், ஆட்களைத் தேர்வு செய்ய முடியும்.’
‘எல்லாவற்றையும் சொல்ல முடியும் என்று தோன்றவில்லை’
‘சொல்லிவிடுவது நல்லது. ஏனெனில், இதுதான் ஒரு குறிப்பிட்ட வேலைத் தேவை என்று நீங்கள் வகுக்கும் எல்லைகள். இந்த எல்லைகள் தெளிவாக இருக்கவேண்டியது அவசியம்.’
‘ஆனால், கிடைக்கும் நபரின் திறமைகளை இன்னும் உபயோகித்துக்கொள்ளலாமே?’
‘அப்படி நடக்காது வெங்கடேஷ். எப்படி நடக்கும் என்று சொல்கிறேன் கேளுங்கள். இந்தத் தேவைகளை நிறைவு செய்யும் ஓர் அற்புதமான நபர் கிடைக்கலாம். அல்லது இதை அப்படியே செய்து முடிக்கும் சராசரியான நபர் கிடைக்கக் கூடும். மூன்றாவது, இதையெல்லாம் செய்யக்கூடியவர், ஆனால், உற்சாகமற்றவர் கிடைக்க்க் கூடும். நமது தேடல், இந்த அற்புதமான நபரை நோக்கித்தான் இருக்கும். ஆனால், பல சமயங்களில், சொன்ன வேலையைச் எந்த ஒரு வில்லங்கமும் இல்லாமல் செய்துமுடிக்கும் சராசரியே கிடைத்தால் போதும் என்ற அளவில்தான் வந்து நிற்போம்.’
நான் யோசிக்கத் தொடங்கினேன்.
‘அதீத எதிர்பார்ப்புகள் வேண்டாம். சரியான வழி, எதிர்பார்ப்புகளை வரையறை செய்துகொள்ளுவது. வரையறை என்பது கால்பந்தாட்ட மைதானம் மாதிரி. அதற்குள் விளையாடத் தெரிந்தால் போதும். வெளியே போய் அதே நபர் கிரிக்கெட்டும் விளையாட வேண்டும் என்று எதிர்பாப்பதெல்லாம், நடக்காத விஷயம்.
’ஏம், கால்பந்தோடு கிரிக்கெட்டும் விளையாடத் தெரிந்தவன் இருக்கமாட்டானா? அவனை நாம் தேடக் கூடாதா?’
‘முதலில், நாம் கண்ணைக் கட்டி வளர்க்கப்பட்டிருக்கிறோம். பள்ளியில் இருந்து தொடங்கி, நமது மாணவர்களை ஒரே விதமாகத்தான் வளர்த்திருக்கிறோம். இது சராசரிகளை உற்பத்தி செய்யும் கல்வி முறை. சராசரிகளைப் பேணும் சமூக வாழ்க்கை. இங்கே சராசரிகளால்தான் சகஜமாக வாழ முடியும். தேவையில்லாமல் எதிர்ப்பார்ப்புகளை வளர்த்துக்கொண்டு துன்பப்படக் கூடாது.’
தெரியவில்லை. இதுதான் உண்மை நிலைமை போலும்.
நாவல் அரசி ரமணி சந்திரனின் ஒரு சில நாவல்களைப் படித்திருக்கிறேன். என்ன எழுதுகிறார், எப்படி எழுதுகிறார் என்று தெரிந்துகொள்ளவதற்காகப் படித்தது. அவ்வப்போது வார இதழ்களில் வரும் தொடர்கதைகளின் அத்தியாயங்களைப் படித்திருக்கிறேன். எழுத்தாளர் லட்சுமி எழுதிய காலத்தில் இருந்து ‘ஒரு பெண் துன்பப்படுகிறாள்’ என்பதுதான் எவர்கிரீன் சப்ஜெக்ட். ரமணி சந்திரனும் அதைத்தான் எழுதுகிறார். தனி மொழிக்கான முயற்சியோ, எழுத்துக்கான செறிவோ, இன்னபிற அழகுகளோ இல்லாத தெளிவான எழுத்து. உரையாடலில் இயல்புத்தன்மை குறைவு. ஆனால், அவர்தான் இன்றும் தமிழ் பத்திரிகை உலகில் சூப்பர் ஸ்டார். வாசகியரின் பேராதரவைப் பெற்றவர். அவர் தொடர்கதையை வெளியிட்டால், பத்து பதினைந்து ஆயிரம் பிரதிகள் கூடுதலாக விற்பனை ஆகிறது என்கிறார்கள் பத்திரிகையுலக நண்பர்கள்.
சராசரித் தமிழ் பெண்ணின், ஆணின் எண்ணங்களோடு அவர் எழுத்துக்கள் ஒத்துப்போகின்றன. அவர்கள் அன்றாடம் சந்திக்கும் விஷயங்களைத்தான் இவர் தொடர்கதைகளாக எழுதி வருகிறார். அந்தச் சராசரி மனிதனின் தேவைகளை இவரது எழுத்துக்கள் நிறைவு செய்கின்றன. இந்தச் சராசரி மனிதர்களின் தேவைகள்தான் இன்று மிகப் பெரும் சந்தையை இந்தியாவில் உருவாக்கியிருக்கிறது.
இந்தியா போன்ற மிகப் பெரிய மக்கள்தொகை கொண்ட நாட்டில், 50% – 65% மதிப்பெண்கள் வாங்கக்கூடிய சராசரிகள்தான் அதிகம். நம் பத்திரிகைகளுக்கும் இன்னபிற சமூக அங்கீகாரங்களுக்கும் 90 – 95%க்கு மேல் வாங்குபவர்கள்தான் கண்ணில் படுகின்றனர். மொத்த ஜனத்தொகையில் இவர்கள் 5% இருந்தால் அதிகம். ஆனால், மீதமுள்ள 95 சதவிகிதத்தினர் இந்தச் சராசரிகள். இந்தியா என்று மட்டுமில்லை, எந்தப் பெரிய ஜனத்தொகை அதிகமுள்ள நாட்டிலும் இந்த சராசரிகள் தீர்மானிப்பதுதான் தீர்மானம். எடுத்துவைப்பதுதான் பொதுக் கருத்துகள். சொல்வதுதான் வேதவாக்கு.
ஏன் இவர்களை ரசனை ரீதியாக, நுண்ணுணர்வு ரீதியாக, கருத்துகள் ரீதியாக, அரசியல் ரீதியாக முன்னேற்றக் கூடாது என்ற கேள்வி அவ்வப்போது எழும். வாழ்க்கைத் தரம், சுற்றுச்சூழல், இன்னபிற காரணிகளால், இவர்கள் பல்வேறு அடுக்குகளில் நிற்கிறார்கள். ஒரு அடுக்கு அடுத்த அடுக்கைவிட உயர்ந்தது என்றோ தாழ்ந்தது என்றோ பேசுவதில் பொருளில்லை. அந்ததந்த அடுக்கில் இருப்பவர்களுக்கு, அவர்களுடைய உலகமே உலகம். வேறு உலகங்கள் இருப்பதே அவர்களுக்குத் தெரியாது. வேறு விழுமியங்கள் இருப்பதே அவர்களுக்குப் புரியாது. வேறு வகை ரசனை, உணர்வுகள் இருப்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டிய தேவையில்லை. அவசியமும் ஏற்படவில்லை.
நம்மிடம் இருக்கும் ஒவ்வொரு துறையும் இந்தச் சராசரிகளுக்கு சேவை செய்யவே உருவாக்கப்பட்டுள்ளன. மிகவும் புத்திசாலிகள் எப்படியும் பிழைத்துக்கொள்வார்கள். சராசரிகளுக்குக் கீழே இருக்கும் ஏழை எளிய வசதி வாய்ப்பற்றவர்கள், தங்கள் உடல் உழைப்பை நம்பியே வாழ்ந்துவிட முடியும். ஆனால், சராசரிகள், இரண்டுங்கெட்டான்கள்.
இவர்களை நீ ஏன் புத்திசாலியாக இல்லை, உன் திறமைகளை ஏன் வளர்த்துக்கொள்ளவில்லை என்று கேட்பது மிகவும் அபத்தம். அதே சமயம், அவர்களுக்குப் போதிய திறன்கள் இல்லை என்பதற்காக வாழுவதற்கான் உரிமை இல்லாமல் போய்விட்டார்களா என்ன? எல்லா போட்டிகளிலும் அவர்கள்தான் முட்டி மோதுகிறார்கள். குறுக்கு வழிகளில் புகுந்தேனும் தம்மை நிலைநிறுத்திக்கொள்ளப் போராடுகிறார்கள். வாழுவதற்கான போராட்டம் அது.
சமீபத்தில் உள்ளாட்சித் துறையைச் சேர்ந்த ஒரு முக்கியஸ்தரிடம் பேசிக்கொண்டு இருந்தேன். உள்ளாட்சித் தேர்தல்களில் ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை செலவு செய்து ஜெயித்தவர்கள் உண்டு என்றார் அவர். இவர்களுடைய நோக்கம் என்ன? பணம் சம்பாதிப்பது. தி.மு.க., அ.தி.மு.க இரண்டு கட்சிக்காரர்களும் பணம் சம்பாதிப்பதில் வேறு வேறு டெக்னிக்குகளை வைத்திருக்கிறார்கள். அவர்களும், அதிகாரிகளும் சம்பாதித்தது போகத்தான், உள்ளாட்சிப் பணிகளுக்கு பணம் வந்து சேரும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில அரசும், மத்திய அரசும் தரும் பணம் கோடிக்கணக்கில் இருக்கிறது. ஒவ்வொருத்தரும் எவ்வளவு சாமர்த்தியமாக இருக்கிறார்களோ, அவ்வளவு விரைவாக, அதிகமாகப் பணத்தைச் சேர்க்க முடியும்.
அவர் பேச்சினிடையே சில விஷயங்களைச் சொன்னார். அதுதான் எனக்கு முக்கியமாகத் தோன்றியது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு வந்திருக்கும் பலரும் நீண்ட நாள் கட்சிக்காரர்கள், வேறு தொழில் தெரியாதவர்கள், அதிகம் படிப்போ, வாசனையோ இல்லாதவர்கள். ஆனால் கட்சிக்கு விசுவாசமானவர்கள். வெட்டிக்கொண்டு வா என்றால், கட்டிக்கொண்டு வருபவர்கள். அவர்களுடைய வாழ்வுக்கும் ஏதேனும் வழி செய்து ஆகவேண்டுமல்லவா? அவர்களும் வாழ்ந்துதானே ஆகவேண்டும்? நேர்மை, அறம் போன்ற கூறுகள் அடிமனத்தில் இருந்தாலும், நாளையைப் பற்றிய பயம், அடுத்த முறை வாய்ப்பு கிடைக்குமோ கிடைக்காதோ என்ற தவிப்பு ஆகியவை இவர்களைச் செலுத்துகின்றன.
இவர்களுக்கு அரசியல் ஒரு தொழில். மக்களுக்குச் சேவை செய்கிறார்கள். சேவையை இலவசமாகச் செய்ய முடியாது அல்லவா? அதற்கு ஒரு சம்பளம் வேண்டுமலலவா? சம்பளம்தான் கொடுக்கிறார்களே? உண்மைதான். அது செய்யும் வேலைக்கு. ஆனால், மக்கள் சேவையில் நாளெல்லாம் செலவு செய்கிறேனே? அந்த முனைப்புக்கு, ஈடுபாட்டுக்கு ஒரு பிரிமியம் வேண்டுமல்லவா? சேவையைச் செய்து, அதற்கு உரிய கட்டணம் பெறலாம், பிரிமியமும் கோரலாம் என்று நமக்கு ஐடி துறை சொல்லிக்கொடுத்திருக்கிறது, அமெரிக்கா சொல்லிக்கொடுத்திருக்கிறது. There is no free lunch. அதைத்தான் இந்த உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து ஆரம்பித்து, நாடாளுமன்றம் வரை செய்கிறார்கள்.
சராசரிக்கும் ஸ்மார்ட்னெஸுக்கும் சம்பந்தமில்லை. பணம் சம்பாதிப்பது, செளகரியங்களை ஏற்படுத்திக்கொள்வது, சரியான நேரத்தில் சரியான விஷயங்களைச் செய்வது, சரியான சொற்களைப் பேசுவது போன்றவை எல்லாம் இயற்கையாகவே கைவரப் பெற்றவர்கள் உண்டு. சராசரித் தன்மை என்பது அகம், புறம் என்று இரண்டு உலகங்களிலும் உண்டு. புற உலகில் எப்படியாவது தமது நிலையை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் உண்டு. ஆனால், மனத்தில் உயர்வு கோருவது கொஞ்சம் பழக்கமற்ற விஷயம்.
ஒருவிதமான ஜாக்கிரதை உணர்வு, தன்னை யாரும் சீண்டிவிடக் கூடாதே என்ற பாதுகாப்பு உணர்வு, தான் எங்கும் வெட்டவெளிச்சமாகிவிடக் கூடாதே என்ற பதற்றம், தனக்குத் தெரிந்ததை அடுத்தவர் அறிந்துவிடக் கூடாதே என்ற துடிப்பு, அதே சமயம் இருக்கும் நாலு சுவருக்குள் ஒருவித சுகமான ராஜாங்கம் நடத்திக்கொண்டு இருப்பதில் செளகரியம் ஆகியவை இவர்களின் பொதுவான குணாதிசயங்கள்.
தன்னை யாரும் சராசரி என்று குறிப்பிட்டு அடையாளப்படுத்திவிடக் கூடாது என்பது அதிதீவிர கவனம் இவர்களுக்கு உண்டு. சராசரிகளோடு மட்டுமே புழங்கும்போது, யாரும் யாருக்கும் உயர்வோ தாழ்வோ இல்லை. ஒப்பிட்டுப் பார்க்கும் பிரச்னையே இல்லை. அப்படியே உயர்வாக இருக்கும் ஒருவரோடு ஒப்பிட வேண்டிய தேவை ஏற்பட்டால், அங்கே முடிந்தவரை தமது ஈகோவைத் தற்காத்துக்கொள்ள முனைவது, இல்லையெனில், ஒன்று ஏதேனும் ஒரு குறையைச் சுட்டிக்காட்டித் தன் மேதமையைச் சொறிந்துவிட்டுக்கொள்வது, அல்லது, உயர்வானவரை உயர்வானவர் என்று சொல்லியே தள்ளிவைத்து, பூஜைக்குரியவராக்கிவிடுவது. இதெல்லாம் சாமர்த்தியமாகச் செய்யவேண்டிய விஷயங்கள். அதைப் பலர் திறமையாகச் செய்கிறார்கள்.
பெரும்பாலும் பிரச்னை வருவது, சராசரிகளின் அளவுகோல்களிலும் விழுமியங்களிலும்தான். அதைக் கட்டிக் காப்பதில்தான் இன்னும் அதிகம் பிரச்னை. சுற்றி நாலு பேர் எப்போதும் கற்பனையாக நின்றுகொண்டு இருப்பார்கள். அவர்களுக்குப் பதில் சொல்லியே, இவர்கள் வாழ்க்கை முடிந்து போகும்.
சராசரிகளின் பங்கு பற்றி நான் முழுமையாக உணர்ந்துகொண்டது, நான் பணியாற்றிய் நிறுவனம் ஒன்றில் ஆட்களை எடுத்தபோதுதான். அந்த நிறுவன மனிதவள மேம்பாட்டுத் துறைத் துணைத் தலைவர் என்னிடம் நான் கோரும் ஆட்களுக்கான மிக விரிவான ஜாப் டிஸ்கிரிப்ஷன் எனும் தேவைகளின் பட்டியலை எழுதச் சொன்னார். ‘எதையும் கற்பனையாக நினைத்துக்கொள்ளாதீர்கள். தெளிவாக கருப்பு வெள்ளையில் எழுதிவிடுங்கள்’ என்றார் அவர். ஆறு பதவிகளுக்கான ஜாப் டிஸ்கிரிப்ஷன்களை எழுதினேன். அவரிடம் அனுப்பினேன். அதை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொண்டு என்னிடம் வந்த அந்த ஹெச். ஆர். துணைத்தலைவர்,
‘இவ்வளவுதானா? இன்னும் மனத்தில் ஏதேனும் நினைத்துக்கொண்டு இருக்கிறீர்களா?’
‘இப்போதைக்கு இவ்வளவுதான்’ இது நான்.
‘அப்படிச் சொல்லாதீர்கள். உங்கள் தேவைகளை நீங்கள் தெளிவாக்கினால்தான், ஆட்களைத் தேர்வு செய்ய முடியும்.’
‘எல்லாவற்றையும் சொல்ல முடியும் என்று தோன்றவில்லை’
‘சொல்லிவிடுவது நல்லது. ஏனெனில், இதுதான் ஒரு குறிப்பிட்ட வேலைத் தேவை என்று நீங்கள் வகுக்கும் எல்லைகள். இந்த எல்லைகள் தெளிவாக இருக்கவேண்டியது அவசியம்.’
‘ஆனால், கிடைக்கும் நபரின் திறமைகளை இன்னும் உபயோகித்துக்கொள்ளலாமே?’
‘அப்படி நடக்காது வெங்கடேஷ். எப்படி நடக்கும் என்று சொல்கிறேன் கேளுங்கள். இந்தத் தேவைகளை நிறைவு செய்யும் ஓர் அற்புதமான நபர் கிடைக்கலாம். அல்லது இதை அப்படியே செய்து முடிக்கும் சராசரியான நபர் கிடைக்கக் கூடும். மூன்றாவது, இதையெல்லாம் செய்யக்கூடியவர், ஆனால், உற்சாகமற்றவர் கிடைக்க்க் கூடும். நமது தேடல், இந்த அற்புதமான நபரை நோக்கித்தான் இருக்கும். ஆனால், பல சமயங்களில், சொன்ன வேலையைச் எந்த ஒரு வில்லங்கமும் இல்லாமல் செய்துமுடிக்கும் சராசரியே கிடைத்தால் போதும் என்ற அளவில்தான் வந்து நிற்போம்.’
நான் யோசிக்கத் தொடங்கினேன்.
‘அதீத எதிர்பார்ப்புகள் வேண்டாம். சரியான வழி, எதிர்பார்ப்புகளை வரையறை செய்துகொள்ளுவது. வரையறை என்பது கால்பந்தாட்ட மைதானம் மாதிரி. அதற்குள் விளையாடத் தெரிந்தால் போதும். வெளியே போய் அதே நபர் கிரிக்கெட்டும் விளையாட வேண்டும் என்று எதிர்பாப்பதெல்லாம், நடக்காத விஷயம்.
’ஏம், கால்பந்தோடு கிரிக்கெட்டும் விளையாடத் தெரிந்தவன் இருக்கமாட்டானா? அவனை நாம் தேடக் கூடாதா?’
‘முதலில், நாம் கண்ணைக் கட்டி வளர்க்கப்பட்டிருக்கிறோம். பள்ளியில் இருந்து தொடங்கி, நமது மாணவர்களை ஒரே விதமாகத்தான் வளர்த்திருக்கிறோம். இது சராசரிகளை உற்பத்தி செய்யும் கல்வி முறை. சராசரிகளைப் பேணும் சமூக வாழ்க்கை. இங்கே சராசரிகளால்தான் சகஜமாக வாழ முடியும். தேவையில்லாமல் எதிர்ப்பார்ப்புகளை வளர்த்துக்கொண்டு துன்பப்படக் கூடாது.’
தெரியவில்லை. இதுதான் உண்மை நிலைமை போலும்.