<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>நேசமுடன்</title>
	<atom:link href="http://www.nesamudan.com/blog/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.nesamudan.com/blog</link>
	<description>மடல் இதழ்</description>
	<lastBuildDate>Thu, 21 Jan 2010 02:39:22 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.org/?v=2.8.3</generator>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
			<item>
		<title>2009ல் வெளியான நாவல்கள்</title>
		<link>http://www.nesamudan.com/blog/2010/01/21/2009newtamilnovels/</link>
		<comments>http://www.nesamudan.com/blog/2010/01/21/2009newtamilnovels/#comments</comments>
		<pubDate>Thu, 21 Jan 2010 02:39:22 +0000</pubDate>
		<dc:creator>வெங்கடேஷ்</dc:creator>
				<category><![CDATA[இலக்கியம்]]></category>
		<category><![CDATA[எழுத்தாளர்கள்]]></category>
		<category><![CDATA[புத்தகங்கள்]]></category>
		<category><![CDATA[உயிர்மை]]></category>
		<category><![CDATA[காலச்சுவடு]]></category>
		<category><![CDATA[காவ்யா]]></category>
		<category><![CDATA[சந்தியா பதிப்பகம்]]></category>
		<category><![CDATA[தமிழினி]]></category>

		<guid isPermaLink="false">http://www.nesamudan.com/blog/?p=307</guid>
		<description><![CDATA[சென்னைப் புத்தகக் கண்காட்சியை ஒட்டி வெளியாகியுள்ள புதிய நாவல்களின் பட்டியல் இது. இப்பட்டியலில் குறுநாவல்கள் தொகுப்புகளையும் சேர்த்துக்கொண்டு இருக்கிறேன். முடிந்தவரை எல்லா பதிப்பகங்களிலும் கேட்டுப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் இந்த பட்டியலை உருவாக்கியிருக்கிறேன். விடுபட்டவை இருக்கலாம். கண்காட்சிக்கு வராத பதிப்பகங்களைச் சேர்ந்தவர்கள் நாவல்களை வெளியிட்டிருக்கலாம். நண்பர்கள் தங்களுக்குத் தெரிந்த புதிய நாவல்களைத் தெரிவியுங்கள். இந்தப் பட்டியல் அப்போதுதான் நிறைவடையும்.]]></description>
			<content:encoded><![CDATA[<p>சென்னைப் புத்தகக் கண்காட்சியை ஒட்டி வெளியாகியுள்ள புதிய நாவல்களின் பட்டியல் இது. இப்பட்டியலில் குறுநாவல்கள் தொகுப்புகளையும் சேர்த்துக்கொண்டு இருக்கிறேன். முடிந்தவரை எல்லா பதிப்பகங்களிலும் கேட்டுப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் இந்த பட்டியலை உருவாக்கியிருக்கிறேன். விடுபட்டவை இருக்கலாம். கண்காட்சிக்கு வராத பதிப்பகங்களைச் சேர்ந்தவர்கள் நாவல்களை வெளியிட்டிருக்கலாம். நண்பர்கள் தங்களுக்குத் தெரிந்த புதிய நாவல்களைத் தெரிவியுங்கள். இந்தப் பட்டியல் அப்போதுதான் நிறைவடையும்.</p>
<p>மேலும் இதில் ஒரு தேர்வு இருக்கிறது. அது என் ரசனையை ஒட்டிய தேர்வு. பிரபல எழுத்தாளர்களான ரமணி சந்திரன், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் (பலர் பெயர்கள் விட்டுப் போயிருக்கலாம்) ஆகியோர் நிச்சயம் புதிய நாவல்களை வெளியிட்டிருப்பார்கள். தொடர்கதைகளைப் புத்தகங்களாக வெளியிட்டிருப்பார்கள். இப்போது உட்கார்ந்து யோசிக்கும்போது, அதையும் வாங்கிச் சேர்த்துக்கொண்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. மீண்டும் ஒருமுறை புத்தகக் கண்காட்சி செல்லும்போது, இன்னொரு பட்டியலைத் தர முயற்சிக்கிறேன்.</p>
<p>2009ல் வெளியான நாவல்கள் என்று இப்பட்டியலைச் சொல்வதும் முழுமையாகாது. இப்பட்டியல் ஜனவரி 2010 புத்தகக் கண்காட்சியை ஒட்டி வெளியான நாவல்கள். 2009 நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் இந்த நாவல்கள் வெளியாகியிருக்கும். ஒரு சில நேரடியாகப் புத்தகக் கண்காட்சிக்குத் தான் வருகின்றன. ஆண்டு தொடங்கியதில் இருந்து பல நாவல்கள் இடையில் வந்திருக்கலாம். ஒரு சில பதிப்பகங்கள் மாதம், ஆண்டு இரண்டு தகவல்களையும் இம்பிரிண்ட்டில் தருவார்கள். ஒரு சிலர் வெறும் ஆண்டு தருவார்கள். புத்தக வரிசை எண் என்றொரு முறையும் இங்கே பழக்கத்தில் இருக்கிறது.</p>
<p>ஆங்கில நூல்களில் ஒரு பழக்கம் உண்டு. பொதுவாக அக்டோபர் மாதத்துக்குப் பின் வெளியாகும் எந்த ஒரு புத்தகத்துக்கும் அடுத்து வரும் ஆண்டு ஜனவரியை வெளியீட்டு ஆண்டாகவும் மாதமாகவும் தருவார்கள்.</p>
<p>மொழிபெயர்ப்பு நாவல்களையும் நான் இப்பட்டியலில் சேர்க்கவில்லை. நேரடியாகத் தமிழில் எழுதப்பட்ட நாவல்கள் என்ற கண்ணோட்டத்துடனேயே இப்பட்டியல் உருவாக்கப்பட்டிருக்கிறது.</p>
<p>ஜனவரி முதல் தேதி அன்று, நான் புத்தகக் கண்காட்சிக்குப் போயிருந்தேன். தகவல்கள் திரட்டியபோது, கீழே உள்ள ஒரு சில நாவல்கள் அச்சாகிக் கடைகளுக்கு வந்திருக்கவில்லை. அப்புறம் வந்திருக்கலாம்.</p>
<p>1. காதில் மெல்ல காதல் சொல்ல &#8211; ஏ.ஏ.ஹெச்.கே.கோரி &#8211; சந்தியா பதிப்பகம் &#8211; ரூ.40<br />
2. கரைதேடும் ஓடங்கள் &#8211; உஷா ராமசந்திரன் &#8211; சந்தியா பதிப்பகம் &#8211; ரூ.50<br />
3. குவியம் &#8211; ஜெயந்தி சங்கர் &#8211; ரூ.100<br />
4. மலையகமல்லன் &#8211; தி.குழந்தைவேலு &#8211; காவ்யா &#8211; ரூ.80<br />
5. என் உயிரே விட்டுக்கொடு &#8211; முத்தாலங்குறிச்சி காமராசு &#8211; காவ்யா &#8211; ரூ.90<br />
6. அனல் காற்று &#8211; ஜெயமோகன் &#8211; தமிழினி &#8211; ரூ.90<br />
7. நெடுஞ்சாலை &#8211; கண்மணி குணசேகரன் &#8211; தமிழினி &#8211; ரூ.230<br />
8. நாடு விட்டு நாடு &#8211; முத்தம்மாள் பழனிசாமி &#8211; தமிழினி &#8211; ரூ. 220<br />
9. தலையணை மந்திரோபதேசம் &#8211; நடேச சாஸ்திரி &#8211; தமிழினி &#8211; ரூ.75<br />
10. நட்டுமை &#8211; ஆர்.எம்.நெளஸாத் &#8211; காலச்சுவடு பதிப்பகம் &#8211; ரூ. 120<br />
11. மூன்றாம் சிலுவை &#8211; உமா வரதராஜன் &#8211; காலச்சுவடு பதிப்பகம் &#8211; ரூ. 90<br />
12. கானல் வரி &#8211; தமிழ்நதி &#8211; உயிர்மை பதிப்பகம் &#8211; ரூ.50<br />
13. மரகதத் தீவு &#8211; காஞ்சனா தாமோதரன் &#8211; உயிர்மை பதிப்பகம் &#8211; ரூ.100<br />
14. சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் &#8211; வா.மு.கோமு &#8211; உயிர்மை பதிப்பகம் &#8211; ரூ.220<br />
15. வெட்டுப் புலி &#8211; தமிழ்மகன் &#8211; உயிர்மை பதிப்பகம் &#8211; ரூ.220<br />
16. அவளது கூரையின் மீது நிலா ஒளிந்திருக்கிறது &#8211; வ.ஐ.ச.ஜெயபாலன் &#8211; உயிர்மை பதிப்பகம் &#8211; ரூ.100</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.nesamudan.com/blog/2010/01/21/2009newtamilnovels/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>கரை தேடும் ஓடங்கள் &#8211; வித்தியாசமான களம்</title>
		<link>http://www.nesamudan.com/blog/2010/01/21/ushanovelreview/</link>
		<comments>http://www.nesamudan.com/blog/2010/01/21/ushanovelreview/#comments</comments>
		<pubDate>Thu, 21 Jan 2010 02:36:23 +0000</pubDate>
		<dc:creator>வெங்கடேஷ்</dc:creator>
				<category><![CDATA[இலக்கியம்]]></category>
		<category><![CDATA[எழுத்தாளர்கள்]]></category>
		<category><![CDATA[புத்தகங்கள்]]></category>
		<category><![CDATA[கரை தேடும் ஓட்டங்கள்]]></category>
		<category><![CDATA[கலைமகள்]]></category>
		<category><![CDATA[கி.வா.ஜ. நூற்றாண்டு விழா நாவல் போட்டி]]></category>
		<category><![CDATA[சந்தியா பதிப்பகம்]]></category>
		<category><![CDATA[ராமசந்திரன் உஷா]]></category>

		<guid isPermaLink="false">http://www.nesamudan.com/blog/?p=305</guid>
		<description><![CDATA[என்னை மிகவும் கவந்த ஒரு அம்சம், கதையின் தொடக்கம்தான். கதை தொடங்கப்படும் இடம் பளிச்சென்று இருக்கவேண்டும். கட்டிப்போடுவது போல் இருக்கவேண்டும். நாவலுக்குள் இழுத்துப் போடுவதாக இருக்கவேண்டும். உஷா அதைச் சரியாகப் புரிந்துகொண்டு இருக்கிறார். பிரச்னையின் மையத்தில் இருந்து நாவலைத் தொடங்கியிருக்கிறார். கவனத்தைக் கவரும் இடம் அது.]]></description>
			<content:encoded><![CDATA[<p>ராமசந்திரனின் உஷாவின் முதல் நாவல். இணையத்தில் எழுதுபவர்களுக்கு, படிப்பவர்களுக்கு உஷாவை நிச்சயம் தெரிந்திருக்கும். நுனிப்புல் என்றொரு வலைப்பதிவு வைத்திருக்கிறார் உஷா.</p>
<p>இந்த நாவல் என்னை மூன்று அம்சங்களில் மிகவும் கவர்ந்தது. ஒன்று இதன் உள்ளடக்கம். புதிய களம். துபாய் வந்துவிட்டு, துன்பப்பட்டு, திண்டாடி மீளும் இரண்டு பெண்கள்; இன்னொரு பெண் அங்கே வேலை செய்து சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்றியவர், ஊர் திரும்புகிறார். துபாய் பற்றியும் அரபு தேசங்கள் பற்றியும் நம்மிடம் இருக்கும் மனச்சித்திரங்களை இந்த கதைத் தொடக்கமே மாற்றி அமைத்துவிடுகிறது. சிறையில் இருந்து ஒரு பெண் மீண்டும் இந்தியா திரும்ப அனுப்பப்படுகிறார். இன்னொரு பெண், ஏஜெண்டால் ஏமாற்றப்பட்டு, பின் தப்பித்து, இந்தியா மீளுகிறாள். இதுவரை சொல்லப்படாத கதை. அதனாலே படிக்கத் தூண்டுவதாக இருக்கிறது.</p>
<p>இரண்டு, நாவலை துபாய் ஏர்போர்ட்டில் தொடங்குபவர் அப்படியே இந்தியா வந்து அப்பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளைத் தொடர்ந்து எழுதிச் செல்கிறார். சட்டென பழைய நினைவுகளுக்குப் போய், பிளாஷ்பேக்கில் கதை சொல்ல ஆரம்பித்துவிடுவாரோ என்று லேசாக பயந்தேன். பழைய சம்பவங்கள் கதையில் வராமல் இல்லை. ஆனால், அதை கதையின் ஓட்டத்தோடு மிக லாகவமாக இணைத்திருக்கிறார் உஷா.</p>
<p>மூன்றாவது, இஸ்லாமியத் தமிழைக் கையாண்டிருக்கும் திறன். முன்னுரையில் நாகூர் ரூமி, உஷாவின் மொழிப் பயன்பாட்டைப் பாராட்டியிருக்கிறார். அப்படியென்றால், மொழிப் பயன்பாடு சரியாக வந்திருக்கிறது என்றே அர்த்தம்.</p>
<p>என்னை மிகவும் கவந்த ஒரு அம்சம், கதையின் தொடக்கம்தான். கதை தொடங்கப்படும் இடம் பளிச்சென்று இருக்கவேண்டும். கட்டிப்போடுவது போல் இருக்கவேண்டும். நாவலுக்குள் இழுத்துப் போடுவதாக இருக்கவேண்டும். உஷா அதைச் சரியாகப் புரிந்துகொண்டு இருக்கிறார். பிரச்னையின் மையத்தில் இருந்து நாவலைத் தொடங்கியிருக்கிறார். கவனத்தைக் கவரும் இடம் அது.</p>
<p>குறைகள் இல்லையா? இருக்கின்றன. முதல் நாவல் எழுதியிருக்கிறார். பாராட்டுவது மட்டுமே நம் வேலை. ஏற்கெனவே கலைமகள், இந்த நாவலைப் பாராட்டி இருக்கிறது. இந்த நாவல், கலைமகள் கி.வா.ஜ. நூற்றாண்டு விழா நாவல் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றிருக்கிறது. தகுதியான பாராட்டு.</p>
<p>கரைதேடும் ஓடங்கள் &#8211; உஷா ராமசந்திரன் &#8211; சந்தியா பதிப்பகம், எண்.57 &#8211; 63ஆவது தெரு, 9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 600083. விலை ரூ.50</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.nesamudan.com/blog/2010/01/21/ushanovelreview/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>பேசாத சொற்கள்</title>
		<link>http://www.nesamudan.com/blog/2010/01/21/mentallydisturbed/</link>
		<comments>http://www.nesamudan.com/blog/2010/01/21/mentallydisturbed/#comments</comments>
		<pubDate>Thu, 21 Jan 2010 02:33:08 +0000</pubDate>
		<dc:creator>வெங்கடேஷ்</dc:creator>
				<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[பொது]]></category>
		<category><![CDATA[திருவல்லிக்கேணி]]></category>
		<category><![CDATA[தொலைக்காட்சி]]></category>
		<category><![CDATA[வலி]]></category>

		<guid isPermaLink="false">http://www.nesamudan.com/blog/?p=303</guid>
		<description><![CDATA[பல பேர்கள் வாய்விட்டுப் பேசிக்கொண்டே நடப்பதைச் சென்னை மாநகரத் தெருக்களில் நீங்கள் பார்க்கலாம். சுற்றி யார் இருக்கிறார்கள், என்ன நடக்கிறது என்ற உணர்வே இல்லாமல், தத்தமது சொந்த உலகத்துக் கவலைகளை, யாரிடம் சொல்வது, எப்படிச் சொல்வது என்று தெரியாமல், பேசிக்கொண்டே செல்வார்கள். முகத்தில் கோபம், உக்கிரம், வேகம் எல்லாம் பீறிட்டுக்கொண்டு இருக்கும்.]]></description>
			<content:encoded><![CDATA[<p>பல பேர்கள் வாய்விட்டுப் பேசிக்கொண்டே நடப்பதைச் சென்னை மாநகரத் தெருக்களில் நீங்கள் பார்க்கலாம். சுற்றி யார் இருக்கிறார்கள், என்ன நடக்கிறது என்ற உணர்வே இல்லாமல், தத்தமது சொந்த உலகத்துக் கவலைகளை, யாரிடம் சொல்வது, எப்படிச் சொல்வது என்று தெரியாமல், பேசிக்கொண்டே செல்வார்கள். முகத்தில் கோபம், உக்கிரம், வேகம் எல்லாம் பீறிட்டுக்கொண்டு இருக்கும்.</p>
<p>நகர வாழ்க்கை காரணமா, என்ன காரணம் என்று தெரியவில்லை. பலர் அதிபயங்கர மன அழுத்தத்தோடு இருக்கிறார்கள். ஒவ்வொரு சின்ன விஷயமும் இங்கே தோல்வியோடு முடிகிறது போலிருக்கிறது. தோல்வி, நிறைவின்மை, குறைகள் எல்லாம் சேர்ந்து மனத்துக்குள் பெரும் போராட்டங்களை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் இப்படி தம்மையும் அறியாமல் பேசிக்கொண்டே செல்பவர்கள்.</p>
<p>குறிப்பாக நிறைய பெண்கள் இப்படி இருக்கிறார்கள். அதுவும் வேலைக்குப் போகும் பெண்கள், கைகளை ஆட்டி யாருக்கோ பதில் சொல்லிக்கொண்டே போவார்கள். பஸ் ஸ்டாப்பில் நிற்கும் பெண்களைப் பார்க்கும்போது, உள்ளுக்குள் வார்த்தைகள் வரிசை கட்டி நிற்பதைப் புரிந்துகொள்ள முடியும். ஒரு பெருமூச்சு, ஒரு அலுத்துக்கொள்ளும் தலையாட்டல் எல்லாம் உள்ளே கரையும் சொற்பிரவாகத்தின் தொடர்ச்சி.</p>
<p>சின்னப் பெண்களுக்கு ஒருவித கட்டுப்பாடு, சங்கோஜம் எல்லாம் கூடவே தலைகாட்டுவதால், தம்மைக் கட்டுப்படுத்திக்கொள்ளத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். வயது ஆக ஆக, இந்தக் கட்டுப்பாடு கழண்டுவிடுகிறது. கவலைகள் மேலோங்கிவிடுகிறது. தம்மையும் அறியாமல் கையை ஆட்டிக்கொண்டு யாரிடமோ விவாதம் செய்துகொண்டு செல்வார்கள். ஒரு கட்டத்தில் இது இன்னும் அதிகமாகி, பேசவே ஆரம்பித்துவிடுகிறார்கள்.</p>
<p>நம்மிடையே பேசுவதற்கான நேரம் குறைந்துவிட்டது. குடும்பத்தாரோடு பேசுவதே அரிதாகிக்கொண்டு இருக்கிறது. குடும்பங்களில் பேச்சு என்பது அதிகபட்சம், ஒன்றிரண்டு சொற்கள், ஒரு சில வரிகளில் முடிந்துபோய்விடுகிறது. முன் தீர்மானிக்கப்பட்ட வரிகளே பேசப்படுகின்றன. ‘டிபன் பாக்ஸ் கட்டியாச்சா?’, ‘கேஸ் சிலிண்டர் வருமா?’, ‘டெலிபோன் பில் கட்டியாச்சா?’, ‘9.20 டிரெயினைப் பிடிக்கணும்’ என்று மிகச் சப்பையான வரிகளே பேசப்படுகின்றன. விளைவு, சொல்லவேண்டிய பல செய்திகள், கேட்கவேண்டிய பல கேள்விகள், மோதித் தீர்த்துக்கொள்ள வேண்டிய கோபங்கள், புரிந்துகொள்ளவேண்டிய உணர்வுகள் எல்லாம் மனத்துக்குள் மக்கிப் போய்விடுகின்றன.</p>
<p>தொலைக்காட்சி குடும்பங்களில் பேசும் நேரத்தைப் பெருமளவு ஆக்கிரமித்துக்கொண்டு விடுகிறது. கூடத்தில் அது ஒரு பக்கம் மண்டையிடியாக முழங்கிக்கொண்டு இருக்க, மற்றொரு பக்கம், அதற்கு இணையாக குடும்ப உறுப்பினர்கள் கத்தி கத்திப் பேசுகிறார்கள். அல்லது பேசாமல் இருந்துவிடுகிறார்கள். பேசாமல் இருப்பதுதான் அதிகம்.</p>
<p>பல வீடுகளில், சாப்பாடு, தொலைக்காட்சியோடு பின்னிப் பிணைந்தது. கையில் தட்டை வைத்துக்கொண்டு, டிவியைப் பார்த்துக்கொண்டே சாப்பிடும் கெட்ட பழக்கம் ஏராளமான வீடுகளில் இருக்கிறது. தட்டில் என்ன இருக்கிறது, என்ன சுவை, என்ன ரசனை என்ற எந்த ஒரு கவனமும் இல்லாத வெற்றுச் சாப்பாடு அது. எதில்தான் மல்டி டாஸ்கிங் வேண்டும் என்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது.</p>
<p>என் வீட்டில், சாப்பாட்டு மேஜையை நான் பேசுவதற்கான இடமாக மாற்றி வைத்திருக்கிறேன். சாப்பிடும்போது, குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் சேர்ந்து சாப்பிட வேண்டும். டிவி ஓடக் கூடாது. செல்போன் கூடாது. கையில் புத்தகமோ பத்திரிகையோ கூடாது. சாப்பாடும் பேச்சும் மட்டுமே முக்கியம். அதிகபட்சம் பதினைந்து நிமிட நேரம். அல்லது அரை மணி. குடும்ப உறுப்பினர்கள் அத்தனை விஷயங்களையும் கொட்டிவிடுவார்கள். கேட்கவேண்டியதைக் கேட்டுவிடுவார்கள். நான் சொல்லவேண்டியதைச் சொல்லிவிடுவேன். எல்லா விஷயங்களும் எல்லாருக்கும் பொது.</p>
<p>பேசாது போன, உள்ளேயே மட்கிப் போன எண்ணங்களின், கோபங்களில், வலிகளின் வெளிப்பாடுகளை, சென்னைத் தெருக்களில் நீங்கள் பார்க்கலாம். குறிப்பாக, திருவல்லிக்கேணி கோவில் அருகே இரண்டு மூன்று நபர்கள் இருக்கிறார்கள். அதில் ஒருவர், பெண். அழுக்கு உடையணிந்துகொண்டு, பெளடர் பூசிப் பொட்டு வைத்துக்கொண்டு, கோவில் அருகே உட்கார்ந்திருப்பார். ஒரு காலத்தில் ஏதோ ஒரு பெரிய வீட்டின் திறமையான நிர்வாகியாக இருந்திருக்கவேண்டும். மிச்சமிருக்கும் அழகும் மிடுக்கும், வாழ்ந்த வாழ்க்கையின் எச்சத்தை எடுத்துச் சொல்லும். திடீரென்று யாரையோ திட்டுவார். யாரையோ மிரட்டுவார். யாருக்கோ உத்தரவு தருவார். சொல்பேச்சுக் கேட்காத பிள்ளைகளை குறை சொல்லுவார். அற்புதமான ஆங்கிலம் ஒரு சில சமயங்களில் வெளிப்படும். மற்ற நேரங்களில், நல்ல அழகான தமிழ். கொஞ்சம் நேரம் ஓரிடத்தில் அமர்ந்திருக்க மாட்டார். பெரிய கைப்பையைத் தூக்கிக்கொண்டு கோவிலைச் சுற்றியுள்ள வீட்டு வாசல்களில் உட்கார்ந்து, நடந்து, படுத்து அங்கேயே தன் நாள்களை ஓட்டிக்கொண்டு இருக்கிறார்.</p>
<p>வாழ்ந்துகெட்ட குடும்பத்தின் பேசப்படாத வலி மொத்தம் அந்தம்மாளின் வார்த்தைகளில் தொக்கி நிற்கும். இதுபோல், மன அழுத்தம் மிகுந்த பல பெண்களை நான் சாலைகளில் பார்க்கிறேன். யாரைக் குறை சொல்வது என்று தெரியவில்லை. பேசாத சொற்கள், வலி நிரம்பியவை. அதைப் பேசி வெளியே கொட்டுவதைவிட, வேறேதும் சிறப்பான் வழி இருப்பதாகத் தெரியவில்லை.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.nesamudan.com/blog/2010/01/21/mentallydisturbed/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>வலி நிரம்பிய சரித்திரம்</title>
		<link>http://www.nesamudan.com/blog/2010/01/21/universityconvocation/</link>
		<comments>http://www.nesamudan.com/blog/2010/01/21/universityconvocation/#comments</comments>
		<pubDate>Thu, 21 Jan 2010 02:29:24 +0000</pubDate>
		<dc:creator>வெங்கடேஷ்</dc:creator>
				<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[மாணவர்கள்]]></category>
		<category><![CDATA[152வது பட்டம்ளிப்பு விழா]]></category>
		<category><![CDATA[ஆர்.சிவகுமார்]]></category>
		<category><![CDATA[ஏடிஜிபி ராதாகிருஷ்ணன்]]></category>
		<category><![CDATA[செஃப் தாமு]]></category>
		<category><![CDATA[சென்னைப் பல்கலைக்கழகம்]]></category>
		<category><![CDATA[டாக்டரேட்]]></category>
		<category><![CDATA[தமிழச்சி தங்கபாண்டியன்]]></category>

		<guid isPermaLink="false">http://www.nesamudan.com/blog/?p=301</guid>
		<description><![CDATA[வாழ்க்கையில் டாக்டரேட் வாங்குவதும் ரேங்க் வாங்குவதும் இவ்வளவு கவர்ச்சிகரமான விஷயங்கள், உணர்ச்சிபூர்வமான தருணங்கள் என்று எனக்குத் தோன்றியதில்லை! வீட்டுக்கு வந்து பெட்டிக்குள் பூட்டிவைத்துள்ள என் பட்டங்களை எடுத்துப் பார்த்தேன். அதன் பின்னே தெரிந்தது, என் அப்பாவின் முகம். உழைப்பும் களைப்பும் வலியும் உற்சாகமும் ஆர்வமும் கலந்துகட்டிய முகம்.]]></description>
			<content:encoded><![CDATA[<p>முதல் முறையாக ஒரு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவைப் மிக அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் 152வது பட்டமளிப்பு விழா 19.01.2010 அன்று பல்கலைக்கழக நூற்றாண்டுவிழா கலையரங்கத்தில் நடைபெற்றது. இதுவரை நான் பட்டம் வாங்கியபோதெல்லாம் கல்லூரி நிகழ்ச்சிகளுக்கோ பல்கலைக்கழக நிகழ்ச்சிகளுக்கோ சென்றதில்லை. விழா முடிந்த மறுநாள் கல்லூரி அலுவலகம் போய், அங்கே இருக்கும் பணியாளர் கையால்தான் டிகிரி சர்ட்டிபிகேட் வாங்கியிருக்கிறேன்!</p>
<p>ஒரு மாநிலத்தின் ஆளுநர் கையால், பட்டம் வாங்குவது எவ்வளவு பெருமை வாய்ந்த தருணம் என்பதை, இப்போதுதான் புரிந்துகொண்டேன். பாரம்பரியம் மிக்கப் பல்கலைக்கழகத்தின் பாரியம்பரிக்கமிக்க விழா. பின்பற்றப்பட்ட நடைமுறைகள் எல்லாம் பற்பல ஆண்டுகளாக அப்படியே பின்பற்றப்பட்டு வருகின்றன. அழகான பாரம்பரியம். மரியாதை. கெளரவம். அதற்கான தயாரிப்பு, இடுப்பை ஒடிப்பதாக இருந்தாலும், நிகழ்ச்சியின் அழகும் அமரிக்கையும் பாந்தமும் எல்லா வலிகளையும் மறக்கடித்துவிட்டன.</p>
<p>விழாவின் பாரம்பரிய அழகு ஒருபக்கம் கவர்ந்தது என்றால், இன்னொரு பக்கம் பட்டம் பெற்றவர்களின் ஆர்வம் அற்புதமாக இருந்தது. அன்று கிட்டத்தட்ட 419 பேர் டாக்டர் பட்டம் பெற்றார்கள். இருபதுகளுக்குள் இருப்பவர்களில் இருந்து எழுபதுகளைத் தொட்டவர்களும் டாக்டர் பட்டங்களை வாங்கினார்கள். பார்வையற்ற இருவர் டாக்டர் பட்டம் பெற்றார்கள். ஒருவர் வரலாற்றுத் துறையிலும் மற்றவர் தமிழ்த் துறையில் ஆய்வுகள் செய்திருப்பவர். கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் (த.சுமதி), ஏடிஜிபி ராதாகிருஷ்ணன், மொழிபெயர்ப்பாளர் ஆர்.சிவகுமார், செஃப் தாமு (தாமோதரன்) ஆகியோர் அன்று டாக்டர் பட்டம் பெற்றவர்களில் அடங்குவர்.</p>
<p>இன்னொரு பகுதி, ரேங்க் வாங்கியவர்கள். நான்கு பாடங்கள், மூன்று பாடங்கள் என்று பல பாடங்களில் முதல் மதிப்பெண் பெற்ற ஏராளமான மாணவ மாணவியர் அன்று அதற்கான பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வாங்கிச் சென்றார்கள்.</p>
<p>நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பிருந்தே விழா களைகட்டத் தொடங்கிவிட்டது. விழா அரங்க வாசலில் ஏராளமான போட்டோகிராபர்கள் மோதிக்கொண்டார்கள். பட்டமளிப்பு விழா அங்கி அணிந்துகொண்டு போட்டோ எடுத்துக்கொள்ளும் ஆர்வத்தை பயன்படுத்திக்கொள்ளும் வேகம். அங்கியை அணிந்துகொண்டு, கார்களுக்கு முன்னால், மரத்துக்குப் பின்னால், அம்மாவை அணைத்துக்கொண்டு, அக்காவோடு நெருக்கமாக என்று விதவிதமான போஸ்களில் போட்டோகளைச் சுட்டுக்கொண்டார்கள். நிகழ்ச்சி முடிந்தபின்னரும் இதே ஆர்வம்தான். துணைவேந்தரோடு சேர்ந்து போட்டோ, மேடை பின்னணியில் போட்டோ என்று பெரிய கூட்டமே அலையடித்தது.</p>
<p>உறவினர் கூட்டம் உற்சாகம் ததும்ப காத்திருந்தது. ஏராளமான பூங்கொத்துகள் வழங்கப்பட்டன, இனிப்புகள் கொடுக்கப்பட்டன. தம் மகள்களின் உச்சிமோந்துகொண்ட பெற்றோர்கள் இன்னொரு புறம். தாம் பெற்ற புகழைவிட தம் மகவுகள் பெறும் புகழ், அங்கீகாரம் ஆகியவற்றை மெச்சும், கொண்டாடும் பெற்றோர்களின் கண்களில் தெரிந்தது வலியும் உழைப்பும்தான்.</p>
<p>வாழ்க்கையில் டாக்டரேட் வாங்குவதும் ரேங்க் வாங்குவதும் இவ்வளவு கவர்ச்சிகரமான விஷயங்கள், உணர்ச்சிபூர்வமான தருணங்கள் என்று எனக்குத் தோன்றியதில்லை! வீட்டுக்கு வந்து பெட்டிக்குள் பூட்டிவைத்துள்ள என் பட்டங்களை எடுத்துப் பார்த்தேன். அதன் பின்னே தெரிந்தது, என் அப்பாவின் முகம். உழைப்பும் களைப்பும் வலியும் உற்சாகமும் ஆர்வமும் கலந்துகட்டிய முகம். பட்டம், எனக்கு இப்போது வெறும் காகிதமாகத் தோன்றவில்லை. அதன்பின்னே இருபதாண்டுகளின் சரித்திரம் இருக்கிறது. வலி நிரம்பிய சரித்திரம்!</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.nesamudan.com/blog/2010/01/21/universityconvocation/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>நேசமுடன் 2009 &#8211; ஒரு ரெவியூ</title>
		<link>http://www.nesamudan.com/blog/2010/01/21/nesamudan2009review/</link>
		<comments>http://www.nesamudan.com/blog/2010/01/21/nesamudan2009review/#comments</comments>
		<pubDate>Thu, 21 Jan 2010 02:26:05 +0000</pubDate>
		<dc:creator>வெங்கடேஷ்</dc:creator>
				<category><![CDATA[நேசமுடன்]]></category>
		<category><![CDATA[விமர்சனம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.nesamudan.com/blog/?p=299</guid>
		<description><![CDATA[புத்தாண்டில் எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ, அது நடந்துவிட்டது. புத்தாண்டின் முதல் நேசமுடன் இதழ் 6ஆம் தேதி புதன்கிழமை அன்று வந்திருக்கவேண்டும். வெளிவரவில்லை. புதிய பணி, வேலை அழுத்தம் என்று எந்தக் காரணத்தையும் என் மனம் ஏற்க மறுக்கின்றது.]]></description>
			<content:encoded><![CDATA[<p>புத்தாண்டில் எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ, அது நடந்துவிட்டது. புத்தாண்டின் முதல் நேசமுடன் இதழ் 6ஆம் தேதி புதன்கிழமை அன்று வந்திருக்கவேண்டும். வெளிவரவில்லை. புதிய பணி, வேலை அழுத்தம் என்று எந்தக் காரணத்தையும் என் மனம் ஏற்க மறுக்கின்றது.</p>
<p>அடிப்படையில் எழுத்து, என் மகிழ்ச்சிக்காக. நான் ரசிக்கவில்லை என்றால், இதை எழுதுவதே வேஸ்ட். என் ரசனை, என் எழுத்தைப் படிக்கும் பலரது ரசனைக்கும் ஏற்புடையதாக இருந்தால், இன்னும் மகிழ்ச்சி. ஏதோ ஒரு முனையில் ரசனைகள் ஒன்று சேரும். ஒரு சில விஷயங்களில், அனுபவங்களில் ரசனைகள் ஒன்று குவியும். அதுதான் எழுத்தாளனும் வாசகனும் சந்தித்துக்கொள்ளும் இடம்.</p>
<p>நேசமுடன் மடல் இதழ் பற்றி சென்ற 21 இதழ்களில் பலவித விமர்சனங்கள் வந்திருக்கின்றன.</p>
<p>1. இந்த மடல் இதழ் என்ற கருத்தே அபத்தம், அல்லது இது ஒரு பிரிமிட்டிவ் மாடல். இதன் பிறகு வலைப்பதிவுகள் என்ற அடுத்த தொழில்நுட்ப சாத்தியம் வந்தபிறகு இதைப் பிடித்துக்கொண்டு தொங்குவது அபத்தம்.<br />
2. நான் உயர்ந்த பெடஸ்டலில் அமர்ந்துகொண்டு எழுதுகிறேன்.<br />
3. கருத்துகளில், ஆழம் இல்லை. மேம்போக்கான பத்திரிகை எழுத்து இது.<br />
4. ஒவ்வொரு கட்டுரையும் மிகவும் நீளமாக இருக்கிறது. இன்னும் நறுக்கென்று எழுதலாம்.<br />
5. நிறைய ஆங்கிலச் சொற்களைப் பெய்து எழுதுகிறேன்.</p>
<p>பலருக்கு என்னை எந்தச் சிமிழில் வைத்துப் பொருத்திப் புரிந்துகொள்வது என்ற சிரமம் இருக்கிறது. வழக்கமான வெகுஜன இதழாளன் / எழுத்தாளன் என்று சொல்லிவிடுவது மிகவும் சுலபம். அதே சமயம், நவீன இலக்கியம் பற்றியெல்லாம் இந்தாள் பேசித்தொலைக்கிறான். இவனை ஒரு சிறுபத்திரிகை வட்டத்தைச் சேர்ந்தவன் என்று புரிந்துகொள்வதும், சீரியஸ்ஸான எழுத்தாளன் என்று ஏற்றுக்கொள்வதும் சரியாயில்லை.</p>
<p>என் மரபை, என் வழியை, என் இடத்தை, என் முதல் சிறுகதைத் தொகுதியின் முன்னுரையில் எடுத்து எழுதியிருக்கிறேன். தமிழ் எழுத்தில் ஒரு மிடில் பாத் உண்டு. இந்திரா பார்த்தசாரதி, ஆதவன், சுப்பிரமணிய ராஜு, கந்தர்வன் ஆகிய எழுத்தாளர்கள் தம் எழுத்தின் வலிமையை என்றும், எங்கேயும்  குறைத்துக்கொண்டதில்லை. இவர்கள் வெகுஜன இதழ், சிற்றிதழ் என்ற பிரிவினைகளை பெரிதாக எடுத்துக்கொண்டதில்லை. இவர்கள் அனைவரும் வெகுஜன இதழ்களிலேயே தம் பெரும்பாலான படைப்புகளை எழுதியிருக்கிறார்கள். நல்ல எழுத்தை, பரந்த வாசகர்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என்பதுதான் இதன் பின்னிருக்கும் மரபுத் தொடர்ச்சி.</p>
<p>வழக்கம்போல் எழுத்து தரக்கூடிய கொடைகளில் ஒன்று, புதிய நண்பர்கள். நிறைய நண்பர்கள் உருவாகியிருக்கிறார்கள். இவர்களின் தொடர்பைத் தொடர்ந்து பேணுவது என் கடமை. திண்ணை இதழும் இட்லிவடை வலைப்பதிவும் நேசமுடன் இதழ் எழுத்துகளைத் தொடர்ந்து ஆதரித்து வருகின்றனர். அம்ருதா என் இரண்டு கட்டுரைகள் மறுபதிப்பு செய்திருக்கிறது. புத்தகக் கண்காட்சி நடந்த டிசம்பர் 2009 இதழில் இக்கட்டுரைகள் வெளிவந்தது மிகவும் பொருத்தம். அதேபோல்,</p>
<p>இன்னும் வசவுகள் வாங்க ஆரம்பிக்கவில்லை. நான் எழுதும் செய்திகள், வசவுக்கு அதிகம் வாய்ப்பளிக்கவில்லையோ என்னவோ?! இப்படி இருக்கவே ப்ரியம். பார்ப்போம்.</p>
<p>ஒரு விஷயத்த்தில் இன்னும் தொடர்ந்து தப்பு செய்துகொண்டு இருக்கிறேன். நண்பர்கள் எழுதும் கடிதங்களுக்குப் பதில் போடுவதில்லை. சோம்பேறித்தனம் காரணம். இனி அதை மாற்றிக்கொள்ள எண்ணம்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.nesamudan.com/blog/2010/01/21/nesamudan2009review/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>2010 &#8211; செய்ய நினைக்கும் விஷயங்கள்</title>
		<link>http://www.nesamudan.com/blog/2009/12/30/2010expectations/</link>
		<comments>http://www.nesamudan.com/blog/2009/12/30/2010expectations/#comments</comments>
		<pubDate>Wed, 30 Dec 2009 07:12:49 +0000</pubDate>
		<dc:creator>வெங்கடேஷ்</dc:creator>
				<category><![CDATA[பொது]]></category>
		<category><![CDATA[டிஜிட்டல் உலகம்]]></category>
		<category><![CDATA[நேசமுடன்]]></category>
		<category><![CDATA[பா.ராகவன்]]></category>
		<category><![CDATA[மலையாளம்]]></category>
		<category><![CDATA[மிச்சுவல் பண்டு]]></category>
		<category><![CDATA[விகடன் பிரசுரம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.nesamudan.com/blog/?p=296</guid>
		<description><![CDATA[2010 தீர்மானங்கள் என்று நான் இதைப் போடவில்லை. தீர்மானங்களை நிறைவேற்றுவது நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, தனிநபர்களுக்கும் கஷ்டம்தாம். அதனால், இதையெல்லாம் செய்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியதை எழுதி வைக்கிறேன்.]]></description>
			<content:encoded><![CDATA[<p>2010 தீர்மானங்கள் என்று நான் இதைப் போடவில்லை. தீர்மானங்களை நிறைவேற்றுவது நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, தனிநபர்களுக்கும் கஷ்டம்தாம். அதனால், இதையெல்லாம் செய்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியதை எழுதி வைக்கிறேன்.</p>
<p>1. ‘நேசமுடன்’ மடல் இதழை நண்பர்கள் விரும்பிப் படிக்கிறார்கள். இதை வாரம் இருமுறை இதழாக மாற்றங்களேன் என்று கருத்து சொன்னார்கள். எழுதுவதற்கு நிறைய செய்திகள் இருக்கின்றன. எழுத முடியுமா என்றுதான் தெரியவில்லை. மேலும் ஒருவிதத்தில், போர் அடிக்க ஆரம்பித்துவிடுமோ என்ற பயமும் இருக்கிறது. 2010ல் வாய்ப்பிருந்தால், நேசமுடன் மடல் இதழை வாரம் இருமுறை இதழாக அனுப்பிவைக்க உத்தேசம்.</p>
<p>2. பல்வேறு நிலைகளில் இருக்கும் இரண்டு நாவல்களை முடித்து, பிரசுரிக்க முடிந்தால், அற்புதமாக இருக்கும். ஒன்று பத்தாண்டுகளுக்கு மேல் காத்திருக்கிறது. 1998ல் பா.ராகவனோடு, கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா போய் உட்கார்ந்து எழுதியது. இன்னும் முடிக்காமல் இருக்கிறது. சோம்பேறித்தனமே காரணம்.</p>
<p>3. மாதம்  ஒரு சிறுகதையேனும் எழுதவேண்டும்.</p>
<p>4. மலையாளம் எழுதப் படிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பல நாள் ஆசை. மலையாளப் படங்களாகப் பார்த்து வருகிறேன். புரிவது பிரச்னையில்லை. எழுதப் படிக்கத் தெரியவில்லை. அதை 2010ல் செய்ய முடிந்தால் நல்லது.</p>
<p>5. கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘மிச்சுவல் பண்டு’ நூலை ரிவைஸ் செய்து எழுதவேண்டும். மறுபதிப்பு கொண்டு வரவேண்டும்.</p>
<p>6. விகடன் பிரசுரித்த ‘டிஜிட்டல் உலகம்’ புத்தகத்தின் தொடர்ச்சியாக அடுத்த புத்தகம் எழுதவேண்டும். புதிய தொழில்நுட்பங்கள், முன்னேற்றங்கள் பற்றி எழுத எண்ணம்.</p>
<p>எல்லாம் நல்லபடியாக நடக்க நான் வணக்கும் பெருமாள் துணையிருக்க வேண்டும்.</p>
<p>அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.nesamudan.com/blog/2009/12/30/2010expectations/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>2009 &#8211; மறக்க முடியாத ஆண்டு 4 : நானும் நண்பர்களும்</title>
		<link>http://www.nesamudan.com/blog/2009/12/30/2009yearendspl4/</link>
		<comments>http://www.nesamudan.com/blog/2009/12/30/2009yearendspl4/#comments</comments>
		<pubDate>Wed, 30 Dec 2009 07:10:47 +0000</pubDate>
		<dc:creator>வெங்கடேஷ்</dc:creator>
				<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[பொது]]></category>
		<category><![CDATA[அஜயன்பாலா]]></category>
		<category><![CDATA[அருட்செல்வர் நா. மகாலிங்கம்]]></category>
		<category><![CDATA[இரா.முருகன்]]></category>
		<category><![CDATA[கல்கி]]></category>
		<category><![CDATA[கொ.மு.ரியாஜ் அகமது]]></category>
		<category><![CDATA[நேசமுடன்]]></category>
		<category><![CDATA[பா.ராகவன்]]></category>

		<guid isPermaLink="false">http://www.nesamudan.com/blog/?p=294</guid>
		<description><![CDATA[நேசமுடன் மடல் இதழை மீண்டும் தொடங்கவேண்டும் என்று நினைத்தேன். அதைச் செய்ய முடிந்தது. 21 இதழ்கள் வெளியாகி இருக்கின்றன. ஒரு இதழுக்கு 3 கட்டுரைகள் என்றாலும் தோராயமாக 63 கட்டுரைகள் எழுத முடிந்தது. மிக்க மகிழ்ச்சி. எழுதுவதை விட எழுத்தாளனுக்கு வேறென்ன மகிழ்ச்சி இருக்க முடியும்?]]></description>
			<content:encoded><![CDATA[<p>தனிப்பட்ட அளவிலும் நான் ஆர்வம் செலுத்தும் பல செய்திகளின் அடிப்படையிலும் 2009, எனக்கு மறக்க முடியாத ஆண்டு. தனிப்பட்ட அளவில் என்றால், இதெல்லாம் என் மனத்துக்கு மகிழ்ச்சி அளித்தவை:</p>
<p>1. 2009 முழுவதும் பத்திரிகைகளில் நிறைய கட்டுரைகள் எழுதினேன். ஜூனியர் விகடன், கல்கி, நாணயம் விகடன், புதிய தலைமுறை என்று குறைந்தபட்சம் 25 கட்டுரைகளேனும் பிரசுரம் ஆகியிருக்கும்.</p>
<p>2. நேசமுடன் மடல் இதழை மீண்டும் தொடங்கவேண்டும் என்று நினைத்தேன். அதைச் செய்ய முடிந்தது. 21 இதழ்கள் வெளியாகி இருக்கின்றன. ஒரு இதழுக்கு 3 கட்டுரைகள் என்றாலும் தோராயமாக 63 கட்டுரைகள் எழுத முடிந்தது. மிக்க மகிழ்ச்சி. எழுதுவதை விட எழுத்தாளனுக்கு வேறென்ன மகிழ்ச்சி இருக்க முடியும்?</p>
<p>3. கல்கி இணையச் சிறப்பிதழ் தயாரிக்க முடிந்தது நல்லதொரு வாய்ப்பு.</p>
<p>4. இரண்டு புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்க முடிந்தது.</p>
<p>5. என் பள்ளிக்கால நண்பர்களை மீண்டும் சந்திக்க முடிந்தது. வெளிநாடுகளில், வெளியூர்களில் தங்கிவிட்டவர்களை எல்லோரையும் ஃபேஸ்புக் மூலம் இணைத்தோம். அப்புறம், நேரடி சந்திப்புகள் தொங்கி, ஒவ்வொரு காலாண்டிலும் ஒரு சந்திப்பு. மிக்க மகிழ்ச்சியான சந்திப்புகள்.</p>
<p>6. அருட்செல்வர் நா.மகாலிங்கம் அவர்களிடம் நேரடியாகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அவரைப் பற்றி தனியே கட்டுரை எழுத வேண்டும். ஒரே ஒரு செய்தி மட்டும்: லேட்டஸ்டாக என்ன ஆங்கிலப் புத்தகம் வந்தாலும் வாங்கிப் படித்துவிடுவார் அருட்செல்வர். படிக்கும் வேகமும் மிக அதிகம். அதைப் பற்றிய சுயமான கருத்து ஒன்றையும் அவர் உருவாக்கிக்கொள்ளத் தவறுவதில்லை. அவருக்கு வயது 87.</p>
<p>7. இந்த ஆண்டு, நண்பர் இரா. முருகன் திரைபிரவேசம் செய்திருக்கிறார். உன்னைப் போல் ஒருவன் படத்தில் அவர் வசனம் எழுதியிருக்கிறார். இரா.முருகனுக்கு சினிமா ஆசை இருக்கும் என்று நான் நினைத்ததில்லை. சாஃப்ட்வேர் சமர்த்து பிள்ளை என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். வசனங்கள் நன்றாக இருந்தன. அவர் பெயரைத்தான் இறுதி வரிசை டைட்டில் கார்டில் போட்டார்கள். சேத்தன் பகத்துக்கும் 3 இடியட்ஸில் இதுதான் நிலைமை. அவருடைய 5 பாயிண்ட் சம்திங் நாவல்தான் 3 இடியட்ஸ். அவர் பெயரும் இறுதி வரிசையில் ஓடுகிறது. சினிமாவுக்கான விதிகள் வேறு போலும்!</p>
<p>8. பா.ராகவன் வசனம் எழுதிய முதல் திரைப்படம், கனகவேல் காக்க, நான் அறிந்து ஒன்றே கால் ஆண்டுகளாக பெட்டியில் இருக்கிறது. டிசம்பரில் ரிலீஸ் ஆகிவிடும் என்று எதிர்பார்த்தேன். வேட்டைக்காரன் முட்டுக்கட்டைக்காரனாகி விட்டான்.</p>
<p>9. அஜயன் பாலாவை பல ஆண்டுகளாகத் தெரியும். சினிமா ஆசையில், பார்த்துக்கொண்டு இருந்த வேலையை விட்டுவிட்டு, ராஜேஷ்வரிடம் அசிஸ்டெண்ட்டாகப் போய் சேர்வதற்கு முன்பிருந்தே தெரியும். நன்றாக எழுதக் கூடியவர். சினிமா ஆசை பொல்லாதது. துணை இயக்குநர், நடிகர் என்றெல்லாம் முயற்சித்தார். விகடன் மீண்டும் அவரை எழுத வைத்தது. பிரபலங்களின் சாதனைகளை வரிசையாக எழுதினார். எல்லாம் நான்-ஃபிக்‌ஷன். இப்போது, கல்கி இதழில் ‘பகல் மீன்கள்’ என்றொரு தொடர்கதை எழுதுகிறார். இலக்கியத்துக்குள் மீண்டு வந்தது மகிழ்ச்சியாக இருந்தது.</p>
<p>10. பல ஆண்டுகளுக்கு முன்பு, ‘கொக்காட்டி துலுக்கன்’ என்ற பெயரில் கவிதைகள் எழுதியவர் நண்பர் கொ.மு. ரியாஜ் அகமது. நல்ல வாசகர். என் சின்ன வயது நண்பர். பல ஆண்டுகள் கழித்து மீண்டும் அவரை கோவையில் சந்தித்தேன். வாழ்க்கை பல வலிகளை அவருக்கும் வழங்கியிருக்கிறது. அதையும் மீறி உற்சாகமாக இருந்தார். புத்தக வாசிப்பைத் தொடர்கிறார். மகிழ்ச்சியாக இருந்தது.</p>
<p>செய்து முடிக்காதவை, கஷ்டங்கள் எல்லாம் தனிப்பட்டவை. அல்லது அதெல்லாம் முடிந்துபோய்விட்டவை. அதனாலேயே அதற்கு இனிமேல் ஒன்றும் பெரிய முக்கியத்துவம் இல்லை.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.nesamudan.com/blog/2009/12/30/2009yearendspl4/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>2009 &#8211; மறக்க முடியாத ஆண்டு 3 : பொருளாதாரம்</title>
		<link>http://www.nesamudan.com/blog/2009/12/30/2009yearendspl3/</link>
		<comments>http://www.nesamudan.com/blog/2009/12/30/2009yearendspl3/#comments</comments>
		<pubDate>Wed, 30 Dec 2009 07:08:28 +0000</pubDate>
		<dc:creator>வெங்கடேஷ்</dc:creator>
				<category><![CDATA[பொருளாதாரம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[பணவீக்கம்]]></category>
		<category><![CDATA[விலைவாசி உயர்வு]]></category>

		<guid isPermaLink="false">http://www.nesamudan.com/blog/?p=292</guid>
		<description><![CDATA[2009 தொடங்கியபோது, விலைவாசி உயர்வு கடுமையாக இருந்தது. அக்டோபர், நவம்பர் 2008ல் இருந்தே விலைவாசி கடுமையாக உயரத் தொடங்கியிருந்தது. 2009 இறுதி வரை விலைவாசி இறங்கவே இல்லை. காய்கறிகள், பருப்பு வகைகள், மளிகை சாமான்கள் எல்லாம் கீழ் மத்திய வர்க்கமும் மத்திய வர்க்கமும் வாங்க முடியாத உயரத்துக்குப் போய்விட்டது. எந்த விதமான நடவடிக்கையையும் மத்திய அரசு மேற்கொண்டதாகத் தெரியவில்லை.]]></description>
			<content:encoded><![CDATA[<p>1. 2009 தொடங்கியபோது, விலைவாசி உயர்வு கடுமையாக இருந்தது. அக்டோபர், நவம்பர் 2008ல் இருந்தே விலைவாசி கடுமையாக உயரத் தொடங்கியிருந்தது. 2009 இறுதி வரை விலைவாசி இறங்கவே இல்லை. காய்கறிகள், பருப்பு வகைகள், மளிகை சாமான்கள் எல்லாம் கீழ் மத்திய வர்க்கமும் மத்திய வர்க்கமும் வாங்க முடியாத உயரத்துக்குப் போய்விட்டது. எந்த விதமான நடவடிக்கையையும் மத்திய அரசு மேற்கொண்டதாகத் தெரியவில்லை.</p>
<p>2. சர்வதேச பொருளாதாரம், குறிப்பாக அமெரிக்கப் பொருளாதாரம் மெல்ல மெல்ல வளரத் தொடங்கியது. அதுவும், மக்களுக்கு, அமெரிக்க அரசு கொடுத்த வரிச்சலுகை, பணப்பட்டுவாடா மூலம், மக்கள் கையில் பணப்புழக்கத்தை அரசு மேம்படுத்தியது. இதனால், மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும், அதன் மூலம் உற்பத்தி பெருகும் என்பது எதிர்பார்ப்பு. எதிர்பார்த்தபடியே ஒவ்வொரு உற்பத்தி நிறுவனமும் வளர்ந்திருப்பதாக, 2009 கடைசி காலாண்டு நிதி அறிக்கைகளில் விவரங்களைத் தெரிவித்திருக்கின்றன.</p>
<p>3. ஆனால், வேலைவாய்ப்பு உயரவில்லை. அமெரிக்காவிலும் உயரவில்லை. இந்தியாவிலும் உயரவில்லை. எல்லா இடங்களிலும் ஒருவித பயமும் தயக்குமும் அப்படியே இருக்கின்றன. உருவாகியிருக்கும் வேலைவாய்ப்புகளும் ஆரம்பநிலை வேலைகளுக்கே உருவாகியிருக்கிறது. குறைந்த ஊதிய வேலைகள் அவை. அல்லது ஒப்பந்த வேலைகள். இந்திய ஐடி நிறுவனங்கள் இனிமேல் தான் கேம்பஸ் இண்டர்வியூக்களுக்கு வரவேண்டும்.</p>
<p>4. பங்குச் சந்தை, முரட்டுக் குதிரை மாதிரி ஓடிக்கொண்டு இருக்கிறது. என்ன காரணத்துக்காக ஏறுகிறது என்று முகாந்திரமே இல்லாமல் சென்செக்ஸும், நிஃப்டியும் ஏறுகின்றனவோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் ஜிடிபி 9 சதவிகிதத்தைத் தொடலாம் என்று நிதி அமைச்சர் சொன்னால், அன்றே 500 புள்ளிகள் சென்செக்ஸ் ஏறுகிறது. இதற்கெல்லாம் ஏதாவது அடிப்படை இருக்கிறதா என்றும் தெரியவில்லை. பல நிறுவனங்களின் லாப விகிதம் இன்னும் உயரவில்லை. உற்பத்தியும் விற்பனையும் உயரவில்லை. ஆட்டோ, வங்கித் துறை, பார்மா துறைகளில் வளர்ச்சி தென்படுகிறது. ஆனால், அரசின் முதலீடு அதிகரிக்கும், கட்டுமான முதலீடுகள் பெருகும் என்ற எதிர்பாப்பில், ஒவ்வொரு நிறுவன விலையும் உயர்ந்துகொண்டே செல்கின்றன.</p>
<p>மனநிலை நன்றாக இருக்கும்போது, உற்சாகமாக இருக்கும்போது, ஒரு குறிப்பிட்ட பங்குக்கு எவ்வளவு வேண்டுமானாலும் பிரிமியம் கொடுக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். அதுதான் இப்போது நடந்துகொண்டு இருக்கிறது.</p>
<p>5. பணவீக்கமும் விலைவாசி உயர்வும் கட்டுப்படுத்தப்படாததால், இந்திய மக்களைப் பொறுத்தவரை, 2009 ஒரு வலி நிறைந்த ஆண்டே.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.nesamudan.com/blog/2009/12/30/2009yearendspl3/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>2009 &#8211; மறக்க முடியாத ஆண்டு 2 : பத்திரிகை</title>
		<link>http://www.nesamudan.com/blog/2009/12/30/2009yearendspl2/</link>
		<comments>http://www.nesamudan.com/blog/2009/12/30/2009yearendspl2/#comments</comments>
		<pubDate>Wed, 30 Dec 2009 07:06:40 +0000</pubDate>
		<dc:creator>வெங்கடேஷ்</dc:creator>
				<category><![CDATA[இதழியல்]]></category>
		<category><![CDATA[அகநாழிகை]]></category>
		<category><![CDATA[சுந்தர்ஜி]]></category>
		<category><![CDATA[சூரிய கதிர்]]></category>
		<category><![CDATA[தஞ்சாவூர் கவிராயர்]]></category>
		<category><![CDATA[திரிசக்தி]]></category>
		<category><![CDATA[தேவதை]]></category>
		<category><![CDATA[புதிய தலைமுறை]]></category>

		<guid isPermaLink="false">http://www.nesamudan.com/blog/?p=290</guid>
		<description><![CDATA[புதிய தலைமுறை: இதழாளர், எழுத்தாளர் மாலனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் இதழ். ரூ.5 என்ற விலை ஒரு பெரிய அட்ராக்‌ஷன். நல்ல விளம்பரம் இன்னொரு அட்ராக்‌ஷன். இதழ் மிகவும் தரமாக இருக்கிறது. வழக்கமான பத்திரிகை ஃபார்மேட்டில் இல்லாமல், வேறு ஒரு பாதையை உருவாக்குகிறது புதிய தலைமுறை. ஆங்கில டைம் இதழின் சாயல் உள்ளடக்கத்திலும் வடிவமைப்பிலும் நிறைய உண்டு. இளைஞர்கள் என்றாலே இப்படித்தான் இருப்பார்கள், அவர்களுடைய ஆர்வங்கள் இப்படித்தான் என்று வெகுஜன மனத்தில் ஒரு ஸ்டீரியோடைப்பிங் இருக்கிறது. அதை முற்றிலும் மாலன் உடைத்திருக்கிறார்.]]></description>
			<content:encoded><![CDATA[<p>2009ல் தமிழில் வெளியான புதிய இதழ்கள் இவை:</p>
<p>1. புதிய தலைமுறை: இதழாளர், எழுத்தாளர் மாலனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் இதழ். ரூ.5 என்ற விலை ஒரு பெரிய அட்ராக்‌ஷன். நல்ல விளம்பரம் இன்னொரு அட்ராக்‌ஷன். இதழ் மிகவும் தரமாக இருக்கிறது. வழக்கமான பத்திரிகை ஃபார்மேட்டில் இல்லாமல், வேறு ஒரு பாதையை உருவாக்குகிறது புதிய தலைமுறை. ஆங்கில டைம் இதழின் சாயல் உள்ளடக்கத்திலும் வடிவமைப்பிலும் நிறைய உண்டு. இளைஞர்கள் என்றாலே இப்படித்தான் இருப்பார்கள், அவர்களுடைய ஆர்வங்கள் இப்படித்தான் என்று வெகுஜன மனத்தில் ஒரு ஸ்டீரியோடைப்பிங் இருக்கிறது. அதை முற்றிலும் மாலன் உடைத்திருக்கிறார். அவர்களுடைய சுவைக்கு ஏற்றார்போல் செய்திகளைக் கொடுப்பதைவிட, எதையெல்லாம் அவர்கள் தெரிந்துகொண்டால் பயனுடையதாக இருக்கும், வாழ்க்கைக்கு உதவும், மேம்பாடுக்கு உதவும்  என்ற கண்ணோட்டத்தில் ஒரு தப்படி முன்னே நகர்ந்து யோசித்திருக்கிறார் மாலன்.</p>
<p>2. சூரிய கதிர்: இதழாளர் ராவ்வை ஆசிரியராகக் கொண்டு வெளியாகி இருக்கும் இதழ். வெகுஜன ரசனையைப் பின்பற்றி உருவாகியிருக்கும் இதழ். நிச்சயம் மிடில்கிளாஸைச் சேர்ந்த வாசகர்களுக்கு சூரிய கதிர் பிடிக்கும். விளம்பரம் போதவில்லை. விலையும் கூடுதலோ என்ற எண்ணம் இருக்கிறது.</p>
<p>3. திரிசக்தி, தேவதை: கிரிகுஜா பப்ளிகேஷன்ஸ் சுந்தரராமனின் இதழ்கள் இவை. திரிசக்தி ஆன்மிக இதழ். ஆசிரியர்: பி.சுவாமிநாதன். தேவதை பெண்கள் இதழ். ஆசிரியர்: தயாமலர். இரண்டுமே மிக அற்புதமாக உருவாகி இருக்கின்றன. இன்றைய வாசகர்களின் தேவைகளை நன்கு உணர்ந்து இவ்விதழ்கள் கட்டுரைகளை வெளியிடுகின்றன. தமிழ் இதழ்களிடையே போட்டி மிகுந்திருக்கும் சூழ்நிலையில், திரிசக்தி 70,000 பிரதிகள் விற்பனை ஆவதாக சுந்தரராமன் ஒரு விழாவில் குறிப்பிட்டார். மார்க்கெட்டிங் பலம் என்பது அதுதான். உள்ளடக்கம் நன்றாக இருப்பதோடு, போதிய அளவு ஃபீல்ட் ஒர்க் செய்யவேண்டும். அப்போதுதான், இதழ்கள் மக்களிடம் போய்ச் சேரும். இரண்டுமே நன்கு சேர்ந்திருக்கின்றன. திரிசக்தி தீபாவளி மலரும் வெளியிட்டது.</p>
<p>4. சுபவரம்: இதழாளர் ம.கா.சிவஞானம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளியாகியிருக்கும் புதிய ஆன்மிக மாத இதழ். தேர்ந்த இதழ் தயாரிப்பு. ஆன்மிக இதழ்களை வாசிப்போரின் தேவைகளை உணர்ந்துகொண்ட உள்ளடக்கம். போதிய விளம்பரமும் மார்க்கெட்டிங்கும் இல்லாததால், அதிகம் இந்த இதழ் தெரியவில்லை.</p>
<p>5. தஞ்சாவூர் கவிராயர், சுந்தர்ஜி : இரண்டுமே தனி நபர்களின் தனி இதழ்கள். அவரவர்களின் வாசிப்பு, ஆளுமை, தேர்ந்த ரசனை ஆகியவற்றை நேரடியாக இவ்விதழ்களின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. நல்ல கான்செப்ட்.</p>
<p>6. அகநாழிகை: பொன்.வாசுதேவனை ஆசிரியராக இருந்து வெளியிடும் இதழ். சிறுபத்திரிகைகளில் படைப்பிலக்கியத்துக்கு மீண்டும் கவனம் திரும்பியிருக்கிறது. அகநாழிகை எனக்கு நம்பிக்கை தரும் இதழாக இருக்கிறது.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.nesamudan.com/blog/2009/12/30/2009yearendspl2/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>2009 &#8211; மறக்க முடியாத ஆண்டு 1 : பதிப்பகம்</title>
		<link>http://www.nesamudan.com/blog/2009/12/30/2009yearendspl1/</link>
		<comments>http://www.nesamudan.com/blog/2009/12/30/2009yearendspl1/#comments</comments>
		<pubDate>Wed, 30 Dec 2009 07:04:06 +0000</pubDate>
		<dc:creator>வெங்கடேஷ்</dc:creator>
				<category><![CDATA[பதிப்பகம்]]></category>
		<category><![CDATA[அகநாழிகை]]></category>
		<category><![CDATA[ஆழி பதிப்பகம்]]></category>
		<category><![CDATA[உயிர் எழுத்து]]></category>
		<category><![CDATA[உயிர்மை]]></category>
		<category><![CDATA[காலச்சுவடு]]></category>
		<category><![CDATA[கிழக்கு பதிப்பகம்]]></category>
		<category><![CDATA[திரிசக்தி]]></category>
		<category><![CDATA[வம்சி புக்ஸ்]]></category>
		<category><![CDATA[விகடன் பிரசுரம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.nesamudan.com/blog/?p=288</guid>
		<description><![CDATA[திரிசக்தி பதிப்பகம், உயிர் எழுத்து வெளியீடு, அகநாழிகை பதிப்பகம் ஆகியவை இந்த ஆண்டு என் கண்ணுக்குத் தெரிந்த புதிய அறிமுகங்கள். திரிசக்தி 27 நூல்களை வெளியிட்டிருக்கிறது. உயிர் எழுத்து 30.12.2009 அன்று வெளியீட்டு விழா வைத்திருக்கிறது. அகநாழிகை பத்திரிகை நூல்களை வெளியிடத் தொடங்கியிருக்கிறது.

]]></description>
			<content:encoded><![CDATA[<p>2009 ஆம் ஆண்டு ஒருவித தொய்வுடன் தொடங்கிய மாதிரி இருந்தது. 2009 சென்னைப் புத்தகக் கண்காட்சி பலருக்கு அவ்வளவு வருவாய் ஈட்டித் தரவில்லை. சிறு பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் ஒருவிதமான வருத்தத்தில் இருந்தார்கள். சர்வதேசப் பொருளாதாரத் தேக்கம், வேலையிழப்பு, பணப்புழக்கம் இன்மை ஆகியவை ஒருவகையில் பதிப்பாளர்களை நிரம்ப யோசிக்க வைத்தது.</p>
<p>ஜூன் மாதம் வரை கூட, பல பதிப்பாளர்கள் அதிகம் சுவாரசியம் இல்லாமல் இருந்தார்கள். விகடன் பிரசுரம், நூல்களின் எண்ணிக்கையைக் குறைத்தது. நிறைய மொழிபெயர்ப்புகளில் கவனம் செலுத்தத் தொடங்கியது. கிழக்கு பதிப்பகம், ரூ. 20 &#8212; ரூ. 25 விலை வரிசையில் ஒரு மார்க்கெட் இருப்பதை ஏற்கெனவே உணர்ந்துகொண்டு இருந்தது. எண்ணற்ற நூல்களை இந்த விலைக்கு ஏற்ப வெளியிடத் தொடங்கியது. பள்ளி நூலகங்கள், பள்ளி விழா பரிசுகளுக்கு இந்நூல்கள் பயனுடையதாக இருந்தன.</p>
<p>2009ல் ஆழி பதிப்பகம் அமைதியாக முன்னுக்கு வந்திருக்கிறது. அதே போல், திருவண்ணாமலையில் இருக்கும் வம்சி புக்ஸும் முன்னுக்கு வந்திருக்கிறது.</p>
<p>செப்டம்பர், அக்டோபருக்குப் பின்னர் ஆர்வம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. அதற்கு முன்னர் நடந்த நெய்வேலி புத்தகக் கண்காட்சியை யாரும் அவ்வளவு சுவாரசியமாகச் சொல்லவில்லை. நவம்பர், டிசம்பரில் ஏராளமான நூல்கள் வெளியாகி இருக்கின்றன.</p>
<p>சிறிய பதிப்பாளர்கள்தான் ஏராளமான நூல்களோடு வெளியே வந்திருக்கிறார்கள். காலச்சுவடு, உயிர்மை நிறைய நூல்களை வெளியிட்டிருக்கிறது.</p>
<p>திரிசக்தி பதிப்பகம், உயிர் எழுத்து வெளியீடு, அகநாழிகை பதிப்பகம் ஆகியவை இந்த ஆண்டு என் கண்ணுக்குத் தெரிந்த புதிய அறிமுகங்கள். திரிசக்தி 27 நூல்களை வெளியிட்டிருக்கிறது. உயிர் எழுத்து 30.12.2009 அன்று வெளியீட்டு விழா வைத்திருக்கிறது. அகநாழிகை பத்திரிகை நூல்களை வெளியிடத் தொடங்கியிருக்கிறது.</p>
<p>நான் நாவல் ப்ரியன். இந்த ஆண்டு என்னென்ன நாவல்கள் வந்திருக்கின்றன் என்று பட்டியல் தயாரித்துக்கொண்டு இருக்கிறேன். விரைவில் அதை நேசமுடன் மடல் இதழில் வெளியிடுகிறேன்.</p>
<p>இன்று (30.12.2009) நிறைய எதிர்பார்ப்புகளோடு, சென்னைப் புத்தக கண்காட்சி தொடங்குகிறது. பார்த்துவிட்டு எழுதுகிறேன்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.nesamudan.com/blog/2009/12/30/2009yearendspl1/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>
