நேசமுடன்

நேசமுடன் 2009 – ஒரு ரெவியூ

Posted in நேசமுடன் on January 21st, 2010 by வெங்கடேஷ் – 1 Comment

புத்தாண்டில் எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ, அது நடந்துவிட்டது. புத்தாண்டின் முதல் நேசமுடன் இதழ் 6ஆம் தேதி புதன்கிழமை அன்று வந்திருக்கவேண்டும். வெளிவரவில்லை. புதிய பணி, வேலை அழுத்தம் என்று எந்தக் காரணத்தையும் என் மனம் ஏற்க மறுக்கின்றது.

அடிப்படையில் எழுத்து, என் மகிழ்ச்சிக்காக. நான் ரசிக்கவில்லை என்றால், இதை எழுதுவதே வேஸ்ட். என் ரசனை, என் எழுத்தைப் படிக்கும் பலரது ரசனைக்கும் ஏற்புடையதாக இருந்தால், இன்னும் மகிழ்ச்சி. ஏதோ ஒரு முனையில் ரசனைகள் ஒன்று சேரும். ஒரு சில விஷயங்களில், அனுபவங்களில் ரசனைகள் ஒன்று குவியும். அதுதான் எழுத்தாளனும் வாசகனும் சந்தித்துக்கொள்ளும் இடம்.

நேசமுடன் மடல் இதழ் பற்றி சென்ற 21 இதழ்களில் பலவித விமர்சனங்கள் வந்திருக்கின்றன.

1. இந்த மடல் இதழ் என்ற கருத்தே அபத்தம், அல்லது இது ஒரு பிரிமிட்டிவ் மாடல். இதன் பிறகு வலைப்பதிவுகள் என்ற அடுத்த தொழில்நுட்ப சாத்தியம் வந்தபிறகு இதைப் பிடித்துக்கொண்டு தொங்குவது அபத்தம்.
2. நான் உயர்ந்த பெடஸ்டலில் அமர்ந்துகொண்டு எழுதுகிறேன்.
3. கருத்துகளில், ஆழம் இல்லை. மேம்போக்கான பத்திரிகை எழுத்து இது.
4. ஒவ்வொரு கட்டுரையும் மிகவும் நீளமாக இருக்கிறது. இன்னும் நறுக்கென்று எழுதலாம்.
5. நிறைய ஆங்கிலச் சொற்களைப் பெய்து எழுதுகிறேன்.

பலருக்கு என்னை எந்தச் சிமிழில் வைத்துப் பொருத்திப் புரிந்துகொள்வது என்ற சிரமம் இருக்கிறது. வழக்கமான வெகுஜன இதழாளன் / எழுத்தாளன் என்று சொல்லிவிடுவது மிகவும் சுலபம். அதே சமயம், நவீன இலக்கியம் பற்றியெல்லாம் இந்தாள் பேசித்தொலைக்கிறான். இவனை ஒரு சிறுபத்திரிகை வட்டத்தைச் சேர்ந்தவன் என்று புரிந்துகொள்வதும், சீரியஸ்ஸான எழுத்தாளன் என்று ஏற்றுக்கொள்வதும் சரியாயில்லை.

என் மரபை, என் வழியை, என் இடத்தை, என் முதல் சிறுகதைத் தொகுதியின் முன்னுரையில் எடுத்து எழுதியிருக்கிறேன். தமிழ் எழுத்தில் ஒரு மிடில் பாத் உண்டு. இந்திரா பார்த்தசாரதி, ஆதவன், சுப்பிரமணிய ராஜு, கந்தர்வன் ஆகிய எழுத்தாளர்கள் தம் எழுத்தின் வலிமையை என்றும், எங்கேயும்  குறைத்துக்கொண்டதில்லை. இவர்கள் வெகுஜன இதழ், சிற்றிதழ் என்ற பிரிவினைகளை பெரிதாக எடுத்துக்கொண்டதில்லை. இவர்கள் அனைவரும் வெகுஜன இதழ்களிலேயே தம் பெரும்பாலான படைப்புகளை எழுதியிருக்கிறார்கள். நல்ல எழுத்தை, பரந்த வாசகர்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என்பதுதான் இதன் பின்னிருக்கும் மரபுத் தொடர்ச்சி.

வழக்கம்போல் எழுத்து தரக்கூடிய கொடைகளில் ஒன்று, புதிய நண்பர்கள். நிறைய நண்பர்கள் உருவாகியிருக்கிறார்கள். இவர்களின் தொடர்பைத் தொடர்ந்து பேணுவது என் கடமை. திண்ணை இதழும் இட்லிவடை வலைப்பதிவும் நேசமுடன் இதழ் எழுத்துகளைத் தொடர்ந்து ஆதரித்து வருகின்றனர். அம்ருதா என் இரண்டு கட்டுரைகள் மறுபதிப்பு செய்திருக்கிறது. புத்தகக் கண்காட்சி நடந்த டிசம்பர் 2009 இதழில் இக்கட்டுரைகள் வெளிவந்தது மிகவும் பொருத்தம். அதேபோல்,

இன்னும் வசவுகள் வாங்க ஆரம்பிக்கவில்லை. நான் எழுதும் செய்திகள், வசவுக்கு அதிகம் வாய்ப்பளிக்கவில்லையோ என்னவோ?! இப்படி இருக்கவே ப்ரியம். பார்ப்போம்.

ஒரு விஷயத்த்தில் இன்னும் தொடர்ந்து தப்பு செய்துகொண்டு இருக்கிறேன். நண்பர்கள் எழுதும் கடிதங்களுக்குப் பதில் போடுவதில்லை. சோம்பேறித்தனம் காரணம். இனி அதை மாற்றிக்கொள்ள எண்ணம்.

முந்தியிருப்பச் செயல் – ஹரிகிருஷ்ணன் கடிதம்

Posted in கடிதங்கள், நேசமுடன் on October 20th, 2009 by வெங்கடேஷ் – 1 Comment

எது முடிகிறதோ இல்லையோ, ஒன்றை மட்டும் நான் செய்யக்கூடாது என்று மிகவும் கவனமாக இருந்து வருகிறேன். எந்த வகையிலும் நான் என் கருத்துகளை, ஆர்வங்களை, எதிர்பார்ப்புகளையோ என் மகள் மேல் திணித்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். ஏனெனில், என் பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளை நான் என்றுமே நிறைவு செய்ய முடிந்ததில்லை. என் மகள் மட்டும் அதை எப்படிச் செய்வாள்?

:-) ))

முடியவே முடியாத காரியம் வெங்கடேஷ்.  நான் குடும்பத்தில் ஒரு non-interfering வகைப் பிராணி.  மனைவிக்கு வந்திருக்கும் இன்ஷூரன்ஸ் பாலிசி நினைவூட்டுக் கடிதத்தைக்கூட பிரிக்க மாட்டேன்.  அவரவருக்கு வந்த கடிதத்தை அவரவர்தான் பிரிக்கவேண்டும் என்பது குடும்பத்துக்குப் பொதுவிதியாகவே போய்விட்டது. 

ஆனால், ஒவ்வொரு பிள்ளைக்கும் அப்பா ஒரு (குறைந்தபட்சமாகச் சொல்வதானால்) அதாரிடேடிவ் டிக்டேடர்தான்.   இருபது வயதைத் தாண்டும் வரையில் பிள்ளைக்கு அப்பா சூப்பர்வைசராகத்தான் தென்படுவார்.  உங்கள் புண்ணியம்.  பெண் குழந்தைகளைப் பெற்றிருக்கிறீர்கள்.  என்றென்றும் அப்பாவுக்குள் இருப்பவர்கள். 

பசங்க கதையே வேற.  அதை உங்களிடம் சொல்லத் தேவையில்லை. நீங்களும் நானும் பசங்களா இருந்துதானே பெரியவங்களாகியிருக்கோம்!  ‘எம்பிள்ளைக்கு நான் பரிபூரண சுதந்திரம் கொடு்த்திருக்கிறேன்’ என்றுதான் என் அப்பாவும் சொல்லிக் கொண்டிருந்தார்.  நானும் இப்போது அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.  சொல்வதில்லை.  என் கருத்து, என் ஆர்வம் எல்லாம் என்வரையில்தான்.  நான் பிள்ளைகளை வற்புறத்துவதில்லை.  ரெண்டு பசங்களும் பழந்தமிழ் இலக்கியம்னா என்ன என்றே தெரியாதவர்கள்.  அவரவருக்கு அவரவர் ஆர்வம் என்று நானும் தலையிடுவதில்லை.  அப்பாவைப் பற்றிய பார்வை என்னவோ ஒரு பன்னிரண்டு-பதினைந்து தொடங்கி ஒரு முப்பது தாண்டும் வரையில் டமால் டுமலாகத்தான் இருக்கும்.  உண்டுதானே?  ஆண்குழந்தையைப் பெற்றவன் பார்வையிலிருந்து கொஞ்சம் பாருங்க சார்! 

அன்புடன்,
ஹரிகி.

பதிலற்ற கேள்விகள்

Posted in நேசமுடன், பொருளாதாரம் on August 14th, 2009 by வெங்கடேஷ் – 1 Comment
ஒவ்வொரு பிரச்னையும் ஒவ்வொரு பாடத்தைச் சொல்லிக்கொடுக்கின்றன. அந்தப் பிரச்னை வரும்வரை, அதற்கு முன்பு இருந்த மெய்மையையே நம்பிக்கொண்டு இருப்பதும், பிரச்னை வந்து தாக்கியபின் பிறிதொரு மெய்மை துலங்குவதும் வாடிக்கையாகிவிட்டது. பொருளாதாரம், வளர்ச்சி, பங்குச் சந்தை, முதலீடு தொடர்பாக இருந்த என்னுடைய பல எண்ணங்களை, கருத்துகளை, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீடிக்கும் பொருளாதாரச் சரிவு மாற்றியமைத்துவிட்டது. மாற்றி அமைத்துவிட்டது என்பதைவிட, வேறு மெய்மைகளைப் பார்க்கும் பக்குவத்தை ஏற்படுத்தித் தந்திருக்கிறது.
அமெரிக்காவில் தொடங்கிய பொருளாதாரச் சரிவு விரைவில் முடிவுக்கு வரும் போல் தோன்றவில்லை. ஒவ்வொரு வாரமும் வெளியாகும் ஏதேனும் ஒரு அறிக்கை கொஞ்சம் தைரியமும் உற்சாகமும் கொடுக்கும். அடுத்த வாரமே மற்றொரு அறிக்கை வெளியாகி, முந்தைய நம்பிக்கையை எல்லாம் வாரிச் சுருட்டிக்கொண்டு போய்விடும். அமெரிக்காவைப் பொறுத்தவரை பிடித்த ஒரு விஷயம் எல்லாவற்றையும் அளப்பதற்கென்று அளவுகோல்களையும் குறியீட்டெண்களையும் நிர்ணயித்து இருப்பதுதான். எதையும் அனுமானத்தின் பேரில் முடிவுகளை எடுப்பதைவிட, தீர்மானமான அளவுகோல்களின் அடிப்படையில் முடிவுகள் எடுப்பது பல மடங்கு நன்மை செய்யக் கூடியது.
இந்தியாவில் இதுபோல் அளவுகோல்களோ, அறிக்கைகளோ, குறியீட்டெண்களோ நிறைய துறைகளில் கிடையாது. முக்கியமாக வேலை இழப்பு பற்றி இந்தியாவில் நான் படித்தது எல்லாம் தனியார் நிறுவனங்கள் அளிக்கும் அறிக்கைகளே. அல்லது குறிப்பிட்ட நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களில் இத்தனை சதவிகிதம் பேர்களை வீட்டுக்கு அனுப்பப் போகிறோம் என்று சொல்லும் தகவல்களே. பங்குச் சந்தை நண்பர் ஒருவர், இதுபோன்ற குறியீட்டெண் முறை இங்கே அதிகம் இல்லாதது மிகவும் நல்லது என்றார். இல்லையென்றால், ஒவ்வொரு வாரமும் இதுபோன்ற அறிக்கைகள் வெளியாகி, மக்கள் மனத்தில் பீதியையே அதிகப்படுத்தும் என்பது அவர் வாதம்.
என் வாதம்: இது முழு பூசணிக்காயை சோற்றில் மூடிமறைக்கும் வித்தை. எல்லோரும் சுபிட்சமாக இருக்கிறார்கள், எல்லோரும் நன்கு சம்பாதிக்கிறார்கள், இந்தியா முன்னேறுகிறது, எல்லாரும் சேர்ந்து ஜோரா ஒரு தரம் கைதட்டுங்கள் என்று தெருமுனை வித்தைக்காரன் சொல்வது போல் இருக்கிறது. எத்தனை வேலைகள் புதிதாக உற்பத்தியாயின, எத்தனை வேலைகள் பறிபோயின என்று மக்களுக்குத் தெரியவேண்டாமா?
இது ஒரு தனித் தலைவலி. விஷயத்துக்கு வருவோம். ஒவ்வொரு நாளும் அரசு அல்லாத நிறுவனங்கள் தெரிவிக்கும் வேலை இழப்பு எண்ணிக்கையைத் தொடர்ந்து படித்து வந்தாலே, பொருளாதாரச் சரிவு எவ்வளவு மோசமாக இந்தியாவைப் பாதித்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். நேற்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசும்போது, 2009 – 10 ஆம் நிதியாண்டில் எப்படியும் 6 சதவிகித மொத்த வளர்ச்சி விகிதத்தை (ஜிடிபி) எட்டிவிடுவோம் என்கிறார். கடந்த வாரம், கிரிசிலும் (CRISIL), Centre for Monitoring Indian Economyயும், இந்த ஆண்டின் ஜிடிபி 5.8 % தான் இருக்கும் என்கிறது.
மற்ற நாடுகளைப் பார்க்கும்போது, இந்தியாவின் 5.8 % வளர்ச்சி என்பதே பெரிய முன்னேற்றம்போல் தோன்றக்கூடும். இதைக் கொஞ்சம் சரித்திர ரீதியாகப் பார்த்தால் புரிந்துகொள்ள முடியும். இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் இருந்து பார்த்தால், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் பூஜ்ஜியத்துக்குக் கீழே, நெகட்டிவ்வாக இருந்ததில்லை. அதாவது நாம் பொருளாதார வீழ்ச்சியைச் (ரிசெஷனை) சந்தித்ததில்லை. சரிவைச் சந்தித்து இருக்கிறோம். எண்பதுகள் வரை 5 % வளர்ச்சி இருந்தது. பின்னர், பொருளாதார தாராளமயமாக்கலினால், அது 9 சதவிகிதம் வரை உயர்ந்தது. இப்போது, அது மீண்டும் இந்த நிதியாண்டில் 5.6 சதவிகிதமோ (அல்லது 6 சதவிகிதமோ) இருக்குமானால், சரிவை நீங்கள் யோசித்துப் பார்க்கலாம்.
நூறு கோடிக்கும் மேல் மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டில், ஒவ்வொரு சதவிகிதச் சரிவும், பல லட்சம் வேலைகள் பறிபோனதைக் காட்டுகின்றன. பல்வேறு தொழில்கள் நசிந்துபோனதைக் காட்டுகின்றன. பல்வேறு நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டதைக் காட்டுகின்றன. புதிய தொழில் முயற்சிகள் தள்ளிப் போடப்படுவதைக் காட்டுகின்றன. மக்கள் தம் அன்றாட வாழ்வை நடத்த முடியாமல் போவதைக் காட்டுகிறது.
கண்ணெதிரே பல நிறுவனங்கள், தொழில்கள் நசிந்துபோய்க்கொண்டு இருக்கின்றன. ஏற்கனவே விவசாயம் கஷ்டதிசையில் இருக்க, இந்த ஆண்டு, பல மாநிலங்களில் இன்னும் பருவ மழையே தொடங்கவில்லை. விளைவு, விவசாயம் தொடங்கவில்லை. கூடிய விரைவில், அரிசி, பருப்பு போன்ற அன்றாடம் பயன்படும் பொருள்களின் விலைகள் இன்னும் ஏறப் போகின்றன.
இந்த் நிலையில், எண்ணற்ற நிறுவனங்கள் தம் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பிவைத்துவிட்டன. ஒரு தொழில் துறை பாக்கியில்லாமல், வேலைக் குறைப்பு நடந்திருக்கிறது. அதுவும் பொறியியல் படித்த புது மாணவர்களின் பாடு இன்னும் மோசம். சென்ற ஆண்டு முடித்த பலருக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. அப்படியே ஆஃப்ர் லெட்டர் கிடைத்தவர்களும், வேலைக்கு அழைக்கப்படாமல் திரிசங்கு சொர்க்கத்தில் நிற்கிறார்கள். பல ஐடி நிறுவனங்களில், ஐந்து முதல் பத்து சதவிகிதம் வரை சம்பளக் குறைப்பு நடந்திருக்கிறது. உபரி செலவுகள் என்று அந்த நிறுவனங்கள் நினைக்கும் பல செலவுகள் முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டுவிட்டன.
சென்னையில் எனக்குத் தெரிந்த இரண்டு ஐடி நிறுவனங்களில், கடந்த எட்டு மாதங்களாக சம்பள பாக்கி. உடனடியாக வேறு வேலையும் கிடைக்காத நிலையில், அப்படியே கிடைத்தாலும் இப்போது கிடைக்கும் சம்பளத்தில் பாதியளவு தான் கிடைக்கக்கூடிய நிலையில், இளைஞர்கள் திண்டாடுவதைப் பார்க்க சகிக்கவில்லை. தி. நகரில், எல்டாம்ஸ் ரோடில் சாலையோரங்களில் புதிதாக சொம்பில் கூழ் விற்க ஆரம்பித்து இருக்கிறார்கள். ஐடி இளைஞர்கள் இதன் முக்கிய கஸ்டமர்களாகி இருக்கிறார்கள். அவர்கள் அங்கே சுவைக்காக மட்டும் வந்து கூழ் குடிக்கவில்லை என்பது கண்கூடு.
இந்த நிலையில், மத்திய அரசோ மாநில அரசுகளோ ஏழைகளுக்குப் பயன்படும் விவசாய, உர மானியங்களை வழங்கக்கூடாது, சர்வதேச கச்சா எண்ணை விலையை ஒட்டி, இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை இருக்க வேண்டும், ஒவ்வொரு எண்ணை சுத்திகரிப்பு நிறுவனமும் தாமே விலை நிர்ணயம் செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட வேண்டும், வங்கிகளை குறைந்த வட்டியில் கடன்கொடுக்க வற்புறுத்தக் கூடாது என்று வரிசையாக எண்ணற்ற கருத்துகளை மெத்தப் படித்தவர்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். Controlled Price Mechanism இல்லையென்றால், இத்தனை நேரத்துக்கு இந்தியாவில் எத்தனை பசி, பட்டினிச் சாவுகள் அரங்கேறியிருக்கும் என்பதை இவர்கள் காண மறுக்கிறார்கள்.
பொருளாதாரம் நன்றாக இருக்கும் நேரத்தில், யாரும் எதுவும் செய்யவேண்டியதில்லை. ஆனால், இதுபோன்ற கடினமான காலகட்டங்களில்தான் ஒரு சமூகநலன் பேணும் அரசின் செயல்பாடு முக்கியமாகிறது. அதுவும் இந்தியா போன்ற சமூகப் பாதுகாப்பு அமைப்போ, திட்டமோ இல்லாத நாட்டில், வேலை இழந்த ஒருவன் எங்கேதான் போய் நிற்பான்? வேலை கிடைக்காதவர்கள் எங்கே போய் நிற்பார்கள்? அவனை அண்டி வாழும் குடும்பத்தின் நிலை என்னாகும்?
தெரியவில்லை. உடனே எல்லாவற்றையும் தேசியமயமாக்குவதுதான் சரியான தீர்வு என்று நான் நினைக்கவில்லை. நாம் தேசியமயமாக்குதலின் குறைகளை நிறையவே பார்த்துவிட்டோம். முழுமையான திறந்த பொருளாதாரத்துக்கும் நம்மால் போக முடியவில்லை. பழைய மாதிரி, லைசென்ஸ் கோட்டா ராஜ் என்று, கவர்மெண்டே கடவுள் என்று இருக்கவும் முடியவில்லை.
கேள்விகள் மட்டும் கேள்விகளாகவே நிற்கின்றன.
ஒவ்வொரு பிரச்னையும் ஒவ்வொரு பாடத்தைச் சொல்லிக்கொடுக்கின்றன. அந்தப் பிரச்னை வரும்வரை, அதற்கு முன்பு இருந்த மெய்மையையே நம்பிக்கொண்டு இருப்பதும், பிரச்னை வந்து தாக்கியபின் பிறிதொரு மெய்மை துலங்குவதும் வாடிக்கையாகிவிட்டது. பொருளாதாரம், வளர்ச்சி, பங்குச் சந்தை, முதலீடு தொடர்பாக இருந்த என்னுடைய பல எண்ணங்களை, கருத்துகளை, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீடிக்கும் பொருளாதாரச் சரிவு மாற்றியமைத்துவிட்டது. மாற்றி அமைத்துவிட்டது என்பதைவிட, வேறு மெய்மைகளைப் பார்க்கும் பக்குவத்தை ஏற்படுத்தித் தந்திருக்கிறது.
அமெரிக்காவில் தொடங்கிய பொருளாதாரச் சரிவு விரைவில் முடிவுக்கு வரும் போல் தோன்றவில்லை. ஒவ்வொரு வாரமும் வெளியாகும் ஏதேனும் ஒரு அறிக்கை கொஞ்சம் தைரியமும் உற்சாகமும் கொடுக்கும். அடுத்த வாரமே மற்றொரு அறிக்கை வெளியாகி, முந்தைய நம்பிக்கையை எல்லாம் வாரிச் சுருட்டிக்கொண்டு போய்விடும். அமெரிக்காவைப் பொறுத்தவரை பிடித்த ஒரு விஷயம் எல்லாவற்றையும் அளப்பதற்கென்று அளவுகோல்களையும் குறியீட்டெண்களையும் நிர்ணயித்து இருப்பதுதான். எதையும் அனுமானத்தின் பேரில் முடிவுகளை எடுப்பதைவிட, தீர்மானமான அளவுகோல்களின் அடிப்படையில் முடிவுகள் எடுப்பது பல மடங்கு நன்மை செய்யக் கூடியது.
இந்தியாவில் இதுபோல் அளவுகோல்களோ, அறிக்கைகளோ, குறியீட்டெண்களோ நிறைய துறைகளில் கிடையாது. முக்கியமாக வேலை இழப்பு பற்றி இந்தியாவில் நான் படித்தது எல்லாம் தனியார் நிறுவனங்கள் அளிக்கும் அறிக்கைகளே. அல்லது குறிப்பிட்ட நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களில் இத்தனை சதவிகிதம் பேர்களை வீட்டுக்கு அனுப்பப் போகிறோம் என்று சொல்லும் தகவல்களே. பங்குச் சந்தை நண்பர் ஒருவர், இதுபோன்ற குறியீட்டெண் முறை இங்கே அதிகம் இல்லாதது மிகவும் நல்லது என்றார். இல்லையென்றால், ஒவ்வொரு வாரமும் இதுபோன்ற அறிக்கைகள் வெளியாகி, மக்கள் மனத்தில் பீதியையே அதிகப்படுத்தும் என்பது அவர் வாதம்.
என் வாதம்: இது முழு பூசணிக்காயை சோற்றில் மூடிமறைக்கும் வித்தை. எல்லோரும் சுபிட்சமாக இருக்கிறார்கள், எல்லோரும் நன்கு சம்பாதிக்கிறார்கள், இந்தியா முன்னேறுகிறது, எல்லாரும் சேர்ந்து ஜோரா ஒரு தரம் கைதட்டுங்கள் என்று தெருமுனை வித்தைக்காரன் சொல்வது போல் இருக்கிறது. எத்தனை வேலைகள் புதிதாக உற்பத்தியாயின, எத்தனை வேலைகள் பறிபோயின என்று மக்களுக்குத் தெரியவேண்டாமா?
இது ஒரு தனித் தலைவலி. விஷயத்துக்கு வருவோம். ஒவ்வொரு நாளும் அரசு அல்லாத நிறுவனங்கள் தெரிவிக்கும் வேலை இழப்பு எண்ணிக்கையைத் தொடர்ந்து படித்து வந்தாலே, பொருளாதாரச் சரிவு எவ்வளவு மோசமாக இந்தியாவைப் பாதித்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். நேற்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசும்போது, 2009 – 10 ஆம் நிதியாண்டில் எப்படியும் 6 சதவிகித மொத்த வளர்ச்சி விகிதத்தை (ஜிடிபி) எட்டிவிடுவோம் என்கிறார். கடந்த வாரம், கிரிசிலும் (CRISIL), Centre for Monitoring Indian Economyயும், இந்த ஆண்டின் ஜிடிபி 5.8 % தான் இருக்கும் என்கிறது.
மற்ற நாடுகளைப் பார்க்கும்போது, இந்தியாவின் 5.8 % வளர்ச்சி என்பதே பெரிய முன்னேற்றம்போல் தோன்றக்கூடும். இதைக் கொஞ்சம் சரித்திர ரீதியாகப் பார்த்தால் புரிந்துகொள்ள முடியும். இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் இருந்து பார்த்தால், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் பூஜ்ஜியத்துக்குக் கீழே, நெகட்டிவ்வாக இருந்ததில்லை. அதாவது நாம் பொருளாதார வீழ்ச்சியைச் (ரிசெஷனை) சந்தித்ததில்லை. சரிவைச் சந்தித்து இருக்கிறோம். எண்பதுகள் வரை 5 % வளர்ச்சி இருந்தது. பின்னர், பொருளாதார தாராளமயமாக்கலினால், அது 9 சதவிகிதம் வரை உயர்ந்தது. இப்போது, அது மீண்டும் இந்த நிதியாண்டில் 5.6 சதவிகிதமோ (அல்லது 6 சதவிகிதமோ) இருக்குமானால், சரிவை நீங்கள் யோசித்துப் பார்க்கலாம்.
நூறு கோடிக்கும் மேல் மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டில், ஒவ்வொரு சதவிகிதச் சரிவும், பல லட்சம் வேலைகள் பறிபோனதைக் காட்டுகின்றன. பல்வேறு தொழில்கள் நசிந்துபோனதைக் காட்டுகின்றன. பல்வேறு நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டதைக் காட்டுகின்றன. புதிய தொழில் முயற்சிகள் தள்ளிப் போடப்படுவதைக் காட்டுகின்றன. மக்கள் தம் அன்றாட வாழ்வை நடத்த முடியாமல் போவதைக் காட்டுகிறது.
கண்ணெதிரே பல நிறுவனங்கள், தொழில்கள் நசிந்துபோய்க்கொண்டு இருக்கின்றன. ஏற்கனவே விவசாயம் கஷ்டதிசையில் இருக்க, இந்த ஆண்டு, பல மாநிலங்களில் இன்னும் பருவ மழையே தொடங்கவில்லை. விளைவு, விவசாயம் தொடங்கவில்லை. கூடிய விரைவில், அரிசி, பருப்பு போன்ற அன்றாடம் பயன்படும் பொருள்களின் விலைகள் இன்னும் ஏறப் போகின்றன.
இந்த் நிலையில், எண்ணற்ற நிறுவனங்கள் தம் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பிவைத்துவிட்டன. ஒரு தொழில் துறை பாக்கியில்லாமல், வேலைக் குறைப்பு நடந்திருக்கிறது. அதுவும் பொறியியல் படித்த புது மாணவர்களின் பாடு இன்னும் மோசம். சென்ற ஆண்டு முடித்த பலருக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. அப்படியே ஆஃப்ர் லெட்டர் கிடைத்தவர்களும், வேலைக்கு அழைக்கப்படாமல் திரிசங்கு சொர்க்கத்தில் நிற்கிறார்கள். பல ஐடி நிறுவனங்களில், ஐந்து முதல் பத்து சதவிகிதம் வரை சம்பளக் குறைப்பு நடந்திருக்கிறது. உபரி செலவுகள் என்று அந்த நிறுவனங்கள் நினைக்கும் பல செலவுகள் முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டுவிட்டன.
சென்னையில் எனக்குத் தெரிந்த இரண்டு ஐடி நிறுவனங்களில், கடந்த எட்டு மாதங்களாக சம்பள பாக்கி. உடனடியாக வேறு வேலையும் கிடைக்காத நிலையில், அப்படியே கிடைத்தாலும் இப்போது கிடைக்கும் சம்பளத்தில் பாதியளவு தான் கிடைக்கக்கூடிய நிலையில், இளைஞர்கள் திண்டாடுவதைப் பார்க்க சகிக்கவில்லை. தி. நகரில், எல்டாம்ஸ் ரோடில் சாலையோரங்களில் புதிதாக சொம்பில் கூழ் விற்க ஆரம்பித்து இருக்கிறார்கள். ஐடி இளைஞர்கள் இதன் முக்கிய கஸ்டமர்களாகி இருக்கிறார்கள். அவர்கள் அங்கே சுவைக்காக மட்டும் வந்து கூழ் குடிக்கவில்லை என்பது கண்கூடு.
இந்த நிலையில், மத்திய அரசோ மாநில அரசுகளோ ஏழைகளுக்குப் பயன்படும் விவசாய, உர மானியங்களை வழங்கக்கூடாது, சர்வதேச கச்சா எண்ணை விலையை ஒட்டி, இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை இருக்க வேண்டும், ஒவ்வொரு எண்ணை சுத்திகரிப்பு நிறுவனமும் தாமே விலை நிர்ணயம் செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட வேண்டும், வங்கிகளை குறைந்த வட்டியில் கடன்கொடுக்க வற்புறுத்தக் கூடாது என்று வரிசையாக எண்ணற்ற கருத்துகளை மெத்தப் படித்தவர்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். Controlled Price Mechanism இல்லையென்றால், இத்தனை நேரத்துக்கு இந்தியாவில் எத்தனை பசி, பட்டினிச் சாவுகள் அரங்கேறியிருக்கும் என்பதை இவர்கள் காண மறுக்கிறார்கள்.
பொருளாதாரம் நன்றாக இருக்கும் நேரத்தில், யாரும் எதுவும் செய்யவேண்டியதில்லை. ஆனால், இதுபோன்ற கடினமான காலகட்டங்களில்தான் ஒரு சமூகநலன் பேணும் அரசின் செயல்பாடு முக்கியமாகிறது. அதுவும் இந்தியா போன்ற சமூகப் பாதுகாப்பு அமைப்போ, திட்டமோ இல்லாத நாட்டில், வேலை இழந்த ஒருவன் எங்கேதான் போய் நிற்பான்? வேலை கிடைக்காதவர்கள் எங்கே போய் நிற்பார்கள்? அவனை அண்டி வாழும் குடும்பத்தின் நிலை என்னாகும்?
தெரியவில்லை. உடனே எல்லாவற்றையும் தேசியமயமாக்குவதுதான் சரியான தீர்வு என்று நான் நினைக்கவில்லை. நாம் தேசியமயமாக்குதலின் குறைகளை நிறையவே பார்த்துவிட்டோம். முழுமையான திறந்த பொருளாதாரத்துக்கும் நம்மால் போக முடியவில்லை. பழைய மாதிரி, லைசென்ஸ் கோட்டா ராஜ் என்று, கவர்மெண்டே கடவுள் என்று இருக்கவும் முடியவில்லை.
கேள்விகள் மட்டும் கேள்விகளாகவே நிற்கின்றன.

மாயவித்தை செய்யும் மனனம்

Posted in நேசமுடன் on August 14th, 2009 by வெங்கடேஷ் – 3 Comments
சின்ன வயதில் இருந்து எந்த ஒரு பாடத்தையும் செய்யுளையும் கணித சூத்திரத்தையும் மனப்பாடம் செய்யக்கூடாது என்று மனத்தில் தோன்றிவிட்டது. எப்படி தோன்றியது, ஏன் தோன்றியது என்றெல்லாம் ஞாபகமில்லை. ஆனால், பாடத்தைப் புரிந்து படித்துக்கொள்வதும் கணித சூத்திரத்தை விளங்கிககொள்வதும் முக்கியமே தவிர, மனப்பாடம் செய்யக் கூடாது என்று உறுதியாக இருந்துவிட்டேன். இதே முனைப்புடன் கல்லூரிக் காலத்தையும் ஓட்டிவிட்டேன்.
கல்லூரிக் காலத்தில் மனப்பாடம் செய்பவர்களை மிகவும் இளக்காரமாக பார்த்ததும் உண்டு. சுயசிந்தனை அற்றவர்கள், மதிப்பெண் வாங்குவது மட்டுமே குறிக்கோள், புரிந்துகொள்வது அல்ல என்பது அப்போது என் எண்ணம். பல மாணவர்களிடம் அது உண்மையாகவும் இருந்தது. முதலாண்டு படித்தது எதுவும் அடுத்த ஆண்டில் ஞாபகம் இருந்ததில்லை. எல்லாம் அந்த ஆண்டு எழுதும் தேர்வோடு முடிந்து போய்விட்டவர்களும் உண்டு.
ஒவ்வொரு விஷயத்தையும் ஊன்றிப் படிக்க திறனற்றவர்களே, மனனம் செய்வார்கள் என்ற ஒருவித தப்பான எண்ணமும் இருந்தது. தேர்வும் மதிப்பெண்ணும் அதனால் பெறப்படும் உயர் உத்யோகமும் மட்டுமே முக்கியமாகக் கருதப்படும் காலகட்டத்தில், மாணவர்கள் மனனம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. நமது அமைப்பில் உள்ள குறையிது. மாணவர்கள் என்ன செய்வார்கள்? இதெல்லாம் இப்போது தோன்றும் எண்ணங்கள். அன்று, மனனம் செய்து எழுதுபவர்களை, “வாந்தி”, “டப்பா” என்றெல்லாம் கேலி பேசியது உண்டு.
படிப்பு என்றில்லை, இலக்கியத்திலும் இதே அளவுகோலைத்தான் நான் பயன்படுத்தினேன். சந்த நயத்தோடு, மீட்டரோடு எழுதப்பட்ட செய்யுள்களை புறமொதுக்கிவிட்டேன். பாவகைகள் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டேனே தவிர, அதைக் கொண்டு எழுதுவதை கவிதை என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடிந்ததில்லை. இது என் தப்பு மட்டுமல்ல. நான் படித்த பல சமகாலக் கவிதைத் தொகுதிகள், உள்ளடக்கமே இல்லாமல் வெறும் செய்யப்படும் கவிதைகளாக இருந்தன. நிறைய பேருக்கு மீட்டர் பிடிபட்டுவிட்டது, மேட்டர் பிடிபடவில்லை. மரபுக் கவிதையில் எனக்குப் போதுமான பயிற்சி இல்லை என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டேன்.
ஆனாலும் படித்ததில்  ஏராளமானவை குப்பைகள். புதுக்கவிதையும் நவீன கவிதையும் தான் என்னைக் காப்பாற்றின. கவிதையை அனுபவிக்கும் ரசனை எனக்குப் புதுக்கவிதை வழியேதான் பிடிபட்டது. ஆங்கிலக் கவிதை வழியே இந்த ரசனை இன்னும் கொஞ்சம் மேம்பட்டது.
கடந்த மூன்று ஆண்டுகளாக வேறு வகையான அனுபவங்களுக்கு ஆட்பட்டு வருகிறேன். ஹரிகிருஷ்ணன், சுதா சேஷய்யன், அவ்வை நடராஜன் வழியே கம்பனையும் திருவள்ளுவரையும் ஆழத் தோய்ந்து வாசிக்கும் அனுபவம் ஏற்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக நாலாயிர திவ்யப் பிரபந்தம், சைவப் பாடல்கள் ஆகியவற்றையும் தொடர்ந்து வாசிக்கிறேன். பழம் இலக்கியச் சொற்பொழிவுகளைத் தொடர்ந்து கேட்டு வருகிறேன்.
இப்போது ஒரு விஷயம் புரியத் தொடங்கியது. இலக்கியச் சொற்பொழிவுகள் செய்பவர்கள், பல முக்கியப் பாடல்களை முழுவதும் மனனம் செய்து வைத்திருக்கிறார்கள். அப்பாடல்களுக்கு எழுதப்பட்ட பல்வேறு உரைகளையும் வரி பிறழாமல் ஞாபகம் வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கு பிறகு, அதன் மேல் ஒரு வேல்யூ அடிஷன் நடக்கிறது. அது இரண்டு தளங்களில் நடக்கிறது. சமகால பொருத்தப்பாட்டில் இருந்து, இப்பழைய பாடல்களுக்குத் தக்க பொருள் அல்லது விளக்கம் அல்லது நீட்சி வழங்குகிறார்கள். திருக்குறளுக்கு இப்படி எழுதப்பட்ட பல உரைகளைப் படித்தேன். ஒவ்வொருவரின் மனச்சாய்வுக்கும் கருதுகோள்களுக்கும் ஏற்ப, விளக்கங்கள் இருக்கின்றன. இது இயல்பான ஒன்று. இது ஒருவகை வேல்யூ அடிஷன்.
அடுத்த வகை வேல்யூ அடிஷனை அவ்வை நடராஜனிடம் தொடர்ந்து பார்த்து வருகிறேன். பல பாடல்களில் உள்ள சொற்களைத் தட்டி தட்டி பொருள் சொல்கிறார் அவர். எண்ணற்ற பாடல்கள் அவர் ஞாபகத்தில் இருப்பதால், ஒரு பாடலின் சொற்களை வேறொன்றோடு தொடர்பு படுத்தவும், முற்றிலும் வேறொரு அனுபவத்தைத் தீட்டித் தரவும் அவரால் முடிகிறது. மேலும் அவ்வையோடு, பேராசிரியர் வைத்தியலிங்கன் என்பவர் இருக்கிறார். அவர் பாடல்களைப் பண்ணோடு பாடிகாட்டவும் தெரிந்தவர்.
சென்ற வாரம் அவ்வையோடு பேசிக்கொண்டு இருந்தபோது, இந்த ‘யாதும் ஊரே, யாவரு கேளீர்’ என்ற வரி எப்படித் தவறாகப் பொருள் கொள்ளப்படுகிறது என்பதை விளக்கினார். அந்த முழுப்பாடலையும் ஏற்ற இறக்கங்களோடு சந்தத்தோடு சொல்லக் கேட்டபோது, அதன் பின்னே இருக்கும் தொனி முற்றிலும் வேறாக இருப்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. அது ஒரு வித சோக, தத்துவக் கவிதை. சாவைப் பற்றிய கவிதை. அவலச் சுவை. வாழ்வின் மேல் துளியும் நம்பிக்கை இல்லாத கவிதை. ஆனால், தமிழனின் பரந்த மனப்பான்மை, தாராள எண்ணம் ஆகியவற்றைப் பிரதிபலிப்பதாகவே இந்த வரியை தப்பாக Out of contextல் பயன்படுத்தும் நமது போக்கை எடுத்துச் சொன்னார்.
எனக்கு அப்போதுதான் மனனம் செய்வதின் முக்கியத்துவம் விளங்கியது. பாடல்கள் மனத்துக்குள் வளையவந்து ரீங்கரிக்கும்போது, ஒவ்வொரு சொல்லையும் அதன் பொருளை மட்டுமல்ல, அதன் பின்னே உள்ள தொனி, லயம் ஆகியவற்றையும் சேர்த்து உள்ளே வாங்கிக்கொள்ள முடிகிறது. அதுவும் கம்பனின் பல பாடல்களில் உள்ள இசை நயம், பாடல் தரும் பொருளை பன்மடங்கு உயர்த்திக்காட்டுகிறது.
முன்பொருமுறை பேராசிரியர் நாகநந்தி அவர்களின் பேச்சைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் அயோத்தியின் உயர்ந்த வெளிப்புற வாயில்களில் கட்டப்பட்டுள்ள கொடிகள் ஆடிய விதத்தை கம்பன் எழுதிய நடையிலேயே எடுத்துச் சொன்னார். கவிதை அங்கே சட்டென காட்சி வடிவம் கொள்வதும் சொற்கள், பொருள் என்ற தம் எல்லை தாண்டி வேறொரு மாயவித்தை செய்வதும் எனக்குப் புரிந்தது. கவிதைகள் மனப்பாடமாக தெரிந்தால் அன்றி, இந்தச் சுவைகளை உணர முடியாது, மற்றவர்களுக்கு வெளியே எடுத்துச் சொல்லவும் முடியாது.
நவீன உரைநடைக்குள்ளும் பழம்தமிழ் பாடல்கள் இணங்கி வரலாம் என்பதை நான் அ.முத்துலிங்கத்திடம் பார்த்தேன். அவருடைய வம்சவிருத்தி தொகுதியில் உள்ள கதைகளில் மிகவும் பொருத்தமான இடங்களில் செய்யுள்கள் வருகின்றன. சட்டென எழுத்தின் தளத்தை இக்கவிதைகள் உயர்த்தி நிறுத்துகின்றன.
குறைந்தபட்சம் 100 நல்ல கவிதைகளையாவது மனனம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். வாழ்க்கை முழுவதும் அதை மென்று சுவைத்தாலே போதும்!

சின்ன வயதில் இருந்து எந்த ஒரு பாடத்தையும் செய்யுளையும் கணித சூத்திரத்தையும் மனப்பாடம் செய்யக்கூடாது என்று மனத்தில் தோன்றிவிட்டது. எப்படி தோன்றியது, ஏன் தோன்றியது என்றெல்லாம் ஞாபகமில்லை. ஆனால், பாடத்தைப் புரிந்து படித்துக்கொள்வதும் கணித சூத்திரத்தை விளங்கிககொள்வதும் முக்கியமே தவிர, மனப்பாடம் செய்யக் கூடாது என்று உறுதியாக இருந்துவிட்டேன். இதே முனைப்புடன் கல்லூரிக் காலத்தையும் ஓட்டிவிட்டேன்.

கல்லூரிக் காலத்தில் மனப்பாடம் செய்பவர்களை மிகவும் இளக்காரமாக பார்த்ததும் உண்டு. சுயசிந்தனை அற்றவர்கள், மதிப்பெண் வாங்குவது மட்டுமே குறிக்கோள், புரிந்துகொள்வது அல்ல என்பது அப்போது என் எண்ணம். பல மாணவர்களிடம் அது உண்மையாகவும் இருந்தது. முதலாண்டு படித்தது எதுவும் அடுத்த ஆண்டில் ஞாபகம் இருந்ததில்லை. எல்லாம் அந்த ஆண்டு எழுதும் தேர்வோடு முடிந்து போய்விட்டவர்களும் உண்டு.

ஒவ்வொரு விஷயத்தையும் ஊன்றிப் படிக்க திறனற்றவர்களே, மனனம் செய்வார்கள் என்ற ஒருவித தப்பான எண்ணமும் இருந்தது. தேர்வும் மதிப்பெண்ணும் அதனால் பெறப்படும் உயர் உத்யோகமும் மட்டுமே முக்கியமாகக் கருதப்படும் காலகட்டத்தில், மாணவர்கள் மனனம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. நமது அமைப்பில் உள்ள குறையிது. மாணவர்கள் என்ன செய்வார்கள்? இதெல்லாம் இப்போது தோன்றும் எண்ணங்கள். அன்று, மனனம் செய்து எழுதுபவர்களை, “வாந்தி”, “டப்பா” என்றெல்லாம் கேலி பேசியது உண்டு.

படிப்பு என்றில்லை, இலக்கியத்திலும் இதே அளவுகோலைத்தான் நான் பயன்படுத்தினேன். சந்த நயத்தோடு, மீட்டரோடு எழுதப்பட்ட செய்யுள்களை புறமொதுக்கிவிட்டேன். பாவகைகள் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டேனே தவிர, அதைக் கொண்டு எழுதுவதை கவிதை என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடிந்ததில்லை. இது என் தப்பு மட்டுமல்ல. நான் படித்த பல சமகாலக் கவிதைத் தொகுதிகள், உள்ளடக்கமே இல்லாமல் வெறும் செய்யப்படும் கவிதைகளாக இருந்தன. நிறைய பேருக்கு மீட்டர் பிடிபட்டுவிட்டது, மேட்டர் பிடிபடவில்லை. மரபுக் கவிதையில் எனக்குப் போதுமான பயிற்சி இல்லை என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டேன்.

ஆனாலும் படித்ததில்  ஏராளமானவை குப்பைகள். புதுக்கவிதையும் நவீன கவிதையும் தான் என்னைக் காப்பாற்றின. கவிதையை அனுபவிக்கும் ரசனை எனக்குப் புதுக்கவிதை வழியேதான் பிடிபட்டது. ஆங்கிலக் கவிதை வழியே இந்த ரசனை இன்னும் கொஞ்சம் மேம்பட்டது.

கடந்த மூன்று ஆண்டுகளாக வேறு வகையான அனுபவங்களுக்கு ஆட்பட்டு வருகிறேன். ஹரிகிருஷ்ணன், சுதா சேஷய்யன், அவ்வை நடராஜன் வழியே கம்பனையும் திருவள்ளுவரையும் ஆழத் தோய்ந்து வாசிக்கும் அனுபவம் ஏற்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக நாலாயிர திவ்யப் பிரபந்தம், சைவப் பாடல்கள் ஆகியவற்றையும் தொடர்ந்து வாசிக்கிறேன். பழம் இலக்கியச் சொற்பொழிவுகளைத் தொடர்ந்து கேட்டு வருகிறேன்.

இப்போது ஒரு விஷயம் புரியத் தொடங்கியது. இலக்கியச் சொற்பொழிவுகள் செய்பவர்கள், பல முக்கியப் பாடல்களை முழுவதும் மனனம் செய்து வைத்திருக்கிறார்கள். அப்பாடல்களுக்கு எழுதப்பட்ட பல்வேறு உரைகளையும் வரி பிறழாமல் ஞாபகம் வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கு பிறகு, அதன் மேல் ஒரு வேல்யூ அடிஷன் நடக்கிறது. அது இரண்டு தளங்களில் நடக்கிறது. சமகால பொருத்தப்பாட்டில் இருந்து, இப்பழைய பாடல்களுக்குத் தக்க பொருள் அல்லது விளக்கம் அல்லது நீட்சி வழங்குகிறார்கள். திருக்குறளுக்கு இப்படி எழுதப்பட்ட பல உரைகளைப் படித்தேன். ஒவ்வொருவரின் மனச்சாய்வுக்கும் கருதுகோள்களுக்கும் ஏற்ப, விளக்கங்கள் இருக்கின்றன. இது இயல்பான ஒன்று. இது ஒருவகை வேல்யூ அடிஷன்.

அடுத்த வகை வேல்யூ அடிஷனை அவ்வை நடராஜனிடம் தொடர்ந்து பார்த்து வருகிறேன். பல பாடல்களில் உள்ள சொற்களைத் தட்டி தட்டி பொருள் சொல்கிறார் அவர். எண்ணற்ற பாடல்கள் அவர் ஞாபகத்தில் இருப்பதால், ஒரு பாடலின் சொற்களை வேறொன்றோடு தொடர்பு படுத்தவும், முற்றிலும் வேறொரு அனுபவத்தைத் தீட்டித் தரவும் அவரால் முடிகிறது. மேலும் அவ்வையோடு, பேராசிரியர் வைத்தியலிங்கன் என்பவர் இருக்கிறார். அவர் பாடல்களைப் பண்ணோடு பாடிகாட்டவும் தெரிந்தவர்.

சென்ற வாரம் அவ்வையோடு பேசிக்கொண்டு இருந்தபோது, இந்த ‘யாதும் ஊரே, யாவரு கேளீர்’ என்ற வரி எப்படித் தவறாகப் பொருள் கொள்ளப்படுகிறது என்பதை விளக்கினார். அந்த முழுப்பாடலையும் ஏற்ற இறக்கங்களோடு சந்தத்தோடு சொல்லக் கேட்டபோது, அதன் பின்னே இருக்கும் தொனி முற்றிலும் வேறாக இருப்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. அது ஒரு வித சோக, தத்துவக் கவிதை. சாவைப் பற்றிய கவிதை. அவலச் சுவை. வாழ்வின் மேல் துளியும் நம்பிக்கை இல்லாத கவிதை. ஆனால், தமிழனின் பரந்த மனப்பான்மை, தாராள எண்ணம் ஆகியவற்றைப் பிரதிபலிப்பதாகவே இந்த வரியை தப்பாக Out of contextல் பயன்படுத்தும் நமது போக்கை எடுத்துச் சொன்னார்.

எனக்கு அப்போதுதான் மனனம் செய்வதின் முக்கியத்துவம் விளங்கியது. பாடல்கள் மனத்துக்குள் வளையவந்து ரீங்கரிக்கும்போது, ஒவ்வொரு சொல்லையும் அதன் பொருளை மட்டுமல்ல, அதன் பின்னே உள்ள தொனி, லயம் ஆகியவற்றையும் சேர்த்து உள்ளே வாங்கிக்கொள்ள முடிகிறது. அதுவும் கம்பனின் பல பாடல்களில் உள்ள இசை நயம், பாடல் தரும் பொருளை பன்மடங்கு உயர்த்திக்காட்டுகிறது.

முன்பொருமுறை பேராசிரியர் நாகநந்தி அவர்களின் பேச்சைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் அயோத்தியின் உயர்ந்த வெளிப்புற வாயில்களில் கட்டப்பட்டுள்ள கொடிகள் ஆடிய விதத்தை கம்பன் எழுதிய நடையிலேயே எடுத்துச் சொன்னார். கவிதை அங்கே சட்டென காட்சி வடிவம் கொள்வதும் சொற்கள், பொருள் என்ற தம் எல்லை தாண்டி வேறொரு மாயவித்தை செய்வதும் எனக்குப் புரிந்தது. கவிதைகள் மனப்பாடமாக தெரிந்தால் அன்றி, இந்தச் சுவைகளை உணர முடியாது, மற்றவர்களுக்கு வெளியே எடுத்துச் சொல்லவும் முடியாது.

நவீன உரைநடைக்குள்ளும் பழம்தமிழ் பாடல்கள் இணங்கி வரலாம் என்பதை நான் அ.முத்துலிங்கத்திடம் பார்த்தேன். அவருடைய வம்சவிருத்தி தொகுதியில் உள்ள கதைகளில் மிகவும் பொருத்தமான இடங்களில் செய்யுள்கள் வருகின்றன. சட்டென எழுத்தின் தளத்தை இக்கவிதைகள் உயர்த்தி நிறுத்துகின்றன.

குறைந்தபட்சம் 100 நல்ல கவிதைகளையாவது மனனம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். வாழ்க்கை முழுவதும் அதை மென்று சுவைத்தாலே போதும்!

கொஞ்சம் விளக்கம்; கொஞ்சம் அறிமுகம்

Posted in நேசமுடன் on August 14th, 2009 by வெங்கடேஷ் – 2 Comments
கொஞ்சம் விளக்கம்; கொஞ்சம் அறிமுகம்
==============================
நேசமுடன் மடல் இதழ் உங்களில் பலருக்கு புதிதாக இராது. ஒரு சிலருக்குப் புதிதாக இருக்கலாம். 2003, 2004 ஆண்டுகளில் ஒவ்வொரு புதன்கிழமையும் நான் இந்த நேசமுடன் மடல் இதழ்களை உங்களுக்கு அனுப்பிக்கொண்டு இருந்தேன். கிட்டத்தட்ட 34 இதழ்கள் வெளிவந்தன. ஒவ்வொரு இதழிலும் 4 கட்டுரைகள் வரை எழுதி, என் கருத்துகளை, கற்பனைகளை, எதிர்பார்ப்புகளை உங்களோடு பகிர்ந்துகொண்டேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்த காலகட்டம் அது.
அந்தச் சமயத்தில், மூத்த எழுத்தாளர்கள் சுந்தர ராமசாமி, இந்திரா பார்த்தசாரதி போன்றோர் எழுதிய அனுசரணையான மின்னஞ்சல்கள் எனக்கு மிகுந்த உற்சாகத்தைத் தந்தன. மின்னஞ்சல் மூலமே எண்ணற்ற புதியவர்களோடு நட்பு பாராட்ட முடிந்தது. நேரில் சந்தித்தபோதும் நல்ல உறவைத் தொடர முடிந்தது. இலக்கியமும் நட்பும் அற்புதமான இணை. ஒன்றை ஒன்று மேம்படுத்தும் இணை.
இப்போது மீண்டும் நேசமுடன் மடல் இதழோடு உங்களைச் சந்திக்கிறேன். இதற்குள் இணைய உலகில் பல முன்னேற்றங்கள். சென்ற முறை நேசமுடன் நடத்தும்போதே தமிழில் வலைப்பதிவுகள் தொடங்கிவிட்டன. கடந்த இரண்டு ஆண்டுகளாக டிவிட்டர். இது நடுவே பாட்காஸ்டிங். மிகப் பெரிய அளவில் சமூக வலைப்பின்னல் தளங்கள் வளர்ந்திருக்கின்றன.
அடிப்படையில் இன்னும் எனக்கு மின்னஞ்சல் தான் பிடித்திருக்கிறது. மனிதன் கண்டுபிடித்த தொழில்நுட்ப விஷயங்களிலேயே மனத்துக்கு நெருக்கமானது மின்னஞ்சல்தான். உங்கள் வீட்டுக்கு வந்து விழும் கடிதத்தைப் போல், உங்கள் தோட்டத்தில் சிதறிக்கிடக்கும் பன்னீர்ப் பூக்களைப் போல, உங்கள் அம்மாவின் இளஞ்சூட்டு மடி போல, எனக்கு மின்னஞ்சல்கள். நான் மின்னஞ்சல்களை அழிக்க விரும்புவதில்லை. முடிந்தவரை எனக்கு மற்றவர்கள் எழுதிய கடிதங்களையும் நான் எழுதிய பதில்களையும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். திரும்பப் படிக்கும்போது, காலத்தை மீட்டும் அற்புத வீணை, கடிதங்கள்.
மற்ற தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் பெரும்பாலும் கூடவே அவசரம் என்ற ஒன்றைக் காலில் கட்டிக்கொண்டு வருகின்றன. Immediacy. உடனே உடனே தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் வேகம் அதன் மையம். மின்னஞ்சல்கள் அப்படி அல்ல. இன்று நீங்கள் இதைப் படிக்கவில்லை என்றாலும், என்றேனும் நேரம் கிடைக்கும்போது, மனம் தோதுப்படும்போது படித்துக்கொள்ளலாம்.
மீண்டும் நேசமுடன் மடல் இதழை ஆரம்பிக்க வேண்டும் என்று ஒரு சில ஆண்டுகளாகவே எண்ணம் இருந்தது. முதிர்ச்சியும் பக்கும்வமும் பல செய்திகளை வேறு மாதிரி அணுகச் சொல்லிக்கொடுத்திருக்கிறது. ஒரு வித நிதானம் கைகூடியிருக்கிறது. இதையெல்லாம் உங்களோடு தொடர்ந்து பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே மீண்டும் நேசமுடன் தொடங்கப்பட்டிருக்கிறது.

நேசமுடன் மடல் இதழ் உங்களில் பலருக்கு புதிதாக இராது. ஒரு சிலருக்குப் புதிதாக இருக்கலாம். 2003, 2004 ஆண்டுகளில் ஒவ்வொரு புதன்கிழமையும் நான் இந்த நேசமுடன் மடல் இதழ்களை உங்களுக்கு அனுப்பிக்கொண்டு இருந்தேன். கிட்டத்தட்ட 34 இதழ்கள் வெளிவந்தன. ஒவ்வொரு இதழிலும் 4 கட்டுரைகள் வரை எழுதி, என் கருத்துகளை, கற்பனைகளை, எதிர்பார்ப்புகளை உங்களோடு பகிர்ந்துகொண்டேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்த காலகட்டம் அது.

அந்தச் சமயத்தில், மூத்த எழுத்தாளர்கள் சுந்தர ராமசாமி, இந்திரா பார்த்தசாரதி போன்றோர் எழுதிய அனுசரணையான மின்னஞ்சல்கள் எனக்கு மிகுந்த உற்சாகத்தைத் தந்தன. மின்னஞ்சல் மூலமே எண்ணற்ற புதியவர்களோடு நட்பு பாராட்ட முடிந்தது. நேரில் சந்தித்தபோதும் நல்ல உறவைத் தொடர முடிந்தது. இலக்கியமும் நட்பும் அற்புதமான இணை. ஒன்றை ஒன்று மேம்படுத்தும் இணை.

இப்போது மீண்டும் நேசமுடன் மடல் இதழோடு உங்களைச் சந்திக்கிறேன். இதற்குள் இணைய உலகில் பல முன்னேற்றங்கள். சென்ற முறை நேசமுடன் நடத்தும்போதே தமிழில் வலைப்பதிவுகள் தொடங்கிவிட்டன. கடந்த இரண்டு ஆண்டுகளாக டிவிட்டர். இது நடுவே பாட்காஸ்டிங். மிகப் பெரிய அளவில் சமூக வலைப்பின்னல் தளங்கள் வளர்ந்திருக்கின்றன.

அடிப்படையில் இன்னும் எனக்கு மின்னஞ்சல் தான் பிடித்திருக்கிறது. மனிதன் கண்டுபிடித்த தொழில்நுட்ப விஷயங்களிலேயே மனத்துக்கு நெருக்கமானது மின்னஞ்சல்தான். உங்கள் வீட்டுக்கு வந்து விழும் கடிதத்தைப் போல், உங்கள் தோட்டத்தில் சிதறிக்கிடக்கும் பன்னீர்ப் பூக்களைப் போல, உங்கள் அம்மாவின் இளஞ்சூட்டு மடி போல, எனக்கு மின்னஞ்சல்கள். நான் மின்னஞ்சல்களை அழிக்க விரும்புவதில்லை. முடிந்தவரை எனக்கு மற்றவர்கள் எழுதிய கடிதங்களையும் நான் எழுதிய பதில்களையும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். திரும்பப் படிக்கும்போது, காலத்தை மீட்டும் அற்புத வீணை, கடிதங்கள்.

மற்ற தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் பெரும்பாலும் கூடவே அவசரம் என்ற ஒன்றைக் காலில் கட்டிக்கொண்டு வருகின்றன. Immediacy. உடனே உடனே தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் வேகம் அதன் மையம். மின்னஞ்சல்கள் அப்படி அல்ல. இன்று நீங்கள் இதைப் படிக்கவில்லை என்றாலும், என்றேனும் நேரம் கிடைக்கும்போது, மனம் தோதுப்படும்போது படித்துக்கொள்ளலாம்.

மீண்டும் நேசமுடன் மடல் இதழை ஆரம்பிக்க வேண்டும் என்று ஒரு சில ஆண்டுகளாகவே எண்ணம் இருந்தது. முதிர்ச்சியும் பக்கும்வமும் பல செய்திகளை வேறு மாதிரி அணுகச் சொல்லிக்கொடுத்திருக்கிறது. ஒரு வித நிதானம் கைகூடியிருக்கிறது. இதையெல்லாம் உங்களோடு தொடர்ந்து பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே மீண்டும் நேசமுடன் தொடங்கப்பட்டிருக்கிறது.