ஒவ்வொரு பிரச்னையும் ஒவ்வொரு பாடத்தைச் சொல்லிக்கொடுக்கின்றன. அந்தப் பிரச்னை வரும்வரை, அதற்கு முன்பு இருந்த மெய்மையையே நம்பிக்கொண்டு இருப்பதும், பிரச்னை வந்து தாக்கியபின் பிறிதொரு மெய்மை துலங்குவதும் வாடிக்கையாகிவிட்டது. பொருளாதாரம், வளர்ச்சி, பங்குச் சந்தை, முதலீடு தொடர்பாக இருந்த என்னுடைய பல எண்ணங்களை, கருத்துகளை, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீடிக்கும் பொருளாதாரச் சரிவு மாற்றியமைத்துவிட்டது. மாற்றி அமைத்துவிட்டது என்பதைவிட, வேறு மெய்மைகளைப் பார்க்கும் பக்குவத்தை ஏற்படுத்தித் தந்திருக்கிறது.
அமெரிக்காவில் தொடங்கிய பொருளாதாரச் சரிவு விரைவில் முடிவுக்கு வரும் போல் தோன்றவில்லை. ஒவ்வொரு வாரமும் வெளியாகும் ஏதேனும் ஒரு அறிக்கை கொஞ்சம் தைரியமும் உற்சாகமும் கொடுக்கும். அடுத்த வாரமே மற்றொரு அறிக்கை வெளியாகி, முந்தைய நம்பிக்கையை எல்லாம் வாரிச் சுருட்டிக்கொண்டு போய்விடும். அமெரிக்காவைப் பொறுத்தவரை பிடித்த ஒரு விஷயம் எல்லாவற்றையும் அளப்பதற்கென்று அளவுகோல்களையும் குறியீட்டெண்களையும் நிர்ணயித்து இருப்பதுதான். எதையும் அனுமானத்தின் பேரில் முடிவுகளை எடுப்பதைவிட, தீர்மானமான அளவுகோல்களின் அடிப்படையில் முடிவுகள் எடுப்பது பல மடங்கு நன்மை செய்யக் கூடியது.
இந்தியாவில் இதுபோல் அளவுகோல்களோ, அறிக்கைகளோ, குறியீட்டெண்களோ நிறைய துறைகளில் கிடையாது. முக்கியமாக வேலை இழப்பு பற்றி இந்தியாவில் நான் படித்தது எல்லாம் தனியார் நிறுவனங்கள் அளிக்கும் அறிக்கைகளே. அல்லது குறிப்பிட்ட நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களில் இத்தனை சதவிகிதம் பேர்களை வீட்டுக்கு அனுப்பப் போகிறோம் என்று சொல்லும் தகவல்களே. பங்குச் சந்தை நண்பர் ஒருவர், இதுபோன்ற குறியீட்டெண் முறை இங்கே அதிகம் இல்லாதது மிகவும் நல்லது என்றார். இல்லையென்றால், ஒவ்வொரு வாரமும் இதுபோன்ற அறிக்கைகள் வெளியாகி, மக்கள் மனத்தில் பீதியையே அதிகப்படுத்தும் என்பது அவர் வாதம்.
என் வாதம்: இது முழு பூசணிக்காயை சோற்றில் மூடிமறைக்கும் வித்தை. எல்லோரும் சுபிட்சமாக இருக்கிறார்கள், எல்லோரும் நன்கு சம்பாதிக்கிறார்கள், இந்தியா முன்னேறுகிறது, எல்லாரும் சேர்ந்து ஜோரா ஒரு தரம் கைதட்டுங்கள் என்று தெருமுனை வித்தைக்காரன் சொல்வது போல் இருக்கிறது. எத்தனை வேலைகள் புதிதாக உற்பத்தியாயின, எத்தனை வேலைகள் பறிபோயின என்று மக்களுக்குத் தெரியவேண்டாமா?
இது ஒரு தனித் தலைவலி. விஷயத்துக்கு வருவோம். ஒவ்வொரு நாளும் அரசு அல்லாத நிறுவனங்கள் தெரிவிக்கும் வேலை இழப்பு எண்ணிக்கையைத் தொடர்ந்து படித்து வந்தாலே, பொருளாதாரச் சரிவு எவ்வளவு மோசமாக இந்தியாவைப் பாதித்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். நேற்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசும்போது, 2009 – 10 ஆம் நிதியாண்டில் எப்படியும் 6 சதவிகித மொத்த வளர்ச்சி விகிதத்தை (ஜிடிபி) எட்டிவிடுவோம் என்கிறார். கடந்த வாரம், கிரிசிலும் (CRISIL), Centre for Monitoring Indian Economyயும், இந்த ஆண்டின் ஜிடிபி 5.8 % தான் இருக்கும் என்கிறது.
மற்ற நாடுகளைப் பார்க்கும்போது, இந்தியாவின் 5.8 % வளர்ச்சி என்பதே பெரிய முன்னேற்றம்போல் தோன்றக்கூடும். இதைக் கொஞ்சம் சரித்திர ரீதியாகப் பார்த்தால் புரிந்துகொள்ள முடியும். இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் இருந்து பார்த்தால், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் பூஜ்ஜியத்துக்குக் கீழே, நெகட்டிவ்வாக இருந்ததில்லை. அதாவது நாம் பொருளாதார வீழ்ச்சியைச் (ரிசெஷனை) சந்தித்ததில்லை. சரிவைச் சந்தித்து இருக்கிறோம். எண்பதுகள் வரை 5 % வளர்ச்சி இருந்தது. பின்னர், பொருளாதார தாராளமயமாக்கலினால், அது 9 சதவிகிதம் வரை உயர்ந்தது. இப்போது, அது மீண்டும் இந்த நிதியாண்டில் 5.6 சதவிகிதமோ (அல்லது 6 சதவிகிதமோ) இருக்குமானால், சரிவை நீங்கள் யோசித்துப் பார்க்கலாம்.
நூறு கோடிக்கும் மேல் மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டில், ஒவ்வொரு சதவிகிதச் சரிவும், பல லட்சம் வேலைகள் பறிபோனதைக் காட்டுகின்றன. பல்வேறு தொழில்கள் நசிந்துபோனதைக் காட்டுகின்றன. பல்வேறு நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டதைக் காட்டுகின்றன. புதிய தொழில் முயற்சிகள் தள்ளிப் போடப்படுவதைக் காட்டுகின்றன. மக்கள் தம் அன்றாட வாழ்வை நடத்த முடியாமல் போவதைக் காட்டுகிறது.
கண்ணெதிரே பல நிறுவனங்கள், தொழில்கள் நசிந்துபோய்க்கொண்டு இருக்கின்றன. ஏற்கனவே விவசாயம் கஷ்டதிசையில் இருக்க, இந்த ஆண்டு, பல மாநிலங்களில் இன்னும் பருவ மழையே தொடங்கவில்லை. விளைவு, விவசாயம் தொடங்கவில்லை. கூடிய விரைவில், அரிசி, பருப்பு போன்ற அன்றாடம் பயன்படும் பொருள்களின் விலைகள் இன்னும் ஏறப் போகின்றன.
இந்த் நிலையில், எண்ணற்ற நிறுவனங்கள் தம் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பிவைத்துவிட்டன. ஒரு தொழில் துறை பாக்கியில்லாமல், வேலைக் குறைப்பு நடந்திருக்கிறது. அதுவும் பொறியியல் படித்த புது மாணவர்களின் பாடு இன்னும் மோசம். சென்ற ஆண்டு முடித்த பலருக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. அப்படியே ஆஃப்ர் லெட்டர் கிடைத்தவர்களும், வேலைக்கு அழைக்கப்படாமல் திரிசங்கு சொர்க்கத்தில் நிற்கிறார்கள். பல ஐடி நிறுவனங்களில், ஐந்து முதல் பத்து சதவிகிதம் வரை சம்பளக் குறைப்பு நடந்திருக்கிறது. உபரி செலவுகள் என்று அந்த நிறுவனங்கள் நினைக்கும் பல செலவுகள் முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டுவிட்டன.
சென்னையில் எனக்குத் தெரிந்த இரண்டு ஐடி நிறுவனங்களில், கடந்த எட்டு மாதங்களாக சம்பள பாக்கி. உடனடியாக வேறு வேலையும் கிடைக்காத நிலையில், அப்படியே கிடைத்தாலும் இப்போது கிடைக்கும் சம்பளத்தில் பாதியளவு தான் கிடைக்கக்கூடிய நிலையில், இளைஞர்கள் திண்டாடுவதைப் பார்க்க சகிக்கவில்லை. தி. நகரில், எல்டாம்ஸ் ரோடில் சாலையோரங்களில் புதிதாக சொம்பில் கூழ் விற்க ஆரம்பித்து இருக்கிறார்கள். ஐடி இளைஞர்கள் இதன் முக்கிய கஸ்டமர்களாகி இருக்கிறார்கள். அவர்கள் அங்கே சுவைக்காக மட்டும் வந்து கூழ் குடிக்கவில்லை என்பது கண்கூடு.
இந்த நிலையில், மத்திய அரசோ மாநில அரசுகளோ ஏழைகளுக்குப் பயன்படும் விவசாய, உர மானியங்களை வழங்கக்கூடாது, சர்வதேச கச்சா எண்ணை விலையை ஒட்டி, இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை இருக்க வேண்டும், ஒவ்வொரு எண்ணை சுத்திகரிப்பு நிறுவனமும் தாமே விலை நிர்ணயம் செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட வேண்டும், வங்கிகளை குறைந்த வட்டியில் கடன்கொடுக்க வற்புறுத்தக் கூடாது என்று வரிசையாக எண்ணற்ற கருத்துகளை மெத்தப் படித்தவர்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். Controlled Price Mechanism இல்லையென்றால், இத்தனை நேரத்துக்கு இந்தியாவில் எத்தனை பசி, பட்டினிச் சாவுகள் அரங்கேறியிருக்கும் என்பதை இவர்கள் காண மறுக்கிறார்கள்.
பொருளாதாரம் நன்றாக இருக்கும் நேரத்தில், யாரும் எதுவும் செய்யவேண்டியதில்லை. ஆனால், இதுபோன்ற கடினமான காலகட்டங்களில்தான் ஒரு சமூகநலன் பேணும் அரசின் செயல்பாடு முக்கியமாகிறது. அதுவும் இந்தியா போன்ற சமூகப் பாதுகாப்பு அமைப்போ, திட்டமோ இல்லாத நாட்டில், வேலை இழந்த ஒருவன் எங்கேதான் போய் நிற்பான்? வேலை கிடைக்காதவர்கள் எங்கே போய் நிற்பார்கள்? அவனை அண்டி வாழும் குடும்பத்தின் நிலை என்னாகும்?
தெரியவில்லை. உடனே எல்லாவற்றையும் தேசியமயமாக்குவதுதான் சரியான தீர்வு என்று நான் நினைக்கவில்லை. நாம் தேசியமயமாக்குதலின் குறைகளை நிறையவே பார்த்துவிட்டோம். முழுமையான திறந்த பொருளாதாரத்துக்கும் நம்மால் போக முடியவில்லை. பழைய மாதிரி, லைசென்ஸ் கோட்டா ராஜ் என்று, கவர்மெண்டே கடவுள் என்று இருக்கவும் முடியவில்லை.
கேள்விகள் மட்டும் கேள்விகளாகவே நிற்கின்றன.
ஒவ்வொரு பிரச்னையும் ஒவ்வொரு பாடத்தைச் சொல்லிக்கொடுக்கின்றன. அந்தப் பிரச்னை வரும்வரை, அதற்கு முன்பு இருந்த மெய்மையையே நம்பிக்கொண்டு இருப்பதும், பிரச்னை வந்து தாக்கியபின் பிறிதொரு மெய்மை துலங்குவதும் வாடிக்கையாகிவிட்டது. பொருளாதாரம், வளர்ச்சி, பங்குச் சந்தை, முதலீடு தொடர்பாக இருந்த என்னுடைய பல எண்ணங்களை, கருத்துகளை, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீடிக்கும் பொருளாதாரச் சரிவு மாற்றியமைத்துவிட்டது. மாற்றி அமைத்துவிட்டது என்பதைவிட, வேறு மெய்மைகளைப் பார்க்கும் பக்குவத்தை ஏற்படுத்தித் தந்திருக்கிறது.
அமெரிக்காவில் தொடங்கிய பொருளாதாரச் சரிவு விரைவில் முடிவுக்கு வரும் போல் தோன்றவில்லை. ஒவ்வொரு வாரமும் வெளியாகும் ஏதேனும் ஒரு அறிக்கை கொஞ்சம் தைரியமும் உற்சாகமும் கொடுக்கும். அடுத்த வாரமே மற்றொரு அறிக்கை வெளியாகி, முந்தைய நம்பிக்கையை எல்லாம் வாரிச் சுருட்டிக்கொண்டு போய்விடும். அமெரிக்காவைப் பொறுத்தவரை பிடித்த ஒரு விஷயம் எல்லாவற்றையும் அளப்பதற்கென்று அளவுகோல்களையும் குறியீட்டெண்களையும் நிர்ணயித்து இருப்பதுதான். எதையும் அனுமானத்தின் பேரில் முடிவுகளை எடுப்பதைவிட, தீர்மானமான அளவுகோல்களின் அடிப்படையில் முடிவுகள் எடுப்பது பல மடங்கு நன்மை செய்யக் கூடியது.
இந்தியாவில் இதுபோல் அளவுகோல்களோ, அறிக்கைகளோ, குறியீட்டெண்களோ நிறைய துறைகளில் கிடையாது. முக்கியமாக வேலை இழப்பு பற்றி இந்தியாவில் நான் படித்தது எல்லாம் தனியார் நிறுவனங்கள் அளிக்கும் அறிக்கைகளே. அல்லது குறிப்பிட்ட நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களில் இத்தனை சதவிகிதம் பேர்களை வீட்டுக்கு அனுப்பப் போகிறோம் என்று சொல்லும் தகவல்களே. பங்குச் சந்தை நண்பர் ஒருவர், இதுபோன்ற குறியீட்டெண் முறை இங்கே அதிகம் இல்லாதது மிகவும் நல்லது என்றார். இல்லையென்றால், ஒவ்வொரு வாரமும் இதுபோன்ற அறிக்கைகள் வெளியாகி, மக்கள் மனத்தில் பீதியையே அதிகப்படுத்தும் என்பது அவர் வாதம்.
என் வாதம்: இது முழு பூசணிக்காயை சோற்றில் மூடிமறைக்கும் வித்தை. எல்லோரும் சுபிட்சமாக இருக்கிறார்கள், எல்லோரும் நன்கு சம்பாதிக்கிறார்கள், இந்தியா முன்னேறுகிறது, எல்லாரும் சேர்ந்து ஜோரா ஒரு தரம் கைதட்டுங்கள் என்று தெருமுனை வித்தைக்காரன் சொல்வது போல் இருக்கிறது. எத்தனை வேலைகள் புதிதாக உற்பத்தியாயின, எத்தனை வேலைகள் பறிபோயின என்று மக்களுக்குத் தெரியவேண்டாமா?
இது ஒரு தனித் தலைவலி. விஷயத்துக்கு வருவோம். ஒவ்வொரு நாளும் அரசு அல்லாத நிறுவனங்கள் தெரிவிக்கும் வேலை இழப்பு எண்ணிக்கையைத் தொடர்ந்து படித்து வந்தாலே, பொருளாதாரச் சரிவு எவ்வளவு மோசமாக இந்தியாவைப் பாதித்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். நேற்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசும்போது, 2009 – 10 ஆம் நிதியாண்டில் எப்படியும் 6 சதவிகித மொத்த வளர்ச்சி விகிதத்தை (ஜிடிபி) எட்டிவிடுவோம் என்கிறார். கடந்த வாரம், கிரிசிலும் (CRISIL), Centre for Monitoring Indian Economyயும், இந்த ஆண்டின் ஜிடிபி 5.8 % தான் இருக்கும் என்கிறது.
மற்ற நாடுகளைப் பார்க்கும்போது, இந்தியாவின் 5.8 % வளர்ச்சி என்பதே பெரிய முன்னேற்றம்போல் தோன்றக்கூடும். இதைக் கொஞ்சம் சரித்திர ரீதியாகப் பார்த்தால் புரிந்துகொள்ள முடியும். இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் இருந்து பார்த்தால், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் பூஜ்ஜியத்துக்குக் கீழே, நெகட்டிவ்வாக இருந்ததில்லை. அதாவது நாம் பொருளாதார வீழ்ச்சியைச் (ரிசெஷனை) சந்தித்ததில்லை. சரிவைச் சந்தித்து இருக்கிறோம். எண்பதுகள் வரை 5 % வளர்ச்சி இருந்தது. பின்னர், பொருளாதார தாராளமயமாக்கலினால், அது 9 சதவிகிதம் வரை உயர்ந்தது. இப்போது, அது மீண்டும் இந்த நிதியாண்டில் 5.6 சதவிகிதமோ (அல்லது 6 சதவிகிதமோ) இருக்குமானால், சரிவை நீங்கள் யோசித்துப் பார்க்கலாம்.
நூறு கோடிக்கும் மேல் மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டில், ஒவ்வொரு சதவிகிதச் சரிவும், பல லட்சம் வேலைகள் பறிபோனதைக் காட்டுகின்றன. பல்வேறு தொழில்கள் நசிந்துபோனதைக் காட்டுகின்றன. பல்வேறு நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டதைக் காட்டுகின்றன. புதிய தொழில் முயற்சிகள் தள்ளிப் போடப்படுவதைக் காட்டுகின்றன. மக்கள் தம் அன்றாட வாழ்வை நடத்த முடியாமல் போவதைக் காட்டுகிறது.
கண்ணெதிரே பல நிறுவனங்கள், தொழில்கள் நசிந்துபோய்க்கொண்டு இருக்கின்றன. ஏற்கனவே விவசாயம் கஷ்டதிசையில் இருக்க, இந்த ஆண்டு, பல மாநிலங்களில் இன்னும் பருவ மழையே தொடங்கவில்லை. விளைவு, விவசாயம் தொடங்கவில்லை. கூடிய விரைவில், அரிசி, பருப்பு போன்ற அன்றாடம் பயன்படும் பொருள்களின் விலைகள் இன்னும் ஏறப் போகின்றன.
இந்த் நிலையில், எண்ணற்ற நிறுவனங்கள் தம் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பிவைத்துவிட்டன. ஒரு தொழில் துறை பாக்கியில்லாமல், வேலைக் குறைப்பு நடந்திருக்கிறது. அதுவும் பொறியியல் படித்த புது மாணவர்களின் பாடு இன்னும் மோசம். சென்ற ஆண்டு முடித்த பலருக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. அப்படியே ஆஃப்ர் லெட்டர் கிடைத்தவர்களும், வேலைக்கு அழைக்கப்படாமல் திரிசங்கு சொர்க்கத்தில் நிற்கிறார்கள். பல ஐடி நிறுவனங்களில், ஐந்து முதல் பத்து சதவிகிதம் வரை சம்பளக் குறைப்பு நடந்திருக்கிறது. உபரி செலவுகள் என்று அந்த நிறுவனங்கள் நினைக்கும் பல செலவுகள் முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டுவிட்டன.
சென்னையில் எனக்குத் தெரிந்த இரண்டு ஐடி நிறுவனங்களில், கடந்த எட்டு மாதங்களாக சம்பள பாக்கி. உடனடியாக வேறு வேலையும் கிடைக்காத நிலையில், அப்படியே கிடைத்தாலும் இப்போது கிடைக்கும் சம்பளத்தில் பாதியளவு தான் கிடைக்கக்கூடிய நிலையில், இளைஞர்கள் திண்டாடுவதைப் பார்க்க சகிக்கவில்லை. தி. நகரில், எல்டாம்ஸ் ரோடில் சாலையோரங்களில் புதிதாக சொம்பில் கூழ் விற்க ஆரம்பித்து இருக்கிறார்கள். ஐடி இளைஞர்கள் இதன் முக்கிய கஸ்டமர்களாகி இருக்கிறார்கள். அவர்கள் அங்கே சுவைக்காக மட்டும் வந்து கூழ் குடிக்கவில்லை என்பது கண்கூடு.
இந்த நிலையில், மத்திய அரசோ மாநில அரசுகளோ ஏழைகளுக்குப் பயன்படும் விவசாய, உர மானியங்களை வழங்கக்கூடாது, சர்வதேச கச்சா எண்ணை விலையை ஒட்டி, இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை இருக்க வேண்டும், ஒவ்வொரு எண்ணை சுத்திகரிப்பு நிறுவனமும் தாமே விலை நிர்ணயம் செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட வேண்டும், வங்கிகளை குறைந்த வட்டியில் கடன்கொடுக்க வற்புறுத்தக் கூடாது என்று வரிசையாக எண்ணற்ற கருத்துகளை மெத்தப் படித்தவர்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். Controlled Price Mechanism இல்லையென்றால், இத்தனை நேரத்துக்கு இந்தியாவில் எத்தனை பசி, பட்டினிச் சாவுகள் அரங்கேறியிருக்கும் என்பதை இவர்கள் காண மறுக்கிறார்கள்.
பொருளாதாரம் நன்றாக இருக்கும் நேரத்தில், யாரும் எதுவும் செய்யவேண்டியதில்லை. ஆனால், இதுபோன்ற கடினமான காலகட்டங்களில்தான் ஒரு சமூகநலன் பேணும் அரசின் செயல்பாடு முக்கியமாகிறது. அதுவும் இந்தியா போன்ற சமூகப் பாதுகாப்பு அமைப்போ, திட்டமோ இல்லாத நாட்டில், வேலை இழந்த ஒருவன் எங்கேதான் போய் நிற்பான்? வேலை கிடைக்காதவர்கள் எங்கே போய் நிற்பார்கள்? அவனை அண்டி வாழும் குடும்பத்தின் நிலை என்னாகும்?
தெரியவில்லை. உடனே எல்லாவற்றையும் தேசியமயமாக்குவதுதான் சரியான தீர்வு என்று நான் நினைக்கவில்லை. நாம் தேசியமயமாக்குதலின் குறைகளை நிறையவே பார்த்துவிட்டோம். முழுமையான திறந்த பொருளாதாரத்துக்கும் நம்மால் போக முடியவில்லை. பழைய மாதிரி, லைசென்ஸ் கோட்டா ராஜ் என்று, கவர்மெண்டே கடவுள் என்று இருக்கவும் முடியவில்லை.
கேள்விகள் மட்டும் கேள்விகளாகவே நிற்கின்றன.