தொலைத்தொடர்பு கோபுரம்: ஒரு தொழில் வாய்ப்பு
Posted in தொழில் வாய்ப்புகள், பொருளாதாரம் on September 9th, 2009 by வெங்கடேஷ் – Be the first to commentஇந்தியாவில் டெலிகாம் துறை பல தொழில் வாய்ப்புகளையும் வேலைவாய்ப்புகளையும் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக இருக்கும் பொருளாதாரச் சரிவிலும் வளர்ந்த ஒரு முக்கியத் துறை டெலிகாம். சி.டி.எம்.ஏ., ஜி.எஸ்.எம். இரண்டு மொபைல் சேவைகளும் ஒவ்வொரு மாதமும் வளர்ந்திருக்கின்றன. புதிய பயனர்கள் சேர்ந்துகொண்டே வருகிறார்கள். இன்றைய தேதியில் இந்தியாவில் மொபைல் பரவலாக்கல் (mobile penetration) 37%. அது இன்னும் மூன்றாண்டுகளில் 60 %ஐத் தொட்டும் என்று ஆய்வாளர்கள் கணக்கிடுகிறார்கள்.
இதில் என்னைக் கவர்ந்த ஒரு விஷயம், மொபைல் போன்களுக்காக வைக்கப்படும் டவர்கள்தான். ஒவ்வொரு ஆபரேட்டரிடமும் அது இன்று ஒரு பிரிவாகி, தனியே லாபம் ஈட்டும் வாய்ப்பையும் பெற்றிருக்கிறது. இந்தியாவில் கிட்டத்தட்ட 2 லட்சம் மொபைல் டவர்கள் இருக்கின்றன. இண்டஸ் டவர்ஸ் நிறுவனத்திடம் ஒரு லட்சம் டவர்களும், ரிலையன்ஸிடம் 33,000 டவர்களும் டாட்டாவிடம் 30,000 டவர்களும் இருக்கின்றனவாம். 2012க்குள் இந்தியாவில் 4 லட்சம் டவர்கள் வரை தேவைப்படும் என்று கணக்கிட்டு இருக்கிறார்கள்.
ஒரு மொபைல் டவர் அமைக்க, 22 முதல் 25 லட்சம் வரை செலவாகிறது. ஒவ்வொரு டவரையும் வாடகை, மின்சாரம் ஆகியவற்றோடு பராமரிக்க, ஒரு மாதத்துக்கு ரூ. 1 லட்சம் வரை செலவாகிறது. ஆரம்பத்தில் ஒவ்வொரு டெலிகாம் நிறுவனமும் தமக்கான டவர்களை அமைப்பதில் ஈடுபாடு காட்டின. பின்னர் தான் அதன் சூட்சுமம் புரிய ஆரம்பித்தது. ஒரு டவரை நான்கு டெலிகாம் நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட முடியும். ஒவ்வொருவரும் தத்ததமது சிக்னல்களைப் பெற, அனுப்ப இந்த டவரைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
அவ்வளவுதான். திடீரென்று, டெலிகாம் டவரில் உள்ள வணிக வாய்ப்பு பளிச்சென்று தெரிய ஆரம்பித்துவிட்டது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், தனது டவர் தொழிலைப் பிரித்து தனித் தொழிலாக்கிவிட்டது : ரிலையன்ஸ் இன்ஃப்ரா. டாட்டாவும் அப்படியே. ஏற்கெனவே பெரிய டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல், வொடஃபோன், ஐடியா ஆகியவை இணைந்து இண்டஸ் டவர்ஸ் நிறுவனத்தைத் தனியே நிறுவிவிட்டன.
இன்றைக்கு எந்த ஒரு புதிய டெலிகாம் நிறுவனம் தனது சேவையை இந்தியாவில் தொடங்கவேண்டும் என்றாலும் அடுத்த இரண்டாவது, மூன்றாவது மாதத்தில் தொடங்கிவிடலாம். நேரடியாக டவர்கள் வாடகைக்கு கிடைக்கும்.
இதில் எங்கே தொழில் வாய்ப்பு என்கிறீர்களா? உங்கள் வீட்டு மொட்டை சும்மா இருக்கிறதா? எங்கோ ஊருக்கு வெளியே நிலத்தை வாங்கிப் போட்டுவிட்டு சும்மா வைத்திருக்கிறீர்களா? பயிரே இல்லாமல் உங்கள் பூமி கரம்பாகக் கிடக்கிறதா? பக்கத்தில் ஐந்நூறு அடி சுற்றளவுக்குள் எந்த ஒரு டவரும் கண்ணில் தட்டுப்படவில்லையெனில், தாராளமாக நீங்கள் இந்த டவர் கம்பெனிகளை அணுகலாம்.
எனக்குத் தெரிந்த ஃப்ளாட்டுகளின் தலைமேல் டவர்கள் முளைத்திருக்கின்றன. அந்த ஃப்ளாட்டுகளில் மெயிண்டெனென்ஸ் செலவே கிடையாது. டவர் வாடகையை வைத்துக்கொண்டே, ஃப்ளாட் முழுவதும் வெள்ளையடித்தவர்கள் உண்டு. குறைந்தபட்சம் மாதம் 15,000 முதல் வாடகை நிச்சயம். இடத்தைப் பொறுத்து இது கூடவும் செய்யும்.
அடுத்த ஒன்று, ஒன்றரை ஆண்டுகளில் இந்த டவர் கம்பெனிகள் பங்குச் சந்தையில் பணம் திரட்ட கண்டிப்பாக வரும். ஏற்கனவே இண்டஸும் ரிலையன்ஸ் இன்ஃப்ராவும் வரவிருந்தன. பொருளாதாரச் சரிவால், அவை தடைபட்டிருக்கின்றன. பங்குச் சந்தைக்கு வரும்போது, இந்த டவர் கம்பெனிகளின் பங்குகளை வாங்கி வையுங்கள். உங்களுக்குப் பயன்படுகிறதோ இல்லையோ, உங்கள் பிள்ளைகளுக்குப் பயன்படும். அடுத்த பத்து பதினைந்து ஆண்டுகளில் டெலிகாம் துறையின் வளர்ச்சி பிரமிப்பாக இருக்கப் போவது உறுதி. அதில் கோபுரங்களும் கொஞ்சம் குளிர்காயும்.
இந்தியாவில் டெலிகாம் துறை பல தொழில் வாய்ப்புகளையும் வேலைவாய்ப்புகளையும் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக இருக்கும் பொருளாதாரச் சரிவிலும் வளர்ந்த ஒரு முக்கியத் துறை டெலிகாம். சி.டி.எம்.ஏ., ஜி.எஸ்.எம். இரண்டு மொபைல் சேவைகளும் ஒவ்வொரு மாதமும் வளர்ந்திருக்கின்றன. புதிய பயனர்கள் சேர்ந்துகொண்டே வருகிறார்கள். இன்றைய தேதியில் இந்தியாவில் மொபைல் பரவலாக்கல் (mobile penetration) 37%. அது இன்னும் மூன்றாண்டுகளில் 60 %ஐத் தொட்டும் என்று ஆய்வாளர்கள் கணக்கிடுகிறார்கள்.
இதில் என்னைக் கவர்ந்த ஒரு விஷயம், மொபைல் போன்களுக்காக வைக்கப்படும் டவர்கள்தான். ஒவ்வொரு ஆபரேட்டரிடமும் அது இன்று ஒரு பிரிவாகி, தனியே லாபம் ஈட்டும் வாய்ப்பையும் பெற்றிருக்கிறது. இந்தியாவில் கிட்டத்தட்ட 2 லட்சம் மொபைல் டவர்கள் இருக்கின்றன. இண்டஸ் டவர்ஸ் நிறுவனத்திடம் ஒரு லட்சம் டவர்களும், ரிலையன்ஸிடம் 33,000 டவர்களும் டாட்டாவிடம் 30,000 டவர்களும் இருக்கின்றனவாம். 2012க்குள் இந்தியாவில் 4 லட்சம் டவர்கள் வரை தேவைப்படும் என்று கணக்கிட்டு இருக்கிறார்கள்.
ஒரு மொபைல் டவர் அமைக்க, 22 முதல் 25 லட்சம் வரை செலவாகிறது. ஒவ்வொரு டவரையும் வாடகை, மின்சாரம் ஆகியவற்றோடு பராமரிக்க, ஒரு மாதத்துக்கு ரூ. 1 லட்சம் வரை செலவாகிறது. ஆரம்பத்தில் ஒவ்வொரு டெலிகாம் நிறுவனமும் தமக்கான டவர்களை அமைப்பதில் ஈடுபாடு காட்டின. பின்னர் தான் அதன் சூட்சுமம் புரிய ஆரம்பித்தது. ஒரு டவரை நான்கு டெலிகாம் நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட முடியும். ஒவ்வொருவரும் தத்ததமது சிக்னல்களைப் பெற, அனுப்ப இந்த டவரைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
அவ்வளவுதான். திடீரென்று, டெலிகாம் டவரில் உள்ள வணிக வாய்ப்பு பளிச்சென்று தெரிய ஆரம்பித்துவிட்டது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், தனது டவர் தொழிலைப் பிரித்து தனித் தொழிலாக்கிவிட்டது : ரிலையன்ஸ் இன்ஃப்ரா. டாட்டாவும் அப்படியே. ஏற்கெனவே பெரிய டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல், வொடஃபோன், ஐடியா ஆகியவை இணைந்து இண்டஸ் டவர்ஸ் நிறுவனத்தைத் தனியே நிறுவிவிட்டன.
இன்றைக்கு எந்த ஒரு புதிய டெலிகாம் நிறுவனம் தனது சேவையை இந்தியாவில் தொடங்கவேண்டும் என்றாலும் அடுத்த இரண்டாவது, மூன்றாவது மாதத்தில் தொடங்கிவிடலாம். நேரடியாக டவர்கள் வாடகைக்கு கிடைக்கும்.
இதில் எங்கே தொழில் வாய்ப்பு என்கிறீர்களா? உங்கள் வீட்டு மொட்டை சும்மா இருக்கிறதா? எங்கோ ஊருக்கு வெளியே நிலத்தை வாங்கிப் போட்டுவிட்டு சும்மா வைத்திருக்கிறீர்களா? பயிரே இல்லாமல் உங்கள் பூமி கரம்பாகக் கிடக்கிறதா? பக்கத்தில் ஐந்நூறு அடி சுற்றளவுக்குள் எந்த ஒரு டவரும் கண்ணில் தட்டுப்படவில்லையெனில், தாராளமாக நீங்கள் இந்த டவர் கம்பெனிகளை அணுகலாம்.
எனக்குத் தெரிந்த ஃப்ளாட்டுகளின் தலைமேல் டவர்கள் முளைத்திருக்கின்றன. அந்த ஃப்ளாட்டுகளில் மெயிண்டெனென்ஸ் செலவே கிடையாது. டவர் வாடகையை வைத்துக்கொண்டே, ஃப்ளாட் முழுவதும் வெள்ளையடித்தவர்கள் உண்டு. குறைந்தபட்சம் மாதம் 15,000 முதல் வாடகை நிச்சயம். இடத்தைப் பொறுத்து இது கூடவும் செய்யும்.
அடுத்த ஒன்று, ஒன்றரை ஆண்டுகளில் இந்த டவர் கம்பெனிகள் பங்குச் சந்தையில் பணம் திரட்ட கண்டிப்பாக வரும். ஏற்கனவே இண்டஸும் ரிலையன்ஸ் இன்ஃப்ராவும் வரவிருந்தன. பொருளாதாரச் சரிவால், அவை தடைபட்டிருக்கின்றன. பங்குச் சந்தைக்கு வரும்போது, இந்த டவர் கம்பெனிகளின் பங்குகளை வாங்கி வையுங்கள். உங்களுக்குப் பயன்படுகிறதோ இல்லையோ, உங்கள் பிள்ளைகளுக்குப் பயன்படும். அடுத்த பத்து பதினைந்து ஆண்டுகளில் டெலிகாம் துறையின் வளர்ச்சி பிரமிப்பாக இருக்கப் போவது உறுதி. அதில் கோபுரங்களும் கொஞ்சம் குளிர்காயும்.