கடிதங்கள்

முந்தியிருப்பச் செயல் – ஹரிகிருஷ்ணன் கடிதம்

Posted in கடிதங்கள், நேசமுடன் on October 20th, 2009 by வெங்கடேஷ் – 1 Comment

எது முடிகிறதோ இல்லையோ, ஒன்றை மட்டும் நான் செய்யக்கூடாது என்று மிகவும் கவனமாக இருந்து வருகிறேன். எந்த வகையிலும் நான் என் கருத்துகளை, ஆர்வங்களை, எதிர்பார்ப்புகளையோ என் மகள் மேல் திணித்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். ஏனெனில், என் பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளை நான் என்றுமே நிறைவு செய்ய முடிந்ததில்லை. என் மகள் மட்டும் அதை எப்படிச் செய்வாள்?

:-) ))

முடியவே முடியாத காரியம் வெங்கடேஷ்.  நான் குடும்பத்தில் ஒரு non-interfering வகைப் பிராணி.  மனைவிக்கு வந்திருக்கும் இன்ஷூரன்ஸ் பாலிசி நினைவூட்டுக் கடிதத்தைக்கூட பிரிக்க மாட்டேன்.  அவரவருக்கு வந்த கடிதத்தை அவரவர்தான் பிரிக்கவேண்டும் என்பது குடும்பத்துக்குப் பொதுவிதியாகவே போய்விட்டது. 

ஆனால், ஒவ்வொரு பிள்ளைக்கும் அப்பா ஒரு (குறைந்தபட்சமாகச் சொல்வதானால்) அதாரிடேடிவ் டிக்டேடர்தான்.   இருபது வயதைத் தாண்டும் வரையில் பிள்ளைக்கு அப்பா சூப்பர்வைசராகத்தான் தென்படுவார்.  உங்கள் புண்ணியம்.  பெண் குழந்தைகளைப் பெற்றிருக்கிறீர்கள்.  என்றென்றும் அப்பாவுக்குள் இருப்பவர்கள். 

பசங்க கதையே வேற.  அதை உங்களிடம் சொல்லத் தேவையில்லை. நீங்களும் நானும் பசங்களா இருந்துதானே பெரியவங்களாகியிருக்கோம்!  ‘எம்பிள்ளைக்கு நான் பரிபூரண சுதந்திரம் கொடு்த்திருக்கிறேன்’ என்றுதான் என் அப்பாவும் சொல்லிக் கொண்டிருந்தார்.  நானும் இப்போது அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.  சொல்வதில்லை.  என் கருத்து, என் ஆர்வம் எல்லாம் என்வரையில்தான்.  நான் பிள்ளைகளை வற்புறத்துவதில்லை.  ரெண்டு பசங்களும் பழந்தமிழ் இலக்கியம்னா என்ன என்றே தெரியாதவர்கள்.  அவரவருக்கு அவரவர் ஆர்வம் என்று நானும் தலையிடுவதில்லை.  அப்பாவைப் பற்றிய பார்வை என்னவோ ஒரு பன்னிரண்டு-பதினைந்து தொடங்கி ஒரு முப்பது தாண்டும் வரையில் டமால் டுமலாகத்தான் இருக்கும்.  உண்டுதானே?  ஆண்குழந்தையைப் பெற்றவன் பார்வையிலிருந்து கொஞ்சம் பாருங்க சார்! 

அன்புடன்,
ஹரிகி.

உள்ளடக்கமும் விலையும் – கடிதம்

Posted in இதழியல், கடிதங்கள் on October 20th, 2009 by வெங்கடேஷ் – 1 Comment

புதிய தலைமுறை வாங்கிப் படித்தேன். ஏமாற்றமே அடைந்தேன். தலைப்பைத் தவிர எதுவும் புதிதில்லை. அரைச்ச மாவே எங்கும். அது வியாபாரமானால் அதன் குறைந்த விலைக்காகத்தானே தவிர அதன் உள்ளடக்கத்திற்காக அல்ல. நொந்தசாமி படம் போல பல பத்திரிகைகளின் கதம்பம்தான் இது. இது என் ஆழ்ந்த கருத்தை இன்னொரு முறை நிரூபித்திருக்கிறது. அது – அனுபவம் (அதிக அனுபவம்) புதுமையை தர முடியாது என்பது. ஆசிரியர் குழுவில் உள்ள அனைவரும் பழுத்த அனுபவம் உள்ளவர்கள். அவர்களால் புதுமையை தர முடியாது என்பது இன்னொரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

புதிய தளைமுறை நிச்சயம் வெற்றி பெறும். ஆனால் அதன் குறைந்த விலையாலும், வியாபாரத் தந்திரத்தினாலும்தான்.

இந்தியாவின் சாபமான பழுத்த அனுபவத் தேவை இதிலும் குறை சேர்க்கிறது.

Regards,
Kumar…

தமிழ் மாநாடு – முத்துலிங்கம் கடிதம்

Posted in கடிதங்கள் on September 24th, 2009 by வெங்கடேஷ் – Be the first to comment

அன்பரே,
மிக அருமையான பதிவு. முற்றிலும் ஆமோதிக்கிறேன்.
உங்கள் ஆலோசனைகள் பலித்திட  என் வாழ்த்துக்கள்.
அன்புடன்
 
அ.முத்துலிங்கம்

நேசமுடன் 7 – ரவிஷங்கர் கடிதம்

Posted in கடிதங்கள் on September 24th, 2009 by வெங்கடேஷ் – 1 Comment

வெங்கடேஷ்,

நல்ல கருத்துகள்.  அகராதி+ மெய்ப்பு இரண்டையும் பார்க்க உதவும் எந்த மென்பொருளுக்கும் என் வீட்டுக் கணினிகள் மிகத் தாகத்தோடு காத்திருக்கின்றன.  பதிப்பு வேலைகளை இலவசமாகச் செய்யும் என் போன்றவர்களுக்கு இவை இலவச இணைப்புகளாக, வசதிகளாகக் கிட்டுவது, சமூக முதலீட்டைத்தான் அதிகரிக்கும், மக்களுக்கு ஏதும் நஷ்டமாகாது.
 
இன்னமும் தமிழில் எழுத உருப்படியான மென்பொருள் ஏதும் இல்லை என்பது என் அனுபவம்.  வலையில் உள்ள பல மென்பொருட்களைப் பயன்படுத்திப் பார்த்துவிட்டேன்.  தட்டச்சு முறையை மாற்றிக்கொண்டு தமிழ் தட்டச்சுக்கு மாறச் சொல்லி சில நண்பர்கள் சொன்னார்கள்.  நான் ஆங்கில கீபோர்டில் ஒலி ஒழுங்கு முறையைப் பயன்படுத்தி அடிப்பதில்தான் சிக்கல் என்கிறார்கள்.  உங்கள் கருத்து என்ன?

புத்தக விநியோகம் குறித்து நீங்கள் எழுதுவது புடவை, துணிமணி, புகையிலை சிகரெட் அளவு புத்தகங்கள் தமிழ் மக்களுக்கு அவசியப் பண்ட்மாகத் தெரியவில்லை என்பதை மறுபடி விளக்குகிறது.  அந்த ஒரு வாதத்தை நீங்கள் முன்வைக்கவில்லை என்பது ஒன்றுதான் குறை.  புத்தகங்கள் வறிய மக்கள் பெரும்பான்மையாக இருக்கும் சமுதாயத்தில் எளிதில் விற்காது என்பது ஒரு உண்மையாக இருக்கலாம்.  ஆனால் பட்டுப் புடவைகளும் தங்க நகைகளும் ஏராளமாக விற்கும் கடைகள் த்மிழகமெங்கும் உள்ளன. குளிர் சாதனப் பெட்டி விற்கும் கடைகள் இல்லாத ஊரே இல்லை என்ற நிலைக்குக் கூட வந்திருக்கிறோம்.  புத்தகங்களுக்கு அப்படி ஒரு விரி வினியோகம் கிட்டாவிட்டாலும், குறைந்த பட்சம் சஞ்சிகைகளின் விநியோகத்தில் பத்தில் ஒரு பங்கு கூடவா கிட்டக் கூடாது? 

குறும்படங்கள் வசதிகளும் சந்தை வகைகளும் மலிந்த மேற்கிலேயே இப்போதுதான் ஓரளவு விறக்த் துவங்கி இருக்கின்றன.  தகவல் படங்கள், ஆவணப் படங்களுக்கென்று இப்போது தனி அலைவரிசை தொலைக்காட்சியில் கிட்டி இரண்டு மூன்று அலை வ்ரிசைகள் என் வீட்டில் கிட்டுகின்ற்ன.  மொத்தத் தொலைக்காட்சிப் பாலைவனத்தில் இவை உண்மையிலேயே பாலைச் சோலைகள்தான்.  இவற்றில் நிறைய குறும்படங்களும் கிட்டுகின்றன. 

குறும்படங்களில் அனிமேஷன், நகைச்சுவைப் படங்கள் எடுக்க ஆரம்பித்தால் ஓரளவு வணிக சாத்தியம் கூடும்.  அரங்கநாதனின் எழுத்துலகு, சா.கந்தசாமியின் வரலாறு, ஜெ.காந்தனின் மீசை நீளம் என்று உப்புக்குப் போதாத படங்களை எடுத்துத் தம் மேதமையை உலகுக்குப் பறைசாற்ற நினைக்கும் பட இயக்குநர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.  ஆனால் பரிவு சிறிதும் வரவில்லை.  தானாகப் போய் சுடும் தாரில் காலை வைத்து விட்டு புதுச் செருப்பு போச்சே என்பவர்களைப் பார்த்துப் பரிவு எப்படி வரும்?

ரச

நேசமுடன் 6 – பிரம்மராஜன் கடிதம்

Posted in கடிதங்கள் on September 24th, 2009 by வெங்கடேஷ் – Be the first to comment

Dear friend,
Thank you for the post.
It was really a relief to read the issue.

Regards
brammarajan

பொக்கிஷம் – கடிதம்

Posted in கடிதங்கள் on September 11th, 2009 by வெங்கடேஷ் – Be the first to comment
Dear Venkatesh,
Thank you for informing us about books to kids.  Enjoyed reading the next article also.
Best regards.,
Ramya
Dear Venkatesh,
Thank you for informing us about books to kids.  Enjoyed reading the next article also.
Best regards.,
Ramya

சமச்சீர் கல்வி – கடிதம் 1

Posted in கடிதங்கள் on September 11th, 2009 by வெங்கடேஷ் – Be the first to comment
வெங்கட் – வெகு சாதரண தளத்தில் எழுதியுள்ள கட்டுரை.
ஏன் சமச்சீர் கல்வி வேண்டும் என்ற கேள்வியை யாரும் எழுப்புவதேயில்லை.
அப்படியே வந்தாலும் எது வரைக்கும் சமச்சீர் கல்வி தேவை போன்ற கேள்விகள் ஆழமாய் கேட்கப்படவேண்டும். இப்போதய கல்வியின் தேவையென்ன .
எனது கருத்தின்படி, அரசு வெறும் சிலபஸ் அதாவது ஒரு சில தலைப்புகளை மட்டும் கொடுத்துவிட்டு ஓதுங்கி கொள்ளுதலும், அதற்கான பாடத்திட்டங்கள் இலவசமாக மாணவர்களுக்கு கிடைக்கவேண்டும். அதாவது நான் ஆறாவது வகுப்பு படிக்கிறேனேன்றால், எனக்குரிய பாடத்திட்டங்களும் மட்டும் புத்தக கண்டெண்டும் இணையத்தில் ப்ரீயாக இருக்க வேண்டும். அல்லது எல்லா மளிகைக்கடையிலும் சல்லிசாக கிடைக்கவேண்டும்.
ஆனால் அதன் மேல் கட்டப்படுகிற வேல்யூ அடிசனுக்கு வேண்டுமென்றால் பதிப்பகங்கள் விலையிட்டு கொள்ளலாம்.
சந்தை பாடத்திட்டத்திற்கும் பாடத்திற்கும் நிறைய வாய்ப்புகளை கொடுக்க வேண்டும், வேலைக்கும், கல்விக்கும் உள்ள தொடர்பு நீடிக்கிற வரையும், குடும்ப என்கிற சுமை மாணவன் மீது இருக்கும் வரைக்கும் சமச்சீரால் பெரிய மாற்றங்களை கொண்டு வர முடியாது என்று நினைக்கிறேன். மேலே சொன்ன இரண்டு பகுதிகளிலும் மிகப்பெரிய கருத்து புரட்சி தேவை.
அம்பானியும், பிர்லாவும் கட்டிய மும்பை பள்ளிகளில் வருசத்திற்கு ஒரு லட்சத்திலிருந்து மூன்று லட்சம் வரைக்கும் எலிமண்டரி ஸ்கூலுக்கு செல்வழிக்கிறார்கள். உயர்தட்டு நடுத்தர வர்க்கம் இப்போது நாக்கை தொங்க போட்டுக்கொண்டு பார்த்துக்கொண்டிருக்கிறது. வருடத்திற்கு முப்பாதாயிரம், நாப்பதாயிரம் செலவழித்தது அலுத்துப்போகி, அப்படி என்னதான் அதில் புதுசாயிருக்கும் என நானும் அதிசயத்துபோகிறேன். ( நல்ல பேகேஜீங் என்பது வேற விசயம்)
மும்பையின் மிகப்பெரிய கொடுரம். டியூசன்.. அதைப்பற்றி தனியே எழுதலாம்.
கே.ஆர்.மணி
வெங்கட் – வெகு சாதரண தளத்தில் எழுதியுள்ள கட்டுரை.
ஏன் சமச்சீர் கல்வி வேண்டும் என்ற கேள்வியை யாரும் எழுப்புவதேயில்லை.
அப்படியே வந்தாலும் எது வரைக்கும் சமச்சீர் கல்வி தேவை போன்ற கேள்விகள் ஆழமாய் கேட்கப்படவேண்டும். இப்போதய கல்வியின் தேவையென்ன .
எனது கருத்தின்படி, அரசு வெறும் சிலபஸ் அதாவது ஒரு சில தலைப்புகளை மட்டும் கொடுத்துவிட்டு ஓதுங்கி கொள்ளுதலும், அதற்கான பாடத்திட்டங்கள் இலவசமாக மாணவர்களுக்கு கிடைக்கவேண்டும். அதாவது நான் ஆறாவது வகுப்பு படிக்கிறேனேன்றால், எனக்குரிய பாடத்திட்டங்களும் மட்டும் புத்தக கண்டெண்டும் இணையத்தில் ப்ரீயாக இருக்க வேண்டும். அல்லது எல்லா மளிகைக்கடையிலும் சல்லிசாக கிடைக்கவேண்டும்.
ஆனால் அதன் மேல் கட்டப்படுகிற வேல்யூ அடிசனுக்கு வேண்டுமென்றால் பதிப்பகங்கள் விலையிட்டு கொள்ளலாம்.
சந்தை பாடத்திட்டத்திற்கும் பாடத்திற்கும் நிறைய வாய்ப்புகளை கொடுக்க வேண்டும், வேலைக்கும், கல்விக்கும் உள்ள தொடர்பு நீடிக்கிற வரையும், குடும்ப என்கிற சுமை மாணவன் மீது இருக்கும் வரைக்கும் சமச்சீரால் பெரிய மாற்றங்களை கொண்டு வர முடியாது என்று நினைக்கிறேன். மேலே சொன்ன இரண்டு பகுதிகளிலும் மிகப்பெரிய கருத்து புரட்சி தேவை.
அம்பானியும், பிர்லாவும் கட்டிய மும்பை பள்ளிகளில் வருசத்திற்கு ஒரு லட்சத்திலிருந்து மூன்று லட்சம் வரைக்கும் எலிமண்டரி ஸ்கூலுக்கு செல்வழிக்கிறார்கள். உயர்தட்டு நடுத்தர வர்க்கம் இப்போது நாக்கை தொங்க போட்டுக்கொண்டு பார்த்துக்கொண்டிருக்கிறது. வருடத்திற்கு முப்பாதாயிரம், நாப்பதாயிரம் செலவழித்தது அலுத்துப்போகி, அப்படி என்னதான் அதில் புதுசாயிருக்கும் என நானும் அதிசயத்துபோகிறேன். ( நல்ல பேகேஜீங் என்பது வேற விசயம்)
மும்பையின் மிகப்பெரிய கொடுரம். டியூசன்.. அதைப்பற்றி தனியே எழுதலாம்.
கே.ஆர்.மணி

சமச்சீர் கல்வி – கடிதம் 2

Posted in கடிதங்கள் on September 11th, 2009 by வெங்கடேஷ் – Be the first to comment
சமச்சீர் கல்வி பற்றிய கட்டுரை நல்ல கருத்துக்களை முன் வைத்தது. அதில் ‘அமெரிக்க ஆர்வமும்’ என்ற ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தெளிவு படுத்த விரும்புகிறேன்.
// இதில் ஆங்கில மோகமும் அமெரிக்க ஆர்வமும் மேட்டிமைத்தனமும் உண்டு என்பதையும் மனத்தில் வாங்கிக்கொள்ளுவோம்.//
உண்மையில் இங்கே அமெரிக்காவில்  அரசு பள்ளிகள்தான் பெரும்பாலானவர்க்கு affordable & quality கல்வி அளித்துக் கொண்டிருக்கின்றன. தனியார் பள்ளிகளை சாமானியர்கள் நெருங்க முடியாது. அமெரிக்க ஆர்வம் என்றால் வரிப் பணத்தை முறையாக பயன்படுத்தி அரசு பள்ளிகளை சரியாக  நடத்திச் செல்லுவதாக அது அமைய வேண்டும். அதுதான் இங்கே நடக்கிறது.
நம்மிடம் என்ன பிரச்னை என்றால் அமெரிக்கா பற்றிய தவறான பிம்பங்களை எழுப்பிக் கொண்டு அதற்கு பலியாகிறார்கள் அல்லது பிறரை பலி இடுகிறார்கள்.
[சத்யராஜ்குமார்]
பி. கு. books to kids அருமையான திட்டம். எனக்கு சிறுவயதில் பள்ளியில் பரிசாக கிடைத்த புத்தகங்கள்தான் என்னை எழுதுபவனாக ஆக்கியது.
சமச்சீர் கல்வி பற்றிய கட்டுரை நல்ல கருத்துக்களை முன் வைத்தது. அதில் ‘அமெரிக்க ஆர்வமும்’ என்ற ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தெளிவு படுத்த விரும்புகிறேன்.
// இதில் ஆங்கில மோகமும் அமெரிக்க ஆர்வமும் மேட்டிமைத்தனமும் உண்டு என்பதையும் மனத்தில் வாங்கிக்கொள்ளுவோம்.//
உண்மையில் இங்கே அமெரிக்காவில்  அரசு பள்ளிகள்தான் பெரும்பாலானவர்க்கு affordable & quality கல்வி அளித்துக் கொண்டிருக்கின்றன. தனியார் பள்ளிகளை சாமானியர்கள் நெருங்க முடியாது. அமெரிக்க ஆர்வம் என்றால் வரிப் பணத்தை முறையாக பயன்படுத்தி அரசு பள்ளிகளை சரியாக  நடத்திச் செல்லுவதாக அது அமைய வேண்டும். அதுதான் இங்கே நடக்கிறது.
நம்மிடம் என்ன பிரச்னை என்றால் அமெரிக்கா பற்றிய தவறான பிம்பங்களை எழுப்பிக் கொண்டு அதற்கு பலியாகிறார்கள் அல்லது பிறரை பலி இடுகிறார்கள்.
[சத்யராஜ்குமார்]
பி. கு. books to kids அருமையான திட்டம். எனக்கு சிறுவயதில் பள்ளியில் பரிசாக கிடைத்த புத்தகங்கள்தான் என்னை எழுதுபவனாக ஆக்கியது.

செல்போன் கோபுரம் – கடிதம்

Posted in கடிதங்கள் on September 11th, 2009 by வெங்கடேஷ் – Be the first to comment
Dear Venkatesh
I will come to the other parts later. Regarding putting up the cell towers over the buildings, Many have serious aspersions over it. When the BSNL approached to put up a cell tower over my home in Thenthiruperai village, I rejected the offer. It would have fetched me Rs.3000/month as a rent. These towers should not be allowed amidst residential areas. It may be allowed outside the densely populated areas. Similarly our apartment HOA in Bangalore rejected the offers from so many Cell phone companies in spite of making good money for our HOA. These towers are health hazards. They should not be too close to homes. Please do a research on the negative aspects of allowing towers in our terrace. I have empty lands, but I am not going to allow any towers inside those lands, I want my piece of land to be inherited and owned by birds and little animals.
Regards
Rajan

Dear Venkatesh

I will come to the other parts later. Regarding putting up the cell towers over the buildings, Many have serious aspersions over it. When the BSNL approached to put up a cell tower over my home in Thenthiruperai village, I rejected the offer. It would have fetched me Rs.3000/month as a rent. These towers should not be allowed amidst residential areas. It may be allowed outside the densely populated areas. Similarly our apartment HOA in Bangalore rejected the offers from so many Cell phone companies in spite of making good money for our HOA. These towers are health hazards. They should not be too close to homes. Please do a research on the negative aspects of allowing towers in our terrace. I have empty lands, but I am not going to allow any towers inside those lands, I want my piece of land to be inherited and owned by birds and little animals.

Regards

Rajan

தமிழ் பதிப்புலகம் – ரெ. கா. கடிதம்

Posted in கடிதங்கள் on August 27th, 2009 by வெங்கடேஷ் – Be the first to comment
வெங்கடேஷ்,
பீனிக்ஸ் பறவைபோல் வந்திருக்கிறீர்கள்.
நல்வரவு.
“தமிழ்ப் பதிப்புலகம்” நான் அறியத் துடித்திருந்த பல
விஷயங்களைச் சொல்லியது. நன்றி.
இது பற்றி முன்னர் நாம் பேசியதாக நினைவு.
புத்தகங்கள் promotion பற்றி முக்கியமாகப் பேசினோம்.
தொடர்ந்து அனுப்புங்கள்.
நன்றி.
ரெ.கா.

வெங்கடேஷ்,

பீனிக்ஸ் பறவைபோல் வந்திருக்கிறீர்கள்.

நல்வரவு.

“தமிழ்ப் பதிப்புலகம்” நான் அறியத் துடித்திருந்த பல

விஷயங்களைச் சொல்லியது. நன்றி.

இது பற்றி முன்னர் நாம் பேசியதாக நினைவு.

புத்தகங்கள் promotion பற்றி முக்கியமாகப் பேசினோம்.

தொடர்ந்து அனுப்புங்கள்.

நன்றி.

ரெ.கா.