<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>நேசமுடன் &#187; எழுத்தாளர்கள்</title>
	<atom:link href="http://www.nesamudan.com/blog/category/%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.nesamudan.com/blog</link>
	<description>மடல் இதழ்</description>
	<lastBuildDate>Thu, 21 Jan 2010 02:39:22 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.org/?v=2.9.2</generator>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
			<item>
		<title>2009ல் வெளியான நாவல்கள்</title>
		<link>http://www.nesamudan.com/blog/2010/01/21/2009newtamilnovels/</link>
		<comments>http://www.nesamudan.com/blog/2010/01/21/2009newtamilnovels/#comments</comments>
		<pubDate>Thu, 21 Jan 2010 02:39:22 +0000</pubDate>
		<dc:creator>வெங்கடேஷ்</dc:creator>
				<category><![CDATA[இலக்கியம்]]></category>
		<category><![CDATA[எழுத்தாளர்கள்]]></category>
		<category><![CDATA[புத்தகங்கள்]]></category>
		<category><![CDATA[உயிர்மை]]></category>
		<category><![CDATA[காலச்சுவடு]]></category>
		<category><![CDATA[காவ்யா]]></category>
		<category><![CDATA[சந்தியா பதிப்பகம்]]></category>
		<category><![CDATA[தமிழினி]]></category>

		<guid isPermaLink="false">http://www.nesamudan.com/blog/?p=307</guid>
		<description><![CDATA[சென்னைப் புத்தகக் கண்காட்சியை ஒட்டி வெளியாகியுள்ள புதிய நாவல்களின் பட்டியல் இது. இப்பட்டியலில் குறுநாவல்கள் தொகுப்புகளையும் சேர்த்துக்கொண்டு இருக்கிறேன். முடிந்தவரை எல்லா பதிப்பகங்களிலும் கேட்டுப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் இந்த பட்டியலை உருவாக்கியிருக்கிறேன். விடுபட்டவை இருக்கலாம். கண்காட்சிக்கு வராத பதிப்பகங்களைச் சேர்ந்தவர்கள் நாவல்களை வெளியிட்டிருக்கலாம். நண்பர்கள் தங்களுக்குத் தெரிந்த புதிய நாவல்களைத் தெரிவியுங்கள். இந்தப் பட்டியல் அப்போதுதான் நிறைவடையும்.]]></description>
			<content:encoded><![CDATA[<p>சென்னைப் புத்தகக் கண்காட்சியை ஒட்டி வெளியாகியுள்ள புதிய நாவல்களின் பட்டியல் இது. இப்பட்டியலில் குறுநாவல்கள் தொகுப்புகளையும் சேர்த்துக்கொண்டு இருக்கிறேன். முடிந்தவரை எல்லா பதிப்பகங்களிலும் கேட்டுப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் இந்த பட்டியலை உருவாக்கியிருக்கிறேன். விடுபட்டவை இருக்கலாம். கண்காட்சிக்கு வராத பதிப்பகங்களைச் சேர்ந்தவர்கள் நாவல்களை வெளியிட்டிருக்கலாம். நண்பர்கள் தங்களுக்குத் தெரிந்த புதிய நாவல்களைத் தெரிவியுங்கள். இந்தப் பட்டியல் அப்போதுதான் நிறைவடையும்.</p>
<p>மேலும் இதில் ஒரு தேர்வு இருக்கிறது. அது என் ரசனையை ஒட்டிய தேர்வு. பிரபல எழுத்தாளர்களான ரமணி சந்திரன், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் (பலர் பெயர்கள் விட்டுப் போயிருக்கலாம்) ஆகியோர் நிச்சயம் புதிய நாவல்களை வெளியிட்டிருப்பார்கள். தொடர்கதைகளைப் புத்தகங்களாக வெளியிட்டிருப்பார்கள். இப்போது உட்கார்ந்து யோசிக்கும்போது, அதையும் வாங்கிச் சேர்த்துக்கொண்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. மீண்டும் ஒருமுறை புத்தகக் கண்காட்சி செல்லும்போது, இன்னொரு பட்டியலைத் தர முயற்சிக்கிறேன்.</p>
<p>2009ல் வெளியான நாவல்கள் என்று இப்பட்டியலைச் சொல்வதும் முழுமையாகாது. இப்பட்டியல் ஜனவரி 2010 புத்தகக் கண்காட்சியை ஒட்டி வெளியான நாவல்கள். 2009 நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் இந்த நாவல்கள் வெளியாகியிருக்கும். ஒரு சில நேரடியாகப் புத்தகக் கண்காட்சிக்குத் தான் வருகின்றன. ஆண்டு தொடங்கியதில் இருந்து பல நாவல்கள் இடையில் வந்திருக்கலாம். ஒரு சில பதிப்பகங்கள் மாதம், ஆண்டு இரண்டு தகவல்களையும் இம்பிரிண்ட்டில் தருவார்கள். ஒரு சிலர் வெறும் ஆண்டு தருவார்கள். புத்தக வரிசை எண் என்றொரு முறையும் இங்கே பழக்கத்தில் இருக்கிறது.</p>
<p>ஆங்கில நூல்களில் ஒரு பழக்கம் உண்டு. பொதுவாக அக்டோபர் மாதத்துக்குப் பின் வெளியாகும் எந்த ஒரு புத்தகத்துக்கும் அடுத்து வரும் ஆண்டு ஜனவரியை வெளியீட்டு ஆண்டாகவும் மாதமாகவும் தருவார்கள்.</p>
<p>மொழிபெயர்ப்பு நாவல்களையும் நான் இப்பட்டியலில் சேர்க்கவில்லை. நேரடியாகத் தமிழில் எழுதப்பட்ட நாவல்கள் என்ற கண்ணோட்டத்துடனேயே இப்பட்டியல் உருவாக்கப்பட்டிருக்கிறது.</p>
<p>ஜனவரி முதல் தேதி அன்று, நான் புத்தகக் கண்காட்சிக்குப் போயிருந்தேன். தகவல்கள் திரட்டியபோது, கீழே உள்ள ஒரு சில நாவல்கள் அச்சாகிக் கடைகளுக்கு வந்திருக்கவில்லை. அப்புறம் வந்திருக்கலாம்.</p>
<p>1. காதில் மெல்ல காதல் சொல்ல &#8211; ஏ.ஏ.ஹெச்.கே.கோரி &#8211; சந்தியா பதிப்பகம் &#8211; ரூ.40<br />
2. கரைதேடும் ஓடங்கள் &#8211; உஷா ராமசந்திரன் &#8211; சந்தியா பதிப்பகம் &#8211; ரூ.50<br />
3. குவியம் &#8211; ஜெயந்தி சங்கர் &#8211; ரூ.100<br />
4. மலையகமல்லன் &#8211; தி.குழந்தைவேலு &#8211; காவ்யா &#8211; ரூ.80<br />
5. என் உயிரே விட்டுக்கொடு &#8211; முத்தாலங்குறிச்சி காமராசு &#8211; காவ்யா &#8211; ரூ.90<br />
6. அனல் காற்று &#8211; ஜெயமோகன் &#8211; தமிழினி &#8211; ரூ.90<br />
7. நெடுஞ்சாலை &#8211; கண்மணி குணசேகரன் &#8211; தமிழினி &#8211; ரூ.230<br />
8. நாடு விட்டு நாடு &#8211; முத்தம்மாள் பழனிசாமி &#8211; தமிழினி &#8211; ரூ. 220<br />
9. தலையணை மந்திரோபதேசம் &#8211; நடேச சாஸ்திரி &#8211; தமிழினி &#8211; ரூ.75<br />
10. நட்டுமை &#8211; ஆர்.எம்.நெளஸாத் &#8211; காலச்சுவடு பதிப்பகம் &#8211; ரூ. 120<br />
11. மூன்றாம் சிலுவை &#8211; உமா வரதராஜன் &#8211; காலச்சுவடு பதிப்பகம் &#8211; ரூ. 90<br />
12. கானல் வரி &#8211; தமிழ்நதி &#8211; உயிர்மை பதிப்பகம் &#8211; ரூ.50<br />
13. மரகதத் தீவு &#8211; காஞ்சனா தாமோதரன் &#8211; உயிர்மை பதிப்பகம் &#8211; ரூ.100<br />
14. சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் &#8211; வா.மு.கோமு &#8211; உயிர்மை பதிப்பகம் &#8211; ரூ.220<br />
15. வெட்டுப் புலி &#8211; தமிழ்மகன் &#8211; உயிர்மை பதிப்பகம் &#8211; ரூ.220<br />
16. அவளது கூரையின் மீது நிலா ஒளிந்திருக்கிறது &#8211; வ.ஐ.ச.ஜெயபாலன் &#8211; உயிர்மை பதிப்பகம் &#8211; ரூ.100</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.nesamudan.com/blog/2010/01/21/2009newtamilnovels/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>கரை தேடும் ஓடங்கள் &#8211; வித்தியாசமான களம்</title>
		<link>http://www.nesamudan.com/blog/2010/01/21/ushanovelreview/</link>
		<comments>http://www.nesamudan.com/blog/2010/01/21/ushanovelreview/#comments</comments>
		<pubDate>Thu, 21 Jan 2010 02:36:23 +0000</pubDate>
		<dc:creator>வெங்கடேஷ்</dc:creator>
				<category><![CDATA[இலக்கியம்]]></category>
		<category><![CDATA[எழுத்தாளர்கள்]]></category>
		<category><![CDATA[புத்தகங்கள்]]></category>
		<category><![CDATA[கரை தேடும் ஓட்டங்கள்]]></category>
		<category><![CDATA[கலைமகள்]]></category>
		<category><![CDATA[கி.வா.ஜ. நூற்றாண்டு விழா நாவல் போட்டி]]></category>
		<category><![CDATA[சந்தியா பதிப்பகம்]]></category>
		<category><![CDATA[ராமசந்திரன் உஷா]]></category>

		<guid isPermaLink="false">http://www.nesamudan.com/blog/?p=305</guid>
		<description><![CDATA[என்னை மிகவும் கவந்த ஒரு அம்சம், கதையின் தொடக்கம்தான். கதை தொடங்கப்படும் இடம் பளிச்சென்று இருக்கவேண்டும். கட்டிப்போடுவது போல் இருக்கவேண்டும். நாவலுக்குள் இழுத்துப் போடுவதாக இருக்கவேண்டும். உஷா அதைச் சரியாகப் புரிந்துகொண்டு இருக்கிறார். பிரச்னையின் மையத்தில் இருந்து நாவலைத் தொடங்கியிருக்கிறார். கவனத்தைக் கவரும் இடம் அது.]]></description>
			<content:encoded><![CDATA[<p>ராமசந்திரனின் உஷாவின் முதல் நாவல். இணையத்தில் எழுதுபவர்களுக்கு, படிப்பவர்களுக்கு உஷாவை நிச்சயம் தெரிந்திருக்கும். நுனிப்புல் என்றொரு வலைப்பதிவு வைத்திருக்கிறார் உஷா.</p>
<p>இந்த நாவல் என்னை மூன்று அம்சங்களில் மிகவும் கவர்ந்தது. ஒன்று இதன் உள்ளடக்கம். புதிய களம். துபாய் வந்துவிட்டு, துன்பப்பட்டு, திண்டாடி மீளும் இரண்டு பெண்கள்; இன்னொரு பெண் அங்கே வேலை செய்து சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்றியவர், ஊர் திரும்புகிறார். துபாய் பற்றியும் அரபு தேசங்கள் பற்றியும் நம்மிடம் இருக்கும் மனச்சித்திரங்களை இந்த கதைத் தொடக்கமே மாற்றி அமைத்துவிடுகிறது. சிறையில் இருந்து ஒரு பெண் மீண்டும் இந்தியா திரும்ப அனுப்பப்படுகிறார். இன்னொரு பெண், ஏஜெண்டால் ஏமாற்றப்பட்டு, பின் தப்பித்து, இந்தியா மீளுகிறாள். இதுவரை சொல்லப்படாத கதை. அதனாலே படிக்கத் தூண்டுவதாக இருக்கிறது.</p>
<p>இரண்டு, நாவலை துபாய் ஏர்போர்ட்டில் தொடங்குபவர் அப்படியே இந்தியா வந்து அப்பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளைத் தொடர்ந்து எழுதிச் செல்கிறார். சட்டென பழைய நினைவுகளுக்குப் போய், பிளாஷ்பேக்கில் கதை சொல்ல ஆரம்பித்துவிடுவாரோ என்று லேசாக பயந்தேன். பழைய சம்பவங்கள் கதையில் வராமல் இல்லை. ஆனால், அதை கதையின் ஓட்டத்தோடு மிக லாகவமாக இணைத்திருக்கிறார் உஷா.</p>
<p>மூன்றாவது, இஸ்லாமியத் தமிழைக் கையாண்டிருக்கும் திறன். முன்னுரையில் நாகூர் ரூமி, உஷாவின் மொழிப் பயன்பாட்டைப் பாராட்டியிருக்கிறார். அப்படியென்றால், மொழிப் பயன்பாடு சரியாக வந்திருக்கிறது என்றே அர்த்தம்.</p>
<p>என்னை மிகவும் கவந்த ஒரு அம்சம், கதையின் தொடக்கம்தான். கதை தொடங்கப்படும் இடம் பளிச்சென்று இருக்கவேண்டும். கட்டிப்போடுவது போல் இருக்கவேண்டும். நாவலுக்குள் இழுத்துப் போடுவதாக இருக்கவேண்டும். உஷா அதைச் சரியாகப் புரிந்துகொண்டு இருக்கிறார். பிரச்னையின் மையத்தில் இருந்து நாவலைத் தொடங்கியிருக்கிறார். கவனத்தைக் கவரும் இடம் அது.</p>
<p>குறைகள் இல்லையா? இருக்கின்றன. முதல் நாவல் எழுதியிருக்கிறார். பாராட்டுவது மட்டுமே நம் வேலை. ஏற்கெனவே கலைமகள், இந்த நாவலைப் பாராட்டி இருக்கிறது. இந்த நாவல், கலைமகள் கி.வா.ஜ. நூற்றாண்டு விழா நாவல் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றிருக்கிறது. தகுதியான பாராட்டு.</p>
<p>கரைதேடும் ஓடங்கள் &#8211; உஷா ராமசந்திரன் &#8211; சந்தியா பதிப்பகம், எண்.57 &#8211; 63ஆவது தெரு, 9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 600083. விலை ரூ.50</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.nesamudan.com/blog/2010/01/21/ushanovelreview/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>அது ஒரு பொற்காலம்</title>
		<link>http://www.nesamudan.com/blog/2009/12/17/bkreview-porkaalam/</link>
		<comments>http://www.nesamudan.com/blog/2009/12/17/bkreview-porkaalam/#comments</comments>
		<pubDate>Thu, 17 Dec 2009 04:05:02 +0000</pubDate>
		<dc:creator>வெங்கடேஷ்</dc:creator>
				<category><![CDATA[எழுத்தாளர்கள்]]></category>
		<category><![CDATA[புத்தகங்கள்]]></category>
		<category><![CDATA[அகிலன்]]></category>
		<category><![CDATA[எம்.எஸ்.]]></category>
		<category><![CDATA[கல்கி]]></category>
		<category><![CDATA[கல்கி ராஜேந்திரன்]]></category>
		<category><![CDATA[சதாசிவம்]]></category>
		<category><![CDATA[சோமாஸ்கந்தன்]]></category>
		<category><![CDATA[டி.கேசி.]]></category>
		<category><![CDATA[நா.பா.]]></category>

		<guid isPermaLink="false">http://www.nesamudan.com/blog/?p=274</guid>
		<description><![CDATA[இந்தப் புத்தகத்தின் நோக்கமே பழைய நினைவுகளை அசைபோடுவதுதான். எப்போதுமே கடந்துவிட்ட காலம், அற்புதமானது. இந்த நூலிலும் அந்த அற்புதம் என்ற உணர்வு மேலோங்கி இருக்கிறது. மனம் இன்றைய காலகட்டத்தோடு பல சம்பவங்களை ஒப்பிட்டுப் பார்த்து, ஏக்கப்பெருமூச்சு விடுவதையும் தவிர்க்க முடியவில்லை. இறுதி அத்தியாயம் சொல்வது போல், ‘அந்த நாளும் வந்திடாதோ’தான்.]]></description>
			<content:encoded><![CDATA[<p>கல்கி ராஜேந்திரன், கல்கி இதழில் எழுபது முதல் ஏழு வரை என்று எழுதிய தொடரை, அது ஒரு பொற்காலம் என்ற பெயரில் நூலாக்கியிருக்கிறார். கல்கி ராஜேந்திரன் நான் மதிக்கும் மிகவும் முக்கியமான இதழ் ஆசிரியர். எழுத்தாளர் கல்கி, சதாசிவம் ஆகியோரிடம் பயிற்சி பெற்றவர் ராஜேந்திரன். ஒரு இதழை, எந்த விதமான அழுத்தங்களுக்கும் ஆட்படாமல், சமரசங்களுக்கும் ஆட்படாமல், நடுநிலையோடு நடத்த முடியும் என்பதை நிரூபித்தவர். அதேசமயம், இளைஞர்களை எழுத வைப்பதில் அவருக்கு இருக்கும் ஆர்வமும் மிக முக்கியம். நான் அவரைச் சந்தித்தது, தொடர்ந்து என்னை அவர் எழுத ஊக்கமளித்தது தனிச் செய்திகள்.</p>
<p>இந்தப் புத்தகம், அவருடைய அனுபவங்களை &#8211; முக்கியமாக கல்கி, ராஜாஜி, டி.கே.சி., எம்.எஸ்., சதாசிவம் ஆகியோரோடு ஏற்பட்ட அனுபவங்களை மிகவும் சுவையாக எழுதியுள்ளார். மேலும் அந்தக் காலத்தில் இருந்த பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்களான நா.பா., அகிலன், பகீரதன், சோமாஸ்கந்தன் ஆகியோரோடு பழகிய அனுபவங்களையும் எழுதியுள்ளார். இந்த நூலில், பல விஷயங்கள் என்னைக் கவர்ந்தன:</p>
<p>இதை ராஜேந்திரன் மட்டும் எழுதவில்லை. வெளியே ஆசிரியர் ‘கல்கி ராஜேந்திரன்’ என்று மட்டும் போட்டிருப்பது சரியாகாது. இதில், அவரது மனைவி, விஜயா ராஜேந்திரனின் பங்களிப்பு மிக அதிகம். பல அத்தியாயங்களில் இருவரும் பேசிக்கொள்ளும் செய்திகளாகவே பல அனுபவங்களை, ரசனைகளை ராஜேந்திரன் எழுதியுள்ளார்.</p>
<p>கல்கியின் மேதமை, ராஜாஜியின் புத்திசாலித்தனம், டி.கே.சியின் நுணுக்கமான ரசனை என்று பல செய்திகளை அனுபவங்கள் மூலமாக ஆசிரியர் எழுதிச் செல்கிறார். அத்தோடு, இன்றைய காலகட்ட அரசியலையும் ஆங்காங்கே தொட்டுச் செல்வது பொருத்தமாக இருக்கிறது.</p>
<p>ஒரு எழுத்தாளராக பலரும் போற்றும் கல்கி, ஒரு அப்பாவாக எப்படி இருந்தார் என்பதில்தான் என் ஆர்வம் முழுவதும். கல்கி எப்படியெல்லாம் ராஜேந்திரனை பண்படுத்தினார் என்பது நூல் முழுவதும் பரவியிருக்கிறது. ஒரு சம்பவம், மிகவும் நெகிழ்ச்சியானது. அதை அப்படியே தருவது பொருத்தமாக இருக்கும்:</p>
<p>‘கல்கி’ எப்படி எழுதினார் என்பதை விட என்ன எழுதினார் என்பதுதான் முக்கியம். என்றாலும் எப்படி எழுதினார், எவ்வாறு சிந்தித்தார் என்று பார்ப்பதிலும் ஒரு சுவாரஸ்யம் இருக்கத்தானே செய்கிறது! அவரிடம் இருந்த குறை நிறைகள் இரண்டேதான். ஒன்று, வேலைச் சுமைகள் மிக அதிகம்; இரண்டு, அவற்றைச் செய்வதற்கான உடல் ஆரோக்கியம் மிகக் குறைவு! இதனால் ஓர் அந்தரங்கப் பணியாளன் போல நான் அவருக்குச் செய்லபட நேர்ந்தது. ஆஸ்த்துமாவினால் அவதிப்பட்டதால் அவர் அடிக்கடி இருமி உமிழ்வார். அந்த எச்சில் கிண்ணத்தை அவ்வப்போது சுத்திகரித்து வைப்பது தொடங்கி, ஆயுர்வேத வைத்தியர் சங்குண்ணி மேனன் கொடுத்த தைலத்தை அவர் உடலில் தடவிக் குளிப்பாட்டுவது வரை அவருக்காக பல்வேறு காரியங்களைச் செய்திருக்கிறேன். அவர் வெளியூர் சென்றால் பெட்டியில் துணி மணிகள் அடுக்குவது, படுக்கை கட்டுவது முதல் ஹிந்து நாளிதழி!<br />
ல் à<br />
��வர் கேட்கிற செய்தியைத் தேடி எடுத்துத் தருவது வரை பலவிதங்களில் உதவியிருக்கிறேன். குன்றாத அன்புடனும் ஒரு மரியாதை கலந்த பெருமிதத்துடனும் இவற்றைச் செய்வேன். நான் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பி.ஃபார்ம் படித்துக்கொண்டிருந்த சமயம் அவருக்கு ஒரு நாள் நான் கால்மிதித்துக் கொண்டிருந்தேன். எனது குதிக்காலால் இலேசாக மிதித்து அந்த இதத்தில் அவரைக் கண்ணுறங்க வைப்பது எனக்கிருந்த பணிகளில் ஒன்று.</p>
<p>“ஏண்டா, என்னையே கவனிச்சிண்டிருந்தா உன் படிப்பு என்ன ஆகிறது?” என்று மனவேதனை எட்டிப் பார்க்கக் கவலையுடன் கேட்டார்.</p>
<p>“கவலைப்படாதீங்கோ! பிரமாத மார்க் வாங்காவிட்டாலும் பி.ஃபார்ம் டிகிரி வாங்கிவிடுவேன், நிச்சயம்” என்று ஆறுதலாக உறுதி அளித்தேன். ஆனால், என் துரதிருஷ்டம், நான் பட்டம் பெறுவதைக் காண அவர் உயிருடன் இல்லை!</p>
<p>எம்.எஸ். என்ற இசை தேவதை பற்றி எவ்வளவு படித்தாலும் என் ஆர்வம் அடங்குவதில்லை. வாழ்க்கை முழுவதும் இசையால் நிரம்பி, இசைபட வாழ்ந்தவர். இந்த நூலில், விஜயா ராஜேந்திரன், எம்.எஸ். பற்றி சொல்லிக்கொண்டே போகும் அனுபவங்கள், உணர்வு நெகிழ்ச்சிகள் கணக்கிலடங்காதவை. எம்.எஸ். மறைவுக்குப் பின், விஜயா ராஜேந்திரன் எழுதியுள்ள ஒரு கட்டுரை நூலின் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. கிளிஷேவானாலும் பரவாயில்லை, சொல்லிவிடுகிறேன். படிக்கும்போதே, என் கண்களில் நீர் திரையிடத் தொங்கிவிட்டது.</p>
<p>எம்.எஸ் பற்றிய சித்திரம் இவ்வளவு துல்லியமாக எனக்கு வேறெங்கும் கிடைக்கவில்லை. சதாசிவம் பற்றி கிடைக்கும் சித்திரமும் மிக நேர்த்தியானது. பல அத்தியாயங்களில் சதாசிவம் வலுவாக கட்டமைக்கப்பட்டிருக்கிறார். அவருடைய ஆளுமையை ராஜேந்திரன் மிக கவனமுடன் எடுத்து எழுதியிருக்கிறார்.</p>
<p>இந்தப் புத்தகத்தின் நோக்கமே பழைய நினைவுகளை அசைபோடுவதுதான். எப்போதுமே கடந்துவிட்ட காலம், அற்புதமானது. இந்த நூலிலும் அந்த அற்புதம் என்ற உணர்வு மேலோங்கி இருக்கிறது. மனம் இன்றைய காலகட்டத்தோடு பல சம்பவங்களை ஒப்பிட்டுப் பார்த்து, ஏக்கப்பெருமூச்சு விடுவதையும் தவிர்க்க முடியவில்லை. இறுதி அத்தியாயம் சொல்வது போல், ‘அந்த நாளும் வந்திடாதோ’தான்.</p>
<p>அது ஒரு பொற்காலம், கல்கி ராஜேந்திரன், வெளியீடு: வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, விலை &#8211; ரூ.100</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.nesamudan.com/blog/2009/12/17/bkreview-porkaalam/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கொச்சைப்படுத்தும் பேட்டிகள்</title>
		<link>http://www.nesamudan.com/blog/2009/09/30/interviews/</link>
		<comments>http://www.nesamudan.com/blog/2009/09/30/interviews/#comments</comments>
		<pubDate>Wed, 30 Sep 2009 11:00:26 +0000</pubDate>
		<dc:creator>வெங்கடேஷ்</dc:creator>
				<category><![CDATA[இதழியல்]]></category>
		<category><![CDATA[எழுத்தாளர்கள்]]></category>
		<category><![CDATA[பேட்டிகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.nesamudan.com/blog/?p=172</guid>
		<description><![CDATA[பேட்டிகளில் எரிச்சல் தரக்கூடிய ஒரு கேள்வி, எழுத்தாளன் என்றால், எப்போது சினிமாவுக்கு வசனம் எழுதுவீர்கள் என்ற கேள்வி. கவிஞர் என்றால், சினிமாவுக்குப் பாட்டெழுதுவீர்களா என்ற கேள்வி. சினிமாதானா ஒரு இலக்கியவாதியின் அல்டிமேட் கோல்? ]]></description>
			<content:encoded><![CDATA[<p>தினமணி நாளிதழின் ஞாயிறு இணைப்பிதழ், ‘தினமணி கதிர்’. 27.09.09 தேதியிட்ட இதழில் மூத்த கவிஞர் கலாப்ரியாவின் <a href="http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Kadhir&amp;artid=129228&amp;SectionID=146&amp;MainSectionID=146&amp;SEO=&amp;Title=%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D:%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88!" target="_blank">ஒரு பக்க பேட்டி வெளிவந்திருக்கிறது.</a> கேட்கப்பட்ட கேள்விகள் இவை:</p>
<p>1. உங்களைப் பற்றி?<br />
2. உங்கள் இயற்பெயரே கலாப்ரியா தானா?<br />
3. கவிதை ஆர்வம் வந்தது எப்படி?<br />
4. உங்கள் ஆதர்ச எழுத்தாளர் யார்?<br />
5. மரபுக் கவிதைகளை விட்டு நவீன கவிதைகளைத் தேர்வு செய்தது ஏன்?<br />
6. வெளிநாட்டுப் பயணம்?<br />
7. கவிதைகள் சார்ந்த உங்களின் வேறு பணிகள்?<br />
8. வாங்க விரும்பும் விருது?<br />
9. திரைப்படப் பாடல் எழுதுவீர்களா?</p>
<p>இப்பேட்டிக்கு எழுதப்பட்டுள்ள அறிமுக பத்திகளில் இது ஒன்று: ‘கவிதைகளில் மரபுக் கவிதை, நவீன கவிதை என்ற இருவேறு வடிவங்கள் இருந்தபோதும் நவீன கவிதையை தனது வசமாக்கி அந்த கவிதைக்காகவே கலைமாமணி விருதும் பெற்றுள்ளார் கலாப்ரியா.’</p>
<p>இந்தப் பேட்டியை இங்கே நான் பிரித்து ஆராயப் போவதில்லை. அப்படிச் செய்தால், இன்னும் நிறைய செய்திகளை எடுத்துச் சொல்ல முடியும். என் ஆதங்கம், தினமணி போன்ற மூத்த பத்திரிகையாளர்கள் நிறைந்த இதழிலேயே இப்படிப்பட்ட பேட்டி வந்திருப்பதுதான். அவர்களுக்குக் கலாப்ரியாவைத் தெரியாதா? தமிழில் அவர் எத்தனை ஆண்டுகளாக எழுதுகிறார், நவீன கவிதைக்கு அவருடைய பங்களிப்பு என்ன என்றெல்லாம் அவர்களுக்குத் தெரியாதா?</p>
<p>அப்படி இருந்தும், அவருடன் இப்படி ஒரு ருடிமெண்டரியான பேட்டியை எடுத்துப் போடுவதில் என்ன அர்த்தமிருக்கிறது? கலைமாமணி கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் அவருடைய பங்களிப்பு நவீன கவிதையில் என்றுமே நின்று நிலைப்பது. அப்படி இருக்கும்போது, இந்தப் பேட்டி, அவருக்கு என்ன புகழைச் சேர்க்கிறது?</p>
<p>இலக்கியவாதிகள் பேட்டியின் வேலை என்ன? தெரியாத விவரங்களை, அனுபவங்களை, முயற்சிகளை, வாசிப்புகளை, நோக்குநிலைகளை அவரிடமிருந்து வெளிக்கொண்டு வருவதுதானே? அவருடைய சாதனைகளுக்கு மகுடம் சூட்டுவதாக அல்லவா கேள்விகள் இருக்கவேண்டும்? அல்லது அவர் செய்யத் தவறின விஷயங்களைப் பற்றிய விமர்சனமாக கேள்விகள் அமையலாம். அரசியல் பேட்டிகளின் தன்மை வேறு. அது வேறு விஷயங்களை வெளியே கொண்டு வரவேண்டும்.</p>
<p>அந்தப் பேட்டியைப் படித்து முடிக்கும்போது, ஒரு இலக்கியவாதியின் அனுபவத்தில் ஒரு துளியையேனும் வாசகன் பெற்றிருக்கவேண்டும். அவனுடைய வாசிப்பு விரிவின் திசைகளைப் புரிந்துகொண்டு இருக்க வேண்டும். அதுதான் படிக்கும் வாசகனுக்குக் கிடைக்கும் பலன்.</p>
<p>வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம் என்ற பெயரில், ஒரு சாதனையாளரின் 30 ஆண்டுக்கால, 40 ஆண்டுக்கால பங்களிப்பை, கூனிக் குறுகி நிற்க வைத்துவிடுகிறார்கள். பல பேட்டிகளில் இதே பிரச்னையைப் பார்க்கிறேன். இதற்குப் பின்னால் இருக்கும், ‘என்னால்தான் நீ வெளியுலகுக்கே தெரிய வருகிறாய்’ என்ற தொனி மிகவும் அபாயகரமானது. அருவருப்பானது.</p>
<p>மூத்த எழுத்தாளர்களிடம், கவிஞர்களிடம் பேட்டி எடுக்கும்போது, ஆரம்பிக்கும்போதே, உயரமான தளத்தில் தொடங்கவேண்டும். ஆரம்பப் பத்திகளில், அவருடைய முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டிவிட்டு, பேட்டிக்கான கேள்விகள் அடுத்தக் கட்டத்துக்கு நகர வேண்டும். அப்போதுதான், பேட்டிக்கும் கெளரவம், அதைக் கொடுக்கும் படைப்பாளிக்கும் கெளரவம், வெளியிடும் இதழுக்கும் கெளரவம்.</p>
<p>பேட்டிகளில் எரிச்சல் தரக்கூடிய ஒரு கேள்வி, எழுத்தாளன் என்றால், எப்போது சினிமாவுக்கு வசனம் எழுதுவீர்கள் என்ற கேள்வி. கவிஞர் என்றால், சினிமாவுக்குப் பாட்டெழுதுவீர்களா என்ற கேள்வி. சினிமாதானா ஒரு இலக்கியவாதியின் அல்டிமேட் கோல்? ஏன் வாழ்க்கையில் அவன் வேறு எதுவுமே சாதிக்க மாட்டானா? என்ன சோகை பிடித்த சிந்தனை இது? ஒரு சினிமா நடிகனிடம் போய், நீங்கள் எப்போது ‘ஜே.ஜே: சில குறிப்புகள்’ மாதிரி ஒரு நாவல் எழுதுவீர்கள் என்று கேட்பார்களா? எப்படி அது ஒரு அபத்தமான கேள்வியோ, அதேபோன்றதுதான், எழுத்தாளன் முன் வீசப்படும் சினிமா கேள்வியும்.</p>
<p>பேட்டி எடுக்கப் போகும்முன்பு, ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரின் ஒன்றிரண்டு புத்தகங்களையேனும் படித்திருக்கவேண்டும். இன்றைய அவசரமான பத்திரிகை உலகில், படித்துவிட்டு போவதோ, விவரங்களைத் திரட்டிக்கொண்டு போவதென்பதோ சாத்தியமே இல்லை என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். இது எவ்வளவு உண்மையோ, தெரியவில்லை. ஆனால், நிலைமை இதுதான்.</p>
<p>இதுபோன்ற சூழ்நிலைகளிலும் பேட்டியின் தரத்தை நிமிர்த்திக் காண்பிப்பவர் அசோகமித்திரன். எப்படிப்பட்ட கேள்விகளுக்கும், எழுத்துப்பூர்வமான பதில்களால், பேட்டிக்கு உயர் அந்தஸ்தைத் தந்துவிடுபவர் அவர். பல பேட்டிகள் கொடுத்த அனுபவம் அவருக்கு.</p>
<p>இல்லையெனில், பேட்டிகள், எழுத்தாளர்களை மேன்மைப்படுத்துவதைவிட, கொச்சைப்படுத்திவிடும் சாத்தியங்களே அதிகம்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.nesamudan.com/blog/2009/09/30/interviews/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>வலி ஏன்?</title>
		<link>http://www.nesamudan.com/blog/2009/09/16/writers-fall/</link>
		<comments>http://www.nesamudan.com/blog/2009/09/16/writers-fall/#comments</comments>
		<pubDate>Wed, 16 Sep 2009 10:59:46 +0000</pubDate>
		<dc:creator>வெங்கடேஷ்</dc:creator>
				<category><![CDATA[இலக்கியம்]]></category>
		<category><![CDATA[எழுத்தாளர்கள்]]></category>
		<category><![CDATA[Literature]]></category>
		<category><![CDATA[சை. பீர் முகம்மது]]></category>
		<category><![CDATA[மலேசியா]]></category>
		<category><![CDATA[வல்லினம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.nesamudan.com/blog/?p=121</guid>
		<description><![CDATA[சமீபத்தில் மலேசியாவின் இளம் எழுத்தாளர்கள் நடத்தும் வல்லினம் வலைஇதழைப் படித்துக்கொண்டு இருந்தேன். ஏற்கெனவே அச்சு இதழாக வெளிவந்தபோது ஓன்றிரண்டு இதழ்களை வாங்கிப் படித்திருக்கிறேன். சமீபத்திய இதழில், மலேசிய இளைய எழுத்தாளர்களில் பலர் குமுறித் தள்ளியிருக்கிறார்கள்.]]></description>
			<content:encoded><![CDATA[<p>சமீபத்தில் மலேசியாவின் இளம் எழுத்தாளர்கள் நடத்தும் வல்லினம் வலைஇதழைப் படித்துக்கொண்டு இருந்தேன். ஏற்கெனவே அச்சு இதழாக வெளிவந்தபோது ஓன்றிரண்டு இதழ்களை வாங்கிப் படித்திருக்கிறேன். சமீபத்திய இதழில், மலேசிய இளைய எழுத்தாளர்களில் பலர் குமுறித் தள்ளியிருக்கிறார்கள். காரணம் இதுதான்: மலேசியாவின் முந்தைய தலைமுறை எழுத்தாளரான சை.பீர் முகம்மது அங்கே ஒரு நூலை வெளியிட்டிருக்கிறார். தலைமை ஏற்றவர் மலேசிய இந்தியக் காங்கிரஸ் தலைவர் டத்தோ சாமிவேலு. விழாவிலேயே 61,000 மலேசிய வெள்ளிகள் திரட்டப்பட்டு, சை.பீர்க்கு வழங்கப்பட்டிருக்கிறது. சை.பீர். பேசும்போது, அடுத்த ஜென்மத்திலாவது சாமிவேலுவின் அணுக்கத் தோழர்கள் கூட்டத்தில் தான் இருக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான், இளைய எழுத்தாளர்கள் கொதித்துப் போய்விட்டார்கள். Are you so cheap? என்று கேட்டு கட்டுரைகள் எழுதியிருக்கிறார்கள்.</p>
<p>நம்பிக்கையின் வீழ்ச்சி இது. பெரிய எதிர்பார்ப்போடும் கரிசனத்தோடும் அண்ணாந்து பார்த்து வந்த ஒரு எழுத்தாளர் சட்டென சரிந்து மண்ணில் வந்து நிற்கும்போது ஏற்படும் அதிர்ச்சி இது. இது நாள் வரை அந்த மூத்தவர் பேசிய பேச்சு, வாழ்ந்த வாழ்வு அத்தனையும் இப்போது கேள்விக்குள்ளாகிறது. அவரது நோக்கமும் ஈடுபாடும் சந்தேகத்துக்கு உள்ளாக்கிறது. அதைவிட, தேவதா விசுவாசத்துடன் பார்த்த ஒரு நபர், சரியும் போது, அவரின் வாசகர்களுக்கும் தோழர்களுக்கும் ஏற்படும் வலி சொல்லில் வடிக்க முடியாதது.</p>
<p>தமிழகத்தில் இந்தச் சரிவு மிகவும் சகஜம். நான் பல எழுத்தாளர்களின் சரிவைப் பார்த்து மனம் நொந்து போயிருக்கிறேன். அரசியல் தலைவர்களின் சரிவைப் பார்த்து வலி அடைந்திருக்கிறேன். சின்ன வயதில் அப்படித்தான் ரியாக்ட் செய்ய முடியும் போலிருக்கிறது. பலரை அப்பா ஸ்தானத்திலும் அண்ணன் நிலையும் வைத்துப் பார்த்திருக்கிறேன். சீக்கிரம் பலர் அந்த இடத்தைக் காலிசெய்துவிட்டுப் போய்விடுவார்கள். தப்பு அவர்கள் மேல் இல்லை. எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொண்ட என்மேல் தான் தப்பு என்பதைப் புரிந்துகொண்ட போது, எனக்கு லேசாக தலைமுடி நரைக்கத் தொடங்கியிருந்தது.</p>
<p>ஒருவகையில் லட்சியவாதம், கருத்துகளை முதன்மைப்படுத்துவது எல்லாமே அபத்தங்கள். எழுத்தைப் போலவே வாழ்வை அமைத்துக்கொள்வது சாத்தியமில்லை போலும். எழுத்தையும் எழுத்தாளனின் வாழ்வையும் அவனது குணங்களையும் நேர்க்கோட்டில் வைத்துப் பார்ப்பதால் வரும் வினை இது. இந்த மூன்றுமே மூன்று வேறு வேறு திசைகளில் பயணிக்கக் கூடியவை என்பதைப் புரிந்துகொள்ள கொஞ்சம் காலம் ஆயிற்று.</p>
<p>நோக்கங்கள், கருத்துகள், இலக்குகள் எல்லாமே மாறக்கூடியன. எதுவுமே நிலையானது இல்லை. ஏன் மாறின, எப்படி மாறின என்று ஆயிரம் கேள்விகள் எழுப்பி, குதர்க்கக் காரணங்கள் கற்பித்துக்கொண்டு, மனத்தை ரணப்படுத்திக்கொள்வதால் ஏது பலனுமில்லை. வாசகன் தனி மனிதன். எழுத்தாளன் இன்னொரு தனி மனிதன். தனிப்பட்ட வகையில் வாசகனின் எதிர்பாப்புகளை நிறைவு செய்யவேண்டும் என்ற எழுத்தாளனுக்கு எந்தக் கட்டாயமும் இல்லை. வாசகன் கண்டுபிடிக்கும் காரணங்கள், உண்மையான காரணங்களாக இருக்கவேண்டும் என்றும் அவசியமில்லை. இதையெல்லாம் மீறி, தன் கருத்துகளை, நோக்கங்களை, நடத்தைகளை ஒரு எழுத்தாளன் மாற்றிக்கொள்ள எத்தனையோ காரணங்கள் இருக்கலாம்.</p>
<p>நேற்று வரை இப்படி பேசினாயே, இன்று இப்படித் தடம் புரண்டு பேசுகிறாயே என்று அவனைக் கேட்பதிலும் அர்த்தமில்லை. பேசுவது அவன் உரிமை. அவன் பேச்சை நம்பியது வாசகனான உன் தப்பு. அல்லது, அது நேற்று வரை பேசினது, இன்று நான் பக்குவமடைந்துவிட்டேன், வேறு குரலில், வேறொரு புரிதலில், வேறொரு கோணத்தில் பார்க்கக் கத்துக்கொண்டு இருக்கிறேன். அதனால், இப்படிப் பேசுகிறேன் என்று எழுத்தாளன் சொல்லக் கூடும். நீ அந்த இடத்துக்கு வந்து சேரவில்லை என்பது உன் குற்றமே அன்றி, என் பிழையல்ல.</p>
<p>அடிப்படையில், எழுத்தாளன் x வாசகன் உறவு என்பது லவ் ஹேட் ரிலேஷன்ஷிப் மாதிரியானது. எழுத்தாளனுக்கு ஒரு சமயம் வாசகன் வேண்டும், இன்னொரு சமயம் அவன் வேண்டாம். வாசகனுக்கும் இதே நிலைதான். எந்த சமயத்தில் வேண்டும், வேண்டாம் என்பதைப் புரிந்துகொள்வதில்தான் சிக்கல் பிறக்கிறது.<br />
என் வரையில், நான் பின்பற்றும் ஒரு எளிய வழிமுறை இருக்கிறது. படைப்புகளைப் படிப்பேன். பாராட்டுவேன். கொண்டாடுவேன். படைப்பாளர்களைப் படிப்பதில்லை. அவர்கள் மேல் என் அபிமானக் கோபுரத்தைக் கட்டுவதில்லை. நம்பிக்கைச் சிகரத்தை ஏற்றுவதில்லை. நாளைக்கு இந்தக் கோபுரம் சரியும்போது, அந்த வலியை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது.</p>
<p>சொல்லப்போனால், இந்த வலி, அந்த எழுத்தாளருக்குத் தன்னால்தான் ஏற்பட்டது என்று தெரிய வாய்ப்பே கிடையாது. எதற்கு என் கற்பனை கொண்டு, நானே எனக்குச் சூடு வைத்துக்கொள்ள வேண்டும்? அர்த்தமில்லைதானே?</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.nesamudan.com/blog/2009/09/16/writers-fall/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>மாற்றுப் பார்வையை முன்வைக்கும் ‘புதிய தலைமுறை’</title>
		<link>http://www.nesamudan.com/blog/2009/08/26/puthiyathalaimurai/</link>
		<comments>http://www.nesamudan.com/blog/2009/08/26/puthiyathalaimurai/#comments</comments>
		<pubDate>Wed, 26 Aug 2009 13:19:18 +0000</pubDate>
		<dc:creator>வெங்கடேஷ்</dc:creator>
				<category><![CDATA[எழுத்தாளர்கள்]]></category>
		<category><![CDATA[புதிய இதழ்]]></category>
		<category><![CDATA[புதிய தலைமுறை]]></category>
		<category><![CDATA[மாலன்]]></category>

		<guid isPermaLink="false">http://www.nesamudan.com/blog/?p=71</guid>
		<description><![CDATA[மாலனை ஆசிரியராகக் கொண்டு இளைஞர்களுக்கான புதிய வார இதழ் ‘புதிய தலைமுறை’ செப்டம்பர் 2009ல் இருந்து வெளிவரப் போகிறது. எஸ்.ஆர்.எம். கல்விக் குழுமம் இந்த இதழைத் தொடங்கியிருக்கிறது. அதன் முதல் மாதிரி இதழ், எனக்கு இரண்டு படிகள் நேற்று வந்து சேர்ந்தன. கவரைப் பிரித்துப் பார்த்தவுடன், முதல் பார்வையில் இந்த இதழ் ஆங்கில டைம் இதழின் தோற்றத்தையே தந்தது. கண்களில் அடிக்காத வண்ணம், அதிக பக்கங்கள் இல்லாமல் சிக்கென இருந்தது.
வழக்கம்போல், புதிய பேப்பரின் வாசனையை முகர்ந்து பார்த்துவிட்டு, [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>மாலனை ஆசிரியராகக் கொண்டு இளைஞர்களுக்கான புதிய வார இதழ் ‘புதிய தலைமுறை’ செப்டம்பர் 2009ல் இருந்து வெளிவரப் போகிறது. எஸ்.ஆர்.எம். கல்விக் குழுமம் இந்த இதழைத் தொடங்கியிருக்கிறது. அதன் முதல் மாதிரி இதழ், எனக்கு இரண்டு படிகள் நேற்று வந்து சேர்ந்தன. கவரைப் பிரித்துப் பார்த்தவுடன், முதல் பார்வையில் இந்த இதழ் ஆங்கில டைம் இதழின் தோற்றத்தையே தந்தது. கண்களில் அடிக்காத வண்ணம், அதிக பக்கங்கள் இல்லாமல் சிக்கென இருந்தது.</p>
<p>வழக்கம்போல், புதிய பேப்பரின் வாசனையை முகர்ந்து பார்த்துவிட்டு, பக்கங்களைப் புரட்டத் தொடங்கினேன். தலைப்புகளை மட்டும் படித்துக்கொண்டே முழு இதழையும் புரட்டிப் பார்த்தேன். லே அவுட், கலர் சென்ஸ் எல்லாம் புரொபஷ்னலாக இருந்தது. திடீரென்று பல்லை இளிக்கும் வெளிர்மஞ்சள் இல்லை. காடியான பச்சை எங்கும் இல்லை. ஒன்றிரண்டு கட்டுரை ஓப்பனிங் பக்க டிசைன்கள் அழகாக இல்லை. கணினியில் எழுத ‘எல்லாமே ஓசி’ கட்டுரை மட்டும் கொஞ்சம் அசிரத்தையான லே அவுட்.</p>
<p>இதைப் புரட்டிக்கொண்டு இருக்கும்போதே, மனத்தில், எந்த இதழோடு இதைப் பொருத்திப் பார்ப்பது? ஒப்பிட்டுப் பார்ப்பது என்ற கேள்விகள் தோன்றின. இதற்கு முன்னர் இளைஞர் இதழ் என்று தமிழில் ஏதேனும் இருந்ததுண்டா? இளைஞர் இதழ் என்று இந்த இதழ் வெளிப்படையாக எங்கும் பிரகடணப்படுத்திக்கொள்ளவில்லை. ஆங்கிலத்தில் உள்ள இளைஞர் இதழ்களோடு ஒப்பிடுவது பொருத்தமாக இருக்குமா?</p>
<p>எதனோடு பொருத்திப் பார்ப்பது என்பதைவிட, எதனோடெல்லாம் இதைப் பொருத்திப் பார்க்கக் கூடாது என்ற எண்ணமும் கூடவே வந்தது. இந்த இதழை சிறுபத்திரிகைகளோடு ஒப்பிடக் கூடாது. அதேபோல், இதை வெகுஜன இதழ்களோடும் ஒப்பிடக் கூடாது (விளம்பர ஏஜென்சிகள் இதனை வெகுஜன இதழ்களோடுதான் ஒப்பிட்டுப் பார்க்கும் என்பது வேறு கதை). இது முற்றிலும் வேறொரு ஃபார்மெட்டில் இருக்கிறது.</p>
<p>நாற்பத்தெட்டு பக்கங்களில், ஒரு சிறுகதை, சாதிக்கும் இளம்பெண்கள் பற்றிய கட்டுரை, உமா சக்தியின் கவிதை, சர்க்கரை நோய் பற்றிய கட்டுரை, ஒரு தன்னம்பிக்கை (சுயமுன்னேற்ற) வடிவ கட்டிரை, சினிமா விமர்சனம், சினிமா துறையில் கிராமத்து இளைஞர்கள் செய்துள்ள சாதனைகள் பற்றி கட்டுரை, சீமானோடு ஒரு நேர்காணல், எஞ்சினியரிங் கவுன்சிலிங் பற்றி ஒரு கட்டுரை, பைக் வாங்குவது பற்றி ஒரு கட்டுரை, ஒரு சிற்றுலா கட்டுரை, கே.ஆர். மணி மொழிபெயர்த்த ‘எங்கே போனது என் அல்வா துண்டு?’ புத்தகத்தின் அறிமுகம், ஒன்றிரண்டு பொதுக் கட்டுரைகள் ஆகியவை இருக்கின்றன.</p>
<p>இளைஞர்கள் என்றாலே ஆழமாகப் படிக்க மாட்டார்கள், கொறிப்பார்கள், அவர்களுடைய அட்டென்ஷன் ஸ்பான் குறுகியது ஆகிய வெகுஜன பத்திரிகையின் எண்ணங்கள் இந்த இதழின் தயாரிப்பில் குறுக்கிடவே இல்லை என்பது நன்கு தெரிகிறது. ஒவ்வொரு கட்டுரையும் மூன்று நான்கு பக்கங்களுக்கு நீளுகின்றன. அதேபோல், அவர்கள் கவர்ச்சியையும் சென்சேஷனையும் தேடி ஓடுகிறார்கள் என்ற பொருத்தமற்ற எண்ணமும் இவ்விதழில் குறுக்கிடவில்லை. இளம்பெண்களை எங்குமே கவர்ச்சி வஸ்துவாக இவ்விதழ் காட்டவில்லை.</p>
<p>கட்டுரைகளையும் பேட்டியையும் கதையையும் படித்து முடித்தேன். முக்கால் மணி நேரம் ஆகியிருந்தது. எழுத்து முழுவதிலும் ஒரு கண்ணியம் இருக்கிறது. நிதானம் இருக்கிறது. அமரிக்கை இருக்கிறது. சொல்ல வந்ததை முழுமையாகச் சொல்ல வேண்டும் என்ற பொறுப்பு இருக்கிறது. எல்லா கட்டுரைகளும் புரியும்படி இருக்கிறது. வார்த்தை ஜோடனைகளோ, Highbrow மனப்பான்மையோ இல்லை. பம்மாத்து இல்லை. தனிமனித துதி இல்லை. என் மனத்துக்கு நிறைவாக இருந்தது.</p>
<p>இதுவரை இவ்விதழில் இருந்ததைச் சொல்லிவிட்டேன். என்ன இருந்தால் நன்றாக இருக்கும் என்பதையும் சொல்லிவிடுகிறேன்.</p>
<p>தலையங்கம் வேண்டும். இளைஞர்களின் கருத்துகளை பிரதிபலிக்கும் விதமாக தலையங்கம் இருக்கவேண்டும். தலையங்கம் தான் பத்திரிகையின் குரல். இந்த இதழில் அந்தக் குரல் கேட்கவேண்டியது மிக அவசியம். வெகுஜன ஊடகங்கள் திரும்பத் திரும்ப இளைஞர்களின் குரல் என்று ஒரு மாய பிம்பத்தைச் சமைத்துக்கொண்டு இருக்க, நிச்சயம் அது மட்டுமே எங்கள் குரல் அல்ல, எங்களுக்கு வேறு குரல்களும் குறிக்கோள்களும் உண்டு என்று இந்தத் தலையங்கம் எடுத்துச் சொல்வது அவசியம்.</p>
<p>மற்றொன்று, ஸ்டைல். நான் எழுத்துப் பாணி, நடைகளின் தனிக்காதலன். இந்த இதழில் யாருக்கும் தனி நடை இருப்பதாக தெரியவில்லை. வித்தியாசமான எழுத்து நடை, வட்டார வழக்குகள், சொல்லும் முறை ஆகியவற்றுக்கு இந்த இதழ் இடம்கொடுக்க வேண்டும். இதழ் மொத்தமும் ஒரே குரலும் நடையும் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். காட்சி ஊடகம் எப்படி கட்டிப் போடுகிறதோ அதேபோல் எழுத்து ஊடகமும் கட்டிப் போட வேண்டும். வெரைட்டி இருந்தால்தான் அது சாத்தியம்.</p>
<p>உலக அரசியலும் உள்ளூர் அரசியலும் வேண்டும். தகவல் கட்டுரைகளாக, அலசல்களாக, ஆக்கபூர்வமான விமர்சனங்களாக அரசியல் இருக்க வேண்டும். அழுத்தந்திருந்தமான கருத்துகள் சொல்லப்பட வேண்டும்.</p>
<p>இணையமும் கணினியும் செல்போனோனும் சார்ந்திருக்கும் இளைஞர் சமூகத்தைவிட, அது இல்லாமல், இன்னும் சிறு நகரங்களிலும் ஊர்களிலும் கிராமங்களிலும் இருக்கும் இளைஞர்கள் அதிகம். அவர்கள் இன்னும் அச்சடித்த எழுத்தை நம்புகிறார்கள். அதில் தங்கள் பெயர் பத்து பாயிண்ட் போல்டில் வரவேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்களுக்கான கனவுகளும் எதார்த்தங்களும் வேறு. புதிய தலைமுறை, அந்த வாசகர்களையும் மனத்தில் கொண்டு படைக்கப்படுவது சரியாக இருக்கும்.</p>
<p>இந்தப் பத்திரிகைக்கு விலை குறிப்பிடப்படவில்லை (இது மாதிரி இதழ்). விலை ரூ. 10, ரூ.15 வைக்கப்படலாம். இந்த விலைக்கு 48 பக்கங்கள் மிகவும் குறைவு என்ற எண்ணம் வராமல் இல்லை. 80 பக்கங்களேனும் இருப்பது சரியாக இருக்கும்.</p>
<p>ஒரு வகையில், சினிமா தொலைக்காட்சி பத்திரிகைகள் என்று வெகுஜன கலாசாரத்தில் இளைஞர்கள் பற்றி படிந்துபோயுள்ள வழக்கமான கொச்சை பிம்பங்களுக்கு மாற்றாக இந்த இதழ் இருக்க முயற்சித்திருக்கிறது. அதனாலேயே பல இளைஞர்களுக்கு இவ்விதழோடு ஒன்றிப் போக முடியும். என்னால் முடிகிறது. இதுதான் இவ்விதழில் வெற்றியாக இருக்க முடியும்.</p>
<p>பி.கு 1: என் மனைவி இவ்விதழை படித்து முடித்துவிட்டார். அவர் கமெண்ட்: ‘வடக்கு வாசல், ரசனை, உயிர்மை எல்லாம் வருதே.. அது மாதிரி இருக்கு இது.’<br />
பி.கு.2: எழுத்துப் பிழைகள் கண்ணை உறுத்துகின்றன.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.nesamudan.com/blog/2009/08/26/puthiyathalaimurai/feed/</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
		</item>
		<item>
		<title>வழி சொல்லுங்க&#8230;</title>
		<link>http://www.nesamudan.com/blog/2009/08/26/writers-plight/</link>
		<comments>http://www.nesamudan.com/blog/2009/08/26/writers-plight/#comments</comments>
		<pubDate>Wed, 26 Aug 2009 13:15:36 +0000</pubDate>
		<dc:creator>வெங்கடேஷ்</dc:creator>
				<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[எழுத்தாளர்கள்]]></category>
		<category><![CDATA[Writers plight]]></category>

		<guid isPermaLink="false">http://www.nesamudan.com/blog/?p=67</guid>
		<description><![CDATA[மதிய சாப்பாட்டை முடித்துவிட்டு வந்து என் இருக்கையில் அமர்ந்தேன். ஆங்கிலோ இந்திய ரிசெப்ஷனிஸ்ட் போனில் கூப்பிட்டார். ‘உன்ன பாக்க, யாரோ ஆத்தர் வந்துகிது. கீழ வா.’ இரண்டாம் தளத்தில் இருந்து முதல் தளத்துக்கு இறங்கி வந்தேன். பெரிய வரவேற்பறை அது. மூன்று பக்கமும் நீள சோபாக்கள். சோபாக்கள் சேருமிடங்களில் தொட்டிகளில் பிளாஸ்டிக் செடிகள். நெற்றியில் திருநீறும் குங்குமமும் துலங்க ஒருவர் பச்சை நிற பிளாஸ்டிக் பையோடு நின்றுகொண்டு இருந்தார். தலைமுடியை மிகச் சமீபத்தில்தான் வெட்டியிருக்க வேண்டும். கழுத்தில் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>மதிய சாப்பாட்டை முடித்துவிட்டு வந்து என் இருக்கையில் அமர்ந்தேன். ஆங்கிலோ இந்திய ரிசெப்ஷனிஸ்ட் போனில் கூப்பிட்டார். ‘உன்ன பாக்க, யாரோ ஆத்தர் வந்துகிது. கீழ வா.’ இரண்டாம் தளத்தில் இருந்து முதல் தளத்துக்கு இறங்கி வந்தேன். பெரிய வரவேற்பறை அது. மூன்று பக்கமும் நீள சோபாக்கள். சோபாக்கள் சேருமிடங்களில் தொட்டிகளில் பிளாஸ்டிக் செடிகள். நெற்றியில் திருநீறும் குங்குமமும் துலங்க ஒருவர் பச்சை நிற பிளாஸ்டிக் பையோடு நின்றுகொண்டு இருந்தார். தலைமுடியை மிகச் சமீபத்தில்தான் வெட்டியிருக்க வேண்டும். கழுத்தில் ஒரு உருத்திராட்சம். சட்டை பாக்கெட் முழுக்க நாலைந்து வண்ண பேனாக்கள், துண்டு காகிதங்கள்.</p>
<p>‘நமச்சிவாய வாழக. நாதன் தாள் வாழ்க.’ கண்கள் புன்னகைப்பது தெரிந்தது. பச்சைப் பையோடு கைகூப்பினார் அவர். பதிலுக்கு நான் என்ன சொல்லவேண்டும் என்று தெரியவில்லை. ஒரு மாதிரி புன்னகைப்பது போல் வைத்துக்கொண்டு கைகூப்பினேன். சோபாவில் உட்காரச் சொன்னேன்.</p>
<p>‘நீங்களா தம்பி இங்க தமிழ் புத்தகங்கள் போடறது?’</p>
<p>’ஆமா சார்.’</p>
<p>‘மிக நல்ல பணி. புத்தகக் கண்காட்சியில பார்த்தேன். நல்ல வேலை செஞ்சிருக்கீங்க தம்பி.’</p>
<p>ஒரு மாதிரி கோணலாகச் சிரித்தேன். சென்னைப் புத்தகக் கண்காட்சி முடிந்து ஒன்றிரண்டு வாரங்கள் ஆகியிருக்கும்.</p>
<p>‘உங்களுக்கு எந்த ஊரு தம்பி?’</p>
<p>‘மெட்ராஸ்தான் சார்.’</p>
<p>எனக்குத் தெரிந்தது மெட்ராஸ்தான். எங்கப்பாவுக்கு வேற ஊர். அதையெல்லாம் இவரிடம் போய் ஏன் சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை.</p>
<p>‘சீர்மிகும் சென்னை.’</p>
<p>‘ஓ!’</p>
<p>‘என் பெயர் மாணிக்கவாசகம். செய்யாறு பக்கத்துல ஸ்கூல்ல தமிழாசிரியரா இருந்து ஓய்வு பெற்றவன். நான் சென்னை வந்து அஞ்சாறு வருஷமாச்சு’<br />
நான் வெறுமனே மண்டையை ஆட்டினேன்.</p>
<p>‘இதுவரைக்கும் ஐம்பதுக்கும் மேல புத்தகங்கள் போட்டிருக்கேன். நான் ஆசுகவி. சித்திரக் கவிதை எழுதுவேன். மயில் மாதிரி, தேர் மாதிரி, குதிரை மாதிரியெல்லாம் கவிதை எழுதுவேன்.’</p>
<p>‘காபி குடிக்கறீங்களா?’</p>
<p>‘டீ கிடைச்சா நல்லது தம்பி. சர்க்கரை கொஞ்சம் அதிகம்.’</p>
<p>வந்து நின்ற கேண்டீன் பையன் திரும்பிப் போனான்.</p>
<p>’மேடையில பிரசங்கம் செய்வேன். வாரியார் சுவாமிகள் எங்க ஊருக்கு வந்தபோது, வாழ்த்தி சால்வை போர்த்தினாரு.’</p>
<p>‘சரி சார்’</p>
<p>‘ஜோசியம் குடும்பத் தொழில். எங்கப்பா காலத்துலேருந்து செஞ்சுகிட்டு வரோம். நான் ஆறு ஜோசிய புத்தகங்கள் எழுதியிருக்கேன். இதுவரைக்கு ஒரு லட்சம் ஜாதகத்துக்கு மேல பார்த்திருப்பேன். வித்வான் வே. லட்சுமணன் தெரியுமா?’</p>
<p>‘ஓ!’</p>
<p>‘நீங்கள் மேஷ ராசியா? பரணி நட்சத்திரம்?’</p>
<p>இது கொஞ்சம் சங்கடமான இடம். எனக்கு என் ராசி, நடசத்திரம் எல்லாம் துல்லியமாகத் தெரியாது.</p>
<p>‘தெரியல சார். நீங்க சொல்லுங்க.’</p>
<p>’நீங்க கொஞ்சம் அவசரத்துல இருக்கீங்களோ?’</p>
<p>‘இல்ல சார். சொல்லுங்க’</p>
<p>‘என்னை உங்கப்பா மாதிரின்னு நினைச்சுக்கங்க..உங்களுக்கு என்ன 23 வயசு இருக்குமா?’</p>
<p>நான் மையமாக தலையசைத்தேன்.</p>
<p>‘வானதியில என் புக்ஸ் போட்டிருக்காங்க. மணிமேகலைல குடுத்திருக்கேன். நானே ஊர்ல சின்னதா கோவில் விசேஷங்களுக்கு புத்தகம் போட்டிருக்கேன்.’</p>
<p>பச்சை நிற பிளாஸ்டிக் பையின் ஜிப்பைத் திறந்தார். சின்ன சின்னதாக இரண்டு கைடக்க புத்தகங்களை எடுத்துக் கொடுத்தார். பதினாறு பக்கங்கள் கொண்ட புத்தகங்கள். இரண்டு நூல்களின் மேலட்டையிலும் வேறு வேறு அம்மன் படங்கள் இருந்தன. கடைசி பக்கத்தில் உபயம்: M.மணிவேல், தங்கராஜ் ஒயரிங் சர்வீஸஸ், செய்யாறு என்றிருந்தது.</p>
<p>‘நான் திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கேன். அதை உங்ககிட்ட கொடுக்கத்தான் வந்தேன். யாரும் சொல்லாத உரை இது. கிட்டத்தட்ட மூன்றாண்டுகால உழைப்பு.’</p>
<p>அவர் அதே பச்சைப் பையில் இருந்து புல்ஸ்கேல் பேப்பர்கள் கொண்ட பைலை எடுக்க ஆரம்பிக்கும் போதே, எனக்கு லேசாக உதற ஆரம்பித்தது.</p>
<p>‘நாங்க இந்த மாதிரி புக்ஸெல்லாம் போடறதில்ல சார்.’</p>
<p>‘அப்ப என்ன மாதிரி போடுவீங்க?’ புல்ஸ்கேல் பைலை உள்ளே தள்ளினார்.</p>
<p>’குழந்தைகளுக்கு, ஸ்கூல்ல யூஸ் பண்றா மாதிரி’</p>
<p>‘நீதிக் கதைகள் தரட்டுமா? பண்பாட்டுக் கதைகள்னு ஒரு புக்கு எழுதியிருக்கேன். இப்போ கூட, தி. நகர்ல ஒருத்தருக்கு நன்நெறிக் கதைகள்னு ஒரு புக்கு கொடுத்தேன்.. யார் அவன்?’</p>
<p>சட்டென அவர் மீண்டும் பச்சை பிளாஸ்டிக் பைக்குள் கையை விட்டார்.</p>
<p>‘அப்படி இல்ல சார்.இங்க ஒர்க் புக்ஸ், எக்ஸஸைஸ் புக்ஸ்தான் போடுவாங்க.’</p>
<p>‘நானே கதை எழுதி, நம்ம ஹரி தெரியுமா.. டிராயிங்கெல்லாம் போடுவாரே.. அவர வெச்சு படங்கள் போட்டு, படக்கதை போட்டிருக்கேன். ஆர்ட் ஒர்க்கே ரெடியா இருக்கு. 32 பக்கம் வரும்.’</p>
<p>வண்ணங்கள் தீட்டப்பட்ட அட்டைகளை அவர் வெளியே எடுத்தார்.</p>
<p>‘நீங்க சரின்னு சொன்னா, இங்க உங்க கம்பெனி பேரப் போட்டு அடிச்சுக் குடுத்துடுவேன். நமக்குத் தெரிஞ்ச பிரஸெல்லாம் இருக்கு. நமக்குன்னா நல்ல ரேட்டுல அடிச்சுக் குடுப்பாங்க. எனக்கு இந்தத் தயாரிப்பு செலவு மட்டும் தந்தா போதும். உரிமையெல்லாம் உங்களுக்கே எழுதிக் கொடுத்திடறேன்.  எத்தனை பிரிண்ட் வேணும்னாலும் போட்டுக்கலாம். ஸ்கூல் இந்த புத்தகங்கள் எல்லாம் எக்கச்சக்கமாக போவும்.’</p>
<p>அவருடைய முனைப்பு, வேகம், திட்டமிடல் எல்லாம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எப்படியும் வயது 65க்கு மேல் இருக்கும். தோல் தளர்ந்துபோயிருந்தது. விட்டால், இவரே புத்தகத்தை விற்றுவிட்டு வந்துவிடுகிறேன் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.</p>
<p>‘அப்படி இல்ல சார். இங்கே எல்லாம் வருஷ ஆரம்பத்துலேயே முடிவு செஞ்சி, இன்னின்ன புத்தகங்கள் போடணும், இவங்க எழுதணும்னு திட்டமிட்டு வேலை செய்வாங்க சார். நீங்கள் உங்க ஐடியாஸை எல்லாம் என்கிட்ட எழுதிக் குடுங்க. எங்க சேல்ஸ் டீம்கிட்ட பேசிட்டு, எதெல்லாம் மார்க்கெட்டுல நல்லா போகும்னு தெரிஞ்சுகிட்டு அப்புறம் எழுதச் சொல்றேன் சார்.’</p>
<p>‘உங்கள் சேல்ஸ் டீமுக்கு யார் பொறுப்புன்னு சொல்லுங்க. நான் பேசறேன். எனக்கு 35 வருஷம் அனுபவம் உண்டு தம்பி. எந்த புக்கு நல்லா போவும்னு நல்லா தெரியும். நான் சொல்றேன்.’</p>
<p>நான் லேசாக நெளிய ஆரம்பித்தேன். இவருக்கு எப்படிப் புரியவைப்பது என்று தெரியவில்லை. இங்கே தனிமனிதர் எந்த முடிவையும் எடுத்துவிட முடியாது. செயல்படுத்தியும் விட முடியாது. இது ஓர் நிறுவனம். நிறுவனத்துக்கான நடைமுறையோடுதான் ஒவ்வொரு விஷயத்தையும் அணுக முடியும். ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு விஷயத்துக்கு முன்னுரிமை கொடுக்கும். இந்த நிறுவனம் பிராசஸ் ட்ரிவன் நிறுவனம். எல்லாம் எனக்குள் ஓடிக்கொண்டு இருந்தது. அவருக்கு என்ன புரிந்ததோ தெரியவில்லை. என் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தவர்,</p>
<p>‘மணி ரெண்டாவப் போகுது தம்பி. இன்னும் சாப்படலை. இனிமே தான் வீட்டுக்குப் போய் சாப்பிடணும். நீங்க ஏதாவது புத்தகத்தை எடுத்துகிட்டு, கொஞ்சம் பணம் கொடுத்தீங்கன்னா நிம்மதியா வீடு போய் சேருவேன். இல்லன்னா, திருப்பியும் டி. நகர் போய் வேற யாரையாவது பார்க்கணும்.’</p>
<p>ஜன்னலில் மதிய வெயில் சுள்ளென உறைத்தது. வெக்கை. நான் ஒரு சில நொடிகள் நொறுங்கிப் போனேன். அற்புதமான தேனினும் இனிய தமிழ் படிப்பு. பக்குவம். மேதமை. எல்லாம் காலத்தால் தள்ளப்படும் வெறும் குப்பை.</p>
<p>இது நடந்து 16 ஆண்டுகள் ஆகியிருக்கும். அப்போது நான் ஓரியன்ட் லாங்மன் பதிப்பாசிரியர். நான் எதிர்காலத்தில் எப்படி ஆகிவிடக் கூடாது என்பதை எனக்கு உணர்த்திய நிகழ்ச்சி இது. 16 ஆண்டுகள் கழித்து இரண்டு நாள்களுக்கு முன்னர் மற்றொருவர் வந்தார். இரண்டு மணிநேரங்களுக்கு மேல் பேசியிருப்பார். தமிழ் தெரியும். ஓவியம் தெரியும். இசை தெரியும். பரதம் தெரியும். வரிசையாக விருதுகள், பாராட்டுகள். சைவத்தில் அதிதீவிர ஈடுபாடு.</p>
<p>‘பெரிய பொண்ண கட்டி கொடுத்துட்டேன் தம்பி. ரெண்டாவது பொண்ணும் பையனும் காலேஜ்ல படிக்கறாங்க. அடுத்த செமஸ்டருக்கு ஃபீஸ் கட்டணும். ஏதாவது வழியிருந்தா சொல்லுங்க தம்பி.’</p>
<p>நான் வார்தைகளற்று நின்றேன்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.nesamudan.com/blog/2009/08/26/writers-plight/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
	</channel>
</rss>
