<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>நேசமுடன் &#187; அரசியல்</title>
	<atom:link href="http://www.nesamudan.com/blog/category/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.nesamudan.com/blog</link>
	<description>மடல் இதழ்</description>
	<lastBuildDate>Thu, 21 Jan 2010 02:39:22 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.org/?v=2.9.2</generator>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
			<item>
		<title>இடைத்தேர்தல்: சில பாடங்கள்</title>
		<link>http://www.nesamudan.com/blog/2009/12/30/byelectionlessons/</link>
		<comments>http://www.nesamudan.com/blog/2009/12/30/byelectionlessons/#comments</comments>
		<pubDate>Wed, 30 Dec 2009 07:01:10 +0000</pubDate>
		<dc:creator>வெங்கடேஷ்</dc:creator>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[அனிதா ராதாகிருஷ்ணன்]]></category>
		<category><![CDATA[திருச்செந்தூர்]]></category>
		<category><![CDATA[பா.ம.க]]></category>
		<category><![CDATA[ராமதாஸ்]]></category>
		<category><![CDATA[வந்தவாசி]]></category>
		<category><![CDATA[விஜய்காந்த்]]></category>

		<guid isPermaLink="false">http://www.nesamudan.com/blog/?p=286</guid>
		<description><![CDATA[இரண்டு தொகுதிகளிலும் பெரும் வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர்கள் ஜெயித்திருக்கிறார்கள். பொதுவாக 60, 65 சதவிகிதத்துக்கு மேல் வாக்குப்பதிவு நடைபெற்றால், மக்கள் தீர்மானத்தோடு வாக்களிக்க முன்வந்திருக்கிறார்கள் என்று அர்த்தம். திருச்செந்தூரில் 82 சதவிகிதம், வந்தவாசியில் 79 சதவிகிதம் வாக்குப்பதிவு நடைபெற்றிருக்கிறது. பதிவான மொத்த வாக்குகளில், அனிதா ராதாகிருஷ்ணன் (திருச்செந்தூர்) 67.8 சதவிகித வாக்கும், கமலக்கண்ணன் (வந்தவாசி) 59.3 சதவிகித வாக்கும் பெற்றிருக்கிறார்கள். வாக்காளர்கள் வாங்கப்பட்டார்கள், பணம் புழங்கியது என்றெல்லாம் பேசுவது இதுபோன்ற சூழ்நிலையில் மிகவும் அபத்தமாகத் தோன்றுகிறது. ]]></description>
			<content:encoded><![CDATA[<p>நடந்து முடிந்த திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தல்கள், நாம் புரிந்துகொள்ளவும் அரசியல் கட்சிகள் புரிந்துகொள்ளவும் சில செய்திகளைத் தந்திருக்கின்றன. பணம் விளையாடியது, கறிச்சோறு போட்டார்கள் என்றெல்லாம் நிறைய விமர்சனங்கள் இரண்டு பெரிய கட்சிகளின் மேலும் சொல்லப்பட்டாலும் இதையெல்லாம் எப்படி எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை. தேர்தல்கள் நடைமுறையில் உள்ள நாடுகளில் எல்லாம், மக்களுக்கு சலுகைகள் கொடுப்பதும் வாக்காளர்களை ஈர்க்க முயற்சிப்பதும் நடந்துவருகின்றன. இந்தியாவில் பொதுத் தேர்தல் தொடங்கிய காலத்தில் இருந்தே இந்த வகை கவனிப்புகள் இருந்திருக்கின்றன. இதையெல்லாம் தவறு என்றோ சரியென்றோ வாதிட முடியுமா என்று தெரியவில்லை.</p>
<p>1. இடைத்தேர்தலில், பா.ம.க. பங்கேற்கவில்லை. தம் தொண்டர்களை, 49 ஓ படிவத்தைப் பயன்படுத்தும்படி, அக்கட்சியின் தலைவர் ராமதாஸ் கேட்டுக்கொண்டு இருந்தார். வந்தவாசி தொகுதியில் பா.ம.க.வினரின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அங்கே முப்பது பேர் மட்டுமே 49 ஓ படிவத்தைப் பயன்படுத்தியிருக்கின்றனர். ஒன்று, மக்களுக்கு 49 ஓ படிவத்தைப் பயன்படுத்தத் தெரியாமல் இருக்கவேண்டும். அல்லது, பூத்களில் இருந்த தேர்தல் அதிகாரிகள் அந்த வாய்ப்பை மக்களுக்கு எடுத்துச் சொல்லாமல் இருந்திருக்கலாம். அல்லது, 49 ஓ பற்றித் தெரிந்தும், மக்கள் தம் ஓட்டுக்களை வீணாக்க விரும்பாமல் இருந்திருக்கலாம்.</p>
<p>ராமதாஸ் தம் கட்சிக்காரர்களை 49 ஓவைப் பயன்படுத்தச்  சொன்னபிறகும் இதுதான் நிலைமை என்றால், எவ்வளவு தொண்டர்கள் அவர் பின்னால் நிற்கிறார்கள் என்று கேள்வி எழுகிறது. தமிழக அரசியலில் தம்மை முக்கிய கட்சியாகக் கருதும் பா.ம.க., எவ்வளவு பவர்ஃபுல்லாக இருக்கவேண்டும்? ஒரு கருத்தை கட்சித் தலைவர் சொன்னால், அதன் தொண்டர்கள் அதை அப்படியே சிரமேற்கொண்டு நிறைவேற்ற வேண்டாமா? இங்கே நடந்தாற்போல் தெரியவில்லை. சொந்த பலத்தை விடக் கூட்டணி பலத்திலேயே இத்தனை ஆண்டுகள் அரசியல் நடத்தியிருக்கிறது பா.ம.க. என்று சொல்வதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வந்தவாசி இடைத்தேர்தல் ஏற்படுத்தித் தந்திருக்கிறது.</p>
<p>2. புதிய சூறாவளியாகக் கிளம்பிய கேப்டன் விஜய்காந்த்தின் வேட்பாளர்கள், இடைத்தேர்தல் நடந்த இரண்டு தொகுதிகளிலும் டெபாசிட் வாங்கவில்லை. வந்தவாசியில் 7063 வாக்குகளும், திருச்செந்தூரில் 4186 வாக்குகளும் மட்டுமே வாங்கியிருக்கிறார்கள். ஏற்கெனவே, 2006 பொதுத் தேர்தலில், வந்தவாசியில் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தைச் சேர்ந்த சிவசண்முகம், 9096 வாக்குகளையும் திருச்செந்தூர் தொகுதியில் கணேசன் 3756 வாக்குகளையும் பெற்றிருந்தனர். இரண்டு தொகுதிகளிலும் 75 சதவிகிதத்துக்கு மேல் வாக்குப் பதிவு நடைபெற்றிருக்கிறது. அதிமுகவின் ஓட்டுகளை விஜய்காந்த் பிரிக்கிறார் என்று தியரி உண்டு. இன்னொரு தியரி, இளைஞர்கள் அவர் பின்னால் திரள்கிறார்கள் என்பது. இரண்டுமே இங்கே நடைபெற்றார் போல் தெரியவில்லை.</p>
<p>3. இரண்டு தொகுதிகளிலும் பெரும் வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர்கள் ஜெயித்திருக்கிறார்கள். பொதுவாக 60, 65 சதவிகிதத்துக்கு மேல் வாக்குப்பதிவு நடைபெற்றால், மக்கள் தீர்மானத்தோடு வாக்களிக்க முன்வந்திருக்கிறார்கள் என்று அர்த்தம். திருச்செந்தூரில் 82 சதவிகிதம், வந்தவாசியில் 79 சதவிகிதம் வாக்குப்பதிவு நடைபெற்றிருக்கிறது. பதிவான மொத்த வாக்குகளில், அனிதா ராதாகிருஷ்ணன் (திருச்செந்தூர்) 67.8 சதவிகித வாக்கும், கமலக்கண்ணன் (வந்தவாசி) 59.3 சதவிகித வாக்கும் பெற்றிருக்கிறார்கள். வாக்காளர்கள் வாங்கப்பட்டார்கள், பணம் புழங்கியது என்றெல்லாம் பேசுவது இதுபோன்ற சூழ்நிலையில் மிகவும் அபத்தமாகத் தோன்றுகிறது. உண்மையிலேயே மக்கள் ஆர்வத்தோடு வாக்களிக்காவிட்டால், நிச்சயம் இவ்வளவு அபரிமிதமான வாக்குகள் விழுந்திருக்க வாய்ப்பில்லை. மக்கள் விவரமானவர்கள். அவர்கள் தங்களுக்கு எது சரியோ அதை உணர்ந்தே வாக்களித்திருக்கின்றனர். அவர்களுடைய முடிவை, தீர்மானத்தைக் குறை சொல்லுவது, பூனை கண்ணை மூடிக்கொண்ட கதைதான்.</p>
<p>4. என் மனத்திருப்திக்கு முக்கிய காரணம், மக்கள் பெருமளவில் வெளியே வந்து வாக்களித்திருப்பதுதான். திருச்செந்தூரில் உள்ள மொத்த வாக்காளர்கள் :1,40,150. வாக்களித்தவர்கள்: 1,10,931. வந்தவாசியில் உள்ள மொத்த வாக்காளர்கள்: 1,58,210. வாக்களித்தவர்கள்:1,32,750. சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் இன்னும் அரசியல் மேலும், அரசாங்கத்தின் மேலும் ஆட்சியாளர்கள் மேலும் நம்பிக்கை இருக்கிறது. இந்த சிஸ்டத்தின் மேல் நம்பிக்கை இருக்கிறது. ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை இருக்கிறது. பெருநகரங்களைப் போலல்லாமல், இவ்வளவு தூரம் நம்பிக்கை கொண்டிருப்பதே கவனிக்கத்தக்க அம்சம். பெருநகரவாசிகள் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடம் இது.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.nesamudan.com/blog/2009/12/30/byelectionlessons/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>போராட்ட ஆயுதங்கள்</title>
		<link>http://www.nesamudan.com/blog/2009/11/18/agitation/</link>
		<comments>http://www.nesamudan.com/blog/2009/11/18/agitation/#comments</comments>
		<pubDate>Wed, 18 Nov 2009 10:18:20 +0000</pubDate>
		<dc:creator>வெங்கடேஷ்</dc:creator>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[பொது]]></category>
		<category><![CDATA[உண்ணாவிரதம்]]></category>
		<category><![CDATA[சாலை மறியல்]]></category>
		<category><![CDATA[தர்ணா]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.nesamudan.com/blog/?p=239</guid>
		<description><![CDATA[போராட்டம் என்பது ஒருவகை வலியுறுத்தல். பணியாளர்களின் வலி அதிகமாகும்போது, அது உரியவர்களின் கவனத்தில் பதியாதபோது, வலியுறுத்தல் அவசியமாகிறது. ஆனால், இன்று நமக்குத் தெரிந்த எந்தப் போராட்ட வடிவமும் வலிமையானதாக இல்லை. பிரச்னை இங்கேதான்.]]></description>
			<content:encoded><![CDATA[<p>வேறு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டு இருந்தபோது, மிகவும் உணர்ச்சிவசப்பட்டு, ‘நான் உண்ணாவிரதம் இருக்கப் போறேன்’ என்றார். அவருடைய பேச்சின் வேகம், கோபம் எல்லாம் நியாயமானவைதான். ‘உண்ணாவிரதம் இருந்து என்ன சாதிக்கப் போறீங்க?’ என்றேன். நான் அவருடைய கருத்தை ஆதரிக்கவில்லை என்று நினைத்துக்கொண்டுவிட்டார் போலும். அப்புறம் பேசவில்லை.</p>
<p>கடந்த சில மாதங்களாக, பல இடங்களில், ‘உண்ணாவிரத போராட்டத்தைப்’ பார்க்கிறேன். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசு ஊழியர், சாலைப் பணியாளர்கள், வங்கி ஊழியர்கள், ஆலைத் தொழிலாளர்கள் என்று பல தரப்பினரும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவதைப் பார்க்கிறேன். பொதுவாக இதெல்லாம் ஒரு நாள் உண்ணாவிரதங்கள். காலையில் தொடங்கி, மாலையில் முடிந்துவிடும் உண்ணாவிரதங்கள் இவை. இதிலேயே கொஞ்சம் வித்தியாசங்களும் உண்டு. தொடர் உண்ணாவிரதம், சாகும்வரை உண்ணாவிரதம் என்று கோரிக்கைகளின் தீவிரத்துக்கு ஏற்ப, உண்ணாவிரதங்களில் மாற்றம் ஏற்படும்.<br />
 தனிநபர் உண்ணாவிரதங்கள், கூட்டு உண்ணாவிரதங்கள் என்று காரணங்களுக்கு ஏற்ப, நபர்களின் எண்ணிக்கையும் மாறுபடும்.<br />
இதேபோல், என் அப்பா வேலை செய்த காலத்தில், அவருடைய அலுவலக வாசலில், வாயில் கூட்டம், கோஷம் எழுப்பும் போராட்டம், தர்ணா என்றெல்லாம் செய்வார்கள். ஒருவர் மைக் முன்னே நின்றுகொண்டு தங்கள் கோரிக்கைகளைக் கோஷங்களாக எழுதிவைத்துக்கொண்டு வாசிக்க, கூட்டத்தினர் அதனை உரத்த குரலில் வலியுறுத்தவேண்டும்.</p>
<p>உள்ளிருப்பு போராட்டம் என்ற முறையையும் ஒரு முறை தெரிந்துகொண்டேன். பணியாளர்கள் ஆலைகளுக்குள், அலுவலகங்களுள் இருப்பார்கள். ஆனால், வேலை செய்ய மாட்டார்கள். இதேபோல், உற்பத்தியை மந்தப்படுத்துவது ஒரு போராட்டம். வேலையே நடக்காத மாதிரி இருக்கும். முக்கிய அதிகாரிகளை கெய்ரோ செய்வது இன்னொரு போராட்ட உத்தி. பேரணி நடத்துவது, அதன் இறுதியில் சம்பந்தப்பட்டவர்களிடம் போய், கோரிக்கை மனு கொடுப்பது என்பதெல்லாம் மிகவும் பழக்கமான போராட்ட உத்திகள்.</p>
<p>ஜப்பானில், ஏதோ ஒரு ஷு தயாரிப்பு நிறுவனத்தில், அவர்கள் செய்த போராட்டம் சுவாரசியமாக இருந்தது. இரண்டு காலணிகளைத் தயாரிப்பதற்கு பதில், ஒரு காலுக்கான காலணியை மட்டும் தயாரித்துக்கொண்டே இருந்தார்களாம்.</p>
<p>நம்ம ஊரில், ஒரு குழுவினர் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்த, ‘உண்ணும்விரதப் போராட்டம்’ என்று எதிர்க்குழுவினர் நடத்தியதைப் பார்த்திருக்கிறேன். ஒரு சில சமயங்கள், போராட்டம் தீவிரம் அடைந்து, கோவையில் உள்ள பிரிக்கால் நிறுவனத்தில் நடந்தது போல், வன்முறையிலும் உயிரிழப்பிலும் போய்கூட முடியலாம். அல்லது மொத்த உற்பத்தியையே பாதிக்கும் அளவு, ஸ்டிரைக் போராட்டம் வெடிக்கலாம்.</p>
<p>எனக்குப் போராட்ட உத்திகள், முறைகள் மேல் எப்போதும் சந்தேகம் உண்டு. முதலில், தங்கள் கருத்துகளை, கோரிக்கைகளை நிறுவனத்திடமோ அரசாங்கத்திடமோ தெரிவித்திருப்பார்கள். அவர்கள் அதைக் கண்டுகொள்ளாமல், தொடர்ந்து பாராமுகமாக இருக்கும்போது, அல்லது போதுமான கவனம் கொடுத்து, கோரிக்கைகளை நிறைவேற்றாதபோது, போராட்டங்கள் வெடிக்கின்றன. எந்தப் போராட்ட வடிவத்தை எடுத்துக்கொள்வது என்பது சூழ்நிலையைப் பொறுத்தும் கூட்டு மனநிலையைப் பொறுத்தும் மேற்கொள்ளப்படும் முடிவு என்று நினைக்கிறேன்.</p>
<p>பல தனியார் நிறுவனங்கள் மிகவும் பொறுப்புடன் நடந்துகொள்கின்றன. ஒரு கோரிக்கை, ஒரு மனு என்று வந்தவுடனே, அதைக் கவனித்து, உரியவர்களைக் கூப்பிட்டுப் பேசி, குறைகளைக் களைந்து அல்லது களைவதற்கான உறுதியைக் கொடுத்து, நம்பிக்கையை ஏற்படுத்தி அனுப்புவதில் வல்லவர்களாக இருக்கிறார்கள். போராட்டம் என்ற வடிவத்துக்கு போவதற்கு முன்பே, மனுக்கள், நிர்வாகத்தினரின், அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்துவிடுகின்றன. அப்படி நடக்காத போதுதான், வேறு வேறு வகைப் போராட்டங்கள் தொடங்கப்படுகின்றன.<br />
 ஸ்டிரைக் வரை போய்விட்டால், உற்பத்தியும் லாபமும் பாதிக்கப்படும் என்பதைத் தனி<br />
யார் நிறுவனங்கள் புரிந்துகொண்டு இருப்பதே இதற்குக் காரணம்.</p>
<p>போராட்டம் என்பது ஒருவகை வலியுறுத்தல். பணியாளர்களின் வலி அதிகமாகும்போது, அது உரியவர்களின் கவனத்தில் பதியாதபோது, வலியுறுத்தல் அவசியமாகிறது. ஆனால், இன்று நமக்குத் தெரிந்த எந்தப் போராட்ட வடிவமும் வலிமையானதாக இல்லை. பிரச்னை இங்கேதான்.</p>
<p>எல்லா போராட்ட வடிவங்களும் எல்லோருக்கும் பழக்கமாகிவிட்டது. அதை எப்படிக் கையாளவேண்டும், அடக்க வேண்டும், வழிக்குக்கொண்டு வரவேண்டும், உறுதியிழக்கச் செய்யவேண்டும் என்று தெரிந்துவைத்துக்கொண்டு இருக்கிறார்கள். முரட்டுத்தனம் தோன்றிவிட்டது. ‘அதிகபட்சம் என்னாகப் போகுது. சாகப் போறான். சாவட்டுமே’ என்ற முரட்டுத்தனம். இல்லை குண்டுக்கட்டாகத் தூக்கிக்கொண்டு போய் வண்டியில் ஏற்றி, சிறைக்குள் தள்ளிவிடுவார்கள்.</p>
<p>மிரட்டல் ஒரு உபாயம். இன்னொரு உபாயம், போராட்டத்தைக் கலகலக்க வைக்க, உள்ளேயே குழுக்களை உருவாக்கி, போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்வது.</p>
<p>இன்றைக்கு ஒருவனோ ஒரு குழுவோ தாம் வலியுறுத்தும் கோரிக்கைக்காகத் தம்மை வருத்திக்கொள்கிறார்கள், அதற்காகச் சாப்பிடாமல் இருக்கிறார்கள் என்பதை பொதுமக்கள் புத்திசாலித்தனமில்லாத செயலாகப் பார்க்கிறார்கள். போராட்டங்களைப் பற்றிய அனுதாபமோ, அரவணைப்போ, அனுசரணையோ யாருக்கும் கிடையாது. நீ தேவையில்லாமல் என் வழியில் குறுக்கிடுகிறாய், என் அலுவலக நேரத்தை வீணாக்குகிறாய், என்னைப் பணிசெய்யவிடாமல் தடுக்கிறாய் என்பது இன்றைய மனிதர்களின் மனநிலை.</p>
<p>உன் நிறுவனம், உன் அரசாங்கம் உனக்கு உரிய சலுகைகளை, வசதிகளைச் செய்யவில்லை என்றால், அது உனக்கும் உனது நிர்வாகத்துக்கும் உள்ள பிரச்னையே அன்றி, அதை எடுத்துக்கொண்டு எதற்குத் தெருவுக்கு வருகிறாய்? சாலையை மறிக்கிறாய்? பஸ்ஸை நிறுத்துகிறாய்? பஸ்ஸையையோ வேறு வாகங்களையோ கொளுத்துகிறாய்?</p>
<p>1991க்குப் பின், இந்தியப் பொருளாதாரம் திறந்துவிடப்பட்ட பின்பு, வணிகக் கலாசாரம் இங்கே முற்றிலும் மாறிவிட்டது. வணிக உறவுகள் இங்கே மாறிவிட்டன. புரிதல்களும் மாறிவிட்டன. மனித மனங்களும் மாறிவிட்டன. இதில், போராட்டம் என்பது பிற்போக்குத்தனமானது, உற்பத்திக்கு எதிரானது, வளர்ச்சிக்கு முரணானது என்ற சிந்தனைகள் ஆழ வேரூன்றிவிட்டன. உற்பத்தித் துறையைவிட, இந்தியப் பொருளாதாரம், சேவைத் துறைகளை அதிகம் சார்ந்திருக்கத் தொடங்கிவிட்டது. சேவையில், உடல் உழைப்பைவிட, ஞானம் முக்கியம். ஞானத்துக்கு ஏற்ப, இங்கே வசதி வாய்ப்புகள் பெருகத் தொடங்கிவிட்டன. அத்துறைகளில் இருப்பவர்கள், எல்லாவற்றையும் தமது சொந்த நோக்கில் இருந்தே மதிப்பீடு செய்கின்றனர். விளைவு, போராட்டங்கள் நியாயமற்றவையாக, நாகரிகமற்றவையாக, காட்டுமிராண்டித்தனமானவையாக, நாசூக்கற்றவையாகத் தோன்றுகின்றன.</p>
<p>இது ஒரு பிரச்னை. இன்னொரு பிரச்னை, போராட்ட வடிவங்கள் சார்ந்தே இருக்கிறது. நம்ம ஊரில் எல்லா போராட்ட வடிவங்களும் நீர்த்துப் போய்விட்டனவோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு. அடிப்படையில், யாரும் யாரையும் எப்படியும் வலியுறுத்தக் கூடாது என்ற மனநிலை வந்துவிட்டது. மேலும் சேவை சார்ந்த துறைகளில், சங்கங்களோ, அமைப்புகளோ வைத்துக்கொள்ள அனுமதி இல்லை. உனக்குக் குறை இருந்தால், நீ நேரடியாக மனித வளத்துறையிடம் போய் பேசிக்கொள். வீணாக, சங்கத்திடம் போய் முறையிட்டு, மூன்றாம் நபர் அல்லது அமைப்புகளின் தலையீட்டைக் கொண்டு வராதே. நான் பதில் சொல்ல மாட்டேன்.</p>
<p>அமைப்பு ரீதியாக ஒன்றுபடுவதே குற்றமாகவும் நாகரிகமற்ற பழமைத்தனமாகவும் இப்போது பார்க்கப்படுகிறது. அமைப்பாக சேராத போது, கூட்டு வலியுறுத்தல் சாத்தியம் இல்லை. பொதுவான நியாயம் என்று எதுவும் இல்லை. உனக்கு ஒரு நியாயம் வழங்கப்படலாம், அதுவே உன் சக பணியாளருக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று நீ வலியுறுத்த முடியாது. உன் வேலை முடிந்ததா? நீ வெளியே போ. அடுத்தவனை நான் பார்த்துக்கொள்கிறேன். பேசிக்கொள்கிறேன்.</p>
<p>மனிதர்களை, நிர்வாகமும் அரசாங்கமும் பிளவுபடுத்திவிட்டது. திறந்த பொருளாதாரத்தின் மிகப் பெரிய சாதனையும் இதுதான், கோர முகமும் இதுதான். என் பக்கத்தில் யாருமே இல்லை, நான் எப்போதும் தனியாள். நான் குரல் கொடுக்கலாம். என் கோரிக்கையை முன்வைக்கலாம். ஆனால், வலியுறுத்த முடியாது. தனிநபர்களை உள்ளுக்குள் சுருங்க வைத்துவிட்டது, திறந்த பொருளாதாரம்.</p>
<p>நிறைய சம்பளமும் வசதிகளும் வந்தபோது, நிர்வாகங்கள் பெரிய அட்சயப் பாத்திரங்களாகத் தெரிந்தன. அப்போது யாரும் இந்த தனிநபர் தன்மையைக் குறையாகக் கருதவில்லை. சென்ற ஒன்றரை ஆண்டுகால பொருளாதாரத் தேக்கம், தனிநபர்களாக இருப்பதின் கையறு நிலையை பலருக்கும் எடுத்துக்காட்டியிருக்கிறது. நாலு பேர் கூட சேர்ந்து இருப்பதின் அருமையை புரிய வைத்திருக்கிறது.</p>
<p>என் அளவில் நான் ஒரே ஒரு போராட்டத்தில்தான் கலந்துகொண்டு இருக்கிறேன். என் கல்லூரியில் நடைபெற்ற ஒரு மாதத்துக்கும் மேலான மாணவர்கள் ஸ்டிரைக்கில் நான் பங்குபெற்றேன். ஆனால், ஸ்டிரைக்கைவிடப் பேச்சுவார்த்தைதான் சரியான வழி என்பது என் எண்ணம். என்ன கோரிக்கையாக இருந்தாலும் பேசியே தீர்த்துக்கொள்ள முடியும்.</p>
<p>அமைதியைவிட அற்புத ஆயுதம் வேறில்லை.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.nesamudan.com/blog/2009/11/18/agitation/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>தமிழ் அறிஞர்கள் பங்கேற்க முடியாமல் போனது யார் பிழை?</title>
		<link>http://www.nesamudan.com/blog/2009/10/22/conference-explanation/</link>
		<comments>http://www.nesamudan.com/blog/2009/10/22/conference-explanation/#comments</comments>
		<pubDate>Thu, 22 Oct 2009 03:43:50 +0000</pubDate>
		<dc:creator>வெங்கடேஷ்</dc:creator>
				<category><![CDATA[9வது உலகத் தமிழ் மாநாடு]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[செம்மொழி மாநாடு]]></category>
		<category><![CDATA[ஜெயலலிதா]]></category>

		<guid isPermaLink="false">http://www.nesamudan.com/blog/?p=204</guid>
		<description><![CDATA[அப்படியே ஒருவரை நாடு கடத்த மத்திய அரசின் துறை ஏதேனும் முடிவு செய்துவிட்டால், மாநில அரசால் ஏதாவது செய்ய முடியுமா? நிச்சயமாக முடியாது. ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போட முடியாது. ஜெயலலிதா நினைத்திருந்தால் முடியாதா? சண்டை போட்டு எப்படியேனும் தமிழ் அறிஞர்களைப் பங்கேற்க வைத்திருக்க முடியாதா? நிச்சயம் முடியாது. ]]></description>
			<content:encoded><![CDATA[<p>வழக்கம்போல், உலகத் தமிழ் செம்மொழி மாநாடு அரசியலாகிவிட்டது. ஐ ஏ டி ஆர் அமைப்புத் தலைவர் கரோஷிமா ஒத்துக்கொள்ளாததால், ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு, செம்மொழி மாநாடு ஆகிவிட்டது. உடனே, அதிமுகவும் மதிமுகவும் இதில் பங்கேற்கமாட்டோம் என்று அறிவித்துவிட்டன. இது 2011ல் வரப்போகும் சட்டப்பேரவைத் தேர்தலை மனத்தில் கொண்டு, திமுக புகழ் பாடும் மாநாடாக இருக்கப் போகிறது என்று இக்கட்சிகள் நினைக்கின்றன.</p>
<p>விஜய்காந்தும் தமிழக பா.ஜ.க.வும் கரோஷிமா சொல்வதுபோலவே தேவைப்படும் கால அவகாசத்தைக் கொடுத்து மாநாடு நடத்தினால் என்ன என்று கேட்கிறார்கள். அடுத்த வாரம், கருணாநிதியை ராமதாஸ் சந்திக்க உள்ளதாகத் தெரிகிறது. இதை ஒரு முகாந்தரமாக வைத்துக்கொண்டு, ராமதாஸ், திமுகவுக்குள் தன் கூடாரத்தை மாற்றிக்கொள்ள முயலலாம்.</p>
<p>இதெல்லாம் ஒரு புறம் இருக்க, 1995ல் நடைபெற்ற எட்டாவது உலகத் தமிழ் மாநாடு பற்றி ஒரு தவறான தகவலைத் திரும்பத் திரும்ப எழுதியும் பேசியும் வருகிறார்கள். இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்பு, எம்.எல்.ஏ. ரவிக்குமார் ஜுனியர் விகடனில் தான் எழுதும் பத்தியிலும் இதையே சொல்லியிருக்கிறார்.</p>
<p>அதாவது, கார்த்திகேசு சிவத்தம்பி, வேலுப்பிள்ளை ஆகிய இலங்கைத் தமிழ் அறிஞர்களை எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொள்ளவிடாமல் நாடு கடத்தி அவமானப்படுத்தியது அன்றைய ஜெயலலிதாவின் அதிமுக அரசு.</p>
<p>இது எப்படி உண்மையாக இருக்க முடியும்?</p>
<p>1. ஒரு மாநிலப் போலீஸ், எப்படி ஒருவரை நாடு கடத்த முடியும்?<br />
2. மேலும், அந்த மாநாடு நடப்பதற்கு எட்டு, ஒன்பது மாதங்களுக்கு முன்பே, யார் யார் என்னென்ன கட்டுரைகள் வாசிக்கப் போகிறார்கள், எந்த அமர்வுக்கு யார் தலைமை தாங்கப் போகிறார்கள் என்று முடிவு செய்யப்பட்டுவிட்டது. அதன் அடிப்படையில்தான், வெளிநாட்டு அறிஞர்களுக்கு அழைப்புகளை அனுப்பி, அவர்களும் வர ஒத்துக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களை எல்லாம் அவமானப்படுத்துவதுதான் அதிமுக அரசின் நோக்கம் என்றால், முதலில் ஏன் இவர்களை அழைக்கப் போகிறார்கள்? நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப் போகிறார்கள்?<br />
3. நாடுக்குள் ஒருவரை அனுமதிப்பது என்பதோ, அனுமதிக்கக்கூடாது என்பதோ மத்திய அரசின் முடிவு. அங்கே இருக்கும் பல்வேறு துறைகளின் முடிவு. உள்துறையின் முடிவு. இந்தத் துறைகள் கடைசிநேரத்தில் விழித்துக்கொண்டு வீராவேசமாக சில செயல்களைச் செய்யக் கூடும். அது எப்படி மாநில அரசின் தவறாக ஆகும்?<br />
4. அப்படியே ஒருவரை நாடு கடத்த மத்திய அரசின் துறை ஏதேனும் முடிவு செய்துவிட்டால், மாநில அரசால் ஏதாவது செய்ய முடியுமா? நிச்சயமாக முடியாது. ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போட முடியாது. ஜெயலலிதா நினைத்திருந்தால் முடியாதா? சண்டை போட்டு எப்படியேனும் தமிழ் அறிஞர்களைப் பங்கேற்க வைத்திருக்க முடியாதா? நிச்சயம் முடியாது. என்ன மாநில உரிமை பேசினாலும், இறுதி முடிவு மத்திய அரசுடையதுதான்.</p>
<p>மேலும் இதுதான் முதல் நிகழ்ச்சியும் அல்ல. ஏற்கெனவே, இலங்கைத் தமிழ் அறிஞர்கள் அனுமதிக்கப்படாத மாநாடுகள் உண்டு. வெளிநாட்டு தமிழ் அறிஞர்கள் எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொள்ள முடியாமல் போனது மிகவும் வருந்தத்தக்க விஷயம். ஆனால், அதற்கு அதிமுக அரசுதான் பொறுப்பு என்று பேசுவது, முழுவதும் அரசியல். திமுக அரசு இருந்திருந்தாலும் இதுதான் நடந்திருக்கும்.</p>
<p>அதை அரசியல்வாதிகள் பேசலாம். பொய்யும் புறம்பேசுவதும் அவர்கள் தொழில். படித்த விவரமானவர்களும் யோசிக்கத் தெரிந்தவர்களும் தமிழ் அறிஞர்களும் பேசக்கூடாது. அது இழுக்கு.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.nesamudan.com/blog/2009/10/22/conference-explanation/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>வளர்ச்சியின் வலி</title>
		<link>http://www.nesamudan.com/blog/2009/09/16/india-growing-pains/</link>
		<comments>http://www.nesamudan.com/blog/2009/09/16/india-growing-pains/#comments</comments>
		<pubDate>Wed, 16 Sep 2009 11:17:05 +0000</pubDate>
		<dc:creator>வெங்கடேஷ்</dc:creator>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[பொருளாதாரம்]]></category>
		<category><![CDATA[Growth]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[Politicians]]></category>
		<category><![CDATA[வளர்ச்சி]]></category>

		<guid isPermaLink="false">http://www.nesamudan.com/blog/?p=137</guid>
		<description><![CDATA[இன்னும் ஐம்பது ஆண்டுகள், நூறாண்டுகள் கழித்து, இன்று நாம் குறை பேசும் பல விஷயங்கள், சரித்திரமாகி இருக்கும். இன்றைக்கு எப்படி நமக்கு காந்தியின் சுதந்திரப் போராட்ட வலி தெரியவில்லையோ, அப்படி, நமது சந்ததியினருக்கு இன்று நாம் அடைந்த வலிகள், வளர்ச்சிக்குக் கொடுத்த விலை, எதுவுமே தெரியாது.]]></description>
			<content:encoded><![CDATA[<p>ஞாயிறு மதியம், எங்கள் வீட்டுக்குப் பழைய பேப்பர் வாங்குபவர் வந்தார். பல ஆண்டுகளாக இதுதான் அவர் தொழில். நேர்மையானவர். தொலைபேசியில் கூப்பிட்டவுடன் வீட்டுக்கே வந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு எடை போட்டு பணம் கொடுத்துவிட்டுச் செல்வார். படிப்பதில் ஆர்வமுடையவர். பணம், பொன், மண் ஆகிய துறைகளில் முதலீடு செய்யவேண்டும் என்று ஆர்வமுடையவர். பங்குச் சந்தையில் நிறைய ஆர்வம். அன்றும் பங்குச் சந்தையில் இருக்கும் டிரைவேட்டிவ் மார்க்கெட் பற்றித்தான் கேட்டார். ஃபூச்சர்கள் மற்றும் ஆப்ஷன்கள் பற்றி எனக்குத் தெரிந்ததை மிக எளிமையாகச் சொல்லிக்கொண்டு வந்தேன். பேச்சு அப்படியே ஷார்ட் டர்ம் கேப்பிட்டல் கெயின்ஸ் டாக்ஸ், லாங்க டர்ம் கேப்பிட்டல் கெயின்ஸ் டாக்ஸ், வருவான வரி என்று வளர்ந்துகொண்டே போனது.</p>
<p>‘நான் வரி கட்டறா மாதிரி சம்பாதிக்கலை. எனுக்குப் பிரச்னை இல்லை. ஆனா அனாவசியமா எதுக்குப் போய் வரி கட்டணும்?’</p>
<p>‘வரி கட்டறதுல என்னப்பா பிரச்னை?’</p>
<p>‘ஒரு நாளைக்கு பதினஞ்சு பதினாறு மணிநேரம் வேலை செஞ்சி சம்பாதிச்சுட்டு, இவனுக்கு எதுக்கு சார் போய் வரியை அழுவணும்.’</p>
<p>‘அப்ப ஏன் இந்தியாவுல இருக்கீங்க? எங்கயாவது வெளிநாடு போக வேண்டியதுதானே?’ இது நான்.</p>
<p>‘நான் ஏன் வெளிநாடு போவணும்?’</p>
<p>‘சரி, நீங்க வீட்டுல கேஸ் வெச்சிருக்கீங்களா?’</p>
<p>‘இருக்கு. எங்கம்மா பேர்ல.’</p>
<p>‘பஸ்சுல போவீங்களா?’</p>
<p>‘எங்க போனாலும் பஸ்ஸுதான்.’</p>
<p>‘ஆவின் பால் வாங்கறீங்களா?’</p>
<p>‘வாங்கறேனே?’</p>
<p>‘இங்க எல்லாம் நீங்க முழுசா பணம் கொடுக்கறீங்களா?’</p>
<p>‘அப்படின்னா?’</p>
<p>‘கேஸுக்கு நீங்க குடுக்கறது ரூ.320. அதனுடைய உண்மையான விலை கிட்டத்தட்ட 400 ரூபாய். ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 49 ரூபாய். அதன் உண்மையான விலை கிட்டத்தட்ட 60 ரூபாய். நீங்கள் குடுக்கற பணத்துக்கு மேல ஆகும் செலவை யார் ஏத்துக்கறாங்க? யார் மானியமா தராங்க? கவர்மெண்ட்டுதானே. உங்களுக்கு எதுக்கு கவர்மெண்ட்டு இதெல்லாம் செய்யணும்..?’</p>
<p>‘என்ன சார்.. அவனவன் கோடி கோடியா ஏமாத்திகினு இருக்கான். அரசியல்வாதிங்க எத்தன வீடு வெச்சிருக்காங்க. அவங்க வரி கட்டறாங்களா என்ன?’</p>
<p>‘இங்கதான் தப்பு பண்றீங்க சார். அவன் கொடுக்கலை, இவன் கட்டலை, நான் ஏன் கட்டணும்னும் கேக்கறது தப்பு. நீங்கள் இந்தியாவுல தானே இருக்கீங்க. நீங்கள் இந்தியாவுக்கு என்ன செஞ்சீங்க? இந்தியாவோட எல்லா வளத்தையும் வசதிகளையும் பயன்படுத்திப்பீங்க. அதை வெச்சுதான் உங்கள் வாழ்க்கையே இருக்கு. ஆனால், அதுக்கு ஒண்ணும் திருப்பித் தரமாட்டேன்னு சொல்றது நியாயமா?’</p>
<p>‘மத்தவனெல்லாம் செய்யலையே சார். நான் ஏன் செய்யணும்?’</p>
<p>‘மத்தவன் செய்யலைங்கறதால நாம செய்யாமல் இருப்பதுல அர்த்தமில்லை. நம்ம கடமை, நாம இந்தியாவுக்கு மனத்திருப்தியோட, மகிழ்ச்சியோட வரியைக் கட்டணும். மத்தவன் கட்டலைங்கறது அவனோட பிரச்னை. நீங்க ஏன் அவனைப் பார்த்து சூடு போட்டுக்கணும்னு நினைக்கிறீங்க?’</p>
<p>‘இந்த வரிப்பணத்தைத் தானே சார் வாரி உடறாங்க. கலர் டிவி என்ன? சுனாமி நிவாரணம்ங்கற பேர்ல சும்மா இருக்கறவனுக்கு எல்லாம் மாசாமாசம் உதவித் தொகை என்னா? வயிறு எரியலையா சார்?’</p>
<p>‘நீங்க தப்பா இடத்துல தப்பான கேள்வியைக் கேக்கறீங்க. அரசுக்கு வரி கட்டறதுங்கறது உங்க கடமை. அது தனி. ஆனால், அந்த வரிப்பணத்தை சரியா பயன்படுத்தலை, ஏமாத்தறாங்க, ஊழல் செய்யறாங்கனு நினைச்சீங்கன்னா, அதைக் கேக்க வேண்டிய இடம் வேற. அதுதான் தேர்தல். இந்தத் தேர்தல்ல எப்படி ஓட்டு போட்டீங்க? பணம் கொடுத்தாங்களா?’</p>
<p>‘எங்க பக்கத்து ஊட்டுல எல்லாம் கொடுத்தாங்க. எங்க வீட்டுக்கு வரலை. கொடுத்தா கூட வாங்கியிருக்க மாட்டேன். என் மனச்சாட்சிப் படிதான் சார் ஓட்டு போடுவேன்.’</p>
<p>‘அதுதான் வேணும். அதுதான் முக்கியம். தனி மனித ஒழுக்கங்கறது அதுதான். அடுத்தவனை எப்போதும் மாத்தவே முடியாது. நம்மால மாற முடியும். நாமதான் நம்மை மாத்திக்கணும்.’</p>
<p>‘ஆனா சார், வரி கட்டறதால நமக்கு நேரடியா என்ன சார் பிரயோஜனம். கஷ்டப்படும் போது கவர்மெண்ட்டா வந்து காப்பாத்தபோவுது?’</p>
<p>‘இது சரியான கேள்வி. எப்படி கேக்கணும்னா.. நான் சம்பாதிச்சபோது, உனக்கு சந்தோஷத்தோட வரி கட்டினேன். நான் இப்போ வேலை இல்லாமல், உடம்பு சரியில்லாமல் படுத்து கெடக்கறேன். நீ என்ன காப்பாத்த வேண்டாமான்னு கேக்கணும். இதுதான் சோஷியல் செக்யூரிட்டி நெட்டின் ஆரம்பம்.’</p>
<p>‘அப்படின்னா?’</p>
<p>‘அமெரிக்காவுல வேலை போயிடுச்சுன்னா, வேலை போனவன் முதல்ல போய் கவர்மெண்ட்டுக்கிட்ட உதவிப் பணத்துக்கு அப்ளை பண்ணுவான். நான் சம்பாதிச்சபோது, உனக்குத்தானேப்பா எல்லாம் கொடுத்தேன், இப்போ என்னைக் காப்பாத்த வேண்டியது உன் கடமைன்னும் சொல்றது இது. கவர்மெண்ட்டும் கொடுக்கும். பல வளர்ந்த நாடுகள்ல இந்த சோஷியல் செக்யூரிட்டி உண்டு. நாம வளரும் நாடு. இன்னும் இங்கே வரலை.’</p>
<p>‘இங்கதான் ஊழல் செய்யறதுக்கும் புடுங்கித் திங்கறதுக்கும்தான் நேரம் சரியா இருக்கு, எவன் சார், நீங்க சொல்ற செக்யூரிட்டி எல்லாம் கொடுப்பான்?’</p>
<p>தெரியவில்லை. நாம் அப்படியே இருந்துவிட முடியாது. சுதந்திரம் பெற்று கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒவ்வொரு துறைக்குள்ளும் மாற்றங்கள் ஏற்பட்டுத்தான் வருகின்றன. சிந்தனை ரீதியான மாற்றங்கள், உலக நாடுகளோடு ஒன்றிணைந்து வாழும்போது பெறும் பாடங்கள், படிப்பினைகள் ஆகியவற்றால் ஏற்படும் மாற்றங்கள் என்று பல முன்னேற்றங்களைப் பெற்று வந்திருக்கிறோம். ஆனால், மக்களின் அடிமனத்தில், இந்தியாவைப் பற்றிய, அதன் நிர்வாகிகளைப் பற்றிய, நிர்வாகம் பற்றிய ஐயங்கள் மிகுதியாக இருக்கின்றன.</p>
<p>நான் சந்திக்கும் ஒவ்வொருவரும் தனிமனித லாபங்களுக்காக அரசியலாளர்கள் செய்யும் இழிசெயல்களைப் பற்றி நிறைய பேசுகிறார்கள், அங்கலாய்க்கிறார்கள். இதெல்லாம் இந்தியாவையே ஒரு இழிவுநிறைந்த நாடாகத் தொடர்ந்து சித்திரித்தும் வருகிறது. இதில் உண்மையில்லாமல் இல்லை. அதேசமயம் இதுவே முழுமையான உண்மையும் இல்லை. ஒவ்வொரு வளரும் நாடும் சந்திக்கும் மிகப் பெரிய இடர்கள் இவை. ஊழல், தனிமனித பொருள் குவிப்பு, அதற்கு சமூகத்தைக் கெடுக்கும் மனப்போக்கு என்பவை எந்த வளரும் நாட்டிலும் காணக்கிடைக்கும் காட்சிகள்தான்.</p>
<p>இதுபோன்ற நாடுகளில், வளர்ச்சி அவ்வளவு சீக்கிரத்தில் வந்துவிடுவதில்லை. அல்லது வளர்ச்சி வருவதை எவ்வளவு தூரம் தள்ளிப்போட முடியுமோ அதைச் செய்யவும் செய்வார்கள். ஆனாலும் வளர்ச்சி வந்துவிடும்.</p>
<p>தவிர்க்க இயலாமல் அமெரிக்காவைத்தான் உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவர்களுடைய இன்றைய வளர்ச்சிக்குப் பின்னே நானூறு ஆண்டுகளின் சரித்திரம் இருக்கிறது. அங்கேயும் இதுபோன்ற வளர்ச்சித் தடைகள் இருந்திருக்கிறது. எதிர்கருத்துகள் என்ற பெயரில் வளர்ச்சிக்கான முட்டுக்கட்டைகள் இருந்திருக்கின்றன, ஊழல், சொத்துக்குவிப்பு, அடுத்தவர் மேல் தீராத கட்டுப்பாடு, அடிமைமுறை என்று எல்லா துன்பங்களும் அங்கே இருந்திருக்கின்றன. ஒவ்வொரு காலகட்டத்திலும் முன்னேற்றம் அங்குலம் அங்குலமாகத்தான் நடந்திருக்கிறது. பெரும் பாய்ச்சல்கள் தோன்றியதில்லை.<br />
இந்தியாவிலும் இப்போது அதேபோன்ற நோய்கள்தான் ஆட்டிப் படைத்துக்கொண்டு இருக்கின்றன. சாதாரணர்கள் ஒரு பக்கம் அன்றாட வாழ்வுக்குத் துன்பப்பட, இன்னொரு பக்கம், தம் பேராசைக்கு முக்கியத் திட்டங்களை வளைத்துப் பெரும் பொருளைத் திரட்டிக்கொள்பவர்கள் இருக்கிறார்கள்.</p>
<p>வளர்ச்சி வலி நிரம்பியது. குழந்தைகள் வளரும்போது, பின் இரவுகளில் கால்கள் வலிக்கும். உளைச்சல் எடுக்கும். ஓடியாடி விளையாடுகிறான், அதனால் வலிக்கிறது என்று நாம் நினைப்போம். உண்மையில், அது வளர்ச்சியின் வலி (Growing Pains). அந்த வலி, உள்ளுக்குள்ளே எலும்புகள் வளருவதை, கெட்டியாவதைக் குறிக்கும் வலி என்று சொல்கிறவர்கள் இருக்கிறார்கள். இந்தியா இப்போது இப்படிப்பட்ட வலியைத்தான் சந்தித்துக்கொண்டு இருக்கிறது.<br />
இந்த வலிகள் இல்லாமல் வளர்ச்சி இல்லை. யாரும் சுலபமாக, இலக்கை அடைந்துவிட முடியாது. அதற்கான முனைப்பும் ஈடுபாடும் வேண்டும்.</p>
<p>இன்னும் ஐம்பது ஆண்டுகள், நூறாண்டுகள் கழித்து, இன்று நாம் குறை பேசும் பல விஷயங்கள், சரித்திரமாகி இருக்கும். இன்றைக்கு எப்படி நமக்கு காந்தியின் சுதந்திரப் போராட்ட வலி தெரியவில்லையோ, அப்படி, நமது சந்ததியினருக்கு இன்று நாம் அடைந்த வலிகள், வளர்ச்சிக்குக் கொடுத்த விலை, எதுவுமே தெரியாது. எல்லாமே தன்னால் இயற்கையாக வந்துவிட்டதாக அவர்கள் நம்பவே ப்ரியப்படுவார்கள். தம் முன்னோர்கள் பற்றிய அவர்களுடைய கற்பனைகள், மிகவும் கவர்ச்சிகரமாகவே இருக்கும். உயர்வாக இருக்கும்.</p>
<p>அந்த முன்னேற்றமும் கவர்ச்சியும் உயர்வும் சாத்தியப்பட வேண்டும் என்றால், இன்றைக்கு நம்மால் ஆனது, வளர்ச்சியின் வலிகளைப் பொறுத்துக்கொள்வதுதான். தனிமனித ஒழுக்கத்தைப் பேணுவதுதான். முடிந்த இடங்களில் எல்லாம் முன்னேற்றங்களை இருகை நீட்டி அணைத்துக்கொள்வதுதான். நாம் போகும் பாதை கரடுமுரடாகத்தான் தெரிகிறது. ஆனால், தூரத்தில் வெளிச்சப் புள்ளி நமக்காகக் காத்திருக்கவே செய்கிறது.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.nesamudan.com/blog/2009/09/16/india-growing-pains/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கேலிக்கூத்தாகும் சிக்கனம்</title>
		<link>http://www.nesamudan.com/blog/2009/09/16/austerity/</link>
		<comments>http://www.nesamudan.com/blog/2009/09/16/austerity/#comments</comments>
		<pubDate>Wed, 16 Sep 2009 11:10:07 +0000</pubDate>
		<dc:creator>வெங்கடேஷ்</dc:creator>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[சிக்கனம்]]></category>
		<category><![CDATA[சோனியா காந்தி]]></category>
		<category><![CDATA[ராகுல் காந்தி]]></category>

		<guid isPermaLink="false">http://www.nesamudan.com/blog/?p=132</guid>
		<description><![CDATA[நம் நாட்டில் எல்லாவற்றையும் மதிப்பிழக்கச் செய்வதில் நாம் வல்லவர்கள். அதுவும் நம் அரசியல்வாதிகள் செய்யும் செயல்களைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. ]]></description>
			<content:encoded><![CDATA[<div id="_mcePaste" style="position: absolute; left: -10000px; top: 0px; width: 1px; height: 1px; overflow-x: hidden; overflow-y: hidden;">நம் நாட்டில் எல்லாவற்றையும் மதிப்பிழக்கச் செய்வதில் நாம் வல்லவர்கள். அதுவும் நம் அரசியல்வாதிகள் செய்யும் செயல்களைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. அவர்கள் இதையெல்லாம் புரிந்துதான் செய்கிறார்களா, புரியாமல் செய்கிறார்களா என்று தெரியவில்லை.</div>
<div id="_mcePaste" style="position: absolute; left: -10000px; top: 0px; width: 1px; height: 1px; overflow-x: hidden; overflow-y: hidden;">இந்தியா முழுக்க வறட்சி. அடுத்து வரும் மாதங்களில், பருவ மழை முழுமையாகப் பொய்த்துப் போனால், பல மாநிலங்களில் விவசாயமே இருக்காது. மக்கள் பஞ்சத்தால் திண்டாடிப் போவார்கள். அவர்களுக்கு பிரதமரின் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் எப்படியேனும் வேலை கொடுத்துக் காப்பாற்றவேண்டும் என்ற நிலை. உடனே நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, தேசிய அளவில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். செலவுகளில் 10 சதவிகிதம் மிச்சப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மாநில அரசுகளையும் அதைப் பின்பற்ற கேட்டுக்கொண்டார். இப்படி மிச்சமாகும் பணம், நாளைக்கு பசி, பஞ்சம், பட்டினி வரும்போது, நிவாரணத் திட்டங்களை உருவாக்கவும் அதற்குச் செலவழிக்கவும் உதவியாக இருக்கும் என்பது எண்ணம். நல்ல எண்ணம். இங்கே வேறு சில கேள்விகள் பிறக்கின்றன. அதை அப்புறம் கேட்போம். முதலில், இதுவரை நடந்தது எல்லாம் சரி.</div>
<div id="_mcePaste" style="position: absolute; left: -10000px; top: 0px; width: 1px; height: 1px; overflow-x: hidden; overflow-y: hidden;">இங்கிருந்துதான் மதிப்பிழக்கச் செய்யும் வழி ஆரம்பிக்கிறது. சோனியா பெங்களூரூவுக்கு எகானமி வகுப்பில் விமானத்தில் பயணம் செய்தாராம். காரணம், சிக்கன நடவடிக்கை. தில்லியில் இருந்து லூதியானாவுக்கு ராகுல் காந்தி ஷதாப்தி ரயிலில் பயணம் செய்தாராம். காரணம், சிக்கனம். காங்கிரஸ் அமைச்சர்கள் எல்லாரும் வழிகாட்டுகிறார்களாம், எப்படிச் சிக்கனமாக இருப்பது என்பதற்கு. கேலிக்கூத்தாக இல்லை?</div>
<div id="_mcePaste" style="position: absolute; left: -10000px; top: 0px; width: 1px; height: 1px; overflow-x: hidden; overflow-y: hidden;">மத்திய அரசு உண்மையிலேயே சிக்கனமாக நடந்துகொண்டு, செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைத்திருந்தால், அது பின்பற்ற வேண்டிய வழி இது அல்ல. இது மற்றவர்களை ஏமாற்றும் கண் துடைப்பு வேலை.</div>
<div id="_mcePaste" style="position: absolute; left: -10000px; top: 0px; width: 1px; height: 1px; overflow-x: hidden; overflow-y: hidden;">உலகெங்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பொருளாதார தேக்கம். ஒவ்வொரு நிறுவனமும் தம்மளவில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டன. ஒவ்வொரு நிறுவனமும், தத்தமது துறைத் தலைவர்களை அழைத்து, தேவையற்ற உற்பத்தியற்ற செலவுகளை முதலில் நிறுத்து என்றது. தேவையற்ற பயணங்களை நிறுத்து என்றது. ஒரு துறைக்கு ஆகும் செலவினங்களில் குறைந்தபட்சம் 50 சதவிகிதம் குறைக்கவேண்டும் என்று, பட்ஜெட்டையே புரட்டிப் போட்டது. விளைவு, இவ்வளவு மோசமான பொருளாதாரச் சரிவிலும் பல நிறுவனங்கள் நாணல்போல் வளைந்துகொடுத்து நிமிரத் தொடங்கிவிட்டன.</div>
<div id="_mcePaste" style="position: absolute; left: -10000px; top: 0px; width: 1px; height: 1px; overflow-x: hidden; overflow-y: hidden;">இதுதானே வழி. இதை விட்டுவிட்டு, ஓரிருவர் எகானமி வகுப்பில் பயணம் செய்வதால் என்ன லாபம்?</div>
<div id="_mcePaste" style="position: absolute; left: -10000px; top: 0px; width: 1px; height: 1px; overflow-x: hidden; overflow-y: hidden;">கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். மத்தியில் இருக்கும் 30 கேபினட் அமைச்சர்களும், குட்டி முதலமைச்சர்கள். ஒவ்வொரு துறையும் ஒரு மாநில அரசுக்கான வரவு செலவு அளவுக்கு வருவாயும் செலவுகளும் கொண்டது. ஒவ்வொரு துறையும் ஒரு குட்டி யானை. வருவாயைவிட செலவினங்கள் அதிகமுள்ள துறைகளே அதிகம். எல்லாமே மக்கள் நலத் திட்டங்கள்தான். இதில் எங்கிருந்து சிக்கனம் சாத்தியம்?</div>
<div id="_mcePaste" style="position: absolute; left: -10000px; top: 0px; width: 1px; height: 1px; overflow-x: hidden; overflow-y: hidden;">சரி அப்படியே சிக்கனத்தை இந்தத் துறைகளில் அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால், அது முழுக்க முழுக்க நிர்வாக நடைமுறை சார்ந்த விஷயம். அலுவலக ரீதியான செலவுகளை உயர் அதிகாரிகள் கட்டுப்படுத்த முனைந்தால், மாற்றம் தன்னால் வரும். அமைச்சர்கள் தேவையற்ற சலுகைகளை நிறுத்தினாலே மாற்றம் தன்னால் வரும். இதெல்லாம் தனிமனிதர்களின் மனம் சம்பந்தப்பட்டது. என்ன ஒரு பிரச்னை என்றால், இதுபோன்ற சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, தம் சலுகைகள் பறிக்கப்படுவதாக ஒரு கூட்டம் எப்போதும் கொடி பிடிக்கும். தம்முடைய உரிமைகளே பறிக்கப்படுவதாக இவர்கள் கொதித்துப் போவார்கள்.</div>
<div id="_mcePaste" style="position: absolute; left: -10000px; top: 0px; width: 1px; height: 1px; overflow-x: hidden; overflow-y: hidden;">இவர்களையும் உள்ளடக்கி சிக்கனத்தைக் கொண்டு வருவது அவசியம். செலவுகளை எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்கிறீர்களோ, அதில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் அனைத்து ஊழியர்களுக்கும் போனஸ்ஸாக வழங்கப்படும் என்று அறிவித்து நடைமுறைப்படுத்திப் பார்க்கலாம். சிக்கனத்தை சலுகைப் பறிப்பாக அல்லாமல், கூடுதல் வருவாய்க்கான வாய்ப்பாக மாற்றித் தரவேண்டும்.</div>
<div id="_mcePaste" style="position: absolute; left: -10000px; top: 0px; width: 1px; height: 1px; overflow-x: hidden; overflow-y: hidden;">அதை விட்டுவிட்டு, எகானமி வகுப்பில் பயணம் செய்து, ரயிலில் பயணம் செய்து என்ன செய்தியை இந்த அரசியல்வாதிகள் நமக்கு வழங்குகிறார்கள்? ஒன்றுமே இல்லை. அவர்களுடைய பயணம் மக்களை ஊக்கப்படுத்துவதற்குப் பதில், அவர்களுடைய போலி முகங்களைத்தான் தோல் உரித்துக் காட்டுகின்றன. இது நாள் வரை நீங்கள் எப்படி பயணம் செய்தீர்கள், வருங்காலத்தில் எப்படியெல்லாம் பயணம் செய்வீர்கள் என்றெல்லாம் மக்களுக்குத் தெரியாமலா இருக்கும்?</div>
<div id="_mcePaste" style="position: absolute; left: -10000px; top: 0px; width: 1px; height: 1px; overflow-x: hidden; overflow-y: hidden;">ஒரு வகையில், சிக்கனம் என்பதை நடைமுறைப்படுத்துவதை விட, அதை ஒரு விளம்பரமாக மாற்றிக்கொள்ளும் அரசியல்வாதிகளின் புகழ்போதைதான் இந்தப் பயணங்களில் தெரிகிறது. உண்மையில், அவர்கள் சொல்ல வேண்டிய செய்தியின் நேர் எதிர் செய்தியைத்தான், அவர்களுடைய செயல்கள் நமக்குச் சொல்லுகின்றன.</div>
<div id="_mcePaste" style="position: absolute; left: -10000px; top: 0px; width: 1px; height: 1px; overflow-x: hidden; overflow-y: hidden;">மக்கள் விவரமானவர்கள். மக்கள் நீங்கள் செய்வதைப் படிப்பதில்லை, நீங்கள் செய்வதின் பின்னுள்ள அரசியலைத்தான் படிக்கிறார்கள். நீங்கள் பேசும் பேச்சுக்களைக் கேட்பதில்லை, அதற்குப் பின்னே ஒலிக்கும் உள்நோக்கங்களைத்தான் கேட்கிறார்கள்.</div>
<div id="_mcePaste" style="position: absolute; left: -10000px; top: 0px; width: 1px; height: 1px; overflow-x: hidden; overflow-y: hidden;">இதெல்லாம் அரசியல்வாதிகளுக்குத் தெரியாதா என்ன? தெரியும். தெரிந்தும் இந்தக் கேலிக்கூத்துகளுக்கு இடம் கொடுக்கிறார்கள். எல்லாம் ‘வளர்ச்சியின் வலி’ என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.</div>
<div>நம் நாட்டில் எல்லாவற்றையும் மதிப்பிழக்கச் செய்வதில் நாம் வல்லவர்கள். அதுவும் நம் அரசியல்வாதிகள் செய்யும் செயல்களைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. அவர்கள் இதையெல்லாம் புரிந்துதான் செய்கிறார்களா, புரியாமல் செய்கிறார்களா என்று தெரியவில்லை.</div>
<div>இந்தியா முழுக்க வறட்சி. அடுத்து வரும் மாதங்களில், பருவ மழை முழுமையாகப் பொய்த்துப் போனால், பல மாநிலங்களில் விவசாயமே இருக்காது. மக்கள் பஞ்சத்தால் திண்டாடிப் போவார்கள். அவர்களுக்கு பிரதமரின் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் எப்படியேனும் வேலை கொடுத்துக் காப்பாற்றவேண்டும் என்ற நிலை. உடனே நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, தேசிய அளவில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். செலவுகளில் 10 சதவிகிதம் மிச்சப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மாநில அரசுகளையும் அதைப் பின்பற்ற கேட்டுக்கொண்டார். இப்படி மிச்சமாகும் பணம், நாளைக்கு பசி, பஞ்சம், பட்டினி வரும்போது, நிவாரணத் திட்டங்களை உருவாக்கவும் அதற்குச் செலவழிக்கவும் உதவியாக இருக்கும் என்பது எண்ணம். நல்ல எண்ணம். இங்கே வேறு சில கேள்விகள் பிறக்கின்றன. அதை அப்புறம் கேட்போம். முதலில், இதுவரை நடந்தது எல்லாம் சரி.</div>
<div>இங்கிருந்துதான் மதிப்பிழக்கச் செய்யும் வழி ஆரம்பிக்கிறது. சோனியா பெங்களூரூவுக்கு எகானமி வகுப்பில் விமானத்தில் பயணம் செய்தாராம். காரணம், சிக்கன நடவடிக்கை. தில்லியில் இருந்து லூதியானாவுக்கு ராகுல் காந்தி ஷதாப்தி ரயிலில் பயணம் செய்தாராம். காரணம், சிக்கனம். காங்கிரஸ் அமைச்சர்கள் எல்லாரும் வழிகாட்டுகிறார்களாம், எப்படிச் சிக்கனமாக இருப்பது என்பதற்கு. கேலிக்கூத்தாக இல்லை?</div>
<div>மத்திய அரசு உண்மையிலேயே சிக்கனமாக நடந்துகொண்டு, செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைத்திருந்தால், அது பின்பற்ற வேண்டிய வழி இது அல்ல. இது மற்றவர்களை ஏமாற்றும் கண் துடைப்பு வேலை.</div>
<div>உலகெங்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பொருளாதார தேக்கம். ஒவ்வொரு நிறுவனமும் தம்மளவில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டன. ஒவ்வொரு நிறுவனமும், தத்தமது துறைத் தலைவர்களை அழைத்து, தேவையற்ற உற்பத்தியற்ற செலவுகளை முதலில் நிறுத்து என்றது. தேவையற்ற பயணங்களை நிறுத்து என்றது. ஒரு துறைக்கு ஆகும் செலவினங்களில் குறைந்தபட்சம் 50 சதவிகிதம் குறைக்கவேண்டும் என்று, பட்ஜெட்டையே புரட்டிப் போட்டது. விளைவு, இவ்வளவு மோசமான பொருளாதாரச் சரிவிலும் பல நிறுவனங்கள் நாணல்போல் வளைந்துகொடுத்து நிமிரத் தொடங்கிவிட்டன.</div>
<div>இதுதானே வழி. இதை விட்டுவிட்டு, ஓரிருவர் எகானமி வகுப்பில் பயணம் செய்வதால் என்ன லாபம்?</div>
<div>கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். மத்தியில் இருக்கும் 30 கேபினட் அமைச்சர்களும், குட்டி முதலமைச்சர்கள். ஒவ்வொரு துறையும் ஒரு மாநில அரசுக்கான வரவு செலவு அளவுக்கு வருவாயும் செலவுகளும் கொண்டது. ஒவ்வொரு துறையும் ஒரு குட்டி யானை. வருவாயைவிட செலவினங்கள் அதிகமுள்ள துறைகளே அதிகம். எல்லாமே மக்கள் நலத் திட்டங்கள்தான். இதில் எங்கிருந்து சிக்கனம் சாத்தியம்?</div>
<div>சரி அப்படியே சிக்கனத்தை இந்தத் துறைகளில் அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால், அது முழுக்க முழுக்க நிர்வாக நடைமுறை சார்ந்த விஷயம். அலுவலக ரீதியான செலவுகளை உயர் அதிகாரிகள் கட்டுப்படுத்த முனைந்தால், மாற்றம் தன்னால் வரும். அமைச்சர்கள் தேவையற்ற சலுகைகளை நிறுத்தினாலே மாற்றம் தன்னால் வரும். இதெல்லாம் தனிமனிதர்களின் மனம் சம்பந்தப்பட்டது. என்ன ஒரு பிரச்னை என்றால், இதுபோன்ற சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, தம் சலுகைகள் பறிக்கப்படுவதாக ஒரு கூட்டம் எப்போதும் கொடி பிடிக்கும். தம்முடைய உரிமைகளே பறிக்கப்படுவதாக இவர்கள் கொதித்துப் போவார்கள்.</div>
<div>இவர்களையும் உள்ளடக்கி சிக்கனத்தைக் கொண்டு வருவது அவசியம். செலவுகளை எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்கிறீர்களோ, அதில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் அனைத்து ஊழியர்களுக்கும் போனஸ்ஸாக வழங்கப்படும் என்று அறிவித்து நடைமுறைப்படுத்திப் பார்க்கலாம். சிக்கனத்தை சலுகைப் பறிப்பாக அல்லாமல், கூடுதல் வருவாய்க்கான வாய்ப்பாக மாற்றித் தரவேண்டும்.</div>
<div>அதை விட்டுவிட்டு, எகானமி வகுப்பில் பயணம் செய்து, ரயிலில் பயணம் செய்து என்ன செய்தியை இந்த அரசியல்வாதிகள் நமக்கு வழங்குகிறார்கள்? ஒன்றுமே இல்லை. அவர்களுடைய பயணம் மக்களை ஊக்கப்படுத்துவதற்குப் பதில், அவர்களுடைய போலி முகங்களைத்தான் தோல் உரித்துக் காட்டுகின்றன. இது நாள் வரை நீங்கள் எப்படி பயணம் செய்தீர்கள், வருங்காலத்தில் எப்படியெல்லாம் பயணம் செய்வீர்கள் என்றெல்லாம் மக்களுக்குத் தெரியாமலா இருக்கும்?</div>
<div>ஒரு வகையில், சிக்கனம் என்பதை நடைமுறைப்படுத்துவதை விட, அதை ஒரு விளம்பரமாக மாற்றிக்கொள்ளும் அரசியல்வாதிகளின் புகழ்போதைதான் இந்தப் பயணங்களில் தெரிகிறது. உண்மையில், அவர்கள் சொல்ல வேண்டிய செய்தியின் நேர் எதிர் செய்தியைத்தான், அவர்களுடைய செயல்கள் நமக்குச் சொல்லுகின்றன.</div>
<div>மக்கள் விவரமானவர்கள். மக்கள் நீங்கள் செய்வதைப் படிப்பதில்லை, நீங்கள் செய்வதின் பின்னுள்ள அரசியலைத்தான் படிக்கிறார்கள். நீங்கள் பேசும் பேச்சுக்களைக் கேட்பதில்லை, அதற்குப் பின்னே ஒலிக்கும் உள்நோக்கங்களைத்தான் கேட்கிறார்கள்.</div>
<div>இதெல்லாம் அரசியல்வாதிகளுக்குத் தெரியாதா என்ன? தெரியும். தெரிந்தும் இந்தக் கேலிக்கூத்துகளுக்கு இடம் கொடுக்கிறார்கள். எல்லாம் ‘வளர்ச்சியின் வலி’ என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.</div>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.nesamudan.com/blog/2009/09/16/austerity/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>மாற்றத்துக்கான மொழி</title>
		<link>http://www.nesamudan.com/blog/2009/08/19/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf/</link>
		<comments>http://www.nesamudan.com/blog/2009/08/19/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf/#comments</comments>
		<pubDate>Wed, 19 Aug 2009 10:18:08 +0000</pubDate>
		<dc:creator>வெங்கடேஷ்</dc:creator>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[தேர்தல்]]></category>
		<category><![CDATA[மகாத்மா காந்தி]]></category>
		<category><![CDATA[ராகுல் காந்தி]]></category>

		<guid isPermaLink="false">http://www.nesamudan.com/blog/?p=50</guid>
		<description><![CDATA[இது உங்களில் எத்தனை பேர் கவனத்துக்கு வந்ததோ தெரியவில்லை. தமிழகத்தில் நாளை ஆகஸ்டு 20 ஆம் தேதி முதல் இளைஞர் காங்கிரஸில் உறுப்பினர்கள் சேர்க்கை நடக்க இருக்கிறது. உறுப்பினர் சேர்க்கை முடிந்தபின்னர் மாநில அளவில் இளைஞர் காங்கிரஸுக்கு நிர்வாகிகள் தேர்தல் நடக்க இருக்கிறது. ஒவ்வொரு கட்டமாக தேர்தல் நடந்து அகில இந்திய காங்கிரஸை 2011க்கு பலப்படுத்துவதுதான் ராகுல் காந்தியின் எண்ணம். திட்டம். ஏற்கனவே ஹரியானா, குஜராத், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இளைஞர் காங்கிரஸ் தேர்தல் நடந்து நிர்வாகிகள் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>இது உங்களில் எத்தனை பேர் கவனத்துக்கு வந்ததோ தெரியவில்லை. தமிழகத்தில் நாளை ஆகஸ்டு 20 ஆம் தேதி முதல் இளைஞர் காங்கிரஸில் உறுப்பினர்கள் சேர்க்கை நடக்க இருக்கிறது. உறுப்பினர் சேர்க்கை முடிந்தபின்னர் மாநில அளவில் இளைஞர் காங்கிரஸுக்கு நிர்வாகிகள் தேர்தல் நடக்க இருக்கிறது. ஒவ்வொரு கட்டமாக தேர்தல் நடந்து அகில இந்திய காங்கிரஸை 2011க்கு பலப்படுத்துவதுதான் ராகுல் காந்தியின் எண்ணம். திட்டம். ஏற்கனவே ஹரியானா, குஜராத், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இளைஞர் காங்கிரஸ் தேர்தல் நடந்து நிர்வாகிகள் தேர்வாகியிருக்கின்றனர். </p>
<p>இளைஞர் காங்கிரஸ் தேர்தல் பற்றி, கூகுளில் தேடினீர்கள் என்றால் எண்ணற்ற புதிய, சுவாரசியமான தகவல்கள் கிடைக்கும். படித்துக்கொள்ளுங்கள். நான் பேச வந்தது வேறு. </p>
<p>மக்களவை தேர்தலுக்கு முன்பு அஇஅதிமுக இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை என்ற அமைப்புகளைத் தொடங்கி, தமிழகம் முழுவதும் இளைஞர்களைக் கட்சிக்குள் சேர்த்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கும். ஒவ்வொரு ஊரிலும் இளைஞர்களைச் சேர்க்கும் காட்சி ஜெயா தொலைக்காட்சியில் தொடர்ந்து ஒளிபரப்பி வந்தார்கள். இப்போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த இளைஞர்கள் இளம்பெண்கள் பாசறையின் கூட்டங்கள் நடந்துவருகின்றன. </p>
<p>யார் போய் சேர்ந்தார்கள்? எப்படிச் சேர்ந்தார்கள் என்றெல்லாம் கொஞ்சம் தோண்டித் துருவிப் பார்த்தால், உங்களுக்குப் பல விஷயங்கள் புரியும். மிடில்கிளாஸ் அந்தப் பக்கமே தலைவைத்துப் படுக்கவில்லை. சேர்ந்தவர்கள், பெரும்பாலும் ஏழை எளிய இளைஞர்கள். இவர்கள் எல்லோரும் விருப்பப்பட்டு சேர்ந்தார்களா? நிச்சயம் இல்லை. சேர்க்கப்பட்டார்கள். ஒவ்வொரு வட்டத்திலும் இருக்கும் கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் ஆள்பிடித்துக் கொண்டு வந்து சேர்த்தார்கள். லோக்கல் கட்சிக்காரர்களின் வாரிசுகளும் இதில் அடக்கம். </p>
<p>அடுத்த கேள்வி: இவர்களுக்கு எல்லாம் அரசியல் உணர்வு, கொள்கைத் தெளிவு, ஈடுபாடு எல்லாம் உண்டா? யார் சொன்னது? கட்சியின் அடையாள அட்டை அரசு அலுவலகங்களுக்குள் போய்வருவதற்கும், ஏதேனும் கோரிக்கைகளை எடுத்துச் சொல்லவும், நாளை தாம் சார்ந்த கட்சி ஆட்சிக்கு வந்தால், வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெறவும் பயன்படும் என்ற தெளிவு இவர்களுக்கு உண்டு. </p>
<p>ஒருவகையில் கட்சிக்கு ஆள்பிடிப்பது என்பது மிகப் பெரிய கேலிக்கூத்தாக இருக்கிறது. </p>
<p>அப்படியானால், இன்றைக்கு இளைஞர்களுக்கு அரசியலே பிடிக்கவில்லை. அவர்கள் அ-பொலிட்டிக்கலாக இருக்கிறார்கள், அரசியலில் இருந்து தள்ளியே இருக்க விரும்புகிறார்கள் என்று எடுத்துக்கொள்ள வேண்டுமா? நான் அப்படி நினைக்கவில்லை. இன்றைய இளைஞர்களுக்கு நிறைய விஷயங்கள் தெரியும். நமது அரசியல் கட்சிகள்தான் இன்னும் மெளடீகமாக இருக்கின்றன. இதுதான் பிரச்னை. இதைக் கொஞ்சம் விளக்கினால், இன்னும் புரிந்துகொள்ள முடியும்.</p>
<p>ஒரு அரசியல் கட்சியின் முக்கியத்துவம் அது முன்வைக்கும் கோஷம், எடுத்துப் பேசும் செய்திகள், வகுத்துக் கொடுக்கும் கொள்கைகள் மற்றும் அதன் உள்ளர்த்தத்தில்தான் அடங்கியிருக்கிறது. இந்தக் கோஷமும் செய்தியும் கொள்கைகளும் அந்தந்தக் காலகட்டத்துகான பொருத்தப்பாட்டோடு இருக்கவேண்டும். அப்போதுதான் அதனால் ஈர்க்கப்பட்டவர்கள், அந்தக் கோஷத்தோடு, கொள்கையோடு அதைப் பேசும் கட்சியோடு அணிதிரள்வார்கள்.</p>
<p>நாம் வேறு எங்கேயும் போகவேண்டாம். நான் மகாத்மா காந்தியை கொஞ்சம் சிரத்தையோடு படித்தவன். அவர் பிறவித் தலைவர் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தே கிடையாது. அவருக்கு யாரேனும் அரசியல் சொல்லிக்கொடுத்திருப்பார்களா என்று தெரியவில்லை. ஆனால், அவர் மக்களைத் திரட்டிய விதத்தை யோசித்துப் பாருங்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு கோஷம். ஒத்துழையாமை இயக்கம், வெளையனே வெளியேறு, உப்பு சத்தியாகிரகம், அந்நிய துணிகள் பகிஷ்கரிப்பு என்று வரிசையாக கோஷங்கள், இயக்கங்கள். ஒவ்வொரு இயக்கமும் மக்களின் மனத்தைப் படம்பிடித்துக் காட்டும் இயக்கங்கள். எதை மக்கள் எதிர்பார்த்தார்களோ, பேச வேண்டும், போராட வேண்டும் என்று நினைத்தார்களோ, அதைத்தான் காந்தி இயக்கங்களாகக் கட்டி எழுப்பினார். மக்கள் கோடிக்கணக்கில் அவர் பின்னால் அணிதிரண்டார்கள். </p>
<p>நம்ம தமிழ்நாட்டையே எடுத்துக்கொள்ளுங்களேன். 1967ல் ஆட்சி மாற்றம் தமிழகத்தில் ஏற்பட என்ன காரணம்? இந்தி எதிர்ப்பு. அது ஒரு கோஷம். அதை வெகுமக்கள் இயக்கமாகக் கட்டி எழுப்பியது தி.மு.க. அன்று இளைஞர்கள் லட்சக் கணக்கில் வந்து தி.மு.க பின்னே நின்றார்களே. அவர்களெல்லாம் நிச்சயம் ஆள்பிடித்து, லாரிகளில் ஏற்றிவந்த கூட்டம் அல்ல. </p>
<p>இதெல்லாம் அந்தக் காலம், இன்றைக்கு அப்படிப் பேச எதுவுமே இல்லை என்று நினைத்தீர்கள் என்றால், நீங்கள்தான் கண்ணை மூடிக்கொள்கிறீர்கள் என்று அர்த்தம். அமெரிக்காவில் ஒபாமா பேசியது என்ன? அவர் முன்வைத்த கோஷங்கள் என்ன? மக்கள் அவர் பின்னால் அணிதிரளாமலா போய்விட்டார்கள்? அவர் அப்படி என்னதான் பேசினார்: அ) சுற்றுச்சூழல் மாசுபடுவதைக் குறைக்கவேண்டும், தடுக்க வேண்டும். வண்டிகளிலிருந்து பிற தொழில்களில் இருந்தும் வெளியேறும் புகை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும். ஆ) பங்குச் சந்தையில் பணம் சம்பாதித்தவர்கள் மீது, அவர்கள் சம்பாதித்த தொகை மீது போடப்படும் வரியை உயர்த்த வேண்டும். பணக்காரர்கள் (ஒரு மில்லியன் டாலர்களுக்கு மேல் சம்பாதிப்பவர்கள்) இன்னும் அதிகமாக வரி கட்ட வேண்டும். இ) போரில் ஈடுபடும் நாடுகளோடு முன்நிபந்தனை இல்லாமல் சமாதானம் பேச வேண்டும். ஈ) நாடு முழுவதும் எல்லோருக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம் உ) ஆயுத கலாச்சாரத்தை அடியோடு ஒழிக்க, ஆயுதங்கள் மீதான சட்டங்கள் இன்னும் கடுமையாக வேண்டும்.</p>
<p>இப்போது அமெரிக்காவை யோசித்துப் பாருங்கள். அதன் மேல் நடந்த பயங்கரத் தாக்குதலை யோசித்துப் பாருங்கள். இன்ன பிற பிரச்னைகளையும் யோசித்துப் பாருங்கள். மேலே ஒபாமா முன்வைத்த கோஷங்களை அதனோடு இணைத்துப் பாருங்கள். ஒபாமாவுக்கு ஏன் ஓட்டு விழுந்தது உங்களுக்கே புரியும்.</p>
<p>விஷயம் இதுதான்: ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு கட்சியும் மாற்றத்துக்கான மொழியைப் பேச வேண்டும். அது அந்தக் காலகட்டத்தின் மொழியாகவும் எதிர்பார்ப்பாகவும் இருக்கவேண்டும். </p>
<p>ஆனால், இந்தியாவில் பெரும்பாலான கட்சிகள் இன்னும் பழைய மொழியையே பேசிக்கொண்டு இருக்கின்றன. தனிமனித துதி, தனிமனித சாகசம், நூற்றாண்டு பாரம்பரியம் என்ற பழம் பெருமை, அதிகபட்சம் ஒன்றிரண்டு சாதனைகள் என்று மட்டுமே இவை பேசுகின்றன. மிச்சுவல் பண்டு விளம்பரங்களில், கீழே சின்ன எழுத்தில் ஒரு டிஸ்கிளைமர் வரி போட்டிருப்பார்கள்:  Past performance may or may not be sustained in future. அதுதான் இங்கேயும் உண்மை. நேற்று நீ என்ன செய்தாய் என்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. </p>
<p>முதலில் நீ நாளைக்கான மொழியைப் பேசு. ஒபாமா பேசினார். இன்றைக்கு அவருடைய மொழிதான் அவருக்கு முகம் கொடுத்திருக்கிறது. அவருடைய கரிசனம்தான், மக்கள் மத்தியில் தலைவராக ஆக்கியிருக்கிறது. அவரால், சாதாரண அமெரிக்கனின் வலியோடு தன்னைத் தொடர்புபடுத்திப் பார்க்க முடிந்தது.  அவர் பின்னே மக்கள் அணிதிரண்டதில் ஆச்சரியமே இல்லை.</p>
<p>ராகுல் காந்தி செய்யவேண்டியது இதுதான்: இன்றைக்கு இந்தியா சந்திக்கும் பிரச்னைகளைப் புரிந்துகொண்டு, சாதாரண மனிதனின் வலியோடு கனவுகளோடு எதிர்பார்ப்புகளோடு கோபங்களோடு எரிச்சல்களோடு தன்னைத் தொடர்புபடுத்திக்கொள்ளத் தெரிய வேண்டும். அதில் இருந்து விடுதலைக்கான கோஷங்களை உருவாக்க வேண்டும். கோஷங்களை செயல்படுத்திக் காட்டத் திட்டங்களை முன்வைக்க வேண்டும். அதைச் செயல்படுத்தும் அணியை, தனிநபர்களை கண்முன்னே காட்டவேண்டும். அது போதும். அப்புறம் மக்கள்வெள்ளம் தன்னால் அணிதிரளும். </p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.nesamudan.com/blog/2009/08/19/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
	</channel>
</rss>
