மகிழ்ச்சிகளும் வருத்தங்களும் ஆச்சரியங்களும்
கடந்த சில நாள்களாக பார்க்கும் சில விஷயங்கள், செய்திகள் ஆகியவை கலவையான உணர்வையே அளிக்கின்றன. சில வருத்தமளிக்கின்றன, ஒரு சில மகிழ்ச்சி அளிக்கின்றன, கொஞ்சம் ஆச்சரியமும் அளிக்கின்றன. ஒவ்வொன்றாக பின்னே:
1. மும்பைத் தாக்குதலைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டிருக்கும் கசாப்பின் விசாரணையைத் தொடர்ந்து படிப்பவர்கள், ஆச்சரியப்படுவது உறுதி. முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது, தவறான செய்திகளைச் சொல்வது, மிரட்டலுக்கு அடிபணிவது என்பதையெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இங்கே, நீதிமன்றத்தை எவ்வளவு தூரம் கேலிக்குரிய இடமாக மாற்ற முடியுமோ அவ்வளவையும் கசாப் செய்துகொண்டிருக்கிறார். இப்படியெல்லாம் பேசினால், வீணான தாமதம், அலைக்கழிப்பு, தேவயற்ற எரிச்சல் எல்லாம் தோன்றவே செய்யும். இதையெல்லாம் வெளியே இருந்து பார்க்கும் நம்மைப் போன்ற குடிமகன்களுக்கு, ஒரே ஒரு கேள்விதான் எழும். நமது நீதிமன்றங்கள் இவ்வளவு கேலிசெய்யப்பட வேண்டுமா?
2. ஒரு சில பெயர்களை, கவிதைகளை எடுத்துச் சொல்ல ரொம்பக் கூச்சமாக இருக்கிறது. கால ஓட்டத்தில், இந்தப் பெயர்களையும், கவிதைகளையும் அடித்துத் துவைத்து, அதனை ஒருவித இழிவுநிலைக்குக் கொண்டுவந்துவிட்டார்களோ என்ற அச்சம் இருக்கிறது. மகாத்மா என்றோ, காந்தி என்றோ எங்காவது எழுதினால், எடுத்துக்காட்டு சொன்னால், கொஞ்சம் கூச்சமாக இருக்கிறது. இதற்கு முன்னர் அதைப் பயன்படுத்தியவர்கள் எவ்வளவு தூரம் அதை நல்லவிதமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்தச் சொற்கள், அதைப் படிக்கும், கேட்கும் மக்கள் மனத்தில் நல்ல எண்ணங்களைவிட, கூடவே ஒருவித கேலிக்குரிய தோற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. நான் அதை எவ்வளவுதூரம் சிறப்பான பொருளில் எடுத்துப் பயன்படுத்தினாலும், ஏற்கெனவே அச்சொல் பெற்றிருக்கும் சாயல்களின் அதீத கனம் அதை அழுத்துகிறது. இதேபோல், திருக்குறளையும் எங்கும் பயன்படுத்த முடியாமல் இருக்கிறது.
3. என்னிடம் இரண்டு சட்டைகள் இருக்கின்றன. ஒன்று, என் நண்பர் ஜெ. முத்துகுமார் தந்தது. அவரது அலுவலகத்துக்குச் சென்றபோது, நினைவுப் பரிசாக டி.ஷர்டைத் தந்தார். இன்னொன்று என் மனைவி வாங்கித் தந்தது. இரண்டுக்கும் ஒரு தனி விசேஷம் உண்டு. அந்த டி.ஷர்டை எங்கே நான் போட்டுக்கொண்டு போனாலும், நிச்சயம் மழை பிடித்துக்கொள்ளும். கனமழை. சட்டையை நனைக்காமல் நான் வீடு வந்ததில்லை. நாள் முழுக்க நல்ல வெயில் அடிக்கும். மழைக்கான சுவடே இருக்காது. வீடு திரும்பும்போது, லேசாக மழை ஆரம்பிக்கும். என் தலைமேல் மட்டும்தான் கொட்டுகிறதோ என்று கூட நினைத்துக்கொள்வேன். மே, ஜூன் போன்ற வெயில் காலங்களில் இந்தச் சட்டைகளைப் போட்டுப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறேன்!
4. சென்னைப் புத்தகக் கண்காட்சியை ஒட்டி, ஒவ்வொரு வாரக்கடைசியிலும் சென்னையில் புத்தக வெளியீட்டு விழாக்கள் நடந்துகொண்டு இருக்கின்றன. உயிர்மை, திரிசக்தி பதிப்பக வெளியீட்டு விழாக்களுக்குச் சென்றிருந்தேன். எழுத்தாளர்கள் கொண்டாடப்பட்டார்கள். அபரிமிதமான மரியாதை, கெளரவம். புகழ் மொழிகள் அரங்கம் எங்கும் ஒலித்துக்கொண்டு இருக்கின்றன. எழுத்தாளர்களுக்கு இவையெல்லாம் நிச்சயம் உவப்பளிக்கும். பதிப்பாளர்களும் மகிழ்ச்சியடைந்தால், நான் இன்னும் மகிழ்வேன்.
5. சென்னைப் பல்கலைக்கழக வளாகத்துக்கு, நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் வந்திருந்தார். அவரோடு சில மணி நேரங்கள் செலவிடும் வாய்ப்பைப் பெற்றேன். புகழ் வளையம் தன்னை இறுக்கிவிடக் கூடாது என்பதில் அவர் மிகவும் கவனமாக இருக்கிறார். தன் வேலைகளுக்குக் கிடைத்திருக்கும் புதிய புகழை அவர் ஒரு இடைஞ்சலாகக் கருதுவதாகவே தோன்றியது. ‘நான் தத்துவ முத்துகளை எல்லாம் உதிர்க்க முடியாது’ என்று கவனமாகப் பேசினார். முக்கியமாக, அவருக்கு இப்போது வழங்கப்படும் ‘இந்தியன், தமிழன்’ போன்ற அடையாளங்களை அவர் திணிப்புகளாக கருதுகிறார். அடையாள வளையங்களிலும் தான் சிக்கிக்கொள்ளக் கூடாது என்ற கவனம் அவரிடம் இருக்கிறது.
Its true , when I talk about the Ghandi my friend ask ”you mean mahadmaa not current ones”. The reason all tamils ???? current gandi name .
None can “damage” the “image” of Thirukkural and Mahatma Gandhi!
Thiruvalluvar showed the way of living while Gandhiji showed it practically through(out) his life. It is only the individuals who care and who don’t. But both “Thirukkural” and “Gandhiji” will remain the same forever! Because, certain goods things will never change!
People can only speak well/otherwise about “Thirukkural” / “Gandhiji” but it is always better to “do” it rather than “say” it!
P.S.SRINIVASAN
No one can damage the image of great poet Aiyan Thiruvalluvar.
The Bangalore Tamil Sangam had already done the damge by unnecessarily erecting a statue of Tiruvalluvar near the banks of Ulsoor Lake and kept it hidden under gunny bag because of the protest from some fanatics to its unveling, NOT knowing the greatness of Tiruvalluvar and his Kural. The tendency of the Tamils that reverence is revealed only by erecting statues should go. Instead of keeping Tiruvalluvar tied inside gunny bag for more than a decade, the Bangalore Tamil sangam could have printed thousands and thousands copies of Kannada and English versions of Tirukkural and distributed free to schools and colleges and libraries in Karnataka, a fitting regard for Tiruvalluvar. IT would have been a real tribute and homage to Tiruvalluvar.
MALARMANNAN