கேலிக்கூத்தாகும் சிக்கனம்

நம் நாட்டில் எல்லாவற்றையும் மதிப்பிழக்கச் செய்வதில் நாம் வல்லவர்கள். அதுவும் நம் அரசியல்வாதிகள் செய்யும் செயல்களைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. அவர்கள் இதையெல்லாம் புரிந்துதான் செய்கிறார்களா, புரியாமல் செய்கிறார்களா என்று தெரியவில்லை.
இந்தியா முழுக்க வறட்சி. அடுத்து வரும் மாதங்களில், பருவ மழை முழுமையாகப் பொய்த்துப் போனால், பல மாநிலங்களில் விவசாயமே இருக்காது. மக்கள் பஞ்சத்தால் திண்டாடிப் போவார்கள். அவர்களுக்கு பிரதமரின் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் எப்படியேனும் வேலை கொடுத்துக் காப்பாற்றவேண்டும் என்ற நிலை. உடனே நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, தேசிய அளவில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். செலவுகளில் 10 சதவிகிதம் மிச்சப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மாநில அரசுகளையும் அதைப் பின்பற்ற கேட்டுக்கொண்டார். இப்படி மிச்சமாகும் பணம், நாளைக்கு பசி, பஞ்சம், பட்டினி வரும்போது, நிவாரணத் திட்டங்களை உருவாக்கவும் அதற்குச் செலவழிக்கவும் உதவியாக இருக்கும் என்பது எண்ணம். நல்ல எண்ணம். இங்கே வேறு சில கேள்விகள் பிறக்கின்றன. அதை அப்புறம் கேட்போம். முதலில், இதுவரை நடந்தது எல்லாம் சரி.
இங்கிருந்துதான் மதிப்பிழக்கச் செய்யும் வழி ஆரம்பிக்கிறது. சோனியா பெங்களூரூவுக்கு எகானமி வகுப்பில் விமானத்தில் பயணம் செய்தாராம். காரணம், சிக்கன நடவடிக்கை. தில்லியில் இருந்து லூதியானாவுக்கு ராகுல் காந்தி ஷதாப்தி ரயிலில் பயணம் செய்தாராம். காரணம், சிக்கனம். காங்கிரஸ் அமைச்சர்கள் எல்லாரும் வழிகாட்டுகிறார்களாம், எப்படிச் சிக்கனமாக இருப்பது என்பதற்கு. கேலிக்கூத்தாக இல்லை?
மத்திய அரசு உண்மையிலேயே சிக்கனமாக நடந்துகொண்டு, செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைத்திருந்தால், அது பின்பற்ற வேண்டிய வழி இது அல்ல. இது மற்றவர்களை ஏமாற்றும் கண் துடைப்பு வேலை.
உலகெங்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பொருளாதார தேக்கம். ஒவ்வொரு நிறுவனமும் தம்மளவில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டன. ஒவ்வொரு நிறுவனமும், தத்தமது துறைத் தலைவர்களை அழைத்து, தேவையற்ற உற்பத்தியற்ற செலவுகளை முதலில் நிறுத்து என்றது. தேவையற்ற பயணங்களை நிறுத்து என்றது. ஒரு துறைக்கு ஆகும் செலவினங்களில் குறைந்தபட்சம் 50 சதவிகிதம் குறைக்கவேண்டும் என்று, பட்ஜெட்டையே புரட்டிப் போட்டது. விளைவு, இவ்வளவு மோசமான பொருளாதாரச் சரிவிலும் பல நிறுவனங்கள் நாணல்போல் வளைந்துகொடுத்து நிமிரத் தொடங்கிவிட்டன.
இதுதானே வழி. இதை விட்டுவிட்டு, ஓரிருவர் எகானமி வகுப்பில் பயணம் செய்வதால் என்ன லாபம்?
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். மத்தியில் இருக்கும் 30 கேபினட் அமைச்சர்களும், குட்டி முதலமைச்சர்கள். ஒவ்வொரு துறையும் ஒரு மாநில அரசுக்கான வரவு செலவு அளவுக்கு வருவாயும் செலவுகளும் கொண்டது. ஒவ்வொரு துறையும் ஒரு குட்டி யானை. வருவாயைவிட செலவினங்கள் அதிகமுள்ள துறைகளே அதிகம். எல்லாமே மக்கள் நலத் திட்டங்கள்தான். இதில் எங்கிருந்து சிக்கனம் சாத்தியம்?
சரி அப்படியே சிக்கனத்தை இந்தத் துறைகளில் அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால், அது முழுக்க முழுக்க நிர்வாக நடைமுறை சார்ந்த விஷயம். அலுவலக ரீதியான செலவுகளை உயர் அதிகாரிகள் கட்டுப்படுத்த முனைந்தால், மாற்றம் தன்னால் வரும். அமைச்சர்கள் தேவையற்ற சலுகைகளை நிறுத்தினாலே மாற்றம் தன்னால் வரும். இதெல்லாம் தனிமனிதர்களின் மனம் சம்பந்தப்பட்டது. என்ன ஒரு பிரச்னை என்றால், இதுபோன்ற சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, தம் சலுகைகள் பறிக்கப்படுவதாக ஒரு கூட்டம் எப்போதும் கொடி பிடிக்கும். தம்முடைய உரிமைகளே பறிக்கப்படுவதாக இவர்கள் கொதித்துப் போவார்கள்.
இவர்களையும் உள்ளடக்கி சிக்கனத்தைக் கொண்டு வருவது அவசியம். செலவுகளை எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்கிறீர்களோ, அதில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் அனைத்து ஊழியர்களுக்கும் போனஸ்ஸாக வழங்கப்படும் என்று அறிவித்து நடைமுறைப்படுத்திப் பார்க்கலாம். சிக்கனத்தை சலுகைப் பறிப்பாக அல்லாமல், கூடுதல் வருவாய்க்கான வாய்ப்பாக மாற்றித் தரவேண்டும்.
அதை விட்டுவிட்டு, எகானமி வகுப்பில் பயணம் செய்து, ரயிலில் பயணம் செய்து என்ன செய்தியை இந்த அரசியல்வாதிகள் நமக்கு வழங்குகிறார்கள்? ஒன்றுமே இல்லை. அவர்களுடைய பயணம் மக்களை ஊக்கப்படுத்துவதற்குப் பதில், அவர்களுடைய போலி முகங்களைத்தான் தோல் உரித்துக் காட்டுகின்றன. இது நாள் வரை நீங்கள் எப்படி பயணம் செய்தீர்கள், வருங்காலத்தில் எப்படியெல்லாம் பயணம் செய்வீர்கள் என்றெல்லாம் மக்களுக்குத் தெரியாமலா இருக்கும்?
ஒரு வகையில், சிக்கனம் என்பதை நடைமுறைப்படுத்துவதை விட, அதை ஒரு விளம்பரமாக மாற்றிக்கொள்ளும் அரசியல்வாதிகளின் புகழ்போதைதான் இந்தப் பயணங்களில் தெரிகிறது. உண்மையில், அவர்கள் சொல்ல வேண்டிய செய்தியின் நேர் எதிர் செய்தியைத்தான், அவர்களுடைய செயல்கள் நமக்குச் சொல்லுகின்றன.
மக்கள் விவரமானவர்கள். மக்கள் நீங்கள் செய்வதைப் படிப்பதில்லை, நீங்கள் செய்வதின் பின்னுள்ள அரசியலைத்தான் படிக்கிறார்கள். நீங்கள் பேசும் பேச்சுக்களைக் கேட்பதில்லை, அதற்குப் பின்னே ஒலிக்கும் உள்நோக்கங்களைத்தான் கேட்கிறார்கள்.
இதெல்லாம் அரசியல்வாதிகளுக்குத் தெரியாதா என்ன? தெரியும். தெரிந்தும் இந்தக் கேலிக்கூத்துகளுக்கு இடம் கொடுக்கிறார்கள். எல்லாம் ‘வளர்ச்சியின் வலி’ என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.
நம் நாட்டில் எல்லாவற்றையும் மதிப்பிழக்கச் செய்வதில் நாம் வல்லவர்கள். அதுவும் நம் அரசியல்வாதிகள் செய்யும் செயல்களைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. அவர்கள் இதையெல்லாம் புரிந்துதான் செய்கிறார்களா, புரியாமல் செய்கிறார்களா என்று தெரியவில்லை.
இந்தியா முழுக்க வறட்சி. அடுத்து வரும் மாதங்களில், பருவ மழை முழுமையாகப் பொய்த்துப் போனால், பல மாநிலங்களில் விவசாயமே இருக்காது. மக்கள் பஞ்சத்தால் திண்டாடிப் போவார்கள். அவர்களுக்கு பிரதமரின் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் எப்படியேனும் வேலை கொடுத்துக் காப்பாற்றவேண்டும் என்ற நிலை. உடனே நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, தேசிய அளவில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். செலவுகளில் 10 சதவிகிதம் மிச்சப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மாநில அரசுகளையும் அதைப் பின்பற்ற கேட்டுக்கொண்டார். இப்படி மிச்சமாகும் பணம், நாளைக்கு பசி, பஞ்சம், பட்டினி வரும்போது, நிவாரணத் திட்டங்களை உருவாக்கவும் அதற்குச் செலவழிக்கவும் உதவியாக இருக்கும் என்பது எண்ணம். நல்ல எண்ணம். இங்கே வேறு சில கேள்விகள் பிறக்கின்றன. அதை அப்புறம் கேட்போம். முதலில், இதுவரை நடந்தது எல்லாம் சரி.
இங்கிருந்துதான் மதிப்பிழக்கச் செய்யும் வழி ஆரம்பிக்கிறது. சோனியா பெங்களூரூவுக்கு எகானமி வகுப்பில் விமானத்தில் பயணம் செய்தாராம். காரணம், சிக்கன நடவடிக்கை. தில்லியில் இருந்து லூதியானாவுக்கு ராகுல் காந்தி ஷதாப்தி ரயிலில் பயணம் செய்தாராம். காரணம், சிக்கனம். காங்கிரஸ் அமைச்சர்கள் எல்லாரும் வழிகாட்டுகிறார்களாம், எப்படிச் சிக்கனமாக இருப்பது என்பதற்கு. கேலிக்கூத்தாக இல்லை?
மத்திய அரசு உண்மையிலேயே சிக்கனமாக நடந்துகொண்டு, செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைத்திருந்தால், அது பின்பற்ற வேண்டிய வழி இது அல்ல. இது மற்றவர்களை ஏமாற்றும் கண் துடைப்பு வேலை.
உலகெங்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பொருளாதார தேக்கம். ஒவ்வொரு நிறுவனமும் தம்மளவில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டன. ஒவ்வொரு நிறுவனமும், தத்தமது துறைத் தலைவர்களை அழைத்து, தேவையற்ற உற்பத்தியற்ற செலவுகளை முதலில் நிறுத்து என்றது. தேவையற்ற பயணங்களை நிறுத்து என்றது. ஒரு துறைக்கு ஆகும் செலவினங்களில் குறைந்தபட்சம் 50 சதவிகிதம் குறைக்கவேண்டும் என்று, பட்ஜெட்டையே புரட்டிப் போட்டது. விளைவு, இவ்வளவு மோசமான பொருளாதாரச் சரிவிலும் பல நிறுவனங்கள் நாணல்போல் வளைந்துகொடுத்து நிமிரத் தொடங்கிவிட்டன.
இதுதானே வழி. இதை விட்டுவிட்டு, ஓரிருவர் எகானமி வகுப்பில் பயணம் செய்வதால் என்ன லாபம்?
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். மத்தியில் இருக்கும் 30 கேபினட் அமைச்சர்களும், குட்டி முதலமைச்சர்கள். ஒவ்வொரு துறையும் ஒரு மாநில அரசுக்கான வரவு செலவு அளவுக்கு வருவாயும் செலவுகளும் கொண்டது. ஒவ்வொரு துறையும் ஒரு குட்டி யானை. வருவாயைவிட செலவினங்கள் அதிகமுள்ள துறைகளே அதிகம். எல்லாமே மக்கள் நலத் திட்டங்கள்தான். இதில் எங்கிருந்து சிக்கனம் சாத்தியம்?
சரி அப்படியே சிக்கனத்தை இந்தத் துறைகளில் அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால், அது முழுக்க முழுக்க நிர்வாக நடைமுறை சார்ந்த விஷயம். அலுவலக ரீதியான செலவுகளை உயர் அதிகாரிகள் கட்டுப்படுத்த முனைந்தால், மாற்றம் தன்னால் வரும். அமைச்சர்கள் தேவையற்ற சலுகைகளை நிறுத்தினாலே மாற்றம் தன்னால் வரும். இதெல்லாம் தனிமனிதர்களின் மனம் சம்பந்தப்பட்டது. என்ன ஒரு பிரச்னை என்றால், இதுபோன்ற சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, தம் சலுகைகள் பறிக்கப்படுவதாக ஒரு கூட்டம் எப்போதும் கொடி பிடிக்கும். தம்முடைய உரிமைகளே பறிக்கப்படுவதாக இவர்கள் கொதித்துப் போவார்கள்.
இவர்களையும் உள்ளடக்கி சிக்கனத்தைக் கொண்டு வருவது அவசியம். செலவுகளை எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்கிறீர்களோ, அதில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் அனைத்து ஊழியர்களுக்கும் போனஸ்ஸாக வழங்கப்படும் என்று அறிவித்து நடைமுறைப்படுத்திப் பார்க்கலாம். சிக்கனத்தை சலுகைப் பறிப்பாக அல்லாமல், கூடுதல் வருவாய்க்கான வாய்ப்பாக மாற்றித் தரவேண்டும்.
அதை விட்டுவிட்டு, எகானமி வகுப்பில் பயணம் செய்து, ரயிலில் பயணம் செய்து என்ன செய்தியை இந்த அரசியல்வாதிகள் நமக்கு வழங்குகிறார்கள்? ஒன்றுமே இல்லை. அவர்களுடைய பயணம் மக்களை ஊக்கப்படுத்துவதற்குப் பதில், அவர்களுடைய போலி முகங்களைத்தான் தோல் உரித்துக் காட்டுகின்றன. இது நாள் வரை நீங்கள் எப்படி பயணம் செய்தீர்கள், வருங்காலத்தில் எப்படியெல்லாம் பயணம் செய்வீர்கள் என்றெல்லாம் மக்களுக்குத் தெரியாமலா இருக்கும்?
ஒரு வகையில், சிக்கனம் என்பதை நடைமுறைப்படுத்துவதை விட, அதை ஒரு விளம்பரமாக மாற்றிக்கொள்ளும் அரசியல்வாதிகளின் புகழ்போதைதான் இந்தப் பயணங்களில் தெரிகிறது. உண்மையில், அவர்கள் சொல்ல வேண்டிய செய்தியின் நேர் எதிர் செய்தியைத்தான், அவர்களுடைய செயல்கள் நமக்குச் சொல்லுகின்றன.
மக்கள் விவரமானவர்கள். மக்கள் நீங்கள் செய்வதைப் படிப்பதில்லை, நீங்கள் செய்வதின் பின்னுள்ள அரசியலைத்தான் படிக்கிறார்கள். நீங்கள் பேசும் பேச்சுக்களைக் கேட்பதில்லை, அதற்குப் பின்னே ஒலிக்கும் உள்நோக்கங்களைத்தான் கேட்கிறார்கள்.
இதெல்லாம் அரசியல்வாதிகளுக்குத் தெரியாதா என்ன? தெரியும். தெரிந்தும் இந்தக் கேலிக்கூத்துகளுக்கு இடம் கொடுக்கிறார்கள். எல்லாம் ‘வளர்ச்சியின் வலி’ என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.
  1. நெல்லை செல்வம் says:

    நீங்கள் கூறுவது நிதர்சானமான உண்மை. இதற்கு அவர்களின் பதில் – “அரசியலில் இதெல்லாம் சாதாரணாமப்பா.”

  2. என்ன செய்வது… ??? இதை ஒரு பெரிய விடயமாக எல்லா தொலைக்காட்சி செய்தி நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு சொல்கின்றன… மக்களை முட்டாளாக்குகிறான் என்று சொல்ல ஒருவருக்கும் துணிவில்லை… துணிவிருப்பவனுக்கு இருக்கும் ஊடகத்தின் துணை குறைவு….

  1. There are no trackbacks for this post yet.

Leave a Reply