சமச்சீர் கல்வி: இரண்டு பைசா கருத்துகள்!

தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் அறிமுகமாகவிருக்கும் சமச்சீர் கல்வித் திட்டத்தை நான் ஆதரிக்கிறேன். எனக்குப் புரிந்த வரையில், இந்தத் திட்டம் உயரிய நோக்கோடு உருவாக்கப்பட்டிருக்கிறது. இரண்டு குழந்தைகளைப் பெற்றவனாக, இதன் சாதகங்கள் நன்றாகத் தெரிகின்றன. கல்வியாளர்களும் இன்னபிற அறிஞர்களும் இணைந்து இதற்கு ஒரு வடிவம் கொடுத்திருக்கிறார்கள். என் இரண்டு பைசா கருத்துகளையும் இங்கே எழுதி வைத்துவிடுகிறேன்!
1. ஒரு வகையில் இது சக்கரத்தை, மீண்டும் ஆரம்ப இடத்துக்கே கொண்டு போய் வைக்கும் முயற்சி. நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட, கல்வி என்றால் பெரும்பாலோர் அரசுப் பள்ளிகளைத்தான் நாடியிருப்பார்கள். நாம் போற்றும் பல்வேறு துறை அறிஞர்களும் இதுபோன்ற அரசு பள்ளிகளின் தயாரிப்புகளே. அது அப்படியே தொடரவில்லை. தொடர்ந்திருக்கலாம். ஆனால், தனிமனித தேவைகள், ஆர்வங்கள், உயர்வு பேணும் நோக்கு ஆகியவை வேறு வகையான கல்வி முறைகளுக்கும் பாடத்திட்டங்களுக்கும் அதைச் சொல்லித்தரும் பள்ளிகளுக்கும் இட்டுச் சென்றிருக்கின்றன. இதை மொத்தமாக
‘நவீன காலத் தேவைகள்’ என்று சொல்லலாம். இதில் ஆங்கில மோகமும் அமெரிக்க ஆர்வமும் மேட்டிமைத்தனமும் உண்டு என்பதையும் மனத்தில் வாங்கிக்கொள்ளுவோம்.
நவீன காலத் தேவைகளை நிறைவு செய்ய அரசுப் பள்ளிகளால் முடியவில்லை. ஒரு இடைவெளி ஏற்படுகிறது. அந்த இடைவெளியில்தான் தனியார் பள்ளிகளின் உதயம் ஆரம்பிக்கிறது. விதவிதமான பாடத்திட்டங்களின் தேவையும் ஆரம்பிக்கிறது. இதே சமயத்தில்தான் இன்னொரு விஷயமும் நடக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாக இந்தியா மொத்தமாகவே, மெல்ல மெல்ல தனியார் நிறுவனங்களை ஆதரிக்கும், அவர்களின் செயல்களைப் பேணி வளர்க்கும் மனநிலைக்கு வந்திருக்கிறோம். அரசும் தனியார் துறையின் பங்களிப்பை ஊக்கப்படுத்தி வந்திருக்கிறது. Free Enterprise என்பதை ஏற்றுக்கொண்டு இருக்கிறோம்.
இந்த நிலையில், மீண்டும் நானே எல்லா புத்தகங்களையும் வெளியிடுகிறேன், ஒரேவிதமான பாடத்திட்டத்தையும் கல்வித்தரத்தையும் கொண்டு வருகிறேன் என்று ஒரு மாநில அரசு செய்ய முன்வருவது, நமது நாட்டின் வளர்ச்சிக் கருத்துக்கே / நோக்கத்துக்கே உவப்பானது அல்ல. பல்வேறு கல்வி போர்டுகளும் அதைப் பின்பற்றும் பள்ளிகளும் பெரிய கல்வி வியாபாரிகள் ஆகிவிட்டார்கள், பணம் பறிக்கவே அவர்கள் முனைகிறார்கள், அவர்கள் மாணவர்களுக்கு எந்த ஒரு வேல்யூவும் கொண்டு சேர்க்கவில்லை என்று ஒரு அரசுக்குத் தோன்றினால், அது அந்த போர்டுகளையும் பள்ளிகளையும் நெறிமுறைப்படுத்தி, தரத்தை உயர்த்த வேண்டுமே அன்றி, நானே எல்லாவற்றையும் செய்கிறேன் என்று எடுத்துக்கொள்வது எவ்வளவு தூரம் சரி? அப்படி வகுக்கப்படும் நெறிமுறைகளையும் மீறி, கல்வி வியாபாரிகள் திருந்தவில்லை என்றால், கல்வியின் தரம் உயரவில்லை என்றால், அவர்களுடைய பள்ளிகளின் அங்கீகாரங்களை ரத்து செய்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும்.
மாறாக, ஒரேவிதமான பாடத்திட்டம், ஒரே விதமான நூல்கள் தயாரிக்கப்பட்டு, மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றே இப்போது எனக்குத் தெரிய வருகிறது. இது ஒருவகையில் சமப்படுத்துதல் (Moderation) . ஒரு அரசு இப்படிப்பட்ட சமப்படுத்துதலில் இறங்கவேண்டுமா? இதில் உள்ள பாதகங்களைப் பின்னர் பார்ப்போம். அரசே இப்படி நூல்களை தயாரித்துக் கொடுப்பதற்குப் பதில், இன்னொரு வகையில் இதைச் செய்யலாம். தமிழக அரசு, ஏற்கெனவே மெட்ரிகுலேஷனில் செய்தது போல், ஒவ்வொரு வகுப்பிலும் இன்ன இன்ன பாடங்களைச் சொல்லித் தர வேண்டும், அந்தக் கல்வியாண்டு முடியும் போது, ஒரு மாணவனுக்கு இதெல்லாம் தெரிந்து இருக்கவேண்டும் ஒரு விரிவான ப்ளூப்ரிண்ட்டை வெளியிட்டு இருக்கவேண்டும். இந்த ப்ளூப்ரிண்ட்டை ஒட்டி எந்தப் பதிப்பகமும் நூல்களை வெளியிடலாம், அதில் சிறந்தவற்றை/ தமக்குப் பொருத்தமானவற்றை, ஒவ்வொரு பள்ளியும் தேர்வு செய்துகொள்ளலாம் என்று விட்டுவிட்டிருக்க வேண்டும்.
அறிவியலில் வெப்பம் என்று ஒரு பாடம் இருக்கிறது. அதையே பத்து விதமாக எழுத முடியும். நிறைய உதாரணங்களோடு எழுத முடியும். நிறைய செய்முறைகளோடு எழுத முடியும். விரிவாக எழுத முடியும். சுருங்கச் சொல்ல முடியும். எப்படி வேண்டுமானாலும் அதே வெப்பத்தை எழுதலாம். எதைப் பயன்படுத்த வேண்டும் என்பதை, அதைத் தேர்வு செய்யும் பள்ளிகளிடம் விட்டுவிடவேண்டும். தங்கள் மாணவர்கள் வரும் பின்னணி, அவர்கள் காக்க விரும்பும் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் சரியான நூலை அவர்கள் தேர்வு செய்துகொள்ளுவார்கள். மாநிலம் முழுவதும் ஒரே நூல்தான் பயன்படுத்தப்படும் என்றால், அது எப்படி இருக்கும்? எல்லா தர மாணவர்களின் தேவைகளையும் அந்தப் புத்தகம் நிறைவு செய்ய முடியுமா? தெரியவில்லை.
2 எப்போதும் ஒரு பிரச்னைக்கு ஒரு தீர்வு வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட தீர்வுகளும் இருக்கலாம். இங்கே சமச்சீர் கல்வி என்பதை ஒரு தீர்வாக பார்ப்போமானால், அது எந்தப் பிரச்னைக்கான தீர்வு?
அ) தமிழகத்தில் இருக்கும் பல்வேறு கல்வி போர்டுகளை ஒன்றாக்குவதற்கான தீர்வா?
ஆ) தமிழக அரசுப் பள்ளிக் கல்வியில் இருக்கும் பாடங்களின் தரத்தை உயர்த்துவதற்கான தீர்வா?
இ) அல்லது ‘நவீன காலத் தேவைகள்’ என்று நான் மேலே தெரிவித்த ஒன்றுக்கான தீர்வா?
கல்வி போர்டுகளை ஒன்றாக்குவதற்கான தீர்வு என்றால், அது முழுவதும் நிர்வாக சமாச்சாரம். அரசு, போர்டுகளை ஒன்றாக்கிவிடலாம். ஆனால், கல்வித் தரம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் அப்படியே தான் இருக்கப் போகின்றன. மேலும் மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் பள்ளிகள் என்னாகும்? அவர்கள் சி.பி.எஸ்.சி. கல்வி முறைக்கு மாற ஆரம்பித்துவிடுவார்கள். அல்லது ஐ.சி.எஸ்.சி.க்கு மாறிவிடுவார்கள்.
அரசுப் பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படும் பாடங்களின் தரத்தை, கல்வித் தரத்தை உயர்த்துவதுதான் திட்டம் என்றால், அதை இப்போதே செய்யலாமே. அதற்கு எதற்கு மற்ற பாடத்திட்டங்களையும் இதனோடு சேர்த்து சமப்படுத்த வேண்டும்? சமப்படுத்துவதில்தான் உண்மையான பிரச்னை இருக்கிறது. ஒவ்வொரு போர்டின் பாடத்திட்டமும் சமூகத்தில் இருக்கும் ஒருசில அடுக்குகளைச் சேர்ந்தவர்களின் தேவைகளை நிறைவு செய்ய முனைகிறது. ஓரளவுக்குப் படித்த பெற்றோர்களை உடைய குழந்தைகள் ஆங்கிலோ-இந்திய அல்லது மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு வருகிறார்கள். இங்கே படிப்பைச் சொல்லிக்கொடுக்க பெற்றோரின் பங்களிப்பும் கொஞ்சம் உண்டு. சிறு நகரங்களிலோ கிராமங்களிலோ படிக்கும் ஒரு மாணவன் முழுமையாக அவனது ஆசிரியரையே சார்ந்திருக்கிறான். பெற்றோர்கள் படித்தவர்களாகவோ, சொல்லிக்கொடுக்கத் தெரிந்தவர்களாகவோ பெரும்பாலும் இருப்பதில்லை.
இப்போது இவர்கள் இருவருக்கும் ஒரே பாடப்புத்தகம் பயன்படுத்தப்படும் என்றால், கற்றலிலும் புரிந்துகொள்ளுதலிலும் ஆரோக்கியமற்ற இடைவெளி ஏற்படும். பாடப்புத்தகங்களை எழுதும்போது, தயாரிக்கும்போது, ஸ்பெக்ட்ரத்தின் இரண்டு முனைகளில் இருப்போருக்குத் தக்க எழுதுவது சாத்தியமா? தெரியவில்லை.
மூன்றாவது கேள்விக்கான தீர்வாகவும் இதைப் பார்க்க முடியவில்லை. புத்தகங்கள் மாறுவதனால், ஆங்கில மோகமும் அமெரிக்க ஆர்வமும் மேட்டிமைத்தனமும் எந்த வகையில் மாறும்? மேலும் இதையெல்லாம் ஒரு பிரச்னையாக இனியும் பார்க்க வேண்டுமா? நாம் இயல்பாகவே ஏற்றத்தாழ்வுகள் மிகுந்த சமூக அமைப்பைக் கொண்டவர்கள். ஆங்கில மோகம், நாம் உள்வாங்கிச் செறித்துக்கொண்டுவிட்ட அம்சம். அமெரிக்கா எல்லோருக்குமான கனவு தேசம். இதுதான் ஏழை எளியவர்கள், லோயர் மிடில், மிடில் கிளாஸின் கனவுகள், ஏக்கங்கள். அவர்களைப் பொறுத்தவரை அது ஒரு பிரச்னையே இல்லை.
இந்த நிலையில் சமச்சீர் கல்வியும் புதிய புத்தகங்களும் எந்த வகையில் ‘நவீன காலத் தேவைகளு’க்கு முகம் கொடுக்கப் போகின்றன? தெரியவில்லை. ‘ஜல்லிக்கட்டு’ போல் நம்மோடு இயல்பாகி, கலந்துவிட்ட ‘நவீன கால தேவை’யை, பிரச்னை என்று நினைத்துக்கொண்டு தீர்வு காண முயற்சிக்கிறோமோ? அதுவும் தெரியவில்லை.
அரசுடைய கவனம் கல்வியின் தரத்தை உயர்த்துவதில்தான் இருக்கவேண்டுமே ஒழிய, சமப்படுத்துவதில் இருப்பதில் அர்த்தமில்லை.
தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் அறிமுகமாகவிருக்கும் சமச்சீர் கல்வித் திட்டத்தை நான் ஆதரிக்கிறேன். எனக்குப் புரிந்த வரையில், இந்தத் திட்டம் உயரிய நோக்கோடு உருவாக்கப்பட்டிருக்கிறது. இரண்டு குழந்தைகளைப் பெற்றவனாக, இதன் சாதகங்கள் நன்றாகத் தெரிகின்றன. கல்வியாளர்களும் இன்னபிற அறிஞர்களும் இணைந்து இதற்கு ஒரு வடிவம் கொடுத்திருக்கிறார்கள். என் இரண்டு பைசா கருத்துகளையும் இங்கே எழுதி வைத்துவிடுகிறேன்!
1. ஒரு வகையில் இது சக்கரத்தை, மீண்டும் ஆரம்ப இடத்துக்கே கொண்டு போய் வைக்கும் முயற்சி. நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட, கல்வி என்றால் பெரும்பாலோர் அரசுப் பள்ளிகளைத்தான் நாடியிருப்பார்கள். நாம் போற்றும் பல்வேறு துறை அறிஞர்களும் இதுபோன்ற அரசு பள்ளிகளின் தயாரிப்புகளே. அது அப்படியே தொடரவில்லை. தொடர்ந்திருக்கலாம். ஆனால், தனிமனித தேவைகள், ஆர்வங்கள், உயர்வு பேணும் நோக்கு ஆகியவை வேறு வகையான கல்வி முறைகளுக்கும் பாடத்திட்டங்களுக்கும் அதைச் சொல்லித்தரும் பள்ளிகளுக்கும் இட்டுச் சென்றிருக்கின்றன. இதை மொத்தமாக
‘நவீன காலத் தேவைகள்’ என்று சொல்லலாம். இதில் ஆங்கில மோகமும் அமெரிக்க ஆர்வமும் மேட்டிமைத்தனமும் உண்டு என்பதையும் மனத்தில் வாங்கிக்கொள்ளுவோம்.
நவீன காலத் தேவைகளை நிறைவு செய்ய அரசுப் பள்ளிகளால் முடியவில்லை. ஒரு இடைவெளி ஏற்படுகிறது. அந்த இடைவெளியில்தான் தனியார் பள்ளிகளின் உதயம் ஆரம்பிக்கிறது. விதவிதமான பாடத்திட்டங்களின் தேவையும் ஆரம்பிக்கிறது. இதே சமயத்தில்தான் இன்னொரு விஷயமும் நடக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாக இந்தியா மொத்தமாகவே, மெல்ல மெல்ல தனியார் நிறுவனங்களை ஆதரிக்கும், அவர்களின் செயல்களைப் பேணி வளர்க்கும் மனநிலைக்கு வந்திருக்கிறோம். அரசும் தனியார் துறையின் பங்களிப்பை ஊக்கப்படுத்தி வந்திருக்கிறது. Free Enterprise என்பதை ஏற்றுக்கொண்டு இருக்கிறோம்.
இந்த நிலையில், மீண்டும் நானே எல்லா புத்தகங்களையும் வெளியிடுகிறேன், ஒரேவிதமான பாடத்திட்டத்தையும் கல்வித்தரத்தையும் கொண்டு வருகிறேன் என்று ஒரு மாநில அரசு செய்ய முன்வருவது, நமது நாட்டின் வளர்ச்சிக் கருத்துக்கே / நோக்கத்துக்கே உவப்பானது அல்ல. பல்வேறு கல்வி போர்டுகளும் அதைப் பின்பற்றும் பள்ளிகளும் பெரிய கல்வி வியாபாரிகள் ஆகிவிட்டார்கள், பணம் பறிக்கவே அவர்கள் முனைகிறார்கள், அவர்கள் மாணவர்களுக்கு எந்த ஒரு வேல்யூவும் கொண்டு சேர்க்கவில்லை என்று ஒரு அரசுக்குத் தோன்றினால், அது அந்த போர்டுகளையும் பள்ளிகளையும் நெறிமுறைப்படுத்தி, தரத்தை உயர்த்த வேண்டுமே அன்றி, நானே எல்லாவற்றையும் செய்கிறேன் என்று எடுத்துக்கொள்வது எவ்வளவு தூரம் சரி? அப்படி வகுக்கப்படும் நெறிமுறைகளையும் மீறி, கல்வி வியாபாரிகள் திருந்தவில்லை என்றால், கல்வியின் தரம் உயரவில்லை என்றால், அவர்களுடைய பள்ளிகளின் அங்கீகாரங்களை ரத்து செய்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும்.
மாறாக, ஒரேவிதமான பாடத்திட்டம், ஒரே விதமான நூல்கள் தயாரிக்கப்பட்டு, மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றே இப்போது எனக்குத் தெரிய வருகிறது. இது ஒருவகையில் சமப்படுத்துதல் (Moderation) . ஒரு அரசு இப்படிப்பட்ட சமப்படுத்துதலில் இறங்கவேண்டுமா? இதில் உள்ள பாதகங்களைப் பின்னர் பார்ப்போம். அரசே இப்படி நூல்களை தயாரித்துக் கொடுப்பதற்குப் பதில், இன்னொரு வகையில் இதைச் செய்யலாம். தமிழக அரசு, ஏற்கெனவே மெட்ரிகுலேஷனில் செய்தது போல், ஒவ்வொரு வகுப்பிலும் இன்ன இன்ன பாடங்களைச் சொல்லித் தர வேண்டும், அந்தக் கல்வியாண்டு முடியும் போது, ஒரு மாணவனுக்கு இதெல்லாம் தெரிந்து இருக்கவேண்டும் ஒரு விரிவான ப்ளூப்ரிண்ட்டை வெளியிட்டு இருக்கவேண்டும். இந்த ப்ளூப்ரிண்ட்டை ஒட்டி எந்தப் பதிப்பகமும் நூல்களை வெளியிடலாம், அதில் சிறந்தவற்றை/ தமக்குப் பொருத்தமானவற்றை, ஒவ்வொரு பள்ளியும் தேர்வு செய்துகொள்ளலாம் என்று விட்டுவிட்டிருக்க வேண்டும்.
அறிவியலில் வெப்பம் என்று ஒரு பாடம் இருக்கிறது. அதையே பத்து விதமாக எழுத முடியும். நிறைய உதாரணங்களோடு எழுத முடியும். நிறைய செய்முறைகளோடு எழுத முடியும். விரிவாக எழுத முடியும். சுருங்கச் சொல்ல முடியும். எப்படி வேண்டுமானாலும் அதே வெப்பத்தை எழுதலாம். எதைப் பயன்படுத்த வேண்டும் என்பதை, அதைத் தேர்வு செய்யும் பள்ளிகளிடம் விட்டுவிடவேண்டும். தங்கள் மாணவர்கள் வரும் பின்னணி, அவர்கள் காக்க விரும்பும் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் சரியான நூலை அவர்கள் தேர்வு செய்துகொள்ளுவார்கள். மாநிலம் முழுவதும் ஒரே நூல்தான் பயன்படுத்தப்படும் என்றால், அது எப்படி இருக்கும்? எல்லா தர மாணவர்களின் தேவைகளையும் அந்தப் புத்தகம் நிறைவு செய்ய முடியுமா? தெரியவில்லை.
2 எப்போதும் ஒரு பிரச்னைக்கு ஒரு தீர்வு வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட தீர்வுகளும் இருக்கலாம். இங்கே சமச்சீர் கல்வி என்பதை ஒரு தீர்வாக பார்ப்போமானால், அது எந்தப் பிரச்னைக்கான தீர்வு?
அ) தமிழகத்தில் இருக்கும் பல்வேறு கல்வி போர்டுகளை ஒன்றாக்குவதற்கான தீர்வா?
ஆ) தமிழக அரசுப் பள்ளிக் கல்வியில் இருக்கும் பாடங்களின் தரத்தை உயர்த்துவதற்கான தீர்வா?
இ) அல்லது ‘நவீன காலத் தேவைகள்’ என்று நான் மேலே தெரிவித்த ஒன்றுக்கான தீர்வா?
கல்வி போர்டுகளை ஒன்றாக்குவதற்கான தீர்வு என்றால், அது முழுவதும் நிர்வாக சமாச்சாரம். அரசு, போர்டுகளை ஒன்றாக்கிவிடலாம். ஆனால், கல்வித் தரம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் அப்படியே தான் இருக்கப் போகின்றன. மேலும் மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் பள்ளிகள் என்னாகும்? அவர்கள் சி.பி.எஸ்.சி. கல்வி முறைக்கு மாற ஆரம்பித்துவிடுவார்கள். அல்லது ஐ.சி.எஸ்.சி.க்கு மாறிவிடுவார்கள்.
அரசுப் பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படும் பாடங்களின் தரத்தை, கல்வித் தரத்தை உயர்த்துவதுதான் திட்டம் என்றால், அதை இப்போதே செய்யலாமே. அதற்கு எதற்கு மற்ற பாடத்திட்டங்களையும் இதனோடு சேர்த்து சமப்படுத்த வேண்டும்? சமப்படுத்துவதில்தான் உண்மையான பிரச்னை இருக்கிறது. ஒவ்வொரு போர்டின் பாடத்திட்டமும் சமூகத்தில் இருக்கும் ஒருசில அடுக்குகளைச் சேர்ந்தவர்களின் தேவைகளை நிறைவு செய்ய முனைகிறது. ஓரளவுக்குப் படித்த பெற்றோர்களை உடைய குழந்தைகள் ஆங்கிலோ-இந்திய அல்லது மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு வருகிறார்கள். இங்கே படிப்பைச் சொல்லிக்கொடுக்க பெற்றோரின் பங்களிப்பும் கொஞ்சம் உண்டு. சிறு நகரங்களிலோ கிராமங்களிலோ படிக்கும் ஒரு மாணவன் முழுமையாக அவனது ஆசிரியரையே சார்ந்திருக்கிறான். பெற்றோர்கள் படித்தவர்களாகவோ, சொல்லிக்கொடுக்கத் தெரிந்தவர்களாகவோ பெரும்பாலும் இருப்பதில்லை.
இப்போது இவர்கள் இருவருக்கும் ஒரே பாடப்புத்தகம் பயன்படுத்தப்படும் என்றால், கற்றலிலும் புரிந்துகொள்ளுதலிலும் ஆரோக்கியமற்ற இடைவெளி ஏற்படும். பாடப்புத்தகங்களை எழுதும்போது, தயாரிக்கும்போது, ஸ்பெக்ட்ரத்தின் இரண்டு முனைகளில் இருப்போருக்குத் தக்க எழுதுவது சாத்தியமா? தெரியவில்லை.
மூன்றாவது கேள்விக்கான தீர்வாகவும் இதைப் பார்க்க முடியவில்லை. புத்தகங்கள் மாறுவதனால், ஆங்கில மோகமும் அமெரிக்க ஆர்வமும் மேட்டிமைத்தனமும் எந்த வகையில் மாறும்? மேலும் இதையெல்லாம் ஒரு பிரச்னையாக இனியும் பார்க்க வேண்டுமா? நாம் இயல்பாகவே ஏற்றத்தாழ்வுகள் மிகுந்த சமூக அமைப்பைக் கொண்டவர்கள். ஆங்கில மோகம், நாம் உள்வாங்கிச் செறித்துக்கொண்டுவிட்ட அம்சம். அமெரிக்கா எல்லோருக்குமான கனவு தேசம். இதுதான் ஏழை எளியவர்கள், லோயர் மிடில், மிடில் கிளாஸின் கனவுகள், ஏக்கங்கள். அவர்களைப் பொறுத்தவரை அது ஒரு பிரச்னையே இல்லை.
இந்த நிலையில் சமச்சீர் கல்வியும் புதிய புத்தகங்களும் எந்த வகையில் ‘நவீன காலத் தேவைகளு’க்கு முகம் கொடுக்கப் போகின்றன? தெரியவில்லை. ‘ஜல்லிக்கட்டு’ போல் நம்மோடு இயல்பாகி, கலந்துவிட்ட ‘நவீன கால தேவை’யை, பிரச்னை என்று நினைத்துக்கொண்டு தீர்வு காண முயற்சிக்கிறோமோ? அதுவும் தெரியவில்லை.
அரசுடைய கவனம் கல்வியின் தரத்தை உயர்த்துவதில்தான் இருக்கவேண்டுமே ஒழிய, சமப்படுத்துவதில் இருப்பதில் அர்த்தமில்லை.

Leave a Reply