வழி சொல்லுங்க.. – கடிதம் 1
மனத்தைத் தொடும் நிகழ்வு….
எத்தனையோ பேர் இப்படி தமிழ் ஆர்வம், தமிழ் மேதைமை, எழுத்து, பத்திரிகை ஆசை என்று எதிர்காலத்தை சற்றும் யோசிக்காமல் என்னிடமும் பேசியதுண்டு. இயல்பிலேயே வைஷ்ணவத்தன்மை எனும் இரக்க சுபாவம் உள்ள எனக்கு ஒன்றும் சொல்லத்தோன்றாது. ஏதாவது உதவணும் என்று தோன்றும். ஆனால் தனிப்பட்ட வகையில் பெரிதாக என்ன செய்துவிட முடியும்?! ஆனால் இப்படி ஆர்வக்கோளாறோடு பேசியிருக்கும் ஓரிரண்டு இளைஞர்களை வேறு திசைக்கு திருப்பி விட்ட நல்ல காரியத்தை செய்திருக்கிறேன். அனுபவம் அப்படி! என்ன செய்ய? இப்போது இருகும் பெரிய ஆள்களிடம் பழகியிருப்பதால் அவர்களின் வாழ்க்கையை உற்று நோக்கியிருக்கிறேன்… இவ்வளவு சாதனைகள் செய்தும் வாழ்க்கையில் என்ன பார்த்துவிட்டார்கள்… என்று தோன்றும்.
ஆனாலும் நம் நிலைமை … சேற்றுக் குளத்தில் பூத்த தாமரையைப் பறிக்க காலை விட்டு, முதலையின் வாயில் சிக்கிக்கொண்ட கஜேந்திரன் நிலைமைதான்… பரந்தாமன் எப்போது வருவது?
அன்பன்
செங்கோட்டை ஸ்ரீராம்
மனத்தைத் தொடும் நிகழ்வு….
எத்தனையோ பேர் இப்படி தமிழ் ஆர்வம், தமிழ் மேதைமை, எழுத்து, பத்திரிகை ஆசை என்று எதிர்காலத்தை சற்றும் யோசிக்காமல் என்னிடமும் பேசியதுண்டு. இயல்பிலேயே வைஷ்ணவத்தன்மை எனும் இரக்க சுபாவம் உள்ள எனக்கு ஒன்றும் சொல்லத்தோன்றாது. ஏதாவது உதவணும் என்று தோன்றும். ஆனால் தனிப்பட்ட வகையில் பெரிதாக என்ன செய்துவிட முடியும்?! ஆனால் இப்படி ஆர்வக்கோளாறோடு பேசியிருக்கும் ஓரிரண்டு இளைஞர்களை வேறு திசைக்கு திருப்பி விட்ட நல்ல காரியத்தை செய்திருக்கிறேன். அனுபவம் அப்படி! என்ன செய்ய? இப்போது இருகும் பெரிய ஆள்களிடம் பழகியிருப்பதால் அவர்களின் வாழ்க்கையை உற்று நோக்கியிருக்கிறேன்… இவ்வளவு சாதனைகள் செய்தும் வாழ்க்கையில் என்ன பார்த்துவிட்டார்கள்… என்று தோன்றும்.
ஆனாலும் நம் நிலைமை … சேற்றுக் குளத்தில் பூத்த தாமரையைப் பறிக்க காலை விட்டு, முதலையின் வாயில் சிக்கிக்கொண்ட கஜேந்திரன் நிலைமைதான்… பரந்தாமன் எப்போது வருவது?
அன்பன்
செங்கோட்டை ஸ்ரீராம்
Tags: Literature, Nesamudan, Tamil Publishing, கடிதங்கள்